எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புதுடெல்லி, மார்ச் 25 - 2 ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு ஊழல் தொடர்பான வழக்கில் இம்மாத இறுதியில் தனிக்கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட இருக்கும் சி.பி.ஐ. குற்றப்பத்திரிகையில் தி.மு.க.வின் கலைஞர் டி.வி.யும் இடம் பெறும் என்று சி.பி.ஐ. வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
கடந்த 2008-ம் ஆண்டு செல்போன் கம்பெனிகளுக்கு 2 ஜி ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றையை ஒதுக்கீடு செய்ததில் ரூ. 1.76 லட்சம் கோடிக்கு மத்திய அரசுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாக மத்திய கணக்கு தணிக்கை குழு குற்றம்சாட்டியிருந்தது.
இதை அடுத்து சி.பி.ஐ. மேற்கொண்ட விசாரணையை அடுத்து அந்த ஒதுக்கீடுகளை செய்த அப்போதைய தொலை தொடர்பு துறை அமைச்சர் ஆ.ராசாவை சி.பி.ஐ. அதிகாரிகள் கைது செய்து கோர்ட்டில் ஆஜர் படுத்தினர். இதை அடுத்து ஆ.ராசா டெல்லியில் உள்ள அதிக பாதுகாப்பு மிகுந்த திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்த வழக்கில் வருகிற 31-ம் தேதி டெல்லியில் தனிக்கோர்ட்டில் சி.பி.ஐ. குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என்று சி.பி.ஐ. வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இந்த வழக்கில் தி.மு.க.வைச் சேர்ந்த முன்னாள் தொலை தொடர்பு துறை அமைச்சர் ஆ.ராசா, அவரது அப்போதைய உதவியாளர்கள் ஆர்.கே.சந்தோலியா, சித்தார்த் பெஹூரா, தொழில் அதிபர் ஷாகீத் உஸ்மான் பல்வா ஆகியோர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என்று சி.பி.ஐ. வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்த அலைக்கற்றை ஒதுக்கீட்டில் பலன் அடைந்த ஸ்வான் டெலிகாம், யூனிடெக் ஒயர்லஸ் நிறுவனங்களின் பெயர்களும் இடம் பெறும் என்றும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
குற்றப்பத்திரிகைக்கு இறுதி வடிவம் கொடுத்து வரும் சி.பி.ஐ. தனது ஆவணங்களை சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யாது என்றும் அதற்கு பதிலாக டெல்லி தனிக்கோர்ட்டில் தாக்கல் செய்யப்படும் என்றும் கூறியுள்ளது.
இந்த குற்றப்பத்திரிகையில் தி.மு.க.வின் கலைஞர் டி.வி.யின் பெயரும் இடம் பெறும் என்றும் சி.பி.ஐ.வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
2 ஜி.ஸ்பெக்ட்ரம் முறைகேட்டில் பெறப்பட்ட பணத்தில் ரூ.214 கோடியை கலைஞர் டி.வி. பெற்றுள்ளது . ஆனால் அந்த பணத்தை திருப்பி செலுத்தி விட்டதாக கலைஞர் டி.வி. நிர்வாகம் தெரிவித்துள்ளது.
என்றாலும் இந்த பணம் எதற்காக கொடுக்கப்பட்டது என்பது குறித்து சி.பி.ஐ. அதிகாரிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
மேலும் இந்த வழக்கில் கலைஞர் டி.வி.யின் தலைமை செயல் அதிகாரி சரத்குமார் குற்றவாளியாக சேர்க்கப்படுவார் என்றும் சி.பி.ஐ. வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இந்த குற்றப்பத்திரிகையில் தி.மு.க. எம்.பி.யும் கலைஞர் டி.வி.யின் பங்குதாரருமான கனிமொழி பெயர் சேர்க்க இதுவரை சி.பி.ஐ. எந்த முடிவும் எடுத்ததாக தெரியவில்லை ஆனால் இந்த விஷயம் தொடர்பான சட்ட ஆலோசனை கிடைத்த பிறகே சி.பி.ஐ. இறுதி முடிவை எடுக்கும் என்றும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்த வழக்கில் சி.பி.ஐ. தனது முதலாவது குற்றப்பத்திரிகையை இம்மாதம் 31-ம் தேதி கோர்ட்டில் தாக்கல் செய்ய எல்லா விதத்திலும் தயாராகி விட்டது.
