எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, ஏப்.27 - வாடகை வீட்டுக்காரர்களிடம் யூனிட்டுக்கு அதிக கட்டணம் வசூலிப்பது தடுக்கப்படுமா?என்று பண்ருட்டி ராமச்சந்திரன் கேட்டதற்கு, வாடகைக்கு குடியிருப்பவர்கள் பாதிக்காமல் இருக்க, தனிதனி மீட்டராகவோ, சப்மீட்டராகவோ வைக்க எந்த தடையும் இல்லை என்று மின் துறை அமைச்சர் நத்தம் விசுவநாதன் அறிவித்துள்ளார். சட்டசபையில் நேற்று மின்சார துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் தே.மு.தி.க. எதிர்கட்சி துணைத்தலைவரும், எம்.எல்.ஏவுமான பண்ருட்டி ராமச்சந்திரன் பேசியதாவது:-
தமிழ்நாட்டில் வாடகை வீடுகளில் குடியிருப்பவர்களிடம் அரசு நிர்ணயித்துள்ள கட்டணத்தை விட வீட்டு உரிமையாளர்கள் அதிகம் வசூலிக்கிறார்கள். எனவே மின் வாரியமே சப்மீட்டர் பொருத்தி அதிக கட்டணம் வசூலிப்பதை தடுக்க வேண்டும்.
அமைச்சர் நத்தம் விசுவநாதன், வாடகைக்கு குடியிருப்பவர்கள் பாதிக்காமல் இருக்க இதற்காக தனிதனி மீட்டராகவோ, சப்மீட்டராகவோ வைக்க எந்த தடையும் இல்லை.
பண்ருட்டி ராமச்சந்திரன்: தற்போது 2 மாதத்திற்கு ஒரு முறை மின் கட்டணம் செலுத்துகிறோம். 1987ல் இது நடைமுறைக்கு வந்தது. காசாளர்கள் நிறைய பேர் தேவைப்பட்டதால் இந்த நிலை கொண்டு வரப்பட்டது. தற்போது கம்ப்யூட்டர் மூலமும் ஆன்லைன், தபால் நிலையம், மற்றும் வங்கிகள் மூலமும் மின் கட்டணம் செலுத்துகிறோம். எனவே 2 மாதத்திற்கு ஒரு முறை என்பதை மாற்றி மாதற்தோறும் மின் கட்டணம் செலுத்த அரசு ஏற்பாடு செய்யுமா? இப்போது எல்லா கட்டணமும் மாதந்தோறும் என்று வந்து விட்ட நிலையில், மாத சம்பளதாரர்களுக்கும் இது எளிதாக இருக்கும்.போன் பில், வீட்டு வாடகை, தண்ணீர் கட்டணம் என அனைத்தும் மாத கட்டணமாக இருக்கும் போது மின் கட்டணத்தையும் அதேபோல் மாற்ற வேண்டும்.
அமைச்சர் நத்தம் விசுவநாதன்: 2 மாதத்துக்கு ஒரு முறை மின் கட்டணம் செலுத்துவது nullநீண்ட காலமாக அமலில் உள்ளது. தமிழ்நாடு மின்சார ஒழுங்கு முறை ஆணையம் வகுத்த வழியில் கட்டணம் பெறப்படுகிறது. பொது மக்கள் ஒரே தேதியில் மின் கட்டணம் செலுத்துவது மாற்றியமைக்கப்பட்டு ஒவ்வொரு வரும் எந்தெந்த தேதியில் மின் கட்டணம் செலுத்த வேண்டும் என்று அறிவிக்கப்பட்டிருப்பதால் அதில் மக்களுக்கு குழப்பம் இல்லை. ஒரே நாளில் மின் கட்டணம் செலுத்த கூட்டம் கூடுவதும் தவிர்க்கப்பட்டுள்ளது.
பண்ருட்டி ராமச்சந்திரன்: ஏழைகள் பயன்படுத்தும் 100 யூனிட் மின் கட்டணத்தை குறைக்க இந்த அரசு முன் வருமா?
