எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
எதிர்வரும் ஆஸ்திரேலியா தொடரில் அசத்தப்போகும் வீரர்கள் குறித்து முன்னாள் வீரர்கள் பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் இந்திய அணியின் இளம் நட்சத்திர துவக்க வீரரான அபிஷேக் சர்மா ஆஸ்திரேலியா மைதானங்களில் அசத்துவார் என டி வில்லியர்ஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது,
அபிஷேக் சர்மா தற்போது தனது வாழ்வின் உச்சகட்ட பார்மில் இருக்கிறார். டி20 போட்டிகளில் தொடர்ந்து அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தும் அவர் ஆஸ்திரேலிய மைதானங்களிலும் ஆதிக்கம் செலுத்துவார் என்று நினைக்கிறேன். ஏனெனில் ஆஸ்திரேலிய மைதானங்களில் பவுன்ஸ் அதிகமாக இருக்கும் என்பதால் அதனை அவர் விரும்பி விளையாடுவார். அதோடு ஆப் சைடு, லெக் சைடு என எந்த திசையிலும் அவரால் நன்றாக அடிக்க முடியும். அதனால் நிச்சயம் இந்த ஆஸ்திரேலியா மைதானங்களில் அவர் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்துவார். இவ்வாறு அவர் கூறினார்.
__________________________________________________________________________________________________________
பாக்., வீராங்கனைக்கு எச்சரிக்கை
மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் கொழும்பில் நடந்த லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி, இந்தியாவிடம் தோல்வி கண்டது. இந்த ஆட்டத்தில் பாகிஸ்தான் தரப்பில் அதிகபட்சமாக சித்ரா அமின் 81 ரன் எடுத்தார். அவர் ஆட்டம் இழந்து பெவிலியன் திரும்பும் போது, ஆடுகளத்தில் பேட்டை ஓங்கி அடித்து தனது விரக்தியை வெளிப்படுத்தினார். இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்திய போட்டி நடுவர், வீராங்கனைகளின் நடத்தை விதியை மீறிய சித்ரா அமினுக்கு எச்சரிக்கை விடுத்ததுடன், ஒரு தகுதி இழப்பு புள்ளியை தண்டனையாக விதித்தார்.
__________________________________________________________________________________________________________
ரஞ்சி: கர்நாடகா அணி அறிவிப்பு
இந்த சீசனுக்கான (2025-26) ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் 15-ந் தேதி தொடங்குகிறது. இந்த போட்டிக்கான கர்நாடகா அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணிக்கு மயங்க் அகர்வால் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த அணியில் கருன் நாயர், ஸ்ரேயாஸ் கோபா, வைஷாக் விஜயகுமார், அபினவ் மனோகர் உள்ளிட்ட முன்னணி வீரர்கள் இடம் பிடித்துள்ளனர். சீனியர் வீரரான கே.எல்.ராகுலுக்கு அணியில் இடம்பெறவில்லை.
கர்நாடகா அணி விவரம்: மயங்க் அகர்வால் (கேப்டன்), கருண் நாயர், ஆர்.ஸ்மரன், கே.எல்.ஸ்ரீஜித் (விக்கெட் கீப்பர்), ஸ்ரேயாஸ் கோபால், வைஷாக் விஜயகுமார், வித்வத் கவேரப்பா, அபிலாஷ் ஷெட்டி, எம்.வெங்கடேஷ், நிகின் ஜோஸ், அபினவ் மனோகர், க்ருத்திக் கிருஷ்ணா (விக்கெட் கீப்பர்), கே.வி.அனீஷ், மோஷின் கான், ஷிகார் ஷெட்டி.
__________________________________________________________________________________________________________
வெஸ்ட் இண்டீஸ் வீரர் மரணம்
வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியின் முன்னாள் ஆல்-ரவுண்டரான பெர்னார்ட் ஜூலியன் (வயது 75) உடல் நலக்குறைவால் மரணம் அடைந்தார். அவர் 1973 முதல் 1977-ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் வெஸ்ட்இண்டீஸ் அணிக்காக 24 டெஸ்ட் போட்டியில் ஆடி 2 சதம் உள்பட 866 ரன்னும், 50 விக்கெட்டும், 12 ஒருநாள் போட்டியில் ஆடி 86 ரன்னும், 18 விக்கெட்டும் எடுத்துள்ளார்.
