எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

புதுச்சேரி, புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து பெறும் விவகாரம் மீண்டும் அரசியல் விவாதமாக்கப்பட்டிக்கிறது. அத்துடன், ஆளும் என்.ஆர்.காங்கிரஸுக்கும் கூட்டணியில் உடன் இருக்கும் பா.ஜ.க.-வுக்குமே சுமுகமான உறவு இல்லை என்று சொல்லப்படும் நிலையில், பா.ஜ.க. மாநில தலைவர் வி.பி.ராமலிங்கத்திடம் சில கேள்விகளை முன்வைத்தோம்
பா.ஜ.க.-வுக்கு புதுச்சேரியில் முன்பைவிட இப்போது ஆதரவு பெருகி இருப்பதாக உணர்கிறீர்களா?
புதுச்சேரி மக்கள் மத்தியில் தற்போது பா.ஜ.க.-வுக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது. பிரதமர் நரேந்திர மோடியின் செயல்பாடுகளால் மாணவர்கள், படித்தவர்கள் மத்தியில் பா.ஜ.க. மீதான பார்வை மாறியுள்ளது.
தேர்தலுக்கு தயாராகிவிட்டீர்களா... கடந்த முறையைவிட இம்முறை அதிகமான இடங்களில் போட்டியிடும் திட்டம் ஏதும் இருக்கிறதா?
பா.ஜ.க., கூட்டணி உணர்வுகளை மதிக்கும் கட்சி. 2026 சட்டப்பேரவை தேர்தலை என்.ஆர்.காங்கிரஸ், அதிமுக கட்சிகளோடு சேர்ந்துதான் எதிர்கொள்ளப் போகிறோம். இதில் எங்களுக்கு எத்தனை சீட் கேட்பது என்பது குறித்து தேசிய தலைமை தான் முடிவு செய்யும். எங்களின் தலைமை பெற்றுத்தரும் அத்தனை இடங்களிலும் நூறு சதவீதம் வெற்றிபெறுவதற்கான முயற்சிகளை நாங்கள் எடுப்போம். நிச்சயம் கடந்த முறையைவிட இம்முறை அதிகமான இடங்களில் வெற்றிபெறுவோம். இங்கு என்.ஆர்.காங்கிரஸ் தான் பெரிய கட்சி. ஆகவே, தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸைவிட, பா.ஜ.க. கூடுதலான இடங்களில் வென்றாலும் முதல்வர் ரங்கசாமி தலைமையில் தான் ஆட்சி அமைப்போம். அதேபோல் தமிழகத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தான் ஆட்சி என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.
முதல்வர் ரங்கசாமி இம்முறை விஜய்யுடன் கூட்டணி வைக்கும் திட்டத்தில் இருப்பதாக சொல்கிறார்களே?
முதல்வர் ரங்கசாமியுடன், தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மிகுந்த நட்பு கொண்டவர். அதனால் விஜய்யும் முதல்வர் ரங்கசாமியுடன் நல்ல நட்பில் இருக்கிறார். ரங்கசாமி மிகச்சிறந்த ஆன்மிகவாதியாகவும் இருப்பதால் அவரிடம் கருத்துக் கேட்பது, நாள் குறித்து மாநாடு நடத்துவது, ஆலோசிப்பது, நலம் விசாரிப்பது விஜய்க்கு வழக்கம். இது நட்பு தான். ரங்கசாமி சாமானிய மனிதராக இருந்தாலும், யாருடன் இருந்தால் புதுச்சேரி மக்களுக்கு நல்லது செய்ய முடியும், மத்தியில் யார் ஆட்சி செய்தால் நாடு நன்றாக இருக்கும் என்பதை எல்லாம் தெரிந்த அரசியல் தீர்க்கதரிசி. ஆகவே நட்புக்கும், அரசியலுக்குமான வித்தியாசம் ரங்கசாமிக்கு தெரியும். விஜய் ஒரு நடிகர். இப்போது தான் வளர்ந்து வருகிறார். அவருடைய கட்சிக்காக அவர் பாடுபட்டுக்கொண்டிருக்கிறார். அவருடன் கூட்டணி வைப்பதால் புதுச்சேரிக்கு நல்லது எதையும் செய்ய முடியாது.