அமைச்சர் நத்தம் விசுவநாதன்: ஒரு யூனிட் மின்சாரத்தை உற்பத்தி செய்ய அரசுக்கு அடக்க விலை ரூ.5.98 ஆகிறது. தற்போது கட்டண உயர்வுக்கு பிறகு சராசரி வருவாய் ஒரு யூனிட்டுக்கு 5 ரூபாய் 29 காசாக உள்ளது. எனவே இப்போதும் ஒரு யூனிட்டுக்கு அரசுக்கு 69 பைசா இழப்பு ஏற்படுகிறது. தற்போது 100 யூனிட்டுக்கு 2 ரூபாய் 60 காசு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில், இந்த அரசு மானியமாக ரூ.1.60 வழங்குகிறது. ஆனால் பொது மக்களிடமிருந்து யூனிட்டுக்கு 1 ரூபாய் தான் வசூலிக்கப்படுகிறது.
வெளி மாநிலங்களில் இருந்து மின்சாரத்தை வாங்கி தமிழ் நாட்டுக்கு கொண்டு வர முடியாத நிலை உள்ளது. கொண்டு வரும் வழித்தடங்கள் 3 தான் உள்ளது. 3 ஆயிரம் மெகாவாட் மின்சாரத்தை தான் கொண்டு வர முடியும். கேரளா, கர்நாடகா, ஆந்திரா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களிலும் மின் பற்றாக்குறை இருப்பதால் அவர்களும் இதே பாதையில் தான் மின்சாரத்தை வாங்கி வருகிறார்கள்.
மேலும் மின் பாதையை அமைக்க வேண்டும் என பிரதமருக்கு புரட்சி தலைவி கடிதம் எழுதியிருந்தார். புதிய மின்பாதை அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதை அமைத்து முடிக்க இன்னும் 2, 3 ஆண்டு ஆகும்,. அதன் பிறகு தடையின்றி வெளி மாநிலங்களில் இருந்து தமிழ்நாட்டுக்கு மின்சாரத்தை எளிதில் கொண்டு வர முடியும்.
இவ்வாறு அமைச்சர் நத்தம் விசுவநாதன் கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு டோனட்11 hours 59 min ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்4 days 12 hours ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி1 week 6 hours ago |
-
தனியார் பள்ளிகளில் இடஒதுக்கீடு நிறைவேற்றப்படுகிறதா? கண்காணிக்க அரசுக்கு செல்வப்பெருந்தகை கோரிக்கை
24 Apr 2024சென்னை, தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் கல்வி உரிமைச் சட்டப்படி தனியார் பள்ளிகளில் 25 சதவிகித இடஒதுக்கீடு முழுமையாக நிறைவேற்றப்படுகிறதா என்பதை நாள்தோறும் கண்காணித்து உரிய த
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 24-04-2024.
24 Apr 2024 -
தங்கம் விலை மீண்டும் உயர்வு
24 Apr 2024சென்னை, சென்னையில் நேற்று ஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ரூ.53.840-க்கு விற்பனையானது.
-
தீர்ப்பு தாமதம்: சுப்ரீம் கோர்ட்டில் ஹேமந்த் சோரன் மனு தாக்கல்
24 Apr 2024புது டெல்லி, பணமோசடி வழக்கில் அமலாக்கத் துறையின் கைது நடவடிக்கையை எதிர்த்து தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பை ஐகோர்ட் தாமதப்படுத்துவதாகக் கூறி, ஜார்கண்ட் முன்னாள் முதல்
-
நாட்டின் கவனத்தை திசை திருப்புவதே பாஜக தலைவர்களின் பாணி: பிரியங்கா
24 Apr 2024திருவனந்தபுரம், உண்மையான பிரச்சினைகளில் இருந்து நாட்டின் கவனத்தை திசை திருப்புவதே பா.ஜ.க.
-
தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம்: கவர்னர் ஆர்.என்.ரவி வாழ்த்து
24 Apr 2024சென்னை, ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 24-ம் தேதி தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம் கொண்டாடப்படுகிறது. அதன்படி நேற்று தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம் கொண்டாடப்பட்டது.
