எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பெங்களூர், ஏப். 29 - மதுரை ஆதீனத்தின் 293 வது குருமகா சன்னிதானமாக நித்யானந்த சுவாமிகள் நியமிக்கப்பட்டதை தொடர்ந்து, மதுரை ஆதீனத்திற்குட்பட்ட எல்லா கோவில்களும் விரைவில் புணரமைக்கப்பட்டு குடமுழுக்கு நடைபெறும் என்று அவர் தெரிவித்தார். 1,500 ஆண்டுகளுக்கு முன்பு மதுரையில் திருஞானசம்பந்தரால் தோற்றுவிக்கப்பட்ட மதுரை ஆதீனம் என்று அழைக்கப்படும் திருஞானசம்பந்த சுவாமிகள் ஆதீனத்தின் 292 வது குருமகா சன்னிதானமாக ஸ்ரீஸ்ரீ அருணகிரிநாத ஸ்ரீஞானசம்பந்த தேசிக பரமாச்சார்ய சுவாமிகள் செயல்பட்டு வருகிறார். இந்நிலையில் பெங்களூர் பிடதியில் அமைந்துள்ள நித்யானந்த பீடத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் தன் வாரிசாகவும், மதுரை ஆதீனத்தின் 293 வது குருமகா சன்னிதானமாகவும் நித்யானந்த பீடத்தின் பீடாதிபதி நித்யானந்தாவை நியமிப்பதாக ஸ்ரீஞானசம்பந்த தேசிய பரமாச்சார்ய சுவாமிகள் அறிவித்தார். ஆதீனப் பொறுப்பை ஒப்படைப்பதற்கு அடையாளமாக நித்யானந்தாவிடம் தங்க செங்கோலை அளித்து, தங்கக் கிரீடத்தை சூட்டினார் ஸ்ரீஞானசம்பந்த தேசிக பரமாச்சார்ய சுவாமிகள். இதற்கான உறுதிமொழி பத்திரத்தையும் நித்யானந்தாவிடம் அவர் அளித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் கூறிய அவர்,
மதுரை ஆதீனத்தின் தோற்றம் தெரியவில்லை. எனினும் தென்னிந்திய சைவ சித்தாந்த தத்துவத்தின் நான்கு துறவிகளில் ஒருவராக அறியப்படும் திருஞானசம்பந்தர், 1,500 ஆண்டுகளுக்கு முன்பு மதுரை ஆதீனத்தை புணரமைத்தார் என்று வரலாற்று ஏடுகள் தெரிவிக்கின்றன. மதுரை ஆதீனத்தின் விதிகள் மற்றும் கோட்பாடுகளின்படி சைவ வேளாளர்கள்தான் மதுரை ஆதீனத்தின் குருமகா சன்னிதானமாக இருக்க வேண்டும். இப்பொறுப்பை ஏற்பவர் திருஞான சம்பந்தரின் புனித பணிகளை தொடர வேண்டும்.
என் கனவில் சிவ பெருமான் தோன்றி மதுரை ஆதீனத்தின் அடுத்த குருமகா சன்னிதானமாக நித்யானந்தரை நியமிக்குமாறு அருள்பாலித்தார். நித்யானந்தரை 2 முறை சந்தித்து அவரது செயல்களை கவனித்தேன். திருஞானசம்பந்தரை போல கொடை வள்ளலாகவும், ஆற்றல் வாய்ந்தவராகவும் இருப்பதால் அவரை குருமகா சன்னிதானமாக நியமிக்க முடிவு செய்தேன். மதுரை ஆதீனத்தை நித்யானந்த சுவாமிகள் பன்னாட்டு அளவில் புகழ் பெற செய்வார் என்ற நம்பிக்கை இருக்கிறது. வெகு விரைவில் மதுரையில் பட்டம் சூட்டு விழா நடைபெறும். எனவே மதுரை ஆதீனத்தின் 293 வது குருமகா சன்னிதானமாக பரமஹம்ச நித்யானந்த ஸ்ரீஞானசம்பந்த தேசிய பரமாச்சார்ய சுவாமிகளாக பிரகடனம் செய்கிறேன் என்றார். இதைத் தொடர்ந்து பேசிய நித்யானந்தா,
சொக்கநாதர், மீனாட்சி அம்மன், திருஞானசம்பந்தரை சாட்சியாக வைத்து மதுரை ஆதீனத்தின் 293 வது குருமகா சன்னிதானமாக அளிக்கப்பட்டுள்ள பொறுப்பை பணிவன்புடன் ஏற்றுக் கொள்கிறேன். சைவ சித்தாந்த தத்துவத்தை மீண்டும் எழுச்சி கொள்ள செய்வேன். மதுரை ஆதீனத்தை பன்னாட்டு அளவில் உயர்த்துவேன் என்று உறுதி அளிக்கிறேன். மதுரை ஆதீனத்தின் ஆன்மீக பணிகளுக்கு ஒரு கோடி ரூபாயை காணிக்கையாக அளிக்கிறேன். மதுரை ஆதீனத்திற்குட்பட்ட எல்லா கோவில்களும் விரைவில் புணரமைக்கப்பட்டு குடமுழுக்கு நடைபெறும். இக்கோவில்களில் அன்னதானம் வழங்கப்படும். மதுரை ஆதீனத்தின் தலைமை பொறுப்பை நான் ஏற்பது குறித்து யாராவது எதிர்ப்பு தெரிவித்தால் அதை எதிர்கொள்வேன் என்றார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 9 months 1 week ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 9 months 2 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 10 months 3 days ago |
-
காவலாளி அஜித் குமார் மரணம் வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றம் : டி.ஜி.பி. சங்கர் ஜிவால் உத்தரவு
30 Jun 2025சென்னை : காவலாளி அஜித் குமார் மரண வழக்கை சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றி டி.ஜி.பி. சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.
