Idhayam Matrimony

சாலைகள் சீரமைக்கப்படும்: ஏலகிரி மலைவாழ் மக்களிடம் எடப்பாடி பழனிசாமி வாக்குறுதி

வியாழக்கிழமை, 14 ஆகஸ்ட் 2025      தமிழகம்
Ram-10

Source: provided

ஏலகிரி: தமிழகத்தில் மீண்டும் அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் ஏலகிரியில் பழுதடைந்த அனைத்து சாலைகளும் சீரமைக்கப்படும். அம்மா மினி கிளினிக் இங்கு திறக்கப்படும்” என அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, மலைவாழ் மக்களிடம் வாக்குறுதி அளித்தார்.

அ.தி.மு.க. சார்பில் ‘மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்’ என்ற பிரச்சார பேரணியை அக்கட்சியின் பொதுச் செயலாளரும், தமிழக எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி கடந்த மாதம் தொடங்கி சட்டப்பேரவை தொகுதி வாரியாக மக்களை நேரில் சந்தித்து அவர்களது குறைகளை கேட்டறிந்தும், மனுக்களாக பெற்று பொதுமக்கள் மத்தியில் உரையாற்றி வருகிறார்.

அதன்படி, திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள 4 சட்டப்பேரவை தொகுதிகளில் 3 தொகுதிகளில் நேற்று முன்தினம் பரப்புரை மேற்கொண்ட எடப்பாடி பழனிசாமி நேற்று ஏலகிரி மலைக்கு சென்றார். அங்கு கொட்டாவூர் மலைப்பகுதியில் எடப்பாடி பழனிசாமிக்கு மலைவாழ் மக்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றனர். அவர்களுடன் எடப்பாடி பழனிசாமி கலந்துரையாடல் நடத்தினார். இதனைத் தொடர்ந்து திறந்த வேனில் எடப்பாடி பழனிசாமி பேசியது: ‘‘ஏலகிரி மலையில் வசித்து வரும் மலைவாழ் மக்களை சந்திக்கின்ற வாய்ப்பு கிடைத்தது மகிழ்ச்சியளிக்கிறது.

ஏலகிரி மலையை பொறுத்தவரை தமிழகத்தில் உள்ள பிரபலமான சுற்றுலா தளங்களில் ஒன்றாகும். இந்த பகுதியை மேலும் வளர அ.தி.மு.க. அரசு மீண்டும் உங்களால் தேர்ந்தெடுக்கும்போது இந்த ஏலகிரி மலையானது மிகச் சிறந்த சுற்றுலா தளமாக உருவாக்கவும், இங்கு அனைத்து வசதிகளுடன் கூடிய பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைய சுற்றுலா தளமாக ஏலகிரி உருவாக்கப்படும்.

ஏலகிரி மலையில் மக்களை சந்தித்து கலந்துரையாடியபோது இந்தப் பகுதியில் சில கோரிக்கைகள் மலைவாழ் மக்கள் என்னிடம் முன் வைத்துள்ளனர். ஏலகிரி மலை ஊராட்சியில் 14 குக்கிராமங்களில் பல இடங்களில் பல ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்ட சாலைகள் தற்போது சிதலமடைந்து குண்டும், குழியுமாக இருப்பதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாக கூறினர்.

அ.தி.மு.க. ஆட்சி வந்த பிறகு ஏலகிரி மலையில் பழுதடைந்த அனைத்து சாலைகளும் புதிய தார்ச்சாலையாக மாற்றப்படும். மலைவாழ் மக்களின் கோரிக்கைகள் அனைத்தும் அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு நிறைவேற்றி தரப்படும். அ.தி.மு.க. ஆட்சியில் தமிழகம் முழுவதும் 2 ஆயிரம் அம்மா மினி கிளினிக் திறக்கப்பட்டது. அதை திமுக அரசு மூடியது. மீண்டும் அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்த உடன் மாநிலம் முழுவதும் 4 ஆயிரம் அம்மா மினி கிளினிக் திறப்படும். அதில் ஏலகிரி மலையிலும் அம்மா மினி கிளினிக் திறக்கப்படும் என்று பழனிச்சாமி பேசினார். இந்நிகழ்ச்சியில், முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி, எம்.பி. தம்பிதுரை உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 2 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 4 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 4 months ago
View all comments

வாசகர் கருத்து