தமிழ்நாடு இந்து சமய மற்றும் அறநிலையத்துறையில் உள்ள 'நிர்வாக அதிகாரி (நிலை -III)' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

திருச்சி. மார்ச். - 27 - அதிமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து அதிமுக வேட்பாளர் ஜெயலலிதா திருச்சியில் இருந்து சூறாவளி தேர்தல் பிரச்சார சுற்றுப்பயணத்தை தொடங்கி இருக்கிறார். அவர் சென்ற இடமெல்லாம் பொதுமக்களும் அதிமுக மற்றும் கூட்டணி கட்சி தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்து வருகிறார்கள். கடந்த 3 நாட்களாக ஸ்ரீரங்கம், திருச்சி கிழக்கு, திருச்சி மேற்கு ஆகிய சட்டமன்ற தொகுதிகளில் சுற்றுப்பயணம் செய்தார். இதுதவிர திருச்சி மாவட்டம் மணப்பாறை தொகுதியிலும் ஜெயலலிதா தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பேசினார்.
இந்த நிலையில் 3ம் நாள் தன்னுடைய தேர்சல் பிரச்சார சுற்றுப்பயணத்தை மாலை 5.15 மணிக்கு திருச்சி சங்கம் ஓட்டலில் இருந்து துவங்கினார். அங்கிருந்து ஐயப்பன் கோவில், அரசு தலைமை மருத்துவமனை வழியாக 5.25 மணிக்கு திருச்சி புத்தூர் நாலுரோடு வந்தடைந்தார். முன்னதாக அந்த பகுதியில் மதியம் 2 மணியில் இருந்து அதிமுக, தேமுதிக, இந்திய கம்யூனிஸ்ட். மார்க்சிய கம்யூனிஸ்ட், புதிய தமிழகம், மனிதநேய மக்கள் கட்சி, பார்வர்டு பிளாக் ஆகிய கட்சிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான தொண்டர்கள் கைகளில் கொடிகளை ஏந்தி ஜெயலலிதாவை வரவேற்க காத்திருந்தனர்.
இதைத்தொடர்ந்து புத்தூர் நாலுரோட்டில் இருந்து ஜெயலலிதா மூன்றாம் பிரச்சார சுற்றுப்பயணத்தை துவக்கி திருச்சி மேற்கு தொகுதி வேட்பாளர் மரியம்பிச்சையை ஆதரித்து பேசியதாவது:-
நபெற உள்ள தமிழக சட்டமன்ற தேர்தல் சாதாரண தேர்தல் அல்ல, தமிழக மக்கள் திமுக ஆட்சியின் பிடியில் இருந்து விடுதலை பெற்று தரும் தேர்தல் ஆகும். கடந்த 5 ஆண்டுகளில் தமிழக மக்களுக்கு பல்வேறு பிரச்சினைகள் ஏற்பட்டது. விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த கருணாநிதி எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. டீசல், பெட்ரோல், கியாஸ் விலை உயர்ந்தது. கடந்த ஒரு ஆண்டில் மட்டும் பெட்ரோல் 9 முறை விலை உயர்த்தப்பட்டது. விலைவாசியும் குறையவில்லை. மணல் கொள்ளை இன்னமும் நடைபெற்றுக்கொண்டு இருக்கிறது. கருணாநியின் குடும்பத்திற்கு 50 ஆயிரம் கோடி ரூபாய் கிடைத்தது. அதேபோல் கிராணைட் கொள்ளை மூலம் 80 ஆயிரம் கோடி ரூபாய் கிடைத்துள்ளது. தமிழ்நாட்டில் மின் உற்பத்திக்கு பதிலாக மின்வெட்டு பெருகிவிட்டது. இதனால் மின்வெட்டு மாநிலமாக தமிழகம் திகழ்ந்து கொண்டு இருக்கிறது. எங்கும் ஊழல், எதிலும் ஊழல் இந்தியாவிலேயே தன் மக்களுக்கு கோடி கோடியாக சம்பாதித்த ஒரே முதல்வர் கருணாநிதி.