-
சந்தேக வழக்கில் அழைத்து சென்று தாக்கியது ஏன்? கோவில் காவலர் கொலை வழக்கில் காவல் துறைக்கு ஐகோர்ட் கேள்வி
30 Jun 2025மதுரை, ‘மடப்புரம் கோவில் காவலரை சாதாரண சந்தேக வழக்கில் விசாரணைக்கு அழைத்துச் சென்று தாக்கியது ஏன்?
-
‘கடவுளின் எதிரிகள் பழிவாங்கப்படுவார்கள்’ ஈரான் மதகுரு அமெரிக்க அதிபர், நெதன்யாகு மீது கடும் விமர்சனம்
30 Jun 2025தெஹ்ரான் : அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் மற்றும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஆகியோர் கடவுளின் எதிரிகள் என்று அறிவித்து, அவர்களுக்கு எதிராக ஈரான் மதகுரு அயதுல
-
வெறும் இணைப்புதான்; பிணைப்பு இல்லை; அ.தி.மு.க. - பா.ஜ.க. கூட்டணி குறித்து திருமாவளவன கருத்து
30 Jun 2025சென்னை : அ.தி.மு.க., பா.ஜ.க. இடையே இணைப்பு இருக்கிறது, ஆனால் பிணைப்பு இல்லை என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
-
குட் டே திரைவிமர்சனம்
30 Jun 2025உழைத்த சம்பளத்தை கொடுக்காமல் அவமானப்படுத்தும் ஏற்றுமதி நிறுவன மேலாளர்.
-
கர்நாடாக துணை முதல்வருடன் வலுவான பிணைப்பு முதல்வர் சித்தராமையா தகவல்
30 Jun 2025பெங்களூரு, கர்நாடகாவில் முதல்வர் பதவியில் மாற்றம் ஏற்படக்கூடும் என்ற ஊகங்கள் அதிகரித்து வரும் நிலையில், தனக்கும், துணை முதல்வர் டி.கே.
-
வாரத்தின் தொடக்க நாளில் தங்கம் விலை சரிவு
30 Jun 2025சென்னை, ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து குறைந்து வருகிறது.
-
விமான விபத்து விசாரணை: மத்திய அமைச்சர் புதிய தகவல்
30 Jun 2025புதுடெல்லி : அகமதாபாத் ஏர் இந்தியா விமான விபத்து, திட்டமிட்ட நாசவேலை காரணமாக ஏற்பட்டதா?
-
அமெரிக்கா: தீயணைப்பு படை வீரர்கள் 2 பேர் சுட்டுக்கொலை
30 Jun 2025வாஷிங்டன் : அமெரிக்காவில் காட்டுத்தீயை அணைக்க முயன்ற தீயணைப்பு படை வீரர்கள் 2 பேர் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர்.
-
சிறுவன் கடத்தல் வழக்கில் பூவை ஜெகன்மூர்த்தியை கைது செய்வதற்கு சுப்ரீம் கோர்ட் தடை
30 Jun 2025புதுடில்லி : சிறுவன் கடத்தல் வழக்கில், எம்.எல்.ஏ., பூவை ஜெகன்மூர்த்தியை கைது செய்ய சுப்ரீம் கோர்ட் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
-
எண்ணெய் கப்பலில் தீ விபத்து: 14 இந்திய மாலுமிகள் பத்திரமாக மீட்பு
30 Jun 2025அகமதாபாத், குஜராத் கண்ட்லா துறைமுகத்தில் இருந்து ஓமன் நோக்கி சென்ற எண்ணெய் கப்பலில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது.
