எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
மும்பை : பாசம் மட்டும் குழந்தையை வளர்க்கும் உரிமையை வழங்காது என்று மும்பை ஐகோர்ட் தெரிவித்துள்ளது.
மும்பையை சேர்ந்த 5 வயது சிறுவன் தனது தந்தை வழி பாட்டியின் பராமாிப்பில் வளர்ந்து வந்தான். திடீரென சிறுவனின் பாட்டிக்கும், தந்தைக்கும் இடையே சொத்து தகராறு ஏற்பட்டது. எனவே சிறுவனின் தந்தை, மகனை தன்னிடம் ஒப்படைக்குமாறு கேட்டார். ஆனால் அவரது தாயாரோ பேரனை கொடுக்க மறுத்துவிட்டார்.
எனவே தந்தை தனது தாயின் பராமரிப்பில் உள்ள எனது மகனை தன்னிடம் ஒப்படைக்க உத்தரவிடுமாறு மும்பை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த மனு மீதான விசாரணை நீதிபதிகள் ரவீந்திர குகே, கவுதம் அன்காட் அடங்கிய அமர்வு முன் நடந்தது. அப்போது பாட்டியின் தரப்பில் ஆஜரான வக்கீல், “சிறுவன் பிறந்தது முதல் பாட்டியின் பராமரிப்பில் வளர்ந்து வருகிறான். அவனுக்கு பாட்டியுடன் உணர்வுபூர்மான பாசம் உள்ளது. மேலும் பாட்டியின் மகனுக்கு ஏற்கனவே இரட்டை குழந்தைகள் உள்ளன. அந்த குழந்தைகளை வளர்க்கவே அவர் கஷ்டப்படுகிறார். எனவே சிறுவன் பாட்டியின் பராமரிப்பில் இருக்க வேண்டும்” என வாதாடினார்.
எனினும் இதை ஏற்க மறுத்த நீதிபதிகள். பாட்டி- பேரன் இடையே உள்ள பாசம் மட்டும் குழந்தையை வளர்க்கும் உரிமையை அவருக்கு வழங்காது என கூறி சிறுவனை அவனது தந்தையிடம் 2 வாரத்தில் ஒப்படைக்க பாட்டிக்கு உத்தரவிட்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


