எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
மதுரை : நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் கோவை, தஞ்சாவூர், சென்னை, மதுரை ஆகிய இடங்களில் பிரமாண்டமாக மாநாடு நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது. இதில் பிரதமர் நரேந்திரமோடி பங்கேற்கிறார்.
தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தல் அரசியல் வட்டாரத்தில் கடந்த ஆண்டு முதலே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி விட்டது. 7-வது முறையாக ஆட்சியை பிடிக்க வேண்டும், தற்போதைய ஆட்சியை தக்கவைக்க வேண்டும் என்ற முனைப்பில் தி.மு.க. தனது தேர்தல் பணிகளை கடந்த சில மாதங்களுக்கு முன்பாகவே தொடங்கி விட்டது.
தி.மு.க. தொண்டர்களை ஊக்குவிக்கும் வகையில் அவ்வப்போது கடிதங்கள் வாயிலாகவும், அறிக்கைகள் மூலமாகவும் உற்சாகப்படுத்தி வரும் தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின், தினமும் பொதுமக்களை சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டு உடனுக்குடன் தீர்த்து வைப்பதன் மூலம் அவர்களின் வாக்குகளை பெற முயற்சி செய்யுங்கள் என்று கூறியுள்ளார்.
மேலும் தங்கள் கூட்டணியில் உள்ள காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்டு கட்சி தலைவர்களிடமும் ஆலோசனை நடத்தி வரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அதிக வாக்குகளை பெற்றுத் தரும் நிர்வாகிகளுக்கு சிறந்த எதிர்காலத்துடன் பரிசுகளும் காத்திருப்பதாக தெரிவித்துள்ளார்.
அதேபோல் பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைத்துள்ள அ.தி.மு.க.வும் வரிந்து கட்டிக்கொண்டு தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தி உள்ளது. அதன் ஒரு பகுதியாக மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம் என்ற எழுச்சி பயணத்தை கடந்த ஜூலை 7-ந்தேதி தொடங்கிய கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தற்போது 4-ம் கட்ட பயணத்தில் ஈடுபட்டுள்ளார்.
பா.ஜ.க.வின் கூட்டணி ஆட்சி தொடர்பான கருத்துக்கள் சிறுசிறு சலசலப்பை ஏற்படுத்திய போதிலும் அதனை தவிர்த்துவிட்டு தனது எழுச்சி பயணத்தில் தொண்டர்களை ஊக்கப்படுத்தியும், தி.மு.க.வின் ஆட்சி, அவலங்கள் குறித்து பொதுமக்களிடமும் பேசி வரும் எடப்பாடி பழனிசாமி, கூட்டணி கட்சியினருடன் சேர்ந்து 200-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றிக்கனியை பறித்திட தயாராகுங்கள் என்று தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் நெல்லையில் நடைபெற்ற பா.ஜ.க. பூத் கமிட்டி மாநாட்டில் பங்கேற்ற மத்திய மந்திரி அமித்ஷா, தி.மு.க.வின் கனவுகள் தவிடு பொடியாக் கப்படும். பிரதமராகும் ராகுல்காந்தியின் கனவும், தமிழ்நாட்டில் உதயநிதியை அடுத்த முதலமைச்சராக நினைக்கும் மு.க.ஸ்டாலின் கனவும் பலிக்காது என்றார். அத்துடன் தி.மு.க.வின் குடும்ப ஆட்சிக்கு முடிவு கட்ட அ.தி.மு.க-பா.ஜ.க. கூட்டணி வெற்றிக்கு தொண்டர்கள் அயராது பாடுபடவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
இதற்கிடையே அ.தி.மு.க-பா.ஜ.க. கூட்டணியில் இருந்து ஓ.பி.எஸ்., டி.டி.வி.தினகரன் வெளியேறியது, பிரிந்து சென்றவர்களை ஒன்றிணைக்க வேண்டும் என்ற வேண்டுகோளுடன், அதற்காக எடப்பாடி பழனிசாமிக்கு 10 நாட்கள் கெடு விதித்த அ.தி.மு.க.வின் மூத்த தலைவர்களில் ஒருவரான செங்கோட்டையனின் கட்சி பதவிகள் பறிப்பு என்று ஒருபுறம் அந்த கூட்ட ணியில் பரபரப்பு காட்சிகள் தொடர்ந்தாலும் அதைப் பற்றி கவலைப்படாமல் கூட்டணியை பலப்படுத்தும் முயற்சியில் இரு கட்சிகளின் நிர்வாகிகளும் அதிரடி காட்டி வருகிறார்கள்.