சுப்ரீம் கோர்ட்டு விதித்த காலக்கெடுவுக்குள் இந்த குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்ய சி.பி.ஐ.தயாராக உள்ளது. அதன்படி இம்மாதம் 31 ம் தேதி இந்த குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என்று நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
2 ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேடுகள் குறித்த சி.பி.ஐ. விசாரணையை சுப்ரீம் கோர்ட்டு கண்காணித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
முதலில் வருபவருக்கே முன்னுரிமை என்ற அடிப்படையில் இந்த ஒதுக்கீட்டில் நடந்த கிரிமினல் சதி திட்டங்கள் குறித்த அம்சங்கள் இடம் பெறும் என்றும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
விசாரணையின் போக்கை பொறுத்தும் வழக்கில் சேர்க்கப்பட உள்ள குற்றவாளிகளை பொறுத்தும் அடுத்து தாக்கல் செய்யப்படும் குற்றப்பத்திரிகைகளின் எண்ணிக்கை முடிவு செய்யப்படும் என்றும் சி.பி. ஐ. வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
சூப்பர் சாஃப்ட் இட்லி2 days 52 sec ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி5 days 23 hours ago |
ரவா பர்பி1 week 2 days ago |
-
தமிழ்நாட்டில் இன்றும் 108 டிகிரி பாரன்ஹீட் வெயில் கொளுத்தும்: சென்னை வானிலை மையம் தகவல்
18 Apr 2024சென்னை, தமிழகத்தில் இன்று 108 டிகிரி பாரன்ஹீட் வெயில் கொளுத்தும்' என சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
-
மீனாட்சி அம்மன் கோவில் செங்கோல் விவகாரம்: ஆகம விதிகள் குறித்து ஒரே நாளில் நீதிபதிகள் முடிவுக்கு வர இயலாது: உயர் நீதிமன்ற மதுரை கிளை கருத்து
18 Apr 2024மதுரை, மீனாட்சி அம்மன் கோவில் செங்கோல் விவகாரத்தில் நீதிபதிகள் ஆகம விதி நிபுணர்கள் அல்ல என்று கருத்து தெரிவித்துள்ள மதுரை ஐகோர்ட், நீதிபதிகள் ஆகம விதி நிபுணர்கள் அல்ல எ
-
பாராளுமன்ற தேர்தல் எதிரொலி: ரயில், பேருந்து நிலையங்களில் அலை மோதிய மக்கள் கூட்டம்
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தல் காரணமாக நேற்று ரெயில், பஸ் நிலையங்களில் பயணிகள் கூட்டம் அலைமோதியது.
-
'சப்சோனிக்' ஏவுகணை வெற்றிகரமாக சோதனை
18 Apr 2024புவனேஸ்வரம், தரையிலிருந்து குறுகிய தூரம் சென்று இலக்கை தாக்கும் சப்சோனிக் ஏவுகணை நேற்று வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டதாக டி.ஆர்.டி.ஓ. தகவல் வெளியிட்டுள்ளது.
-
மருத்துவர்கள் இன்று தயார் நிலையில் இருக்க வேண்டும்: பொது சுகாதாரத்துறை உத்தரவு
18 Apr 2024சென்னை, மருத்துவர்கள் இன்று தயார் நிலையில் இருக்க வேண்டும் என்று பொது சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.
-
சி.எஸ்.கே. அணியின் தொடக்க ஆட்டக்காரராக ரிச்சர்டு க்ளீசன்
18 Apr 2024சென்னை:சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர் டெவான் கான்வேவுக்குப் பதிலாக மாற்று வீரரை சிஎஸ்கே அணி நிர்வாகம் அறிவித்துள்ளது.
-
ஆல் ரவுண்டர்களுக்கு பாதிப்பு:இம்பேக்ட் விதிமுறையை எதிர்க்கும் ரோகித் சர்மா
18 Apr 2024மும்பை:இம்பேக்ட் விதிமுறையால் ஆல் ரவுண்டர்கள் தங்களது முக்கியதுவத்தை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக வெளிப்படையாக கருத்து தெரிவித்துள்ளார் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்
-
நாட்டில் உள்ள ஒவ்வொரு மொழியும் முக்கியமானது ராகுல் காந்தி பேச்சு
18 Apr 2024திருவனந்தபுரம்: இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மொழியும் மற்ற மொழிகளை போல முக்கியமானது.
-
மழை, வெள்ள பாதிப்பு: துபாய் இந்தியர்களுக்கு உதவி எண்கள் அறிவிப்பு
18 Apr 2024துபாய்:துபாயில் பெய்த வரலாறு காணாத கனமழையால், அங்கு வசிக்கும் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
-
இமாச்சல்லில் உலகிலேயே மிக உயரமான வாக்குச்சாவடி
18 Apr 2024சிம்லா:இமாச்சல பிரதேசத்தில் 52 வாக்காளர்களுக்காக மலைகளுக்கு இடையே உலகின் மிக உயரமான பள்ளத்தாக்கு பகுதியில் வாக்குச்சாவடி அமைக்கப்பட்டிருக்கிறது.
