எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, ஏப்.3 - தி.மு.க.விற்கு எதிராக வாக்களிக்க கூடாது என்று திருவொற்றியூர் தொகுதி, கே.வி.குப்பம் வாக்களர்களை அமைச்சர் சாமியின் தம்பி அடியாட்களுடன் வந்து மிரட்டுவதாகவும், பாதுகாப்பு தரும்படி வாக்காளர்கள் கோர்ட்டில் மனு அளித்துள்ளனர்.
இதுபற்றி தமிழக அரசுக்கும் தேர்தல் ஆணையத்திற்கும் ஏப்.11-ந்தேதிக்குள் விளக்கம் அளிக்கும்படி ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
திருவொற்றியூர் தொகுதி கே.வி.குப்பம் மீனவ கிராமத்திற்கு மத்திய ரிசர்வ் போலீஸ் பாதுகாப்பு கேட்டு தாக்கல் செய்த மனுவுக்கு ஏப்ரல் 11-ம் தேதிக்குள் பதில் அளிக்கும்படி தேர்தல் ஆணையத்திற்கு நோட்டீஸ் அனுப்ப சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக இக்கிராமத்தின் பஞ்சாயத்து தலைவர் அஞ்சப்பன் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில் கூறியிருப்பதாவது:-
திருவொற்றியூர் தொகுதிக்குட்பட்ட கே.வி.குப்பத்தில் 400-க்கும் மேற்பட்ட மீனவ குடும்பங்கள் உள்ளன. இக்கிராமத்தினர் கடந்த 2006 சட்டமன்ற தேர்தலில் தி.மு.க.விற்கு வாக்களிக்காததால் தொகுதி எம்.எல்.ஏ.வான அமைச்சர் கே.பி.பி.சாமியின் தம்பி கே.பி.பி.சங்கர் அடியாட்களுடன் வந்து கிராம மக்களை தாக்கி விரட்டி அடித்தனர். இதனால் கே.வி.குப்பத்து மக்கள் கிராமத்தை காலி செய்து விட்டு வெளியேறினர். இதையடுத்து சென்னை ஐகோர்ட் தலையீட்டின் பேரில் கிராம மக்கள் மீண்டும் கே.வி.குப்பத்தில் போலீஸ் பாதுகாப்புடன் குடியமர்த்தப்பட்டனர்.
இந்த நிலையில் மீண்டும் கே.பி.பி.சாமி திருவொற்றியூர் தொகுதியில் போட்டியிடுகிறார். அவருக்கு எதிராக யாரும் செயல்படக் கூடாது என்று கூறி அமைச்சரின் தம்பி மற்றும் அவரது அடியாட்கள் கிராம மக்களை மிரட்டி வருகின்றனர். இக்குப்பத்தை சேர்ந்த மேகவர்ணம் உள்ளிட்ட 5 பேரை அமைச்சரின் தம்பி அடியாட்களுடன் வந்து தாக்கி விட்டு சென்றார்.