இந்தநிலையில் மதுரையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சாலை விபத்தில் சிக்கி சிகிச்சை பெற்றுவரும் முன்னாள் எம்.எல்.ஏ. சோழன் பழனிசாமியை நயினார் நாகேந்திரன் சந்தித்து உடம் நலம் விசாரித்தார். பின்னர் வெளியே வந்த அவர் நிருபர்களிடம் கூறுகையில், எங்கள் கூட்டணியில் இருந்து பிரிந்து சென்ற ஓ.பி.எஸ்., டி.டி.வி.தினகரன் ஆகியோரிடம் சமரசம் பேச நான் தயாராக இருக்கிறேன் என்றார்.
மேலும், காலம் இருக்கிறது, நம்முடைய நோக்கமும், டி.டி.வி.தினகரனின் நோக்கமும் தி.மு.க. ஆட்சி வரக்கூடாது என்பதுதான். தி.மு.க. ஆட்சி வரக்கூடாது என்ற ஒருமித்த கருத்து உள்ளவர்கள் ஒன்றாக சேர்ந்தால் அவர்களுடைய லட்சியங்கள் நிறைவேறும். இதே தவிர்த்து விட்டு சூழ்நிலை காரணமாக வெளியேறிவிட்டால் அதற்கு நான் பொறுப்பாக மாட்டேன். நான் இப்பொழுதுதான் மாநில தலைவராக இருந்து கட்சியை பலப்படுத்துகிற வேலையை செய்கிறேன் என்று தெரிவித்தார்.
இதற்கிடையே தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், அனைத்து கட்சிகளும் பரப்புரை பயணம், மாநாடு, சுற்றுப் பயண நிகழ்ச்சிகளை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர். இந்தநிலையில் அ.தி.மு.க-பா.ஜ.க. கூட்டணி உருவாகி உள்ள நிலையில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம் சுற்றுப்பயணத்தை ஒவ்வொரு மாவட்டத்திலும் மேற்கொண்டு வருகிறார்.
இந்த நிலையில் அ.தி.மு.க-பா.ஜ.க. கூட்டணிக்கு வலுசேர்க்கும் வகையில் தமிழகத்தின் நான்கு மூலைகளிலும் பிரம்மாண்ட மாநாடுகளை நடத்த தமிழக பா.ஜ.க. திட்டமிட்டுள்ளது. தமிழகத்தை ஆட்சி செய்த அரசியல் கட்சிகள் ஒவ்வொரு சட்டமன்ற மற்றும் பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பாக தொண்டர்களை உற்சாகப்படுத்தவும், கூட்டணியின் பலத்தை எதிர்க்கட்சிகளுக்கு தெரியப்படுத்தும் வகையிலும் பிரமாண்ட மாநில மாநாடுகளை நடத்துவதை வாடிக்கையாக கொண்டுள்ளது. அந்த வரிசையில் பா.ஜ.க.வும் இணைந்துள்ளது. அதன்படி வருகிற நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் கோவை, தஞ்சாவூர், சென்னை, மதுரை ஆகிய இடங்களில் பிரமாண்டமாக மாநாடு நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது.
இந்த மாநாடுகளில் பிரதமர் மோடியை பங்கேற்க ஏற்பாடு செய்யப்பட்டு வருவதாகவும், அந்த மாநாடுகளில் பா.ஜ.க. மூத்த தலைவர்கள் கலந்துகொள்ள இருப்பதாகவும், அதற்கான நடவடிக்கைகளில் தற்போது முதலே தமிழக பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன் ஈடுபட்டு வருவதாகவும் கட்சி நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். இந்தநிலையில் சட்டமன்ற தேர்தலையொட்டி பா.ஜ.க. நடத்தும் மாநாட்டில் பிரதமரை பங்கேற்க செய்வதற்கான முயற்சிகள் தொடங்கியிருப்பது கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 11 months 2 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 11 months 3 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 1 week ago |
-
செங்கோட்டையன் மீதான நடவடிக்கை: ஓ.பன்னீர் செல்வம் கண்டனம்
06 Sep 2025சென்னை : பழனிசாமியின் நடவடிக்கை சர்வாதிகாரத்தின் உச்சம் என்று ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.
