எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, டாக்டர் அன்புமணி கூட்டியுள்ள பொதுக்குழு கூட்டத்திற்கு 3 ஆயிரம் பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
பா.ம.க.வில் டாக்டர் ராமதாசுக்கும்-அன்புமணி ராமதாசுக்கும் இடையே மோதல் போக்கு நீடித்து வருகிறது. இருவரும் மாறி மாறி கூட்டங்களை நடத்தி வருகிறார்கள். இந்த நிலையில் பொதுக்குழு கூட்டத்தையும் இருவரும் தனித்தனியாக கூட்டியுள்ளார்கள். டாக்டர் ராமதாஸ் தலைமையில் திண்டிவனத்தில் 17-ந்தேதி சிறப்பு பொதுக்குழு நடக்கிறது. அன்புமணி ராமதாஸ் வருகிற 9-ந்தேதி மாமல்லபுரத்தில் பொதுக்குழுவை கூட்டியுள்ளார். அதனால் அரசியலில் மேலும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.
டாக்டர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் 'கான்ப்ளுயன்ஸ்' அரங்கில் கூட்டப்படும் பொதுக்குழுவிற்கு தீவிர ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. பொதுச் செயலாளர் வடிவேல் ராவணன், பொருளாளர் திலகபாமா, முன்னாள் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், இந்நாள் சட்டமன்ற உறுப்பினர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள், ஒன்றிய செயலாளர்கள், சிறப்பு அழைப்பாளர்கள் என 3300 பேர் அமர்வதற்கு இருக்கைகள் அமைக்கப்படுகிறது. அந்த 3300 பேருக்கும் டாக்டர் அன்புமணி சார்பில் அழைப்பு அனுப்பப்படுகிறது.
பொதுக்குழுவில் தற்போதைய அரசியல் நிலவரம், கூட்டணி விவகாரம், கட்சியில் ஏற்பட்டு உள்ள குழப்பம் ஆகியவற்றுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் விவாதித்து தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


