எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

நாமக்கல், நாமக்கல்லில் மக்களுடன் சந்திப்பு பெயரில் பிரச்சாரம் மேற்கொண்ட தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்,பொய்யான வாக்குறுதிகளை எப்பவும் கொடுக்க மாட்டோம் என உறுதிப்பட தெரிவித்துள்ளார்.
நாமக்கல் பிரச்சாரத்தில் அவர் பேசியதாவது., ஏன் எந்த விஜய் எந்த இடத்திற்கு சென்றாலும் கேள்வியாக கேட்கிறார் இதற்கான விளக்கத்தை ஏற்கனவே இரண்டு இடத்தில் கூறியிருந்தோம் கல்வி ரேஷன் மருத்துவம் அடிப்படை சாலை வசதி மின்சாரம் போக்குவரத்து பெண்கள் பாதுகாப்பு சட்டம் ஒழுங்கு இது போன்ற அடிப்படை விஷயங்களில் எந்த சமரசம் இல்லாமல் சரியாக செய்யப்படும் என கூறியிருந்தோம் இதைத்தானே எல்லோரும் சொன்னார்கள் அதைத்தான் இவரும் சொல்றாரு இவர் புதிதாக ஏதும் சொல்லவில்லை.
ஐயா அரசியல் மேதைகளே பெரியவர்களே ஒரு மனிதனுக்கு சாப்பிடுவதற்கு நல்ல சாப்பாடு படிப்பதற்கு நல்ல கல்வி குடிப்பதற்கு நல்ல குடிநீர் மருத்துவ வசதி வேணுன்ற இடத்திற்கு போயிட்டு வர ஒரு சாலை வசதி பாதுகாப்பான வாழ்க்கை இதுதான் ஒரு அடிப்படை மனிதனுக்கு தேவை. அப்புறம் அதை சரியாக செய்வோம் என்று சொல்வது தானே சரி. இது தி.மு.க. மாதிரி பொய்யான வாக்குறுதிகளை எப்பொழுதும் கொடுக்க மாட்டோம்.
புதுசா சொல்லுங்க புதுசா சொல்லுங்கண்ணா என்னத்த சொல்ல சொல்றீங்க எனக்கு புரியலையே. புதுசா என்னப்பா சொல்றது செவ்வாய் கிரகத்தில் ஐடி கம்பெனி கட்டப்படும், காற்றில் கல் வீடு கட்டப்படும், அமெரிக்காவிற்கு ஒத்தையடி பாதை போடப்படும், வீட்டுக்குள் ஏரோபிளேன் ஓட்டப்படும், இது போன்ற அடித்து விடுவோமா நம்முடைய முதலமைச்சர் அடித்து விடுவாரே அது போன்ற அடித்து விடுவோமா.
தி.மு.க. சட்டமன்ற உறுப்பினருக்கு சொந்தமான மருத்துவக் கல்லூரியில் நடைபெற்ற கிட்னி திருட்டு., அதுதான் நாடறிந்த விஷயம் ஆயிற்றே. அதை ஏற்கனவே திருச்சியில் பேசியிருந்தேன். ஆனால் நாமக்கல்லை சேர்ந்தவர்கள்தான் அதிகமாக பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறார்கள் என சொல்கிறார்கள். அதிலும் குறிப்பாக விசைத்தறையில் பணிபுரியும் ஏழை பெண்களை குறி வைத்து இந்த கிட்னி திருட்டு நடந்திருக்கிறது என்று கூறுகிறார்கள். இந்த விஷயத்தில் ஈடுபட்டவர்கள் யாராக இருந்தாலும் நம்மளுடைய ஆட்சி அமைந்ததும் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள்.
இந்த கிட்னி திருட்டு எங்கிருந்து தொடங்கியது என்று பார்த்தால் கந்துவட்டி கொடுமையில் இருக்கிறது. அதாவது விசைத்தறி தொழிலாளர்கள் வாழ்க்கை தரத்தையும் பொருளாதாரத்தையும் எந்த ஏற்றமும் இல்லாமல் செய்துள்ள இந்த மாடல் அரசு, மேம்படுத்தாத காரணத்தினால் அவர்கள் கிட்னியை விற்கும் அளவிற்கு தள்ளப்பட்டு இருக்கிறார்கள். இது எவ்வளவு பெரிய கொடுமை. விசைத்தறி தொழிலாளர்களின் வாழ்க்கை தரத்தை பொருளாதாரத்தை மேம்படுத்த தேவையான தேர்வுகளை யோசித்து உறுதியாக தேர்தல் அறிக்கையில் சொல்வோம். 2026 தேர்தலில் தி.மு.க.- தவெக இடையில் தான் போட்டி. தி.மு.க.விற்கு போடப்படும் ஓட்டு பாஜகவிற்கு போடப்படும் ஓட்டு. உஷாராக இருங்கள் மக்களே. வரும் தேர்தலில் ஒரு கை பார்த்துவிடலாம். இவ்வாறு அவர் கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 1 year 2 days ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 1 year 1 week ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 3 weeks ago |
-
அ.தி.மு.க. ஆட்சி வந்ததும் கோயில் நிலத்தில் குடியிருப்பவர்களுக்கான பிரச்னையை சரி செய்ய முயற்சி எடுப்போம் : அரவக்குறிச்சியில் எடப்பாடி பழனிசாமி பேச்சு
