எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
திருச்சி. மார்ச். - 27 - அதிமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து அதிமுக வேட்பாளர் ஜெயலலிதா திருச்சியில் இருந்து சூறாவளி தேர்தல் பிரச்சார சுற்றுப்பயணத்தை தொடங்கி இருக்கிறார். அவர் சென்ற இடமெல்லாம் பொதுமக்களும் அதிமுக மற்றும் கூட்டணி கட்சி தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்து வருகிறார்கள். கடந்த 3 நாட்களாக ஸ்ரீரங்கம், திருச்சி கிழக்கு, திருச்சி மேற்கு ஆகிய சட்டமன்ற தொகுதிகளில் சுற்றுப்பயணம் செய்தார். இதுதவிர திருச்சி மாவட்டம் மணப்பாறை தொகுதியிலும் ஜெயலலிதா தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பேசினார்.
இந்த நிலையில் 3ம் நாள் தன்னுடைய தேர்சல் பிரச்சார சுற்றுப்பயணத்தை மாலை 5.15 மணிக்கு திருச்சி சங்கம் ஓட்டலில் இருந்து துவங்கினார். அங்கிருந்து ஐயப்பன் கோவில், அரசு தலைமை மருத்துவமனை வழியாக 5.25 மணிக்கு திருச்சி புத்தூர் நாலுரோடு வந்தடைந்தார். முன்னதாக அந்த பகுதியில் மதியம் 2 மணியில் இருந்து அதிமுக, தேமுதிக, இந்திய கம்யூனிஸ்ட். மார்க்சிய கம்யூனிஸ்ட், புதிய தமிழகம், மனிதநேய மக்கள் கட்சி, பார்வர்டு பிளாக் ஆகிய கட்சிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான தொண்டர்கள் கைகளில் கொடிகளை ஏந்தி ஜெயலலிதாவை வரவேற்க காத்திருந்தனர்.
இதைத்தொடர்ந்து புத்தூர் நாலுரோட்டில் இருந்து ஜெயலலிதா மூன்றாம் பிரச்சார சுற்றுப்பயணத்தை துவக்கி திருச்சி மேற்கு தொகுதி வேட்பாளர் மரியம்பிச்சையை ஆதரித்து பேசியதாவது:-
நபெற உள்ள தமிழக சட்டமன்ற தேர்தல் சாதாரண தேர்தல் அல்ல, தமிழக மக்கள் திமுக ஆட்சியின் பிடியில் இருந்து விடுதலை பெற்று தரும் தேர்தல் ஆகும். கடந்த 5 ஆண்டுகளில் தமிழக மக்களுக்கு பல்வேறு பிரச்சினைகள் ஏற்பட்டது. விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த கருணாநிதி எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. டீசல், பெட்ரோல், கியாஸ் விலை உயர்ந்தது. கடந்த ஒரு ஆண்டில் மட்டும் பெட்ரோல் 9 முறை விலை உயர்த்தப்பட்டது. விலைவாசியும் குறையவில்லை. மணல் கொள்ளை இன்னமும் நடைபெற்றுக்கொண்டு இருக்கிறது. கருணாநியின் குடும்பத்திற்கு 50 ஆயிரம் கோடி ரூபாய் கிடைத்தது. அதேபோல் கிராணைட் கொள்ளை மூலம் 80 ஆயிரம் கோடி ரூபாய் கிடைத்துள்ளது. தமிழ்நாட்டில் மின் உற்பத்திக்கு பதிலாக மின்வெட்டு பெருகிவிட்டது. இதனால் மின்வெட்டு மாநிலமாக தமிழகம் திகழ்ந்து கொண்டு இருக்கிறது. எங்கும் ஊழல், எதிலும் ஊழல் இந்தியாவிலேயே தன் மக்களுக்கு கோடி கோடியாக சம்பாதித்த ஒரே முதல்வர் கருணாநிதி.
