எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, ஏப்.2 - நடைபெறவுள்ள 2011 சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. அணி அமோக வெற்றி பெறும் என்று லயோலா கல்லூரி மாணவர்கள் நடத்திய கருத்துக்கணிப்பு தெரிவிக்கிறது. அ.தி.மு.க. ஆட்சிக்கு வரும் என்று 51.1 சதவீத வாக்காளர்களும், தி.மு.க.வுக்கு அந்த வாய்ப்பு இருப்பதாக 36.7 வாக்காளர்களும் கருத்து தெரிவித்துள்ளனர்.
ஒவ்வொரு தேர்தலின்போதும் லயோலா கல்லூரியில் மக்கள் ஆய்வகம் என்ற அமைப்பின் சார்பில் மாநில அளவில் பொதுமக்களை நேரிடையாக சந்தித்து கருத்துக் கணிப்பு நடத்தி முடிவுகளை வெளியிடுவது வழக்கம். அதன் அடிப்படையில் மார்ச் மாதம் 21-ம் முதல் 29-ந்தேதி வரையிலும் பேராசிரியர் ராஜநாயகம் தலைமையில் தமிழகத்திலுள்ள 117 சட்டமன்ற தொகுதிகளில் கள ஆய்வு நடத்தி அதற்கான முடிவுகளை வெளியிட்டனர். இந்த முடிவுகள் நேற்று லயோலா கல்லூரியில் வெளியிடப்பட்டது.
தற்போதுள்ள அரசியல் சூழ்நிலையில் பொதுமக்கள் இன்றைய தினத்தில் வாக்களிப்பதாக இருந்தால் எந்த கட்சிக்கு வாக்களிப்பீர்கள் என்று கேட்கப்பட்டது. இதற்கு பதில் அளித்த வாக்காளர்கள் அ.தி.மு.க. அணிக்கு 48.6 சதவீதம் பேரும், தி.மு.க. அணிக்கு 41.7 சதவீதம் பேரும் ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளனர். இதுகுறித்து இன்னும் முடிவு செய்யவில்லை என்று 8.2 சதவீதமும், பிறருக்கு வாக்களிப்பதாக 1.5 சதவீத பேரும் கருத்து தெரிவித்துள்ளனர்.
எந்த கட்சி அதிக இடங்களை கைப்பற்றும் என்று எதிர்பார்க்கிறீர்கள் எனக்கேட்டபோது,
அ.தி.மு.க. அணி பெரும்பான்மை இடங்களை கைப்பற்றும் என்று 51.1 சதவீதம் பேர் கருத்து தெரிவித்திருக்கிறார்கள். இதில் அ.தி.மு.க. தனித்து வெற்றி பெறும் என்று 25.9 சதவீதம் பேரும், அணியுடன் இணைந்து பெரும்பான்மை பெறும் என்று 25.2 சதவீதம் பேரும் கூறியுள்ளனர்.
தி.மு.க. அதிக பெரும்பான்மை இடங்களை பெறும் என்று கருத்து தெரிவித்துள்ள 36.7 சதவீதம் மக்களில் தி.மு.க. தனித்து வெற்றி பெறும் என்று 16.2 சதவீதமும்பேரும், அந்த அணியினரோடு இணைந்து தான் பெரும்பான்மையான இடங்களை கைப்பற்ற முடியும் என 20.5 சதவீதம் பேரும் கருத்து தெரிவித்துள்ளனர்.
தேர்தல் ஆணையம் பொறுப்புடனும் பாரபட்சமற்ற வகையில் செயல்படுவதாக 60.5 சதவீதம் பேர் கருத்து தெரிவித்திருக்கிறார்கள். 24.7 சதவீதம் பேர் அந்த ஆணையம் அதிகார வரம்பை மீறி கண்டிப்புடன் செயல்படுவதாக தெரிவித்துள்ளனர்.
தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. அணிகளை ஒப்பிடும்போது தொகுதி பிரச்சனைகளை தீர்ப்பதில் அ.தி.மு.க. அணி கவனம் செலுத்தும் என்று 33.7 சதவீதம் பேரும், தி.மு.க. அணிக்கு சாதமாக 21.9 சதவீதம் பேரும் கருத்து தெரிவித்துள்ளனர்.
ம.தி.மு.க. தேர்தலை புறக்கணித்திருப்பதாக அறிவித்திருப்பதால் யாருக்கும் பெரிய அளவில் பாதிப்பு இருக்காது என்று 53.6 சதவீதம் பேர் கருத்து தெரிவித்துள்ளனர்.
வேட்பாளரிடம் பணம் வாங்கிக்கொண்டு அவருக்கு வாக்களிப்பது தவறு என்று 80.5 சதவிகிதம் மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர். அதே நேரத்தில் கடந்த தேர்தல்களில் தாம் பணம் பெற்றுக் கொண்டதாக 47.9 சதவிகிதம் பேர் ஒப்புதல் அளித்துள்ளனர்.