26 Sep 2025அரவக்குறிச்சி : அரவக்குறிச்சியில் கோயில் நிலத்தில் குடியிருப்பவர்களுக்கு பிரச்னை இருக்கிறது. அ.தி.மு.க.
-
காவிரியில் இருந்து கர்நாடக அரசு தமிழ்நாட்டிற்கு 20.22 டி.எம்.சி. தண்ணீர் திறந்து விட வேண்டும்: காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு
26 Sep 2025புதுடெல்லி, காவிரியில் இருந்து தமிழகத்திற்கு அக்டோபர் மாதம் 20.22 டி.எம்.சி. தண்ணீரை திறந்து விட கர்நாடக அரசுக்கு காவிரி நீர் மேலாண்மை ஆணையம் உத்தரவித்தரவிட்டது.
-
அக்டோபர் 3-ம் தேதி அரசு விடுமுறையாக அறிவிக்க முதல்வருக்கு கோரிக்கை மனு
26 Sep 2025சென்னை : வருகிற 3-ம் தேதி அரசு விடுமுறையாக அறிவிக்க வேண்டும் என்று முதல்வருக்கு தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றிய மாநில தலைவர் கோரிக்கை மனு அளித்துள்ளார்.
-
நான் சனிக்கிழமை மட்டும் வெளியே வருபவன் அல்ல: விஜய் மீது துணை முதல்வர் உதயநிதி மறைமுக விமர்சனம்
26 Sep 2025சென்னை, நடிகர் விஜய் மீது துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் மறைமுகமாக விமர்சனம் செய்துள்ளார்.
-
சீமான் மீது பதியப்பட்ட வழக்கை ரத்து செய்தது சென்னை ஐகோர்ட்
26 Sep 2025சென்னை : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது பதியப்பட்ட வழக்கை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
லடாக் வன்முறை: சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் அதிரடி கைது
26 Sep 2025புதுடெல்லி : லடாக் வன்முறை தொடர்பாக சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் போலீசாரால் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் அதிரடியாக கைது செய்யப்பட்டார்.
-
தொடரை வென்ற இந்திய அணி
26 Sep 2025இந்திய இளையோர் கிரிக்கெட் அணி (19- வயதுக்குட்பட்டோர்) ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் (4 நாட்கள்) தொடர்களில் விளையாடுகிறது.
-
அமெரிக்காவில் இருந்து இதுவரை2,417 இந்தியர்கள் வெளியேற்றம் : மத்திய அரசு தகவல்
26 Sep 2025புதுடெல்லி : அமெரிக்காவில் இருந்து 2,417 இந்தியர்கள் வெளியேற்றப்பட்டதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
-
டெஸ்ட் கிரிக்கெட் போட்டி: தொடரை வென்றது இந்தியா 'ஏ'
26 Sep 2025லக்னோ : டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலிய ஏ அணியை வீழ்த்தி தொடரை கைப்பற்றியது இந்தியா ஏ அணி.
போட்டி டிரா...
-
கல்வி நிகழ்வில் நடிகர்கள் மூலம் விளம்பரம் தேடுகிறது தமிழக அரசு - நயினார் விமர்சனம்
26 Sep 2025திருநெல்வேலி : தமிழக அரசின் கல்வி நிகழ்ச்சியில் நடிகர்கள், இயக்குநர்கள் கலந்து கொண்டுள்ளனர். இதன்மூலம் அரசு விளம்பரம் தேடுகிறது” என்று பா.ஜ.க.
-
17-வது ஆசிய கோப்பை போட்டி: இந்தியா-பாகிஸ்தான் நாளை இறுதிப்போட்டியில் மோதல்
26 Sep 2025துபாய் : 17-வது ஆசிய கோப்பை போட்டி தொடரின் இறுதிப்போட்டியில் நாளை இந்தியா-பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
-
விக்கெட் வீழ்த்துவது மட்டுமே குறிக்கோள் : வருண் சக்ரவர்த்தி பேட்டி
26 Sep 2025துபாய் : பவர்பிளே ஓவர்களில் விக்கெட் வீழ்த்துவது மட்டுமே குறிக்கோள். சரியான இடத்தில் பந்தை பிட்ச் செய்து, அதை சற்று திரும்ப செய்வதுதான் எனது பணி.