தமிழக முழுவதும் ஊழல் தலைவிரித்தாடுகிறது. அரசு ஊழியர்கள், நீதிபதிகள், வழக்கறிஞர்கள் தாக்கப்படுகின்றனர். திருச்சியை பொறுத்தவரை இங்கு உள்ளூர் பிரச்சினைகள் பற்றி எனக்கு தெரியும். அனைத்து வசதிகளுடன் கூடிய திருச்சி புதிய பேருந்து நிலையத்தை அமைத்து காட்டுவோம். பொதுமக்களுக்கும், வியாபாரிகளையும் பாதிக்காத வகையில் திருச்சி காந்தி மார்க்கெட் இடமாற்றம் செய்யப்படும். திருச்சி புத்தூர் தலைமை அரசு மருத்துவமனையை தரம் உயர்த்துவோம். திருச்சி ஜங்சன் ரயில்வே மேம்பாலத்தை அகலப்படுத்துவோம். திருச்சி நகரில் குடிnullநீர் பிரச்சனைகளை தீர்ப்பதோடு தரமான சாலை வசதிகளை செய்வோம். போக்குவரத்து இடையூறுகளாக திருச்சி மேலப்புதூர் கான்வென்ட் பகுதி, தலைமை தபால் நிலையம், மெயின்காட்கேட் ஆகிய பகுதிகளில் பொதுமக்கள் எளிதாக சாலையை கடந்து செல்ல நடைபாதை மேம்பாலங்கள் அமைக்கப்படும்.
அமைச்சர் நேருவின் அட்டகாசத்தால் nullநீங்கள் பாதித்து இருப்பதை நான் நன்கு அறிவேன். நேரு அவரது சகோதரர் ஆகியோருக்கு தெரியாமல் திருச்சி மாவட்டத்தில் யாரும் இடத்தை வாங்கி பதிவு செய்ய முடியாது. அமைச்சர் கே.என்.நேரு தன்னுடைய பினாமிகளின் மூலம் 6 ஆயிரம் ஏக்கர் நிலத்தை வாங்கி குவித்து வைத்துள்ளார். அப்படிப்பட்ட நேருதான் திருச்சி தொகுதியில் போட்டியிடுகிறார். இந்த தேர்தலில் நேருவை தோர்கடிக்க செய்வீர்களா? (செய்வோம் செய்வோம் என தொண்டர்கள் கோஷமிட்டனர்) திமுக ஆட்சியில் முஸ்லீம்களுக்கு 3.5 சதவீதம் இடஒடுக்கீடு அளிப்பதாக கருணாநிதி கூறினார். ஆனால் அதை நடைமுறையில் அமுல்படுத்த வில்லை. உங்கள் ஆதரவுடன் அதிமுக ஆட்சி அமைத்தால் முஸ்லீம்களின் இட ஒதுக்கீடு உயர்த்தப்படும் அதோடு இஸ்லாமியர்களின் அணைத்து கோரிக்கைகளும் பரிசீலிக்கப்படும். அதிமுக ஆட்சி அமைந்தவுடன் மின்வெட்டு அடியோடு ரத்து செய்யப்படும். விலைவாசி உயர்வு குறைக்கப்படும். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கட்டுப்படுத்தப்படும். உங்களுடைய உள்ளூர் பிரச்சினைகள் தீர்க்கப்படும் அதோடு அனைவருக்கும் சுதந்திரம் கிடைக்க வழிவகை செய்யப்படும்.
பொதுமக்களாகிய உங்கள் பணத்தைதான் சுரண்டி வைத்துக்கொண்டு ஓட்டுக்கு 1 லட்ச ரூபாய் வரை கொடுப்பார். அந்த பணத்தை nullநீங்கள் வாங்கி வைத்துக்கொண்டு உங்கள் மனசாட்சி எப்படி சொல்கிறதோ அப்படி செய்யுங்கள். தமிழகத்தில் மீண்டும் அதிமுக ஆட்சி அமைந்தால் அனைத்து குடும்ப அட்டைகளுக்கும் 20 கிலோ அரிசி இலவசமாக வழங்கப்படும். தற்போது வழங்கப்படும் திருமண உதவித்தொகையான ரூபாய் 25 ஆயிரத்துடன் 4 கிராம் தங்கம் வழங்கப்படும். அதேபோல காற்றாடி, கிரைண்டர், மிக்ஸி ஆகியவைகளும் இலவசமாக வழங்கப்படும். அதரவற்றவர்களுக்கும் முதியோர்களுக்கும் வழங்கப்படும் ரூபாய் 500 உயர்த்தி 1000 ரூபாயாக வழங்கப்படும். கரும்பு டன் கொள்முதல் 2500 உயர்த்தி தரப்படும். 11ம், 12ம் வகுப்பு ஆகிய படிப்புகளை அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் பணிக்கும் மாணவ மாணவிகளுக்கு லேப்டாப் கம்யூட்டர் வழங்கப்படும். கேபிள் டிவி அரசுடமையாக்கப்படும். வறுமைகோட்டிற்கு கீழ் உள்ள குடும்பங்களுக்கு தலா நான்கு ஆடுகள் இலவசமாக வழங்கப்படும்.