-
இன்டியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து வடமாநிலங்களில் தேர்தல் பிரசாரம் செய்ய முதல்வர் ஸ்டாலின் திட்டம்
24 Apr 2024சென்னை, இன்டியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து டெல்லி உள்ளிட்ட மாநிலங்களுக்கு சென்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரசாரம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
-
நீர்மட்டம் தொடர் சரிவு: மேட்டூர் அணை பகுதியில் வெளியே தெரியும் நந்தி சிலை, தேவாலயம்
24 Apr 2024சேலம், மேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து வருவதால் நந்தி சிலை, கிறிஸ்தவ தேவாலயம் முழுவதும் வெளியே தெரிகிறது.
-
வி.வி.பாட் வழக்கில் தேர்தல் ஆணையம் விளக்கம்:தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தது சுப்ரீம் கோர்ட்
24 Apr 2024புதுடெல்லி:வி.வி.பாட் தொடர்பான வழக்கில் தேர்தல் ஆணையம் விளக்கமளித்ததை அடுத்து தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை சுப்ரீம் கோர்ட் ஒத்திவைத்தது.
-
போர் தொடங்கியதில் இருந்து தற்போது வரை உக்ரைனில் 5 லட்சம் ராணுவ வீரர்கள் உயிரிழப்பு: ரஷ்யா
24 Apr 2024மாஸ்கோ, போர் தொடங்கியதில் இருந்து தற்போது வரை 5 லட்சம் ராணுவ வீரர்களை உக்ரைன் இழந்துள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது
-
கிர்கிஸ்தானில் நீர் வீழ்ச்சியில் விழுந்து இந்திய மாணவர் பலி
24 Apr 2024கிர்கிஸ்தான், கிர்கிஸ்தானில் உள்ள நீர்வீழ்ச்சியில் விழுந்து ஆந்திர மாணவர் பலியானார்.
-
கேரளாவில் சக்திவாய்ந்த வெடிகுண்டுகள் கண்டெடுப்பு
24 Apr 2024திருவனந்தபுரம், கேரள மாநிலம், கண்ணூர் மாவட்டம் மட்டன்னூரில் உள்ள ஒரு வயலில் சக்திவாய்ந்த வெடிகுண்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வரு
-
பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்ன ஆகும்? இளையராஜா தரப்புக்கு உயர் நீதிமன்றம் கேள்வி
24 Apr 2024சென்னை, இளையராஜா பாடலை பயன்படுத்த விதித்த இடைக்கால தடையை நீக்கக்கோரி நிறுவனங்கள் தொடர்ந்த மேல்முறையீடு வழக்கில் பாடலுக்கு பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்ன ஆகும்? 
-
ஸ்மோக்கிங் பிஸ்கட்டை உட்கொள்ள வேண்டாம்: மாநில உணவு பாதுகாப்புத்துறை எச்சரிக்கை
24 Apr 2024சென்னை, ஸ்மோக்கிங் பிஸ்கட்டை உட்கொள்ள வேண்டாம் என மாநில உணவு பாதுகாப்புத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
-
இட ஒதுக்கீட்டை அதிகரிக்க இண்டியா கூட்டணி நடவடிக்கை எடுக்கும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிக்கை
24 Apr 2024சென்னை, ஓ.பி.சி., எஸ்.சி./எஸ்.டி. மக்களின் இட ஒதுக்கீட்டை அதிகரிக்க இண்டியா கூட்டணி நடவடிக்கை எடுக்கும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
தென் தமிழகத்தில் இன்று லேசான மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்
24 Apr 2024சென்னை, தென் தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
நாளை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் மணிப்பூரில் அடுத்தடுத்து குண்டுவெடிப்பு சம்பவம்
24 Apr 2024இம்பால், மணிப்பூரின் 2ம் கட்ட தேர்தல் நாளை நடைபெறவுள்ள நிலையில், அங்கு குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
கூவாகம் கூத்தாண்டவர் கோயில் தேரோட்டம் கோலாகலம்: ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு
24 Apr 2024கள்ளக்குறிச்சி, கள்ளக்குறிச்சி மாவட்டம் பிரசித்தி பெற்ற கூவாகம் கூத்தாண்டவர் கோயிலில் நடைபெற்ற தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.
