எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தூத்துக்குடி ஏப்- 4 - ஒரு குடும்பத்தின் ஆதிக்கத்திலிருந்து தமிழகத்தை மீட்டெடுக்க அ.தி.மு.க. கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும் என்று தூத்துக்குடியில் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா பேசினார். அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா நேற்று தூத்துக்குடியில் அ.தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்தார். தூத்துக்குடி தொகுதி அ.தி.மு.க.வேட்பாளர் சி.த.செல்லப்பாண்டியன், ஸ்ரீவைகுண்டம் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் எஸ்.பி.சண்முகநாதன், திருச்செந்தூர் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் பி.ஆர்.மனோகரன், விளாத்திகுளம் தொகுதி வேட்பாளர் அ.தி.மு.க. வேட்பாளர் மார்க்கண்டேயன், கோவில்பட்டி அ.தி.மு.க. வேட்பாளர் கடம்பூர் ராஜா,ஒட்டப்பிடாரம் தொகுதியில் போட்டியிடும் புதிய தமிழகம் கட்சியின் வேட்பாளர் டாக்டர் கிருஷ்ணசாமி ஆகியோரை ஆதரித்து பிரசாரம் செய்தபோது பேசியதாவது: இதயதெய்வம் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரின் ரத்தத்தின் ரத்தங்களான எனது உயிரினும் மேலான எனதருமை உடன்பிறப்புக்களே, வாக்காள பெருமக்களே உங்கள் அனைவருக்கும் எனது பணிவான வணக்கத்தை தெரிவித்துக்கொள்கிறேன்.
வாக்காள பெருமக்களே தமிழ்நாட்டை காப்பாற்றுங்கள் என்ற கோரிக்கையோடு உங்கள் முன் வந்திருக்கிறேன். ஒரு குடும்பத்தின் பிடியிலிருந்து தமிழகத்தை மீட்டெடுப்பதற்கான பொன்னான வாய்ப்பு இந்த தேர்தல் மூலம் உங்களுக்கு கிடைத்திருக்கிறது. கருணாநிதியின் குடும்பத்தினரும், அவரது அமைச்சர்களின் குடும்பங்களும் தமிழகத்தை சூறையாடி உலக பணக்காரர்களாக மாறியிருக்கும் கொடுமைக்கு முற்றுப்புள்ளி வையுங்கள் என்பதுதான் நான் உங்கள் முன் வைத்திருக்கும் கோரிக்கை. கடுமையான மின்வெட்டு, எந்த பொருளையும் வாங்க முடியாத விலையேற்றம், ஊர்ஊருக்கு ரவுடிகள் சாம்ராஜ்யம், மணல்கொள்ளை, அரிசி கடத்தல், சமூகத்தில் யாருமே எந்த தொழிலும் செய்யமுடியாதபடி அச்சுறுத்தல், அடி,தடி, கட்டப்பஞ்சாயத்து என்று அராஜகம் தலைவிரித்தாடும் சூழ்நிலை தமிழகத்தில் உள்ளது.
எனவே இந்த தேர்தலில் தமிழக்தை மீட்டெடுக்கவில்லையென்றால் எப்போது மீட்டெடுக்க போகிறோம் என்று நல்லோர்களின் மனசாட்சி நம்மை பார்த்து கேட்கிறது. ஸ்பெக்ட்ரம் ஊழல்மூலம் ரூ.1லட்சத்து 80 ஆயிரம் கோடி கொள்ளையடித்த கருணாநிதி மற்றும் தி.மு.க.வினருக்கும் தமிழகம் என்ன தண்டனை கொடுக்கப்போகிறது என்று நாடே காத்திருக்கிறது. தேசவிரோத சக்திகளோடு கைகோர்த்து கொண்டு கருணாநிதி குடும்பத்தினர் நடத்தியிருக்கும் ஊழல் சாம்ராஜ்யத்தை வேரோடும் வேரடி மண்ணோடும் வீழ்த்திடவேண்டும். தானும் தனது குடும்பத்தாரும் மக்களை சுரண்டி எப்படி சம்பாதிக்கவேண்டும் என்று திட்டமிடுபவர் கருணாநிதி.
