முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தீரன் சின்னமலை 220-வது நினைவு நாள்: அ.தி.மு.க. நிர்வாகிகள் மரியாதை

ஞாயிற்றுக்கிழமை, 3 ஆகஸ்ட் 2025      தமிழகம்
ADMK 2025-08-02

Source: provided

சென்னை : விடுதலைப்போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் 220வது நினைவு நாளை முன்னிட்டு. சென்னை, ஈரோடு ஓடாநிலை, சேலம் சங்ககிரி ஆகிய இடங்களில் உள்ள அவரின் திருவுருவ சிலை மற்றும் படத்துக்கு அ.தி.மு.க. நிர்வாகிகள் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

இதுகுறித்து அ.தி.மு.க. சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், ‘சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் 220ஆவது நினைவு நாளான இன்று (நேற்று) காலை 10 மணியளவில், அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் ஆணைப்படி, சென்னை கிண்டி திரு.வி.க. தொழிற்பேட்டை வளாகத்தில் அமைந்துள்ள தீரன் சின்னமலை திருஉருவச் சிலைக்கும்; அங்கே அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது திருஉருவப் படத்திற்கும், அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்றச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பொன்னையன் தலைமையில், முன்னாள் மத்திய அமைச்சர் தம்பிதுரை, முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், கோகுல இந்திரா, பென்ஜமின், சின்னையா, அப்துல் ரஹீம்,

அண்ணா தொழிற்சங்க பேரவைச்செயலாளர் ஆர்.கமலக்கண்ணன், கழக அமைப்புச்செயலாளர் ஆதிராஜாராம், அண்ணா தொழிற்சங்க பேரவைத்தலைவர் தாடி ம.ராசு, கழக அமைப்புச்செயலாளர் ராயபுரம் மனோ,கழக அமைப்புச்செயலாளர் திருவேற்காடு பா.சீனிவாசன், தென் சென்னை தெற்கு மேற்கு மாவட்ட கழக செயலாளர் விருகை ரவி, வட சென்னை வடக்கு மேற்கு மாவட்ட கழக செயலாளர் புரசை பாபு, கழக கொள்கை பரப்பு துணைச்செயலாளர் விஜயகுமார், கழக புரட்சித்தலைவி பேரவை இணைச்செயலாளர் ஜெயவர்தன் உள்ளிட்டோர் மாலை அணிவித்தும், மலர் தூவியும் மரியாதை செலுத்தினார்கள்.

ஈரோடு மாவட்டம், அரச்சலூர் ஓடாநிலையில் அமைந்திருக்கும் தீரன் சின்னமலை அவர்களுடைய மணிமண்டபத்தில் உள்ள அவரது திருஉருவச்சிலைக்கும்; அங்கே அலங்கரித்து வைக்கப்பட்டிந்த அவரது திருஉருவப்படத்திற்கும், முன்னாள் அமைச்சர்கள் செங்கோட்டையன், வேலுமணி, கருப்பணன், கே.வி.இராமலிங்கம் உள்ளிட்டோர் மாலை அணிவித்தும், மலர் தூவியும் மரியாதை செலுத்தினார்கள்.

சேலம் மாவட்டம், சங்ககிரி மலைக்கோட்டை அடிவாரத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த தீரன் சின்னமலை அவர்களுடைய திருவுருவப்படத்திற்கும்; சங்ககிரி ஈரோடு பிரிவு சாலையில் அமைந்துள்ள தீரன் சின்னமலை அவர்களுடைய நினைவுச் சின்னத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது திருஉருவப் படத்திற்கும் முன்னாள் அமைச்சர்கள் தங்கமணி, செம்மலை, சரோஜா, சேலம் புறநகர் மாவட்டக் கழகச் செயலாளர் இளங்கோவன் மற்றும் பா.ஜ.க. தேசிய மகளிர் அணித் தலைவர் வானதி சீனிவாசன் உள்ளிட்டோர் மலர் வளையம் வைத்தும், மலர் தூவியும் மரியாதை செலுத்தினார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 2 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 4 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 4 months ago
View all comments

வாசகர் கருத்து