பால் உற்பத்தியை பெருக்க தமிழகம் முழுவதும் 60 ஆயிரம் குடும்பங்களுக்கு கறவை மாடுகள் வழங்கப்படும். மாணவ மாணவிகளுக்கு வழங்கப்படும் கல்வி உதவித்தொகை ஆயிரம் ரூபாய் இருந்து 5 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்படும்.
சுயஉதவிக்குழுக்களுக்கு 10 லட்ச ரூபாய் வரை கடன் உதவி வழங்கப்படும். 58 வயது மேற்பட்டவர்களுக்கு உள்ளூர் அரசு பேருந்துகளில் செல்ல இலவச பஸ்பாஸ் வழங்கப்படும். வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள 3 லட்சம் குடும்பங்களுக்கு 300 சதுர அடியில் நவீன பசுமை வீடுகள் கட்டித்தரப்படும். நிலமற்றவர்களுக்கு 3 சென்ட் நிலம் வழங்கப்படும். குடும்ப ஆட்சியில் இருந்து தமிழகத்தை மீட்டெடுக்க இந்த மேற்கு தொகுதியில் அதிமுக வேட்பாளராக மரியம்பிச்சை நிறுத்தப்பட்டுள்ளார். இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து வெற்றிபெற செய்ய வேண்டுகிறேன்.
அதைதொடர்ந்து திருச்சி தென்னூர் தில்லைநகர், கோகினூர் தியேட்டர் வழியாக திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்திற்கு ஜெயலலிதா சென்றார். அங்கு திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் ஆர். மனோகரனை ஆதரித்து ஜெயலலிதா வரலாறு காணாத கூட்டத்தில் பேசினார். முன்னதாக திருச்சி சங்கம் ஓட்டலில் இருந்து சத்திரம் பேருந்து நிலையம் வரை 6 கிலோமீட்டர் தூரத்திற்கு அதிமுகவினர் மற்றும் தோழமை கட்சி தொண்டர்கள் கைகளில் கொடிகலை ஏந்தி ஜெயலலிதாவிற்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 2 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 3 months ago |
-
ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.1 லட்சத்தை நெருங்குகிறது: வெள்ளி விலை புதிய உச்சம்
18 Dec 2025சென்னை, தங்கம் விலை நேற்று மீண்டும் அதிகரித்து விற்பனையானது. ஒரு கிராம் தங்கம் ரூ.12,440-க்கும், சவரன் ரூ.99,520-க்கும் விற்பனையானது.
-
தமிழகத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் இன்று வெளியாகிறது: பெயர் இல்லாதவர்கள் இன்று முதல் விண்ணப்பிக்கலாம்
18 Dec 2025சென்னை, தமிழகத்தில் இன்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படுகிறது.
-
மத்திய அரசு சார்பில் அனைவருக்கும் ரூ.30 ஆயிரம் வழங்கப்பட உள்ளதா...? தமிழ்நாடு அரசு விளக்கம்
18 Dec 2025சென்னை, 'மத்திய அரசின் ஒவ்வொரு குடிமகனுக்கும் ரூ.30,000 வழங்கும் திட்டம்' என்ற பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில் அது தொடர்பாக தமிழ்நாடு அரசு விளக்கமளித்துள
-
தெற்கு ரயில்வேயின் புதிய கால அட்டவணை ஜன.1 முதல் அமல்
18 Dec 2025சென்னை, தெற்கு ரயில்வேயின் புதிய கால அட்டவணை அடுத்த மாதம் முதல் அமல்படுத்தப்பட உள்ளது.
-
திருப்பரங்குன்றம் தீபத்தூண் வழக்கின் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு
18 Dec 2025மதுரை, திருப்பரங்குன்றம் வழக்கில் ஐகோர்ட் மதுரை கிளை இரு நீதிபதிகள் அமர்வில் கடந்த 5 நாட்கள் நடந்த மேல்முறையீட்டு வழக்கின் விசாரணை நிறைவு பெற்ற நிலையில் தீர்ப்புக்காக த
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 18-12-2025.