இந்த சம்பவம் குறித்து எண்ணூர் போலீசில் அமைச்சரின் தம்பிக்கு எதிராக கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த முறையும் தேர்தலில் வெற்றி பெறுவதற்காக அமைச்சரின் ஆதரவாளர்கள் எதை வேண்டுமானாலும் செய்யலாம். அவர்களுக்கு ஆதரவாக மாநில போலீசும், உயர் அதிகாரிகளும் செயல்படுகின்றனர். ஏனெனில் கே.வி.குப்பத்தில் உள்ளவர்களில் பெரும்பாலானோர் தி.மு.க. கட்சியை சாராதவர்களாவர். ஆகவே தேர்தலின் போது கே.வி.குப்பம் மக்கள் பயமின்றி வாக்களிக்க உரிய நடவடிக்கை எடுக்கும்படி தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனுவை தலைமை நீதிபதி எம்.ஒய்.இக்பால், நீதிபதி சிவஞானம் ஆகியோர் அடங்கிய முதல் டிவிசன் பெஞ்ச் விசாரித்தது. மனுதாரர் சார்பில் வக்கீல் செல்வி ஜார்ஜ் ஆஜராகி வாதிட்டார். இதையடுத்து இந்த மனு குறித்து ஏப்ரல் 11-ந் தேதிக்குள் பதில் அளிக்கும்படி தமிழக தலைமை செயலாளர், உள்துறை செயலாளர், போலீஸ் டி.ஜி.பி., சென்னை போலீஸ் கமிஷனர், திருவள்ளூர் மாவட்ட கலெக்டர், அமைச்சர் கே.பி.பி.சாமி மற்றும் தலைமை தேர்தல் அதிகாரி ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |
-
விஜய் பிரச்சார பேருந்தில் சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை வாகன ஓட்டுனரிடமும் விசாரணை
10 Jan 2026சென்னை, விஜய் பிரச்சாரத்திற்கு பயன்படுத்தும் பேருந்தில் நேற்று சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனையிட்டனர். விஜய் பிரச்சார வாகன ஓட்டுனரிடமும் விசாரணை நடத்தப்பட்டது.
-
த.வெ.க. உடன் கூட்டணியா? ஓ.பன்னீர் செல்வம் பேட்டி
10 Jan 2026சென்னை, த.வெ.க. உடன் கூட்டணி வைப்பீர்களா என்ற கேள்விக்கு தை பிறந்தால் வழி பிறக்கும் என ஓ.பி.எஸ். தெரிவித்தார்.
-
வரும் சட்டசபை தேர்தலில் தே.மு.தி.க. யாருடன் கூட்டணி..? பிரேமலதா வைத்த 'சஸ்பென்ஸ்'
10 Jan 2026சென்னை, சட்டசபை தேர்தல் கூட்டணி அறிவிப்பை மாநாட்டில் தெரிவிப்பேன் என்று பிரேமலதா கூறியிருந்த நிலையில் கடலூர் மாநாட்டில் பேசிய பிரேமலதா, "தே.மு.தி.க.
-
குறள் வார விழாவுக்கான சிறப்பு காணொலி, பதாகை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்
10 Jan 2026சென்னை, குறள் வார விழாவுக்கான சிறப்பு காணொலி மற்றும் பதாகையை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.
-
தமிழ்நாடு வக்பு வாரியம் செயல்பட இடைக்கால தடை விதித்த ஐகோர்ட்
10 Jan 2026சென்னை, தமிழ்நாடு வக்பு வாரியம் செயல்பட இடைக்கால தடை விதித்து ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
-
அமித்ஷாவுக்கு எதிரான ஆதாரங்கள் என்னிடம் உள்ளது: மம்தா பானர்ஜி
10 Jan 2026கொல்கத்தா, நிலக்கரி ஊழல் பணம் தொடர்பாக அமித்ஷாவுக்கு எதிரான ஆதாரங்களை கொண்ட பென் டிரைவ் என்னிடம் உள்ளது என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்திருப்பது பரபரப
-
ஜனநாயகன் பட விவகாரம்: சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்த தயாரிப்பு நிறுவனம்
10 Jan 2026புதுடெல்லி, ஜனநாயகன் பட விவகாரம் தொடர்பாக ஐகோர்ட் தலைமை நீதிபதி அமர்வு விதித்த இடைக்காலத் தடையை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் தயாரிப்பு நிறுவனம் மேல்முறையீடு செய்துள்ளத
-
வளர்ச்சியடைந்த இந்தியா: மூன்றாயிரம் இளைஞர்களுடன் பிரதமர் நாளை கலந்துரையாடல்
10 Jan 2026டெல்லி, டெல்லியில் நாளை (திங்கள்கிழமை) அன்று நடைபெறும் விக்சித் பாரத்(வளர்ச்சி அடைந்த இந்தியா) இளம் தலைவர்கள் கலந்துரையாடல் நிகழ்ச்சியில், இந்தியா மற்றும் வெளிநாடுகளைச்
-
3 அம்ரித் பாரத் ரயில்களை தமிழகம்-மேற்குவங்கம் இடையே இயக்க ரயில்வே வாரியம் ஒப்புதல்
10 Jan 2026சென்னை, தமிழகம்-மேற்கு வங்கம் இடையே 3 அம்ரித் பாரத் ரயில்களை இயக்க ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது.