தமிழக முழுவதும் ஊழல் தலைவிரித்தாடுகிறது. அரசு ஊழியர்கள், நீதிபதிகள், வழக்கறிஞர்கள் தாக்கப்படுகின்றனர். திருச்சியை பொறுத்தவரை இங்கு உள்ளூர் பிரச்சினைகள் பற்றி எனக்கு தெரியும். அனைத்து வசதிகளுடன் கூடிய திருச்சி புதிய பேருந்து நிலையத்தை அமைத்து காட்டுவோம். பொதுமக்களுக்கும், வியாபாரிகளையும் பாதிக்காத வகையில் திருச்சி காந்தி மார்க்கெட் இடமாற்றம் செய்யப்படும். திருச்சி புத்தூர் தலைமை அரசு மருத்துவமனையை தரம் உயர்த்துவோம். திருச்சி ஜங்சன் ரயில்வே மேம்பாலத்தை அகலப்படுத்துவோம். திருச்சி நகரில் குடிnullநீர் பிரச்சனைகளை தீர்ப்பதோடு தரமான சாலை வசதிகளை செய்வோம். போக்குவரத்து இடையூறுகளாக திருச்சி மேலப்புதூர் கான்வென்ட் பகுதி, தலைமை தபால் நிலையம், மெயின்காட்கேட் ஆகிய பகுதிகளில் பொதுமக்கள் எளிதாக சாலையை கடந்து செல்ல நடைபாதை மேம்பாலங்கள் அமைக்கப்படும்.
அமைச்சர் நேருவின் அட்டகாசத்தால் nullநீங்கள் பாதித்து இருப்பதை நான் நன்கு அறிவேன். நேரு அவரது சகோதரர் ஆகியோருக்கு தெரியாமல் திருச்சி மாவட்டத்தில் யாரும் இடத்தை வாங்கி பதிவு செய்ய முடியாது. அமைச்சர் கே.என்.நேரு தன்னுடைய பினாமிகளின் மூலம் 6 ஆயிரம் ஏக்கர் நிலத்தை வாங்கி குவித்து வைத்துள்ளார். அப்படிப்பட்ட நேருதான் திருச்சி தொகுதியில் போட்டியிடுகிறார். இந்த தேர்தலில் நேருவை தோர்கடிக்க செய்வீர்களா? (செய்வோம் செய்வோம் என தொண்டர்கள் கோஷமிட்டனர்) திமுக ஆட்சியில் முஸ்லீம்களுக்கு 3.5 சதவீதம் இடஒடுக்கீடு அளிப்பதாக கருணாநிதி கூறினார். ஆனால் அதை நடைமுறையில் அமுல்படுத்த வில்லை. உங்கள் ஆதரவுடன் அதிமுக ஆட்சி அமைத்தால் முஸ்லீம்களின் இட ஒதுக்கீடு உயர்த்தப்படும் அதோடு இஸ்லாமியர்களின் அணைத்து கோரிக்கைகளும் பரிசீலிக்கப்படும். அதிமுக ஆட்சி அமைந்தவுடன் மின்வெட்டு அடியோடு ரத்து செய்யப்படும். விலைவாசி உயர்வு குறைக்கப்படும். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கட்டுப்படுத்தப்படும். உங்களுடைய உள்ளூர் பிரச்சினைகள் தீர்க்கப்படும் அதோடு அனைவருக்கும் சுதந்திரம் கிடைக்க வழிவகை செய்யப்படும்.