கூட்டணி ஆட்சியில் பா.ஜ.க. இருந்தும் புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து பெறமுடியவில்லையே..?
புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து பெறுவது எங்களின் கொள்கை. மாநில அந்தஸ்து கேட்பது ஏன் என்பதை தலைமையிடம் தெளிவுபடுத்தியுள்ளோம். முதல்வர் ரங்கசாமி அனைத்துக் கட்சியினரையும் டெல்லிக்கு அழைத்துச் சென்று எங்கள் தலைமையை அணுகிக் கேட்டால், அது மாநில அந்தஸ்து பெறுவதற்கான முன்னெடுப்பாக இருக்கும் என்பதே எங்களின் விருப்பம்.
தன்னை இரண்டு அமைச்சர்கள் டார்ச்சர் செய்வதாக முன்னாள் அமைச்சர் சந்திர பிரியங்கா குற்றம் சாட்டி இருக்கிறாரே?
டார்ச்சர் செய்தவர்கள் எந்த அமைச்சர்கள் என்பது நமக்குத் தெரியாது. முதல்வர் இருக்கிறார், அவர்களுடைய கட்சியின் தலைவரும் அவர் தான். ஆகவே அவரிடம் நேரடியாகச் சென்று இதுபற்றி கூறினாலே உடனடியாக பிரச்சினை முடிந்துவிடும். இதனை பொதுவெளியில் பேசி இருப்பதன் நோக்கம் கட்சியின் பெயரை கெடுப்பதற்காகவே என்று தெரிகிறது.
முதல்வருக்கும் துணைநிலை ஆளுநருக்கும் சுமுகமான உறவு இல்லாமல் இருப்பது மாநிலத்தின் வளர்ச்சியை பாதிக்காதா?
முதல்வர், துணைநிலை ஆளுநர் இடையே எந்தவித பிரச்சினையும் இல்லை. அவர்களுக்குள் உறவு சுமுகமாகத்தான் இருக்கிறது.
புதுச்சேரியில் ஆளும் அரசுக்கு எதிராக எதிர்க் கட்சிகள் தொடர்ச்சியாக ஊழல் புகார்களை தெரிவித்து வருகின்றனவே?
புதுச்சேரியில் வேலை வாய்ப்பு, உள்கட்டமைப்பு வசதிகள் சிறப்பான முறையில் ஏற்படுத்தப்படுகிறது. இதனால் எதிர்கட்சிகள் குறை சொல்வதற்கு எதுவும் இல்லை. தேசிய தலைமையை குறைசொல்ல முடியாது என்பதால் பொத்தாம் பொதுவாக புதுச்சேரியில் ஆளும் அரசு மீது ஊழல் புகார் கூறி வருகின்றனர். இங்கு சின்னதாய் ஒரு தவறு நடந்தாலும் சிபிஐ விசாரணை வரைக்கும் நடத்தப்படுகிறது; தவறு செய்தவர்கள் தண்டிக்கப்படவும் செய்கிறார்கள்.
சமீபத்தில் பா.ஜ.க. தலைமை அலுவலகத்தில் கட்சியினர் மத்தியில் பேசிய நீங்கள், “காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை பா.ஜ.க. ஆள்கிறது. ஆனால், கோரிமேடு எல்லையை தாண்டாத கட்சியும் இருக்கிறது” என்று என்.ஆர்.காங்கிரஸை மறைமுகமாக சாடினீர்களாமே?