-
இஸ்ரேல் சரக்கு கப்பலில் சிக்கிய 17 இந்தியர்களில் கேரள பெண் மீட்பு
18 Apr 2024புதுடில்லி:ஈரானால் கைப்பற்றப்பட்ட, இஸ்ரேல் சரக்கு கப்பலில் இருந்த இந்திய பணியாளர்கள், 17 பேரில் கேரளாவை சேர்ந்த டெஸ்ஸா ஜோசப் என்ற பெண் நேற்று (ஏப்ரல் 18) விடுவிக்கப்பட்
-
குஜராத்தை வீழ்த்தியது டெல்லி
18 Apr 2024அகமதாபாத்:குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 6 விக்கெட் வித்தியாத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி அபார வெற்றி பெற்றது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 19-04-2024.
19 Apr 2024 -
பார்லி. தேர்தல்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாக்களித்தார்
19 Apr 2024சென்னை : தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளில் பாராளுமன்ற தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி நேற்று நடைபெற்றது. இந்த தேர்தலை
-
ஆர்வமுடன் வாக்களித்த உலகின் குள்ளமான பெண்
19 Apr 2024நாக்பூர், நாக்பூரில் உள்ள வாக்குச்சாவடியில் உலகின் குள்ளமான பெண்மணியான ஜோதி ஆம்ஜி என்பவர் வாக்களித்தார்.
-
பாராளுமன்ற தேர்தல்: ஜனநாயக கடமையாற்றிய திரை பிரபலங்கள்
19 Apr 2024சென்னை : தமிழகத்தில் நேற்று நடந்த பாராளுமன்ற தேர்தலில் திரை பிரபலங்கள் பலரும் தங்களது ஜனநாயக கடமையையாற்றினர்.
-
பார்லி. தேர்தல்: வாக்களிக்க சென்ற 3 பேர் மயங்கி விழுந்து உயிரிழப்பு
19 Apr 2024சென்னை, தமிழகத்தில் நேற்று நடந்த பாராளுமன்ற தேர்தலில் வாக்களிக்க சென்ற 3 பேர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
சைக்கிள் ஓட்டிச்சென்று நடிகர் விஷால் வாக்களிப்பு
19 Apr 2024சென்னை : நடிகர் விஷால் சைக்கிள் ஓட்டிச்சென்று வாக்களித்தது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
-
கடற்படையின் அடுத்த தளபதியாக தினேஷ் குமார் திரிபாதி நியமனம்
19 Apr 2024புது டெல்லி, கடற்படைத் துணைத் தளபதியாக தற்போது பணியாற்றி வரும் வைஸ் அட்மிரல் தினேஷ் குமார் திரிபாதியை வரும் 30-ம் தேதி முதல் கடற்படையின் அடுத்த தளபதியாக அரசு நியமித்துள
-
ஸ்காட்லாந்தில் அருவியில் குளித்த இந்திய மாணவர்கள் 2 பேர் தவறி விழுந்து உயிரிழப்பு
19 Apr 2024லண்டன், ஸ்காட்லாந்தில் அருவியில் குளித்து மகிழ்ந்த 2 இந்திய மாணவர்கள் தவறி விழுந்து உயிரிழந்தனர்.
-
புதுச்சேரியில் மோட்டார் சைக்கிளில் சென்று வாக்களித்த முதல்வர் ரங்கசாமி
19 Apr 2024புதுச்சேரி, புதுச்சேரியில் மோட்டார் சைக்கிளில் சென்று தனது வாக்கினை பதிவு செய்தார் அம்மாநில முதல்வர் ரங்காசமி.
-
கர்நாடகாவில் காங்கிரசில் இணைந்த முன்னாள் எம்.எல்.ஏ.-க்கள் 2 பேர்
19 Apr 2024பெங்களூர், கர்நாடகா மாநிலத்தின் முன்னாள் பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் இருவர் மலிகாய்யா கட்டேதார், சாரதா மோகன் ஷெட்டி ஆகியோர் நேற்று காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர்.
-
காந்திநகரில் அமித்ஷா வேட்புமனு தாக்கல்
19 Apr 2024காந்திநகர், குஜராத் மாநிலத்தில் உள்ள 26 தொகுதிகளுக்கும் 3-வது கட்டமாக மே 7-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 12-ம் தேதி தொடங்கியது.
-
ம.பி.யில் காங்கிரசின் நகுல் நாத்துக்கு வாக்களிக்க கோரிய பா.ஜ.க. மேயர்
19 Apr 2024சிந்த்வாரா, மத்தியப் பிரதேசத்தின் நட்சத்திர தொகுதியான சிந்த்வாராவில் நேற்று முதல்கட்ட வாக்குப்பதிவு நடந்தது.
-
ஐ.நா.வில் பாலஸ்தீனத்தை உறுப்பினராக்கும் தீர்மானம்: வீட்டோ அதிகாரம் மூலம் முறியடித்த அமெரிக்கா
19 Apr 2024நியூயார்க், 193 உறுப்பினர்களைக் கொண்ட ஐ.நா.