-
தங்கம் விலை கடந்து வந்த பாதை
06 Sep 2025சென்னை : தங்கம் விலை நேற்று வரலாறு காணாத புதிய உச்சத்தை தொட்ட நிலையில், ரூ.21-ல் இருந்து ரூ.80 ஆயிரம் வரை தங்கம் விலை கடந்து வந்த பாதையை பார்க்கலாம்.
-
வீட்டு மின் இணைப்பு பெயர் மாற்றத்தில் புதிய நடைமுறை
06 Sep 2025சென்னை : வீட்டு மின் இணைப்பு பெயர் மாற்றம் செய்யப்பட்டு புதிய நடைமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
-
46 சிறந்த காவல் நிலைய அதிகாரிகளுக்கு முதல்வர் விருதுகள்: டி.ஜி.பி. வழங்கினார்
06 Sep 2025சென்னை : 46 சிறந்த காவல் நிலைய அதிகாரிகளுக்கு முதல்வர் விருதுகளை தமிழக டி.ஜி.பி. வழங்கினார்
-
ரஷ்யா-உக்ரைன் போரை நிறுத்துவதில் தோல்வி - ஒப்புக்கொண்டார் ட்ரம்ப்
06 Sep 2025வாஷிங்டன் : ரஷ்யா - உக்ரைன் இடையேயான போரை நிறுத்தத் தவறியதை ஒப்புக்கொண்ட அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், இது தனது நிர்வாகத்தின் போது எதிர்கொண்ட மிகவும் கடினமான மோதல்
-
இஸ்ரேலிய பணயக் கைதிகளை விடுவிக்க ஹமாஸ் அமைப்பினருடன் பேச்சு வார்த்தை: அமெரிக்கா
06 Sep 2025வாஷிங்டன் : இஸ்ரேலிய பணயக் கைதிகளை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று ஹமாஸ் அமைப்பினருடன் பேசி வருவதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கூறியுள்ளார்.
-
செப். 18-ல் புதுச்சேரி சட்டசபை கூடுகிறது
06 Sep 2025புதுச்சேரி : வருகிற 18-ம் தேதி (வியாழக்கிழமை) காலை 9.30 மணிக்கு புதுச்சேரி சட்டசபை கூடுகிறது.
-
ஆஸி., 'ஏ' அணிக்கெதிரான டெஸ்ட் தொடர்: ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையில் இந்தியா 'ஏ' அணி அறிவிப்பு
06 Sep 2025மும்பை : ஆஸ்திரேலியா ஏ அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இந்தியா ஏ அணியின் கேப்டனாக ஷ்ரேயாஸ் ஐயர் நியமிக்கப்பட்டுள்ளார்.
-
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட காஷ்மீர் உள்ளிட்ட வடமாநிலங்களில் நேரில் ஆய்வு செய்கிறார் பிரதமர்
06 Sep 2025புதுடெல்லி : வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வட இந்தியாவில் உள்ள மாநிலங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி நேரடியாக சென்று ஆய்வு செய்ய உள்ளார்.
-
ஜி.எஸ்.டி.யில் மேலும் பல சீர்திருத்தங்கள் : மத்திய நிதியமைச்சர் தகவல்
06 Sep 2025புதுடெல்லி : பிரதமர் மோடிக்கு மக்கள் சார்பு சீர்திருத்த நடவடிக்கைகளில் கவனம் செலுத்துவதே முதன்மை நோக்கம் என்று தெரிவித்துள்ள மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ஜி.எ
-
அ.தி.மு.க. ஆட்சியில் விவசாயிகளுக்கு பல்வேறு திட்டங்கள்: இ.பி.எஸ். பேச்சு
06 Sep 2025திண்டுக்கல் : அ.தி.மு.க. ஆட்சியில் விவசாயிகளுக்கு நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்கு பல திட்டங்களை கொடுத்துள்ளோம் என அ.தி.மு.க.
-
தனியார் பள்ளி முதல்வர்கள், ஆசிரியர்கள் 90 ஆயிரம் பேருக்கு போக்சோ சட்டம் குறித்து பயிற்சி : அமைச்சர் அன்பில் மகேஸ் தகவல்
06 Sep 2025கிருஷ்ணகிரி : தமிழகத்தில் உள்ள தனியார் பள்ளி முதல்வர்கள், ஆசிரியர்கள் 90 ஆயிரம் பேருக்கு போக்சோ சட்டம் குறித்து பயிற்சி அளிக்கப்படுகிறது என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர்
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 07-09-2025.