பொதுமக்களாகிய உங்கள் பணத்தைதான் சுரண்டி வைத்துக்கொண்டு ஓட்டுக்கு 1 லட்ச ரூபாய் வரை கொடுப்பார். அந்த பணத்தை nullநீங்கள் வாங்கி வைத்துக்கொண்டு உங்கள் மனசாட்சி எப்படி சொல்கிறதோ அப்படி செய்யுங்கள். தமிழகத்தில் மீண்டும் அதிமுக ஆட்சி அமைந்தால் அனைத்து குடும்ப அட்டைகளுக்கும் 20 கிலோ அரிசி இலவசமாக வழங்கப்படும். தற்போது வழங்கப்படும் திருமண உதவித்தொகையான ரூபாய் 25 ஆயிரத்துடன் 4 கிராம் தங்கம் வழங்கப்படும். அதேபோல காற்றாடி, கிரைண்டர், மிக்ஸி ஆகியவைகளும் இலவசமாக வழங்கப்படும். அதரவற்றவர்களுக்கும் முதியோர்களுக்கும் வழங்கப்படும் ரூபாய் 500 உயர்த்தி 1000 ரூபாயாக வழங்கப்படும். கரும்பு டன் கொள்முதல் 2500 உயர்த்தி தரப்படும். 11ம், 12ம் வகுப்பு ஆகிய படிப்புகளை அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் பணிக்கும் மாணவ மாணவிகளுக்கு லேப்டாப் கம்யூட்டர் வழங்கப்படும். கேபிள் டிவி அரசுடமையாக்கப்படும். வறுமைகோட்டிற்கு கீழ் உள்ள குடும்பங்களுக்கு தலா நான்கு ஆடுகள் இலவசமாக வழங்கப்படும்.
பால் உற்பத்தியை பெருக்க தமிழகம் முழுவதும் 60 ஆயிரம் குடும்பங்களுக்கு கறவை மாடுகள் வழங்கப்படும். மாணவ மாணவிகளுக்கு வழங்கப்படும் கல்வி உதவித்தொகை ஆயிரம் ரூபாய் இருந்து 5 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்படும்.
சுயஉதவிக்குழுக்களுக்கு 10 லட்ச ரூபாய் வரை கடன் உதவி வழங்கப்படும். 58 வயது மேற்பட்டவர்களுக்கு உள்ளூர் அரசு பேருந்துகளில் செல்ல இலவச பஸ்பாஸ் வழங்கப்படும். வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள 3 லட்சம் குடும்பங்களுக்கு 300 சதுர அடியில் நவீன பசுமை வீடுகள் கட்டித்தரப்படும். நிலமற்றவர்களுக்கு 3 சென்ட் நிலம் வழங்கப்படும். குடும்ப ஆட்சியில் இருந்து தமிழகத்தை மீட்டெடுக்க இந்த மேற்கு தொகுதியில் அதிமுக வேட்பாளராக மரியம்பிச்சை நிறுத்தப்பட்டுள்ளார். இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து வெற்றிபெற செய்ய வேண்டுகிறேன்.
அதைதொடர்ந்து திருச்சி தென்னூர் தில்லைநகர், கோகினூர் தியேட்டர் வழியாக திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்திற்கு ஜெயலலிதா சென்றார். அங்கு திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் ஆர். மனோகரனை ஆதரித்து ஜெயலலிதா வரலாறு காணாத கூட்டத்தில் பேசினார். முன்னதாக திருச்சி சங்கம் ஓட்டலில் இருந்து சத்திரம் பேருந்து நிலையம் வரை 6 கிலோமீட்டர் தூரத்திற்கு அதிமுகவினர் மற்றும் தோழமை கட்சி தொண்டர்கள் கைகளில் கொடிகலை ஏந்தி ஜெயலலிதாவிற்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
-
இந்தோ - பசிபிக் பிராந்திய அமைதிக்கு வித்திடும் அமைப்பாக 'குவாட்' இருக்கிறது : பிரதமர் நரேந்திரமோடி பெருமிதம்
24 May 2022டோக்கியோ : உலக அரங்கில் குவாட் அமைப்பு முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது.
-
வாட்ஸ் ஆப் செயலி வாயிலாக இனி மத்திய அரசு சேவைகள்
24 May 2022புது டெல்லி : வாட்ஸ் ஆப் செயலி வாயிலாக இனி மத்திய அரசு சேவைகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
-
பெரியார் பற்றிய பாடத்தை நீக்கவில்லை: இந்துக்கள் உணர்வுகளை புண்படுத்தும் வாக்கியங்கள் மட்டுமே நீக்கியுள்ளோம் : கர்நாடக கல்வித்துறை அமைச்சர் விளக்கம்