இதற்கு எடுத்துகாட்டாக ரூ.2ஆயிரம் மதிப்புள்ள டி.வி.யை இலவசமாக வழங்கிவிட்டு அந்த குடும்பத்திலிருந்து கேபிள் கட்டணமாக ஆண்டுக்கு ரூ.1000 அவரது குடும்பத்தினர் பெறுகின்றனர். கருணாநிதியின் தந்திரத்தையும், சூழ்ச்சியையும் விளக்க இது ஒன்றே போதும். சுதந்திர போராட்டத்தின் மூலம் வெள்ளையர்களை போராடி விரட்டினோம், இப்போது கருணாநிதி குடும்பம் என்ற கொள்ளை கும்பலை தேர்தல்மூலம் விரட்டியடிக்கவேண்டும். கருணாநிதியின் பேரன் கலாநிதி மாறன் உலக பணக்காரர்களின் வரிசையில் 310வது இடத்தில் இருக்கிறார். ஒருவருக்கே இவ்வளவு சொத்து இருக்கிறது என்றால் அவரது மொத்த குடும்பத்தையும் சேர்த்து பார்த்தால் உலக உலகின் பணக்கார குடும்பங்களில் ஒன்றாக கருணாநிதியின் குடும்பம் இருக்கும். தமிழகம் தாழ்ந்த நிலைக்கு சென்றதற்கு இது போன்ற ஊழல்தான் காரணம்.
இந்த தேர்தலில் கின்னஸில் இடம்பெறும் வகையில் தி.மு.க. போட்டியிடும் இடத்தில் எல்லாம் டெபாசிட் இழக்க செய்யவேண்டும். இதுவே உங்களை சுரண்டிய மனிதருக்கு சரியான தண்டனை மக்கள் கொடுத்துள்ளனர் என்று உலகம் உங்களை பாராட்டும். புரட்சித்தலைவர் நல்லாசியோடு அ.தி.மு.க. ஆட்சி அமைந்தால் தூத்துக்குடியில் போக்குவரத்து நெரிசலை போக்க 1வது மற்றும் 2வது ரயில்வே கேட்டில் மேம்பாலம் அமைக்கப்படும். குடிநீர் தட்டுப்பாட்டை போக்க 4வது குடிநீர்திட்டம் செயல்படுத்தப்படும், ஒருங்கிணைந்த பேரூந்து நிலையம் அமைக்கப்படும், கச்சத்தீவை மீட்டு மீனவர்களின் நலனை பாதுகாத்திட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும், எந்திர மீன்பிடி படகு வாங்க மானியம் வழங்கப்படும், தூத்துக்குடியில் 13 இடங்களில் குளிர்பதன மீன் பூங்காக்கள் அமைக்கப்படும்.
மீன்பிடி இல்லாத 45 நாட்கள் மீனவர்களின் குடும்பத்திற்கு தலா ஒரு குடும்பத்திற்கு ரூ.2ஆயிரம் நிதி வழங்கப்படும், பருவகாலமான 4 மாதங்கள் மீன்பிடி இல்லாத நேரத்தில் மீனவர்களின் குடும்பத்திற்கு ரூ.4ஆயிரம் நிதி வழங்கப்படும், இலங்கை அகதிகளுக்கும் இலவச திட்டங்கள் கிடைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும், வேலை வாய்ப்புகளை உருவாக்கும் வகையில் திருச்செந்தூர், ஸ்ரீவைகுண்டம் பகுதியில் சிட்கோ தொழிற்பேட்டை அமைக்கப்படும், திருச்செந்தூர் நாசரேத் பகுதியில் செவிலியர் பயிற்சி கல்லூரி அமைக்கப்படும், அப்பகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள் தரம் உயர்த்தப்படும், மணல் மாதாகோவில் சுற்றுலா தளமாக அறிவிக்கப்படும், தமிழகத்தில் பொதுமக்களுக்கு மிக்சி, கிரைண்டர், மின் விசிறி வழங்கப்படும்.