-
தெலங்கானா: தொழிற்சாலையில் திடீர் தீ விபத்து: 8 பேர் கருகி பலி
30 Jun 2025ஐதராபாத், ஐதராபாத்தில் உள்ள மருந்துகள் உள்பட பல்வேறு பொருட்களை தயாரிக்கும் ரசாயன தொழிற்சாலையில் ஏற்பட்ட உலை வெடிப்பில் 8 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.&
-
சண்டை முடிந்தது சமாதானம் பிறந்தது: எலான் மஸ்கை புகழ்ந்த ட்ரம்ப்
30 Jun 2025வாஷிங்டன் : எலான் மஸ்க் எதிர்ப்பு தெரிவித்த மசோதா, செனட்டில் நிறைவேறி உள்ளது. இது தொடர்பாக நிருபர்கள் கேள்விக்கு, ''எலான் மஸ்க் சிறந்த மனிதர்.
-
7 கண்டங்களில் உள்ள மலைகளில் ஏறி தமிழ்ப்பெண் முத்தமிழ்ச்செல்வி சாதனை
30 Jun 2025சென்னை, எவரஸ்ட் சிகரத்தைத் தொட்ட முதல் தமிழ்ப் பெண்ணான முத்தமிழ்ச்செல்வி, அதைத்தொடர்ந்து 2 ஆண்டுகளுக்குள் 7 கண்டங்களிலும் உள்ள உயரமான மலைகளை வெற்றிகரமாக ஏறி சாதனை படைத
-
இந்தியா- அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம்: ஜூலை 8ல் அறிவிக்க வாய்ப்பு
30 Jun 2025வாஷிங்டன்: இந்தியா- அமெரிக்கா இடையே மிகப்பெரிய வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளது. இது குறித்து ஜூலை 8ல் அறிவிக்க வாய்ப்பு உள்ளது.
-
திருக்குறள் திரைவிமர்சனம்
30 Jun 2025வள்ளுவநாட்டில் வாழும் திருவள்ளுவர் இளைஞர்களுக்கு தமிழ் கற்றுக் கொடுப்பதோடு, திருக்குறள் நூலையும் எழுதி வருகிறார், அவரது முயற்சிக்கு உறுதுணையாக இருக்கிறார் மனைவி வாசுகி.
-
மார்கன் திரைவிமர்சனம்
30 Jun 2025பெண் ஒருவர் மர்மமாக இறந்து கிடக்கிறார். கொலை பற்றி விசாரித்து வரும் காவல் அதிகாரி விஜய் ஆண்டனி, அஜய் தீசன் என்பவரை விசாரணை வளையத்திற்குள் கொண்டு வருகிறார்.
-
பெல்ஜியம் கார் பந்தயம்: அஜித்குமார் அணி முதலிடம்
30 Jun 2025ப்ரூசெல்ஸ் : பெல்ஜியமில் நடந்த ஜிடி3 சாம்பியன்ஷிப் கார் பந்தயத்தில் அஜித்குமார் ரேஸிங் அணி முதலிடத்தை பிடித்து அசத்தியுள்ளது.
-
விஜய் சேதுபதி மகனை இயக்கும் சண்டை இயக்குனர்
30 Jun 2025விஜய் சேதுபதி மகன் சூர்யா விஜய் சேதுபதி கதாநாயகனாக நடிக்கும் படம் பீனிக்ஸ்.
-
சட்டம் - ஒழுங்கு ஆய்வுக்கூட்டம் முதல்வர் தலைமையில் நடந்தது
30 Jun 2025சென்னை, சட்டம் - ஒழுங்கு குறித்த ஆய்வுக் கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நேற்று நடைபெற்றது.
-
இந்த வாரம் வெளியாகும் பறந்து போ
30 Jun 2025ஜியோ ஹாட்ஸ்டார் - ஜிகேஎஸ் புரொடக்ஷன் - செவன் சீஸ் & செவன் ஹில்ஸ் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் ராம் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் 'பறந்து போ'.
-
சூடானில் தங்கச்சுரங்கம் இடிந்ததில் 11 பேர் பலி
30 Jun 2025கெய்ரோ : சூடானில் தங்கச் சுரங்கம் இடிந்து விபத்து ஏற்பட்டதில், தொழிலாளர்கள் 11 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
-
பயங்கரவாதி மசூத்அசார் ஆப்கானிஸ்தானில் பதுங்கல்?
30 Jun 2025காபூல், இந்தியாவில் பல பயங்கரவாத செயல்களுக்கு மூளையாக செயல்பட்டு வரும் ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பின் தலைவர் மசூத்அசார் பாகிஸ்தானில் இருந்து வெளியேறி ஆப்கானிஸ்தானி
-
3BHK டிரெய்லர் வெளியீட்டு விழா
30 Jun 2025சாந்தி டாக்கீஸ் அருண் விஸ்வா தயாரிப்பில் சித்தார்த் நடிப்பில் உருவாகியுள்ள படம் '3BHK'. ஜூலை 4 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் இப்படம் வெளியாகிறது.
-
ஓஹோ எந்தன் பேபி இசை வெளியீட்டு விழா
30 Jun 2025ரோமியோ பிக்சர்ஸ் மற்றும் விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ் தயாரித்து வழங்கும் திரைப்படம் ஓஹோ எந்தன் பேபி. அசோசியேஷன் வித் குட் ஷோ.