07 Sep 2025 -
முப்படைகளின் திறன்கள் ஒருங்கிணைப்பது குறித்து ஆலோசனை: ராணுவ தளபதி திவேதி
06 Sep 2025புதுடெல்லி : முப்படைகளின் திறன்களை ஒருங்கிணைப்பது குறித்து விரிவான ஆலோசனை நடத்தப்பட வேண்டும் என உபேந்திர திவேதி தெரிவித்துள்ளார்.
-
முழு சந்திர கிரகணம்: இந்தியாவில் சென்னை, டெல்லி, மும்பை உள்பட பல நகரங்களில் பார்வையிட்ட மக்கள்
07 Sep 2025சென்னை : இந்தியாவில் சென்னை, டெல்லி, மும்பை, பெங்களூரு, கொல்கத்தா உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் நேற்று நிகழ்ந்த முழு சந்திர கிரகணத்தை பொதுமக்கள் பார்வையிட்டனர்.
-
சந்திர கிரகணம் எதிரொலி: திருச்செந்தூர் கோவிலில் நடை அடைப்பு
07 Sep 2025தூத்துக்குடி : சந்திர கிரகணத்தை முன்னிட்டு நேற்று உலக புகழ்பெற்ற திருச்செந்தூர் முருகன் கோவில் நடை அடைக்கப்பட்டது.
-
த.வெ.க. தலைவர் விஜய்யின் சுற்றுப்பயண விவரம் வெளியீடு
07 Sep 2025சென்னை : திருச்சி, அரியலூர், பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களில் வரும் 13-ம் தேதி பிரசாரம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ள த.வெ.க.
-
போக்குவரத்து விதிமீறல்: அபராதம் செலுத்திய சித்தராமையா
07 Sep 2025பெங்களூரு : காரில் பயணித்த போது கர்நாடக மாநில முதல்வர் சித்தராமையா 6 முறை சீட் பெல்ட் அணியாமல் விதிமீறலில் ஈடுபட்டது தெரியவந்ததை அடுத்து அவர் அபராதம் செலுத்தினார். 
-
அசாமில் பெற்றோருடன் நேரம் செலவிட அரசு ஊழியர்களுக்கு சிறப்பு விடுமுறை
07 Sep 2025கவுகாத்தி : அசாமில் பெற்றோருடன் அரசு ஊழியர்கள் நேரம் செலவிட சிறப்பு விடுமுறை அனுமதிக்கப்பட்டுள்ளது.
-
மேலவையில் பின்னடைவு: பதவி விலகினார் ஜப்பான் பிரதமர் ஷிகெரு இஷிபா
07 Sep 2025டோக்கியோ : ஜப்பான் நாடாளுமன்றத்தின் மேலவையில் பின்னடைவு காரணமாக ஜப்பான் பிரதமர் ஷிகெரு இஷிபா, தனது பதவியில் இருந்து விலகினார்.
-
மழை பாதிப்புகளை நேரில் ஆய்வு செய்ய பிரதமர் நாளை பஞ்சாப் பயணம்
07 Sep 2025புதுடெல்லி : பஞ்சாப் மாநிலத்தில் வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட குர்தாஸ்பூர் மாவட்டத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி வரும் செப்.
-
தமிழகத்தில் 4 இடங்களில் பா.ஜ.க. பிரமாண்ட மாநாடு : பிரதமர் மோடி பங்கேற்கிறார்
07 Sep 2025மதுரை : நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் கோவை, தஞ்சாவூர், சென்னை, மதுரை ஆகிய இடங்களில் பிரமாண்டமாக மாநாடு நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது.
-
விடுமுறை தினம் எதிரொலி: திருச்செந்தூரில் பக்தர்கள் 4 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம்
07 Sep 2025திருச்செந்தூர் : விடுமுறை தினம் காரணமாக நேற்று திருச்செந்தூரில் பக்தர்கள் 4 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
-
இன்று சென்னை திரும்புகிறார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்
07 Sep 2025சென்னை : வெளிநாட்டுப் பயணத்தை நிறைவு செய்யும் முதல்வா் மு.க.ஸ்டாலின், இன்று, திங்கள்கிழமை (செப்.8) அதிகாலை சென்னை திரும்புகிறாா்.
-
செப்.9 முதல் அக்.19 வரை சென்னை மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம்
07 Sep 2025தண்டவாள பராமரிப்புப் பணி காரணமாக, செப்.9-ம் தேதி முதல் அக்.19-ம் தேதி வரை மெட்ரோ ரயில் சேவை இயக்கப்படும் இடைவெளியில் மாற்றம் செய்யப்பட உள்ளது.