ஒருவரிடம் பணத்தை வாங்கிக்கொண்டு தான் விரும்புகிற வேறொரு வேட்பாளருக்கு வாக்களிப்பதில் தவறில்லை என்று 31.5 சதவிகிதம் பேர் கருத்து தெரிவித்துள்ளனர்.
மக்களிடம் கருத்து கேட்டபோது அந்தந்த ஊர்களில் அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளைத்தான் மையமாக வைத்து கருத்து கூறுகின்றனர். உதாரணத்திற்கு திருப்பூரில் சாயப்பட்டறைகள் குறித்தும், வேறு சில இடங்களில் மணல் கடத்தல் குறித்தும் கருத்து தெரிவித்துள்ளனர்.
தொகுதி அளவிலான விவரங்களை நுணுகி ஆராய்ந்து கருத்துக்கணிப்பு நடத்தியதில் 5 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகளுடன் அ.தி.மு.க. அணிக்கு 105 தொகுதிகள் வரை சாதகமாக இருப்பதாகவும், தி.மு.க. அணிக்கு 70 தொகுதிகள் இருப்பதாகவும் இந்த கருத்துக்கணிப்பு தெரிவிக்கிறது. மீதமுள்ள 59 தொகுதிகளில் இரு அணிகளுக்கும் இடையே கடுமையான போட்டி நிலவுவதாகவும் அதில் குறிப்பிட்டுள்ளனர்.
மக்கள் ஆய்வக நிர்வாகியான பேராசிரியர் ராஜநாயகம் இக்கருத்துக்கணிப்பை வெளியிட கல்வியாளர் ஹென்றி ஜெரோம் பெற்றுக்கொண்டார். களப்பணி ஆய்வு மேற்கொண்ட மாணவர்களும் பேராசிரியர்களும் இந்த நிகழ்ச்சியின்போது உடனிருந்தனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 1 month ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 1 month ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 1 month ago |
-
த.வெ.க. புதிய நிர்வாகக்குழு அறிவிப்பு
28 Oct 2025சென்னை : தமிழக வெற்றிக் கழகத்திற்கு புதிய நிர்வாகக் குழுவை அக்கட்சியின் தலைவர் விஜய் அறிவித்துள்ளார்.
-
குகேஷ் தரமான பதிலடி
28 Oct 2025அமெரிக்காவின் செயின்ட் லூயிஸ் நகரில் கிளட்ச் செஸ் சாம்பியன்ஸ் போட்டி நடைபெற்று வருகிறது.
-
பீகாரில் தேர்தல் அறிக்கையை வெளியிட்ட இன்டியா கூட்டணி : குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை
28 Oct 2025பாட்னா : பீகாரில் தேர்தல் அறிக்கையை வெளியிட்ட இன்டியா கூட்டணி வெளியிட்டுள்ளது.
-
மோந்தா புயல் ஆந்திராவுக்கு 50 கி.மீ. தொலைவில் நெருங்கியது
28 Oct 2025சென்னை : மோந்தா புயல் ஆந்திராவுக்கு 50 கி.மீ. தொலைவில் நெருங்கியது.
-
பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் கட்டுமான பணிக்கு அனுமதியா? - தமிழ்நாடு அரசு விளக்கம்
28 Oct 2025சென்னை : பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் கட்டுமான அனுமதி வழங்கப்பட்டதா என்பது குறித்து தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.
-
ஐ.சி.சி. பேட்டிங் தரவரிசை: ஸ்மிருதி தொடர்ந்து முதலிடம்
28 Oct 2025துபாய் : இந்திய அணியின் துணைக் கேப்டன் ஸ்மிருதி மந்தனா ஐ.சி.சி.
-
பயப்படும் அளவுக்கு எதுவும் இல்லை: ஷ்ரேயாஸ் ஐயர் உடல் நலம் குறித்து சூர்யகுமார் தகவல்
28 Oct 2025சிட்னி : ஷ்ரேயாஸ் ஐயர் உடல் நலம் குறித்து பயப்படும் அளவுக்கு எதுவும் இல்லை என்றும் தற்போது உடல் நிலை சீராக உள்ளதாக இந்திய அணி கேப்டன் சூர்யகுமார் யாதவ் தெரிவித்துள்ளார்
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 29-10-2025.
29 Oct 2025 -
மகளிர் உலக கோப்பை முதல் அரையிறுதி: இங்கி., - தென்ஆப்பிரிக்கா இன்று மோதல்
28 Oct 2025கவுகாத்தி : 13-வது ஐ.சி.சி.
-
ஆஸி.,க்கு எதிரான டி-20 தொடரை வெற்றியுடன் துவங்குமா இந்தியா? _ கான்பெராவில் இன்று முதல் போட்டி
28 Oct 2025கான்பெரா : ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டி-20 தொடரை வெற்றியுடன் தொடங்குமா இந்திய அணி என்ற ஆவல் இந்திய ரசிகர்கள் இடையே எழுந்துள்ள நிலையில் முதல் போட்டி இன்று கான்பெராவில் ந
-
தங்கம் விலை மீண்டும் உயர்வு
29 Oct 2025சென்னை : சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரே நாளில் ரூ. 2,000 அதிகரித்து விற்பனையானது மீண்டும் நகைப்பிரியர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
