எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
சேலம் : ஹூப்ளி-ராமநாதபுரம் சிறப்பு ரயிலின் சேவை காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
கர்நாடக மாநிலம் ஹூப்ளியில் இருந்து தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர் வழியாக ராமநாதபுரம் வரை ஹூப்ளி - ராமநாதபுரம் வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. ரயிலில் ஏற்படும் கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் இந்த ரயிலின் சேவை காலம் நீட்டிப்பு செய்துள்ளதாக ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதுகுறித்து சேலம் ரயில்வே கோட்ட அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
அதன்படி ஹூப்ளி-ராமநாதபுரம் வாராந்திர சிறப்பு ரயில் (07355) ஹூப்ளியில் இருந்து சனிக்கிழமைகளில் காலை 6.50 மணிக்கு புறப்பட்டு பனஸ்வாடி, ஓசூர், தர்மபுரி வழியாக இரவு 7.50 மணிக்கு சேலம் வந்தடையும். இங்கிருந்து 7.55 மணிக்கு புறப்பட்டு நாமக்கல், கரூர், திருச்சி, புதுக்கோட்டை, காரைக்குடி, சிவகங்கை, மானாமதுரை வழியாக மறுநாள் காலை 5 மணிக்கு ராமநாதபுரம் சென்றடையும். இந்த ரயிலின் சேவை காலம் வருகிற 27-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதேபோல் மறு மார்க்கத்தில் இயக்கப்படும் ராமநாதபுரம்-ஹூப்ளி வாராந்திர சிறப்பு ரயில் (07356) ஞாயிற்றுக்கிழமைகளில் ராமநாதபுரத்தில் இருந்து இரவு 10 மணிக்கு புறப்பட்டு கரூர், நாமக்கல் வழியாக மறுநாள் காலை 5.45 மணிக்கு சேலம் வந்தடையும். இங்கிருந்து 5.50 மணிக்கு புறப்பட்டு தர்மபுரி, ஓசூர் வழியாக இரவு 7.40 மணிக்கு ஹூப்ளி சென்றடையும். இந்த ரயிலின் சேவை காலம் வருகிற செப்டம்பர் 28-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