-
பியட் காரை ஓட்டி மகிழ்ந்த முதல்வர் மு.க.ஸ்டாலின்..!
10 Jan 2026சென்னை, முதல்வர் மு.க.ஸ்டாலின் பியட் கார் ஓட்டிய வீடியோவை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார்.
-
மத்திய அமைச்சர் அமித்ஷா இன்று கேரளா செல்கிறார்
10 Jan 2026கொச்சி, கேரளாவுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா இன்று செல்கிறார்.
-
அமைச்சரவையில் இடம் கேட்டு அ.தி.மு.க.வுக்கு அழுத்தமா..? நயினார் நாகேந்திரன் விளக்கம்
10 Jan 2026கோவை, அமைச்சரவையில் இடம் கேட்டு அ.தி.மு.க.வுக்கு அழுத்தம் கொடுக்கவில்லை என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.
-
இமாசல பிரதேச பேருந்து விபத்து: பலியானவர்களின் குடும்பத்திற்கு நிவாரணம் அறிவித்தார் பிரதமர்
10 Jan 2026சிம்லா, இமாசல பிரதேசத்தில் பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்த விபத்தில் இதுவரை 14 பேர் உயிரிழந்துள்ள நிலையில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களு
-
போக்சோ சட்டத்தில் திருத்தம் செய்ய மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் பரிந்துரை
10 Jan 2026புதுடெல்லி, போக்சோ சட்டத்தில் திருத்தம் வேண்டும் என்று மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் பரிந்துரை செய்துள்ளது.
-
நாளை விண்ணில் பாயும் பி.எஸ்.எல்.வி சி-62: திருப்பதி கோவிலில் இஸ்ரோ விஞ்ஞானிகள் சாமி தரிசனம்
10 Jan 2026ஸ்ரீஹரிகோட்டா, பி.எஸ்.எல்.வி சி-62 நாளை விண்ணில் ஏவப்படவுள்ள நிலையில் ராக்கெட் மாதிரியை வைத்து திருப்பதி கோவிலில் இஸ்ரோ விஞ்ஞானிகள் சாமி தரிசனம் செய்தனர்.
-
சட்டசபை தேர்தல் குறித்து ஆலோசனை: பா.ஜ.க. தேசிய செயல் தலைவர் விரைவில் தமிழகம் வருகிறார்
10 Jan 2026சென்னை, தமிழக சட்டசபை தேர்தல் குறித்து ஆலோசனை நடத்த பா.ஜ.க. தேசிய செயல் தலைவர் நிதின் நபின் ஏப்ரல் மாதம் தமிழகம் வருகிறார்.
-
மக்களுக்கு பணியாற்றும் கட்சிகள் அனைத்தும் தி.மு.க.வுடன் உள்ளது: அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பேட்டி
10 Jan 2026கடலூர், மக்களுக்கு பணியாற்றும் கட்சிகள் அனைத்தும் தி.மு.க.வுடன் உள்ளது என்று அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
-
நிதிஷ்க்கு பாரத ரத்னா விருது கொடுங்கள்; பிரதமர் மோடிக்கு ஐக்கிய ஜனதா தளம் வலியுறுத்தல்
10 Jan 2026பாட்னா, நிதிஷ் குமாருக்கு பாரத ரத்னா விருது வழங்கவேண்டும் என்று ஐக்கிய ஜனதா தளம் வலியுத்தியுள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் –11-01-2026
11 Jan 2026 -
வார ராசிபலன்
10 Jan 2026