-
பிரேசில் சிறையில் அழகிப்போட்டி; அலங்கார ஆடைகளில் அணிவகுத்த பெண்கள்
26 Sep 2025ரியோ டி ஜெனிரோ : பிரேசில் சிறையில் அழகிப்போட்டியில் பெண் கைதிகள் அணிவகுத்து கலந்து கொண்டனர்.
-
தொடர் கனமழை காரணமாக முல்லை பெரியாறில் நீர்வரத்து அதிகரிப்பு
26 Sep 2025தேனி : தமிழகத்தில் தொடர் கனமழை காரணமாக முல்லைப் பெரியாறு அணையில் நீர்வரத்து உயர்ந்து வருகிறது.
-
த.வெ.க. கொடி விவகாரம்: விஜய் பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு
26 Sep 2025சென்னை : த.வெ.க. கொடி விவகாரம் குறித்து விஜய் பதிலளிக்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
-
819 விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு 21.40 கோடி ரூபாய் உயரிய ஊக்கத்தொகை: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்
26 Sep 2025சென்னை, விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு ரூ.21.40 கோடி உயரிய ஊக்கத்தொகை மற்றும் 4 நபர்களுக்கு கருணை அடிப்படையில் பணிநியமன ஆணையங்களை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வழங
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 27-09-2025.
27 Sep 2025 -
தமிழக அரசின் ஒவ்வொரு திட்டமும் பலரின் வாழ்க்கையை மாற்றியுள்ளது : முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
26 Sep 2025சென்னை : தமிழக அரசின் திட்டங்கள் பலரின் வாழ்க்கையை மாற்றியுள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
தூத்துக்குடியில் 272 விசைப்படகுகள் கடலுக்கு செல்ல தடை: வானிலை ஆய்வு மையம் தகவல்
26 Sep 2025தூத்துக்குடி : வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தூத்துக்குடியில் 272 விசைப்படகுகள் கடலுக்கு செல்லவில்லை.
-
உலக பாரா தடகள சாம்பியன்ஷிப் டெல்லியில் இன்று துவங்குகிறது
26 Sep 2025புதுடெல்லி : 12-வது உலக பாரா தடகள சாம்பியன்ஷிப் போட்டி டெல்லி நேரு ஸ்டேடியத்தில் இன்று தொடங்கி வரும் 5-ம் தேதி வரை வரை நடக்கிறது.
-
ஓ.பி.எஸ். உடன் சந்திப்பா..? செங்கோட்டையன் மறுப்பு: வதந்தி பரப்புவதாக குற்றச்சாட்டு
26 Sep 2025ஈரோடு, சென்னையில் அரசியல் ரீதியாக யாரையும் சந்திக்கவில்லை என செங்கோட்டையன் விளக்கம் அளித்துள்ளார்.
-
ஐதராபாதில் தொடர் கனமழை: 1000-க்கும் மேற்பட்டோர் வெளியேற்றம்
27 Sep 2025ஐதராபாத் : தெலங்கானா மாநிலம் ஐதராபாதில் பெய்து வரும் கனமழையால், 1000-க்கும் மேற்பட்டோர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
-
ஆஸ்திரேலியாவில் இசையமைப்பாளர் தேவாவுக்கு உயரிய மரியாதை
27 Sep 2025ஆஸ்திரேலியா : இசையமைப்பாளர் தேவாவுக்கு, ஆஸ்திரேலிய அரசின் நாடாளுமன்றத்தில் உயரிய மரியாதை அளிக்கப்பட்டுள்ளது.
-
நாடகங்கள் உண்மைகளை மறைக்க உதவாது: ஐ.நா.வில் பாகிஸ்தானுக்கு இந்தியா பதிலடி
27 Sep 2025புதுதில்லி : எந்த நாடகமும் உண்மைகளை மறைக்க உதவாது என்று ஆப்ரேசன் சிந்தூர் நடவடிக்கை குறித்து ஐ.நா.வில் பாகிஸ்தானுக்கு இந்தியா பதிலடி கொடுத்துள்ளது.
-
வி.ஐ.டி. பல்கலைக்கழக வேந்தர் இல்ல திருமண வரவேற்பு விழா: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
27 Sep 2025சென்னை, வி.ஐ.டி. பல்கலைக்கழக வேந்தர் ஜி.விசுவநாதனின் பேத்தி திருமண வரவேற்பு விழா சென்னையில் நடைபெற்றது.