கும்மிடிப்பூண்டியை தாண்டாத கட்சிகள் என தமிழ்நாட்டு கட்சிகளை குறிப்பிட்டே பேசினேன்; என்.ஆர்.காங்கிரஸை சொல்லவில்லை. அது அகில இந்திய என்.ஆர்.காங்கிரஸ் கட்சி. நாங்கள் அந்த கட்சியை முன்னிறுத்தியே அரசியல் செய்கிறோம். தமிழகத்தில் மட்டும் வெற்றிபெற்றுவிட்டு பிரமருக்கும், அமித் ஷாவுக்கும் பலர் சவால் விடுகின்றனர். எம்ஜிஆர், ஜெயலிதாவை வெல்லமுடியாத திமுக-வினர், இப்போது நூற்றுக்கும் கூடுதலான இடங்களை பிடித்து ஆட்சி அமைத்துள்ளனர். பா.ஜ.க. 19 மாநிலங்களில் ஆட்சிபுரிகிறது; இந்தியாவையே ஆள்கிறது. அப்படிப்பட்ட கட்சிக்கு உதயநிதி ஸ்டாலின் எல்லாம் சவால் விடுவது வேடிக்கைதான்.
புதுச்சேரி மின்துறை தனியார் மயமாக்கப்பட்டு விட்டதாக எதிர்க்கட்சிகள் சொல்வது உண்மையா... இதில் உங்களின் நிலைப்பாடு என்ன?
மின்துறை தனியார் மயமாகிவிட்டது என்று கூறுவது புரளி. பா.ஜ.க.-வை பொறுத்தவரை மின்துறையை தனியார் மயமாக்க வேண்டாம் என்பதே எங்களின் விருப்பம்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 11 months 2 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 11 months 3 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 5 days ago |
-
ருதுராஜ் கெய்க்வாட் சதம்
04 Sep 2025துலீப் கோப்பை கிரிக்கெட் தொடரின் 2-வது அரையிறுதி போட்டி பெங்களூருவில் நடைபெற்று வருகிறது. இதில் மேற்கு - மத்திய மண்டல அணிகள் விளையாடி வருகின்றன.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 05-09-2025.
05 Sep 2025 -
ரஷ்யா, சீனாவை எதிர்கொள்ள ராணுவத்தை தயார் செய்யுங்கள் : பென்டகனுக்கு அதிபர் ட்ரம்ப் உத்தரவு
05 Sep 2025நியூயார்க் : ரஷ்யா, சீனாவை எதிர்கொள்ள ராணுவத்தை தயார் செய்யுங்கள் என்று பென்டகனுக்கு அதிபர் ட்ரம்ப் உத்தரவிட்டுள்ளார்.
-
ஜி.எஸ்.டி. வரி விகித மாற்றம் வளர்ச்சிக்கு ஊக்கம் அளிக்கும் : பிரதமர் நரேந்திர மோடி உறுதி
05 Sep 2025புதுடெல்லி : ஜி.எஸ்.டி. வரி விகித மாற்றம் நாட்டின் வளர்ச்சிக்கு ஊக்கம் அளிக்கும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
-
திருவண்ணாமலையில் பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம் எது? - கோவில் நிர்வாகம் அறிவிப்பு
05 Sep 2025திருவண்ணாமலை : திருவண்ணாமலையில் ஆவணி மாதத்திற்கான பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரத்தை கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
-
ஜி.எஸ்.டி. மறுசீரமைப்பு: மாநிலங்களுக்கு 5 ஆண்டுக்கு இழப்பீடு வழங்க வேண்டும்: கார்கே வலியுறுத்தல்
05 Sep 2025புதுடெல்லி, ஜி.எஸ்.டி.
-
நலிந்த கலைஞர்களுக்கு நிதியுதவி வழங்கும் திட்டம்: கூடுதலாக 2,500 பேருக்கு ஆணைகளை வழங்கினார் துணை முதல்வர் உதயநிதி
05 Sep 2025சென்னை : நலிந்த கலைஞர்களுக்கு நிதியுதவி வழங்கும் திட்டத்தின் கீழ் இந்த ஆண்டு முதல் கூடுதலாக 2,500 கலைஞர்களுக்கு மாதம் 3,000 ரூபாய் நிதியுதவி ஆணைகள் வழங்குவதன் அடையாளமாக
-
கர்நாடகாவில் வாக்குச்சீட்டுகள் மூலம் இனி உள்ளாட்சி தேர்தல் : தேர்தல் ஆணையத்திற்கு அமைச்சரவை பரிந்துரை
05 Sep 2025பெங்களூரு : உள்ளாட்சி தேர்தல்கள் வாக்குச் சீட்டுகளைப் பயன்படுத்தியே நடைபெற வேண்டும் என்று மாநில தேர்தல் ஆணையத்திற்கு கர்நாடக அரசு பரிந்துரைத்துள்ளது.