பெர்னார்ட் ஜூலியன் 1975-ம் ஆண்டு நடந்த முதலாவது ஒருநாள் உலகக் கோப்பையை வென்ற வெஸ்ட்இண்டீஸ் அணியில் முக்கிய பங்களிப்பை அளித்தார். அந்த உலகக் கோப்பை தொடரில் அவர் இலங்கைக்கு எதிரான லீக் ஆட்டத்தில் 20 ரன் விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டும், நியூசிலாந்துக்கு எதிரான அரையிறுதியில் 27 ரன் கொடுத்து 4 விக்கெட்டும் வீழ்த்தினார். அத்துடன் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இறுதிப்போட்டியில் 26 ரன்னும் எடுத்தார். அவர் கவுண்டி போட்டியில் கென்ட் அணிக்காக விளையாடி இருக்கிறார். பெர்னார்ட் ஜூலியன் மறைவுக்கு வெஸ்ட்இண்டீஸ் கிரிக்கெட் வாரியம் இரங்கல் தெரிவித்துள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 1 year 1 week ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 1 year 2 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 1 month ago |
-
மருத்துவமனையில் நேரில் சந்தித்து ராமதாசை நலம் விசாரித்த துணை முதல்வர் உதயநிதி
07 Oct 2025சென்னை : பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸை மருத்துவமனையில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.
-
எனக்கு ஓய்வே கிடையாது: பா.ம.க.நிறுவனர் ராமதாஸ் பேட்டி
07 Oct 2025சென்னை, எனக்கு ஓய்வே கிடையாது என்று பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
-
விஜய் மீது எந்த வன்மமும் இல்லை - திருமாவளவன்
07 Oct 2025சென்னை : த.வெ.க. தலைவர் விஜய் மீது எங்களுக்கு எந்த வன்மமும் இல்லை என்று திருமாவளவன் தெரிவித்தார்.
-
விரைவில் ஈரான் கரன்சியில் இருந்து 4 பூஜ்ஜியங்கள் நீக்கம்
07 Oct 2025தெஹ்ரான், கரன்சியில் இருந்து 4 பூஜ்ஜியங்களை ஈரான் அரசு நீக்க முடிவு செய்துள்ளது.
-
இந்தியா - பாக். மோதல் நிறுத்தம்: மீண்டும் கருத்து தெரிவித்த ட்ரம்ப்
07 Oct 2025நியூயார்க், கடந்த மே மாதம் இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையிலான மோதலை தான் சொன்னதால் அவர்கள் நிறுத்திக் கொண்டதாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் மீண்டும் தெரிவித்
-
முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை கோவை வருகை : போக்குவரத்து மாற்றம்
07 Oct 2025கோவை : கோவைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை வருவதை முன்னிட்டு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
-
இமயமலையில் இருந்து ராமதாஸை நலம் விசாரித்த நடிகர் ரஜினிகாந்த்
07 Oct 2025சென்னை : பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் ஆஞ்சியோ பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் அவரது உடல் நலன் குறித்து இமயமலையில் இருந்து நடிகர் ரஜினிகாந்த் விசாரித்தார்.
-
சோனம் வாங்சுக் கைது விவகாரம்: மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ்
07 Oct 2025புதுடெல்லி, சோனம் வாங்சுக் கைது விவகாரத்தில் மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
-
பிரேமலதா விஜயகாந்தின் தாயார் மறைவு: எடப்பாடி பழனிசாமி இரங்கல்
07 Oct 2025சென்னை : பிரேமலதா விஜயகாந்தின் தாயார் மறைவையொட்டி எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்தார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 07-10-2025.
07 Oct 2025 -
மன்னிப்பு கேட்கப் போவதில்லை: தலைமை நீதிபதி மீது காலணி வீச முயன்ற வழக்கறிஞர் பேட்டி
07 Oct 2025புதுடெல்லி : தலைமை நீதிபதி மீது காலணி வீச முயன்ற வழக்கறிஞர் மன்னிப்பு கேட்கப் போவதில்லை என்று தெரிவித்துள்ளார்.
-
ஏ.ஐ. தொழில்நுட்பம் சமநிலை தொழில்நுட்பமாக இருக்க வேண்டும்: ஜெய்சங்கர் வலியுறுத்தல்
07 Oct 2025புதுடெல்லி, நம்பிக்கையும், பாதுகாப்பும் நிறைந்த சமநிலையான தொழில்நுட்பமாக செயற்கை நுண்ணறிவு விளங்க வேண்டும் என்று வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் வலியுறுத்தியுள்
-
ஐ.சி.சி. பேட்டர்கள் தரவரிசை: 791 புள்ளிகளுடன் தொடர்ந்து ஸ்மிருதி மந்தனா முதலிடம்
07 Oct 2025துபாய் : ஐ.சி.சி.யின் ஒருநாள் போட்டிகளுக்கான சிறந்த பேட்டர்களுக்கான தரவரிசையில் இந்திய வீராங்கனை ஸ்மிருதி மந்தனா தொடர்ந்து முதலிடம் வகிக்கிறார்.