24 May 2022பெங்களூரு : பாடப்புத்தகத்திலிருந்து பெரியார் பற்றிய பாடத்தை நீக்கவில்லை.
-
3-வது நாளாக தொடர்ந்து சரிவு: இந்தியாவில் கொரோனா புதிய பாதிப்பு 1,675 ஆக குறைந்தது
24 May 2022புதுடெல்லி : இந்தியாவில் கொரோனா புதிய பாதிப்பு 1,675 - ஆக குறைந்துள்ளது.
-
அடுத்த 30 ஆண்டுகளுக்கு பாஜகவை மையப்படுத்தியே இந்திய அரசியல் : பிரஷாந்த் கிஷோர் கணிப்பு
24 May 2022புதுடெல்லி : பாரதிய ஜனதா கட்சியை யார் ஆதரித்தாலும், எதிர்த்தாலும் அடுத்த 20 முதல் 30 ஆண்டுகளுக்கு அக்கட்சியை மையப்படுத்தியே இந்தியாவின் அரசியல் இருக்கும் என்று தேர்தல்
-
சர்வதேச யோகா தினத்தில் மைசூரில் 21-ம் தேதி மக்களுடன் பிரதமர் நரேந்திரமோடி பங்கேற்பு
24 May 2022புதுடெல்லி : சர்வதேச யோகா தினம்- மைசூரில் 21-ம் தேதி பிரதமர் மோடி பங்கேற்கிறார்.
-
15-18 வயதுடைய 80 சதவீத சிறார்களுக்கு முதல் தவணை தடுப்பூசி: மாண்டவியா
24 May 2022புதுடெல்லி : இந்தியாவில் 15 முதல் 18 வயது வரையுள்ள சிறார்களில் 80 சதவீதத்துக்கும் அதிகமானோருக்கு முதல் தவணை கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை
-
டி-20 உலக கோப்பை : இந்திய அணியில் அஸ்வினை சேர்க்க வேண்டும் - கவாஸ்கர்
24 May 2022மும்பை : பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் சாதித்து வரும் அஸ்வினை 20 ஓவர் உலக கோப்பை அணியில் சேர்க்க வேண்டும் என்று முன்னாள் கேப்டனும், டெலிவிஷன் வர்ணனையாளருமான கவாஸ்கர்
-
இலங்கையில் இதுவரை இல்லாத அளவு பெட்ரோல் லிட்டர் ரூ.420-ம், டீசல் ரூ.400 ஆகவும் உயர்வு
24 May 2022கொழும்பு : இலங்கையில் நேற்று ஒரே நாளில் பெட்ரோல் விலை 24.3 வீதமும், டீசல் விலை 38.4 சதவீதமும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
-
இந்த ஆண்டு ஐ.பி.எல் தொடரின் சிறந்த கேப்டன் ஹர்திக் பாண்டியா : வீரேந்திர சேவாக் புகழாரம்
24 May 2022மும்பை : பேட்டிங் செய்யும்போது காட்டும் அதே ஆக்ரோஷத்தை, கேப்டனாகவும் காட்டுவார் என்று நினைத்தேன்.
-
10-ம் வகுப்பு கணிதத்தேர்வை எழுதாத 45,618 மாணவர்கள் : தமிழக தேர்வுத்துறை தகவல்
24 May 2022சென்னை : நேற்று நடைபெற்ற தேர்வில் 45,618 மாணவர்கள் தேர்வு எழுத வரவில்லை என்று தேர்வுத்துறை தெரிவித்துள்ளது.
-
கோவை வெள்ளிங்கிரியில் 7 மலைகள் ஏறிய அமைச்சர் சேகர்பாபுவுக்கு குவியும் பாராட்டுகள்
24 May 2022சென்னை : கோவை வெள்ளிங்கிரியில் ஏழு மலைகள் ஏறிய அமைச்சர் சேகர்பாபுவுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
-
தைவானை தாக்க தயார் நிலையில் வீரர்கள்: சீன அதிபர் பேசிய ஆடியோ வெளியானதால் பரபரப்பு
24 May 2022பெய்ஜிங் : 1.40 லட்சம் ராணுவ வீரர்கள், 953 கப்பல்களை தயார்படுத்துமாறு சீன அதிபர் ஜி ஜின்பிங் பேசிய ஆடியோ சீனாவில் வெளியானதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
-
விராட் கோலி, ரோகித் சர்மா மீண்டும் ரன்களை குவிக்க தொடங்குவார்கள் : பி.சி.சி.ஐ. தலைவர் கங்குலி நம்பிக்கை