மாணவர்களுக்கு இலவசமாக லேப்டாப் வழங்கப்படும், நிலமற்ற ஏழைகளுக்கு 3செண்ட் நிலம் வழங்கப்படும், வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள 3லட்சம் குடும்பங்களுக்கு ரூ.1.80லட்சம் செலவில் பசுமை வீடுகள் கட்டிக்கொடுக்கப்படும், கேபிள் டி.வி. அரசுடமையாக்கப்ட்டு மக்களுக்கு குறைந்தகட்டணத்தில் கேபிள் இணைப்பு வழங்கப்படும், விவசாயிகளுக் இலவச சொட்டு நீர் பாசானம் அமைத்து கொடுக்கப்படும், விவசாய இடுபொருட்கள், விதைகள் தங்ளுபடி விலையில் வழங்கப்படும், ஏழை எளிய மக்களிடமிருந்து கருணாநிதி குடும்பம் மற்றும் ரவுடி கும்பல்களால் அபகரிக்கப்பட்ட சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டு உரியவர்களிடம் திருப்பி ஒப்படைக்கப்படும், ஒரு குடும்பத்தின் பிடியிலிருந்து தமிழகத்தை மீட்டெடுக்கவும், ரவுடி கும்பல்களின் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கவும் அ.தி.மு.க.கூட்டணிக்கு ஆதரவு தாருங்கள் என்று பேசினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 1 year 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 1 year 4 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 1 month ago |
-
வடகிழக்கு பருவமழை தீவிரம்: தமிழ்நாடு முழுவதும் கனமழைக்கு வாய்ப்பு
17 Oct 2025சென்னை : வடகிழக்கு பருவமழை தமிழகம் முழுவதும் கனமழைக்கு வாய்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
-
ஜி.டி.நாயுடு பாலத்தில் விபத்துகளை தடுக்க நடவடிக்கை: அமைச்சர் உறுதி
17 Oct 2025சென்னை : ஜி.டி.நாயுடு புதிய மேம்பாலம் பகுதியில் விபத்துகளை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார்.
-
பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம்: பிரான்ஸ் நாடாளுமன்றத்தில் தோல்வி
17 Oct 2025பாரீஸ், பிரான்ஸ் நாடாளுமன்றத்தில் பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தில் தோல்வி ஏற்பட்டது.
-
நெல் கொள்முதல் விவகாரம்: இ.பி.எஸ். குற்றச்சாட்டிற்கு அமைச்சர் சக்கரபாணி பதில்
17 Oct 2025சென்னை : நெல் தேங்குவதற்கு மத்திய அரசே காரணம் என்று இ.பி.எஸ். குற்றச்சாட்டுக்கு அமைச்சர் சக்கரபாணி பதில் அளித்துள்ளார்.
-
தினமும் ஆயிரம் மூட்டைகளை கொள்முதல் செய்ய வேண்டும் : சட்டசபையில் இ.பி.எஸ். வலியுறுத்தல்
17 Oct 2025சென்னை : நெல்கொள்முதல் நிலையங்களில் தினமும் ஆயிரம் மூட்டைகள் கொள்முதல் செய்யவேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
-
ஹங்கேரியில் விரைவில் புதினுடன் 2-வது சந்திப்பு: அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தகவல்
17 Oct 2025வாஷிங்டன், புதினுடன் அலாஸ்காவில் சந்தித்து பேசிய நிலையில், 2-வது பேச்சுவார்த்தை ஹங்கேரி நாட்டில் உள்ள புடாபெஸ்ட் நகரில் நடைபெற உள்ளதாக ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
-
ஜப்பான் முன்னாள் பிரதமர் காலமானார்
17 Oct 2025டோக்கியோ, ஜப்பான் முன்னாள் பிரதமர் டோமிச்சி முர்யமா நேற்று காலமானார்.
-
விமான உணவில் கிடந்த முடி: பயணிக்கு ரூ.35 ஆயிரம் வழங்க ஏர் இந்தியாவுக்கு கோர்ட் உத்தரவு
17 Oct 2025சென்னை, விமான உணவில் முடி இருந்ததை முன்னிட்டு பயணிக்கு ரூ.35 ஆயிரம் வழங்க ஏர் இந்தியாவுக்கு கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
-
துணை ஜனாதிபதி வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்
17 Oct 2025சென்னை : துணை ஜனாதிபதி, முன்னாள் தலைமை செயலாளர் வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
ஐ.ஆர்.சி.டி.சி. இணையதளம் முடக்கம்: ஆன்லைனில் டிக்கெட் புக் செய்ய முடியாமல் பயணிகள் கடும் அவதி
17 Oct 2025புதுடெல்லி, : தீபாவளிக்கு சொந்த ஊர் செல்வதற்காக ஏராளமானோர் ஐ.ஆர்.சி.டி.சி.
-
இனி சொந்த வாகனங்களை வாடகைக்கு பயன்படுத்தினால் ரூ.25 ஆயிரம் அபராதம்: போக்குவரத்து துறை கடும் எச்சரிக்கை
17 Oct 2025சென்னை, சொந்த வாகனங்களை வாடகைக்கு பயன்படுத்தினால் ரூ. 25 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும் என்று போக்குவரத்து துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
-
ஊழல் குற்றச்சாட்டில் பஞ்சாப் டி.ஐ.ஜி. கைது : ரூ.5 கோடி ரொக்கம் பறிமுதல்
17 Oct 2025சண்டிகர் : ஊழல் குற்றச்சாட்டில் பஞ்சாப் டி.ஐ.ஜி. ஹர்சரண் சிங் புல்லரை கைது செய்துள்ள சி.பி.ஐ., அவரிடம் இருந்து ரூ.