18 Dec 2025 -
தமிழகத்தில் டிச. 22-ம் தேதி வரை வறண்ட வானிலை நிலவக்கூடும்: வானிலை ஆய்வு மையம் தகவல்
18 Dec 2025தமிழகத்தில் டிச. 22-ம் தேதி வரை வறண்ட வானிலை நிலவக்கூடும்: வானிலை ஆய்வு மையம் தகவல்
-
ஈரோடு பொதுக்கூட்டத்தில் தொண்டர்களுடன் எடுத்த செல்பி வீடியோவை வெளியிட்ட விஜய்..!
18 Dec 2025ஈரோடு, ஈரோடு பிரச்சாரத்தில் தொண்டர்களுடன் எடுத்த செல்பி வீடியோவை விஜய், தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில் "நன்றி ஈரோடு" என்று பதிவிட்டுள்ளார்.
-
கலைஞர் பல்கலைக்கழக மசோதா: ஜனாதிபதி திரெளபதி முர்முவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்
18 Dec 2025சென்னை, கலைஞர் பல்கலைக்கழக மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கக் கோரி ஜனாதிபதி திரெளபதி முர்முவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார்.
-
பயமில்லை பயமில்லை என்று சொல்லும் எதிரிகள் த.வெ.க.வை கண்டு கதறுகிறார்கள்: ஈரோடு பிரச்சாரத்தில் விஜய் பரபரப்பு பேச்சு
18 Dec 2025ஈரோடு, பயமில்லை பயமில்லை என்று சொல்லும் எதிரிகள் த.வெ.க.வை கண்டு கதறுகிறார்கள் என ஈரோடு பிரச்சாரத்தில் விஜய் பேசினார். மேலும், களத்தில் இருக்கும் எதிரிகளை மட்டுமே
-
எதிர்க்கட்சிகளின் கடும் அமளிக்கு இடையே விபி-ஜி ராம்ஜி மசோதா பார்லி., மக்களவையில் நிறைவேற்றம்
18 Dec 2025புதுடெல்லி, எதிர்க்கட்சிகளின் கடும் அமளிக்கு இடையே மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்திற்கு மாற்றான விபி-ஜி ராம்ஜி மசோதா நேற்று மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. 
-
பூந்தமல்லி பணிமனையில் இருந்து 125 மின்சார பேருந்துகள் இயக்கம்: துணை முதல்வர் இன்று தொடங்கி வைக்கிறார்
18 Dec 2025சென்னை, 3-வது கட்டமாக பூந்தமல்லி பணிமனையில் இருந்து ரூ.214.50 கோடி மதிப்பிலான 125 மின்சார பேருந்துகள் இன்று முதல் இயக்கப்பட உள்ளது.
-
நடுவானில் திடீர் பழுது: ஏர் இந்தியா விமானம் கொச்சியில் அவசர தரையிறக்கம்
18 Dec 2025கொச்சி, நடுவானில் திடீர் பழுது காரணமாக ஏர் இந்தியா விமானம் கொச்சியில் அவசரமாக தரையிறக்கப்பட்ட சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
ஈரோட்டில் பிரச்சாரத்தின் போது கம்பத்தில் ஏறிய ரசிகரை கண்டித்த விஜய்
18 Dec 2025ஈரோடு, த.வெ.க. தலைவர் விஜய் பேசிக் கொண்டிருந்தபோது கம்பத்தில் ஏறிய தொண்டரை, பேச்சை நிறுத்திவிட்டு அவர் கண்டித்தார்.
-
அமெரிக்க வரி விதிப்பால் தமிழகத்தில் ஏற்றுமதி பாதிப்பு: இரு தரப்பு ஒப்பந்தங்கள் மூலம் விரைவில் தீர்வு காண வேண்டும்: பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்
18 Dec 2025சென்னை, அமெரிக்க வரி விதிப்பால் தமிழகத்தில் ஏற்றுமதி பாதிக்கப்பட்டுள்ள என்றும், இதனால் லட்சக்கணக்கான வேலைவாய்ப்புகள் பறிபோகும் நிலை உள்ளது என்றும் பிரதமர் மோடிக்கு எழுத
-
ஈக்வடார் நாட்டில் கடந்த ஓராண்டில் மட்டும் 9 ஆயிரத்திற்கும் அதிகமான கொலை சம்பவங்கள்..!