-
இ.பி.எஸ். முடிவே எங்கள் முடிவு: செங்கோட்டையன் விவகாரத்தில் திண்டுக்கல் சீனிவாசன் கருத்து
05 Sep 2025திண்டுக்கல், செங்கோட்டையன் கருத்து குறித்து, அ.தி.மு.க.
-
வீடுதோறும் அத்தப்பூ கோலம் போட்டு கேரளாவில் ஓணம் பண்டிகை உற்சாகமாக கொண்டாட்டம்
05 Sep 2025திருவனந்தபுரம் : வீடுதோறும் அத்தப்பூ கோலம் போட்டு கேரளாவில் நேற்று ஓணம் பண்டிகை வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாட்டப்பட்டது.
-
இந்தியா உடனான உறவை மீட்டெடுக்க வேண்டும்: அதிபர் ட்ரம்ப்புக்கு ஜேக் சல்லிவன், கர்ட் எம் கேம்ப்பெல் வலியுறுத்தல்
05 Sep 2025வாஷிங்டன், இந்தியா உடனான நல்லுறவை அமெரிக்கா மீட்டெடுக்க முடியும் என்றும் மீட்டெடுக்க வேண்டும் என்றும் அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பை முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் ச
-
மீண்டும் புதினுடன் பேச உள்ளேன் - டிரம்ப் கூறுகிறார்
05 Sep 2025வாஷிங்டன், உக்ரைனுக்கும் ரஷியாவுக்கும் கடந்த மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக போர் நீடித்து வருகிறது.
-
முதல்வர் மு.க.ஸ்டாலினின் வெளிநாட்டு பயணத்தில் ரூ.13 ஆயிரம் கோடி முதலீடுகள் ஈர்ப்பு : தமிழ்நாடு அரசு அறிவிப்பு
05 Sep 2025சென்னை : முதல்வர் மு.க.ஸ்டாலினின் ஜெர்மன், இங்கிலாந்து வெளிநாட்டு பயணத்தில் தமிழகத்திற்கு ரூ.13 ஆயிரம் கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளத
-
மேட்டூர் அணையில் இருந்து மீண்டும் தண்ணீர் அதிகரிப்பு : காவிரி கரையோர மக்களுக்கு எச்சரிக்கை
05 Sep 2025மேட்டூர் : 16 கண் மதகு வழியாக மேட்டூர் அணைக்கு வரும் 30 ஆயிரம் கன அடி நீர் அப்படியே வெளியேற்றப்படுவதால் காவிரி கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
-
அறியாமை இருளை நீக்குபவர்கள்: விஜய் ஆசிரியர் தின வாழ்த்து
05 Sep 2025சென்னை, அறிவு தீபம் ஏற்றி, அறியாமை இருளை நீக்குபவர்கள் என்று ஆசிரியர்களுக்கு ஆசிரியர்கள் தினத்தில் த.வெ.க. தலைவர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
அயோத்தி ராமர் கோவிலுக்கு பூட்டான் பிரதமர் வருகை
05 Sep 2025லக்னோ : உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள ராமர் கோவிலுக்கு, பூட்டான் பிரதமர் தாஷோ ஷெரிங் டோப்கே நேற்று வருகை தந்தார்.