-
முன் இந்திய வீரர்களுக்கு இன்று விருந்தளிக்கிறார் கவுதம் காம்பீர்
07 Oct 2025புதுடெல்லி : இந்தியா- வெஸ்ட்இண்டீஸ் அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி வரும் 10-ம் தேதி தொடங்கவுள்ள நிலையில் அதற்கு முன் இந்திய வீரர்களுக்கு இன்று
-
சபரிமலை கவச முறைகேட்டை விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்தது கேரள ஐகோர்ட்
07 Oct 2025திருவனந்தபுரம், சபரிமலை கவச முறைகேடு விவகாரம் குறித்து சிறப்பு புலனாய்வு குழு அமைத்து கேரள ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
-
கரூர் சம்பவம் தொடர்பாக மேல்முறையீடு: சி.பி.ஐ. விசாரணை கோரி சுப்ரீம் கோர்ட்டில் மனு
07 Oct 2025சென்னை : சி.பி.ஐ. விசாரணை கோரி பா.ஜ.க. நிர்வாகி உமா தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை வரும் 10-ம் தேதி சுப்ரீம் கோர்ட்டு விசாரிக்க உள்ளது.
-
பீகார் சட்டசபை தேர்தல்: வேட்பாளர்கள் தேர்வு குறித்து காங்கிரஸ் இன்று ஆலோசனை
07 Oct 2025பாட்னா, பீகார் மாநில சட்டசபை தேர்தல் வேட்பாளர்கள் தேர்வு குறித்து காங்கிரஸ் தேர்தல் குழு இன்று ஆலோசனை நடத்துகிறது.
-
பராமரிப்பு பணி காரணமாக மதுரை - குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயில் கொல்லத்துடன் நிறுத்தம்
07 Oct 2025மதுரை : மதுரை-குருவாயூர் எக்ஸ்பிரஸ் பராமரிப்பு பணி காரணமாக ரெயில்களின் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
-
அரசுமுறை பயணமாக இன்று இந்தியா வரும் இங்கிலாந்து பிரதமர் ஸ்டார்ம் பிரதமர் மோடியுடன் சந்திப்பு
07 Oct 2025புதுடெல்லி, அரசுமுறை பயணமாக இன்று இந்தியா வரும் இங்கிலாந்து பிரதமர் ஸ்டார்ம் மும்பையில் பிரதமர் மோடியை சந்தித்து பேசுகிறார்.
-
காவலாளி அஜித்குமார் கொலை வழக்கு : கூடுதல் செசன்சு கோர்ட்டுக்கு மாற்றம்
07 Oct 2025சிவகங்கை : அஜித்குமார் கொலை வழக்கு தொடர்பாக மதுரை மாவட்ட 5-வது கூடுதல் செசன்சு கோர்ட்டுக்கு மாற்றி, 17-ந் தேதியில் இருந்து விசாரணையை தொடங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
-
ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.90 ஆயிரத்தை நெருங்கியது
07 Oct 2025சென்னை : தங்கம் விலை நேற்று (07-10-2025) மேலும் அதிகரித்து விற்பனையானது.
-
தமிழ்நாடு உற்பத்தி துறையின் தலைமையாக மாறி வருகிறது : முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
07 Oct 2025சென்னை : புதிய தொழில் ஒப்பந்தங்களை மேற்கொள்வதற்கான தளமாக உள்ள தமிழ்நாடு உற்பத்தி துறையின் தலைமையாக மாறி வருகிறது என்று விண்வெளி பாதுகாப்பு தொழில்களுக்கான கண்காட்சி தொடங
-
ஐ.சி.சி.யின் செப்டம்பர் மாதத்துக்கான சிறந்த வீரர் விருதுக்கான போட்டியில் அபிஷேக்
07 Oct 2025துபாய் : ஐ.சி.சி.யின் செப்டம்பர் மாதத்துக்கான சிறந்த வீரர் விருதுக்கான போட்டியில் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் அபிஷேக் சர்மா இடம்பெற்றுள்ளார்.
குல்தீப் யாதவ்...
-
தலைமை நீதிபதி மீது தாக்குதல் முயற்சி: எடப்பாடி பழனிசாமி கண்டனம்
07 Oct 2025சென்னை : சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி மீது தாக்குதல் முயற்சிக்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
-
எடப்பாடி பழனிசாமியுடன் பா.ஜ.க. தேர்தல் பொறுப்பாளர்கள் சந்திப்பு : சட்டமன்ற தேர்தல் தொகுதி பங்கீடு குறித்து ஆலோசனை?
07 Oct 2025சென்னை : அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சென்னையில் நேற்று பா.ஜனதா மேலிட பொறுப்பாளர்கள் சந்தித்து பேசினர்.