-
கஷ்டப்பட்டு உழைத்து சேர்த்த உங்கள் செல்வத்தை காங்கிரஸ் பறித்துவிடும்: சத்தீஷ்கரில் பிரதமர் மோடி பேச்சு
24 Apr 2024புதுடெல்லி, நீங்கள் கஷ்டப்பட்டு உழைத்து சேர்த்த செல்வத்தை உங்கள் பிள்ளைகள் பெறமாட்டார்கள், அதை காங்கிரஸ் கட்சி பறித்துவிடும் என்று சத்தீஷ்கர் மாநிலத்தில் நடந்த கூட்டத்த
-
திருச்சி விமான நிலையத்தில், சிங்கப்பூரில் இருந்து நூதனமாக காலணியில் வைத்து தங்கத்தை கடத்தி வந்தவர் கைது
24 Apr 2024திருச்சி, திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் சிங்கப்பூரிலிருந்து நூதனமாக காலணியில் தங்கத்தை பதுக்கி எடுத்து வந்த நபரை சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர்.
-
விமான பயணத்தின்போது பெற்றோருக்கு அருகிலேயே குழந்தைகளுக்கு இருக்கை டி.ஜி.சி.ஏ. புதிய உத்தரவு
24 Apr 2024புதுடெல்லி, விமானங்களில் 12 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு அவர்களின் பெற்றோர் ஒருவருடன் இருக்கை ஒதுக்க வேண்டும் என்று விமான நிறுவனங்களுக்கு விமான போக்குவரத்து தலைமை இயக்க
-
ரேசன் அரிசி கடத்தல் விவகாரம்: ஓ. பன்னீர் செல்வம் கோரிக்கை
24 Apr 2024சென்னை, ரேசன் அரிசி கடத்தலில் ஈடுபட்டு சட்டம் ஒழுங்கை சீர்குலைத்த தி.மு.க.வினரை உடனடியாக சட்டத்தின் முன் நிறுத்தி, உரிய தண்டனையை பெற்றுத் தரவேண்டுமென்று முன்னாள்
-
அதிகரிக்கும் வெப்பதால் கண்களுக்கு பாதிப்பு அதிகம் : மருத்துவர்கள் எச்சரிக்கை
24 Apr 2024சென்னை, அதிகரிக்கும் கோடை வெப்பத்தால் கண்களுக்கு பாதிப்பு ஏற்படும் என டாக்டர்கள் எச்சரித்துள்ளனர்.
-
தமிழ்நாட்டில் ஈரோடு, சேலம் உள்ளிட்ட 15 மாவட்டங்களுக்கு வெப்ப அலைக்கான மஞ்சள் அலர்ட் வட உள்மாவட்டங்களில் 5 டிகிரி வரை வெப்பம் உயரும்
24 Apr 2024புதுடில்லி, ஏப். 25- தமிழகத்தில் ஈரோடு, சேலம் உட்பட 15 மாவட்டங்களுக்கு வெப்ப அலைக்கான மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
-
2-ம் கட்ட பார்லி. தேர்தலுக்கான பிரச்சாரம் நிறைவடைந்தது: 89 தொகுதிகளில் நாளை வாக்குப்பதிவு
24 Apr 2024புது டெல்லி, பாராளுமன்ற 2-ம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் நேற்றுடன் நிறைவடைந்த நிலையில் 80 தொகுதிகளில் நாளை வாக்குப்பதிவு நடைபெறுகிறது.