-
தமிழகத்தில் இருவர் உள்ளிட்ட ஆசிரியர்கள் 45 பேருக்கு தேசிய நல்லாசிரியர் விருது : ஜனாதிபதி திரெளபதி முர்மு வழங்கினார்
05 Sep 2025டெல்லி : தமிழகத்தில் இருவர் உள்பட நாடு முழுவதிலுமிருந்து 45 ஆசிரியர்களுக்கு தேசிய நல்லாசிரியர் விருதுகளை ஜனாதிபதி திரௌபதி முர்மு வழங்கினார்.
-
செங்கோட்டையன் இன்னும் முழுதும் மனம் திறக்கவில்லை: திருமாவளவன்
05 Sep 2025மதுரை, செங்கோட்டையன் மனம் திறந்து பேசப்போவதாக சொன்னார்; ஆனால் அவர் இன்னும் முழுமையாக மனம் திறக்கவில்லை என்று வி.சி.க. தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
-
பிரிந்து சென்றவர்களை இணைக்க வேண்டும்: செங்கோட்டையன் 10 நாட்கள் கெடு
05 Sep 2025கோபி : அ.தி.மு.க.வில் இருந்து பிரிந்து சென்றவர்களை இணைக்க வேண்டும் என்று அ.தி.மு.க. தலைமைக்கு செங்கோட்டையன் 10 நாட்கள் கெடு விதித்துள்ளார்.
-
தாக்குதல் நடத்தப்போவதாக மிரட்டல்: மும்பையில் உச்சகட்ட கண்காணிப்பு
05 Sep 2025மும்பை : மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் 34 இடங்களில் மனித வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்போவதாக வந்த மிரட்டலை தொடர்ந்து, முக்கிய பகுதிகளில் போலீசார் பாதுகாப்பை அதிகரித்துள
-
அ.தி.மு.க.வை ஒருங்கிணைக்கும் செங்கோட்டையனின் முயற்சி ஒரு நல்ல முயற்சி: நயினார் வரவேற்பு
05 Sep 2025ஈரோடு, அ.தி.மு.க.வை ஒருங்கிணைக்கும் செங்கோட்டையனின் முயற்சி ஒரு நல்ல முயற்சி என்று தமிழக பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன் வரவேற்பு தெரிவித்துள்ளார்.
-
அரசு மருத்துவமனையில் எலி கடித்து 2 குழந்தைகள் பலியான விவகாரத்தில் ராகுல்காந்தி ஆவேசம் : பிரதமர் வெட்கித் தலைகுனிய வேண்டும்
05 Sep 2025போபால் : அரசு மருத்துவமனையில் எலி கடித்து 2 குழந்தைகள் பலியான விவகாரத்தில் கருத்து தெரிவித்துள்ள ராகுல்காந்தி, இந்த விவகாரத்தில் பிரதமர் மோடி வெட்கித் தலைகுனிய வே
-
திருச்செந்தூர் கோவிலில் மீண்டும் தங்கத்தேர் பவனி: அமைச்சர்கள் துவக்கி வைத்தனர்
05 Sep 2025திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தங்கத்தேர் பவனி தொடங்க முடிவு செய்யப்பட்டது.
-
ரூ.60 கோடி மோசடி வழக்கு: நடிகை ஷில்பா ஷெட்டிக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ்
05 Sep 2025மும்பை : மகாராஷ்டிரா தொழிலதிபரிடம், 60 கோடி ரூபாய் வரை மோசடி செய்ததாக, ஹிந்தி நடிகை ஷில்பா ஷெட்டி மற்றும் அவரின் கணவர் ராஜ் குந்த்ராவுக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ் பி
-
அ.தி.மு.க. ஒரு உடைந்த கண்ணாடி, அதை மீண்டும் ஒட்ட வைப்பது மிகவும் கடினம் : சி.பி.எம். பாலகிருஷ்ணன் கருத்து
05 Sep 2025புதுச்சேரி : “ஓ.பி.எஸ்., டிடிவி தினகரன், சசிகலா இணைந்தால் எடப்பாடி பழனிசாமி பதவிக்கு பிரச்சினை வரும். அதனால் அதை அவர் ஏற்க மாட்டார். அ.தி.மு.க.