முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வாழைப்பழம் சாப்பிட்டபோது விபரீதம்: மூச்சுக்குழாயில் சிக்கி சிறுவன் உயிரிழப்பு

புதன்கிழமை, 3 டிசம்பர் 2025      தமிழகம்
Suicide 2023 04 29

Source: provided

ஈரோடு : ஈரோட்டில் வாழைப்பழம் சாப்பிட்டபோது மூச்சுக்குழாயில் சிக்கி சிறுவன் உயிரிழந்த சம்பவம் அங்கு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு மாவட்டம் அன்னை சத்யா நகர் பகுதியை சேர்ந்த மாணிக்கம்-மகாலட்சுமி தம்பதியின் மகன் சாய்சரண்(வயது 5). நேற்று முன்தினம் இரவு சிறுவன் சாய்சரணுக்கு அவரது பாட்டி வாழைப்பழத்தை சாப்பிட கொடுத்துள்ளார். பழத்தை சாப்பிட்ட சிறுவன் அதனை விழுங்க முடியாமல் அவதிப்பட்ட நிலையில், வாழைப்பழம் சிறுவனின் மூச்சுக்குழாயில் சிக்கியது.

இதனால் சிறுவனுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர், உடனடியாக சிறுவன் சாய்சரணை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் சிறுவனை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து கருங்கல்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 6 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 8 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 8 months ago
View all comments

வாசகர் கருத்து