18 Dec 2025பார்சிலோனா, ஈக்வடாரில் இந்தாண்டு மட்டும் 9,000க்கும் அதிகமான கொலைகள் நடைபெற்றுள்ளதாக அந்நாட்டின் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவியல் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.
-
காந்தியின் பெயர் நீக்கத்திற்கு எதிர்ப்பு: பார்லி. வளாகத்தில் தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் போராட்டம்
18 Dec 2025புதுடெல்லி, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் மகாத்மா காந்தியின் பெயரை திட்டத்தில் இருந்து நீக்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாராளுமன்ற வளாகத்தில் உள்ள
-
காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் வேலை நாள் 125 நாட்கள் என்பது ஏமாற்று வேலை: முதல்வர் மு.க.ஸ்டாலின் காட்டம்
18 Dec 2025சென்னை, மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் வேலை நாள் 125 நாட்கள் என்பது ஏமாற்று வேலையே என தெரிவித்துள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், மத்திய அரசை குளிர்விக்க ஏழைகள்
-
அமெரிக்க படை வீரர்களுக்கு தலா ரூ.1.60 லட்சம் கிறிஸ்துமஸ் பரிசு: அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு
18 Dec 2025நியூயார்க், அமெரிக்காவின் பாதுகாப்புப் படை வீரர்களுக்கு கிறிஸ்துமஸ் பரிசாக தலா ரூ. 1.60 லட்சம் வழங்கப்படும் என்று அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
-
ஜனவரி 5-ம் அ.ம.மு.க. பொதுக்குழுக்கூட்டம்: டி.டி.வி. தினகரன் அறிவிப்பு
18 Dec 2025சென்னை, அ.ம.மு.க.வின் செயற்குழு - பொதுக்குழுக் கூட்டம் ஜனவரி 5ஆம் தேதி தஞ்சாவூரில் நடைபெற உள்ளதாக டி.டி.வி. தினகரன் தெரிவித்துள்ளார்.
-
கொளத்தூரில் ரூ.25.72 கோடியில் திருமணமாளிகை திறப்பு: என் வெற்றிக்குப்பின் என் மனைவி உள்ளார்: திருமண விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
18 Dec 2025சென்னை, கொளத்தூரில் ரூ.25.72 கோடியில் அண்ணா திருமணமாளிகையை திறந்து வைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின், என் வெற்றிக்குப்பின்
-
ரஷ்ய ராணுவத்தில் பணியாற்றிய 26 இந்தியர்கள் பலி: மத்திய அரசு
18 Dec 2025புதுடெல்லி, உக்ரைனுக்கு எதிரான போரில் ஈடுபட ரஷ்ய ராணுவத்தில், 202 இந்தியர்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக, மத்திய அரசு தெரிவித்துள்ளது.
-
இந்தியா-ஓமன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் இருதரப்பு உறவுகளுக்கான ஒரு புதிய உத்வேகம்: பிரதமர் மோடி
18 Dec 2025மஸ்கட், இந்தியா-ஓமன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளுக்கு புதிய திசையையும் உத்வேகத்தையும் அளிக்கும் என்று பிரதமர் நரேந்திர மோடி கூ
-
நேரு கடிதங்களை திருப்பி அளிக்க வேண்டும்: சோனியா காந்திக்கு மத்திய அரசு கடிதம்
18 Dec 2025புதுடெல்லி, கடந்த 2008-ம் ஆண்டு பெற்ற முன்னாள் பிரதமர் நேருவின் கடிதங்களை சோனியா காந்தி திருப்பி அளிக்க வேண்டும் என மத்திய அரசின் கலாச்சாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ள
-
ஈரோடு பிரச்சாரத்தில் சீமானை மறைமுகமாக விமர்சித்த விஜய்
18 Dec 2025ஈரோடு, ஈரோடு பிரச்சாரத்தில் சீமானை மறைமுகமாக விஜய் விமர்சித்ததாக இணையத்தில் பலர் தெரிவித்து வருகின்றனர்.