24 May 2022மும்பை : விராட் கோலி மற்றும் ரோகித் இருவர் குறித்தும் கங்குலி பேசுகையில், "அவர்கள் மிகச் சிறந்த வீரர்கள்.
-
ரெய்னாவின் பங்களிப்பை நாம் மறந்து விடுகிறோம் : முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கருத்து
24 May 2022மும்பை : சுரேஷ் ரெய்னாவின் பங்களிப்பை நாம் மறந்து விடுவதாக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார்.
-
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி-20 தொடர்: பல இளம் வீரர்களுக்கு வாய்பளிக்க தவானை தேர்வு செய்யாத டிராவிட்
24 May 2022மும்பை : தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி-20 தொடரில் தவான் தேர்வு செய்யப்படாதது பயிற்சியாளர் ராகுல் டிராவிட் எடுத்த முடிவு என தெரியவந்துள்ளது.
-
அடுத்த ஐ.பி.எல்-லில் இருப்பேன்: ஆர்சிபி ஜாம்பவான் டிவில்லியர்ஸ்
24 May 2022தென்னாப்பிரிக்க அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரான டிவில்லியர்ஸ், மொத்தம் 184 ஐபிஎல் போட்டிகளில் விளையாடி உள்ளார்.
-
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு சற்று அதிகரிப்பு
24 May 2022சென்னை : தமிழகத்தில் நேற்று 59 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
-
பகை உணர்வு எதுவும் இல்லை ; மேரிகோமை மன்னித்துவிட்டேன் : தங்கம் வென்ற நிகத் ஐரீன் பேட்டி
24 May 2022மும்பை : மேரி கோம்மை மன்னித்துவிட்டதாக உலக சாம்பியன்ஷிப் குத்துச் சண்டை போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற நிகத் ஐரீன் தெரிவித்துள்ளார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம்- 25-05-2022
25 May 2022 -
ஓமந்தூரார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மாணவி சிந்துவிடம் முதல்வர் ஸ்டாலின் நேரில் நலம் விசாரிப்பு
25 May 2022சென்னை : தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று சென்னை, ஓமந்தூரார் அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மாணவி சிந்துவை நேரில் சந்தித்து நலம் வ
-
வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனை
25 May 2022பியாங்கியாங் : அமெரிக்கா அதிபர் ஜோ பைடன், ஜப்பானில் நடந்த குவாட் அமைப்பு உச்சி மாநாட்டில் பங்கேற்றுவிட்டு தனது நாட்டுக்கு புறப்பட்ட சில மணி நேரத்தில் வடகொரியா ஏவுகணை ச
-
நாசா வெளியிட்ட கேலக்ஸியின் புதிய புகைப்படம் வைரல்
25 May 2022நியூயார்க் : நாசா விண்வெளி ஆய்வு மையம் கேலக்ஸியின் புதிய புகைப்படத்தை வெளியிட்டுள்ளது.
-
கொலை முயற்சியில் உயிர் தப்பிய புடின் : உக்ரைன் அதிகாரி திடுக்கிடும் தகவல்
25 May 2022கீவ் : ரஷ்ய அதிபர் புடினை கொல்ல இரண்டு மாதங்களுக்கு முன் முயற்சி நடந்ததாகவும், அதில் அவர் தப்பித்ததாகவும் உக்ரைன் ராணுவ உளவுப்பிரிவு தலைவர் தெரிவித்துள்ளார்.
-
நிதித்துறை அமைச்சராக ரணில் விக்கிரமசிங்கே பொறுப்பேற்பு
25 May 2022கொழும்பு : இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே கூடுதல் பொறுப்பாக நிதித்துறை அமைச்சராக நேற்று பதவியேற்றுக் கொண்டார்.