மோந்தா புயல் காரணமாக ஆந்திராவில் விடிய, விடிய கொட்டி தீர்த்த கனமழை
29 Oct 2025சென்னை : மோந்தா புயல் காரணமாக ஆந்திராவில் விடிய, விடிய கனமழை கொட்டி தீர்த்தது.
-
அரசு பணிகளுக்கு ஊழியர்களை நியமிக்கும் தேர்வில் முறைகேடு : எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு
29 Oct 2025சென்னை : நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறைகளில் காலியாக இருந்த பல்வேறு பதவிகளுக்கு ஊழியர்களை
-
நவ. 5-ல் த.வெ.க. சிறப்பு பொதுக்குழு கூட்டம் : விஜய் அறிவிப்பு
29 Oct 2025சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் சிறப்பு பொதுக்குழு கூட்டம் நவ. 5 ஆம் தேதி நடைபெறும் என்று அந்தக் கட்சியின் தலைவர் விஜய் அறிவித்துள்ளார்.
-
வடசென்னை பகுதிகளில் மின்வாரிய பணிகளை ஆய்வு செய்தார் அமைச்சர்
29 Oct 2025சென்னை : வடசென்னை பகுதிகளில் நடைபெறும் மின்வாரிய பணிகளை அமைச்சர் சிவசங்கர் நேரில் ஆய்வு செய்தார்.
-
நகராட்சி நிர்வாகம் - குடிநீர் வழங்கல் துறை பணி நியமனத்தில் முறைகேடா? - அமைச்சர் கே.என்.நேரு விளக்கம்
29 Oct 2025சென்னை : நகராட்சி நிர்வாகம் - குடிநீர் வழங்கல் துறையில் பணி நியமனத்தில் முறைகேடு நடைபெற்றதாக வெளியான தகவல் குறித்து அமைச்சர் கே.என்.நேரு விளக்கமளித்துள்ளார்.
-
வருவாயின் ஒரு பகுதியை சேமிக்க வேண்டும்: உலக சிக்கன நாளை முன்னிட்டு முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தல்
29 Oct 2025சென்னை : உலக சிக்கன நாளை முன்னிட்டு ஒவ்வொருவரும் தம்முடைய வருவாயின் ஒரு பகுதியை சேமிக்க வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
மக்கள் 100 சதவீதம் விஜய் மீது நம்பிக்கை வைத்துள்ளனர் : த.வெ.க. துணை பொதுச்செயலர் பேட்டி
29 Oct 2025சென்னை : தமிழக வெற்றிக்கழகத்தை முடக்க முயற்சி செய்தனர். அவர்களின் எண்ணம் நிச்சயமாக ஈடேறாது.
-
இந்திய பெண் பாலியல் வன்கொடுமை: இங்கிலாந்தை சேர்ந்தவர் கைது
29 Oct 2025லண்டன் : இந்திய பெண் பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் இங்கிலாந்தை சேர்ந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
-
தமிழ்நாட்டில் 2026 தேர்தலுக்கு பின் பா.ஜ.க. காணாமல் போகும் : அமைச்சர் ரகுபதி விமர்சனம்
29 Oct 2025புதுக்கோட்டை : தமிழ்நாட்டில் 2026 தேர்தலுக்கு பிறகு பா.ஜ.க.
-
விஜய் பிரச்சார பயணம் தொடரும்: த.வெ.க. துணை பொதுச்செயலாளர்
29 Oct 2025சென்னை : த.வெ.க. தலைவர் விஜய்யின் பிரச்சார பயணம் தொடரும் என்று அக்கட்சியின் துணை பொதுச்செயலாளர் சி.டி.ஆர்.நிர்மல் குமார் தெரிவித்துள்ளார்.
-
தற்போது பிரதமர் பதவியோ, பீகார் முதல்வர் பதவியோ காலியாக இல்லை : பிரச்சாரத்தில் அமித்ஷா பேச்சு
29 Oct 2025பாட்னா : பீகார் முதல்வர் பதவியும், பிரதமர் பதவியும் தற்போது காலியாக இல்லை என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்தார்.
-
கோவில் சொத்து விவரங்கள்; 2 வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவு
29 Oct 2025சென்னை : கோவில் சொத்து விவகாரம் குறித்து 2 வாரங்களில் அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்று ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
-
கர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறப்பு அதிகரிப்பு
29 Oct 2025மைசூரு : கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்துக்கு தண்ணீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. வினாடிக்கு 7 ஆயிரத்து 135 கனஅடி நீர் திறக்கப்பட்டது.
-
பயணிகள் கதவில் சிக்குவதை தடுக்க ரூ.48.33 கோடியில் மெட்ரோ ரயிலில் பாதுகாப்பு அமைப்பு
29 Oct 2025சென்னை : பயணிகள் கதவில் சிக்குவதை தடுக்க மெட்ரோ ரயிலில் பாதுகாப்பு அமைக்கப்பட்டுள்ளது.