-
அமெரிக்காவில் விமான விபத்து: 3 பேர் பலி
17 Oct 2025மிச்சிகன், அமெரிக்காவில் சிறியரக விமான விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 18-10-2025.
18 Oct 2025 -
சத்தீஸ்கரில் 208 நக்சலைட்டுகள் சரண்
17 Oct 2025சத்தீஸ்கர் : 208 நக்சலைட்டுகள் ஆயுதங்களை போலீசாரிடம் ஒப்படைத்து சரண் அடைந்தனர்.
-
ரேபரேலியில் அடித்துக் கொல்லப்பட்ட தலித் நபரின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ராகுல் ஆறுதல்
17 Oct 2025டெல்லி : ரேபரேலியில் அடித்துக் கொல்லப்பட்ட தலித் நபரின் குடும்பத்தினரை ராகுல் காந்தி நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
-
சொந்த ஊர்களில் தீபாவளியை கொண்டாட சென்னையில் இருந்து 12 லட்சம் பேர் பயணம்
17 Oct 2025சென்னை : தீபாவளியை சொந்த ஊர்களில் கொண்டாட சென்னையில் இருந்து 12 லட்சம் பேர் பயணம் செய்தனர்.
-
எனக்கு பாம்பு காது: சபாநாயகரின் பேச்சால் சட்டசபையில் சிரிப்பலை
17 Oct 2025சென்னை : எனக்கு பாம்பு காது என்ற சபாநாயகரின் பேச்சு சட்டசபையில் சிரிப்பலையை ஏற்படுத்தியது.
-
அரசியலில் திடீர் திருப்பம்: அன்புமணி ராமதாசுடன் பா.ஜ.க. தேர்தல் பொறுப்பாளர் சந்திப்பு
17 Oct 2025சென்னை : அரசியலில் திடீர் திருப்பமாக அன்புமணி ராமதாசுடன் பா.ஜ.க. தேர்தல் பொறுப்பாளர் சந்தித்து பேசினார்.
-
திருவண்ணாமலை கோவிலில் தங்கும் விடுதி, குடிநீர், கழிப்பிட வசதி பணிகள் : சட்டசபையில் அமைச்சர் தகவல்
17 Oct 2025சென்னை : திருவண்ணாமலை கோவிலில் தங்கும் விடுதி, குடிநீர், கழிப்பிட வசதிக்கான பணிகள் நடைபெறுகிறது என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.
-
அ.தி.மு.க.வை திருட்டுக்கடை போல் மாற்றிவிட்டார்: இ.பி.எஸ். மீது அமைச்சர் சிவசங்கர் தாக்கு
17 Oct 2025சென்னை : அ.தி.மு.க.வை திருட்டுக்கடை போல் எடப்பாடி பழனிசாமி மாற்றிவிட்டார் என அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
-
ரூ.1.5 லட்சம் கோடியை எட்டியது பாதுகாப்பு துறைக்கான உற்பத்தி : மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் தகவல்
18 Oct 2025லக்னோ : வர்த்தகம் இல்லாமல் நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்த முடியாது என்று தெரிவித்துள்ள மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தற்போது பாதுாகப்பு துறைக்கான உ
-
ரஷ்யாவிடம் இருந்து இந்தியா எண்ணெய் வாங்காது: அதிபர் ட்ரம்ப் மீண்டும் பேச்சு
18 Oct 2025வாஷிங்டன், ரஷ்யாவிடம் இருந்து இந்தியா எண்ணெய் வாங்காது என்று அதிபர் ட்ரம்ப் மீண்டும் தெரிவித்துள்ளார்.
-
ரஷ்ய எண்ணெய் இறக்குமதியை மீண்டும் அதிகரித்தது இந்தியா..!
18 Oct 2025புதுடெல்லி, அதிபர் ட்ரம்ப் கருத்து கூறிய நிலையில் ரஷ்ய எண்ணெய் இறக்குமதியை மீண்டும் அதிகரித்ததுள்ளது இந்தியா.
-
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வழிபட இன்று முன்பதிவு தொடக்கம் : தரிசன டோக்கன்கள் ஆன்லைனில் ஒதுக்கீடு
18 Oct 2025திருமலை : தீருப்பதி கோவிலில் வழிபட தரிசன டோக்கன்கள் இன்று முதல் ஆன்லைனில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.