எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சென்னை, செப்.22 - தமிழகத்தில் 10 மணி நேர மின்சார தடை படிப்படியாக குறைக்கப்பட்டது என்று மின்வாரியம் கூறியுள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு மின்சார வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தமிழகத்தின் தற்போதைய மின்தேவை 11,500 மெகாவாட் முதல் 12 ஆயிரம் மெகாவாட்டாக உள்ளது. கடந்த இரு தினங்களாக தமிழகத்தில் காற்றாலையிலிருந்து பெறப்படும் மின்சாரத்தின் அளவில், ஏற்ற இறக்கங்கள் அதிகம் இருந்தது. காலை நேரங்களில் மிகவும் குறைந்தும், மாலை நேரங்களில் சற்றே அதிகரித்தும் காற்றாலை மின்சாரம் பெறப்பட்டது.
கடந்த 19 -ந் தேதி காலை காற்றாலை மின்சாரம் எதிர்பாராத அளவில் 100 மெகாவாட்டாக குறைந்தது. தென்மேற்கு பருவமழை பொய்த்ததால் நீnullர்த்தேக்கங்களில் தண்ணீர் குறைவாக இருப்பதால் புனல் மின்நிலையங்கள் மூலம் பெறப்படும் மின்சாரத்தின் அளவும் மிகவும் குறைந்துள்ளது.
மேலும் மத்திய மின் தொகுப்பிலிருந்து பெறப்படும் தமிழ்நாட்டின் பங்கான 2,950 மெ.வா. 1,100 மெ.வா. அளவுக்கு குறைந்து 1,850 மெ.வா. மட்டுமே பெறப்படுகிறது. இவை அனைத்தும் தமிழகத்தின் மின் நிலைமையை வெகுவாக பாதித்து உள்ளது. மேலும் கடந்த 17-ந் தேதி முதல் மத்திய ஒழுங்குமுறை ஆணையம் மின்கட்டமைப்பு இயக்க விதிகளை கடுமையாக அமல்படுத்தியுள்ளது. மின் அதிர்வெண் 49.8-க்கு கீழ் இருக்கும் பட்சத்தில் மின் கட்டமைப்பிலிருந்து மின்சாரம் பெறுவது முற்றிலுமாக தடை செய்யப்பட்டுள்ளது. எனவே மின் கட்டமைப்பு பாதுகாப்பு கருதியும் காற்றாலையிலிருந்து பெறப்படும் மின்சாரத்தின் அளவு அவ்வப்போது குறையும் நேரங்களில் கூடுதலாக மின்தடை செய்ய நேரிடுகிறது.
வெளிமாநிலங்களிலிருந்து சுமார் 1,200 மெ.வா. மின்சாரம் கொள்முதல் செய்ய உத்தரவு அளித்திருந்தும் மத்திய மின் கட்டமைப்பு கழகம் பிற மாநிலங்களிலிருந்து போதிய அளவு மின்பாதை அமைக்காத நிலையில் 1000 மெ.வா. அளவிற்கு தமிழ்நாட்டிற்கு மின்சாரம் கிடைக்கப் பெறவில்லை. மேற்கூறிய காரணங்களினால் கடந்த 19-ந் தேதி அன்று தமிழகத்தில் சென்னை தவிர மற்ற இடங்களில் 8 முதல் 10 மணி நேரமும் சென்னையில் ஒரு மணி நேரமும் மின்தடை செய்ய நேரிட்டது. எனினும் மாலை 4 மணி முதல் காற்றாலையிலிருந்து பெறப்பட்ட மின்சார அளவு அதிகரிக்க ஆரம்பித்ததும் மின்தடை நேரம் படிப்படியாக குறைக்கப்பட்டது. எனினும் நடைமுறையிலுள்ள மத்திய மற்றும் மாநில புதிய மின்திட்டங்கள் செயல்பாட்டுக்கு வரும்போது தமிழ்நாட்டின் மின்நிலைமை சீரடையும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
காற்றாலைகள் சங்க தலைவர் கஸ்தூரி ரெங்கையன் கூறியதாவது:-
காற்று வீசும் காலம் முடிவடைவதால் தினசரி 4 ஆயிரம் மெ.வா. மின்உற்பத்தி செய்து வந்த காற்றாலைகள், தற்போது 2,500 மெ.வா. அளவுக்கு குறைந்து விட்டது. 24 மணி நேரமும் காற்றின் வேகம் அதிகரித்து வந்த காலம் கடந்து, தற்போது காற்றின் வேகம் குறைந்ததுடன், பகல் 1 மணியிலிருந்து இரவு 8 மணி வரை மட்டும்தான் காற்று வீசுகிறது.
இதனால் மின் உற்பத்தியும் குறைந்துள்ளது. அதுவும் இன்னும் 10 நாட்களுக்குதான் காற்று வீசும், அதற்கு பிறகு காற்றாலைகள் மின் உற்பத்தி இருக்காது. மின்தடை நேரம் அதிகரிக்க காரணம் என்ன என்று பொதுமக்கள் மின்வாரியத்தை கேட்டால், உடனடியாக காற்றாலைகளில் மின்உற்பத்தி குறைந்து விட்டது என்று காற்றாலைகள் மீது வீண்பழியை போடுகின்றனர்.
ஆனால் மின்சார வாரியத்திற்கு சொந்தமான அனல்மின்நிலையம், புனல் மின் நிலையம் உட்பட பல்வேறு மின்உற்பத்தி நிலையங்களிலிருந்து கடந்த 4 மாதங்களுக்கு முன்பு 60 மில்லியன் யூனிட்டாக இருந்த மின்உற்பத்தி, தற்போது 45 மில்லியன் யூனிட்டாக குறைந்து விட்டது. அதற்கான காரணத்தை அதிகாரிகள் தெரிவிக்கவில்லை. மேலும் மத்திய தொகுப்பிலிருந்து மின்பங்கீடும் குறைந்துள்ளது. இவ்வாறு கஸ்தூரிரெங்கையன் கூறினார்
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 9 months 2 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 9 months 2 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 10 months 1 week ago |
-
வருமான சமத்துவத்தில் உலக அளவில் 4-ம் இடம் பிடித்த இந்தியா
06 Jul 2025புதுடெல்லி : வருமான சமத்துவத்தின் அடிப்படையில் உலகளவில் நான்காவது நாடாக இந்தியா மாறியுள்ளதாக உலக வங்கி தெரிவித்துள்ளது.
-
மகளிர் உரிமைத் தொகை பெற இன்று முதல் விண்ணப்பிக்கலாம்
06 Jul 2025சென்னை: மகளிர் உரிமைத் தொகை பெற இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
-
குண்டு பாய்ந்து ராணுவ வீரர் பலி
06 Jul 2025ஜம்மு : ஜம்மு-காஷ்மீரில் துப்பாக்கியில் இருந்து குண்டு பாய்ந்து ராணுவ வீரர் பலியான நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
ரஷ்யா, சீனா நிதி அமைச்சர்களுடன் நிர்மலா சீதாராமன் பேச்சுவார்த்தை
06 Jul 2025ரியோ டி ஜெனிரோ : பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு ரஷ்ய அதிபர் புதின் இந்தியாவிற்கு அளித்த ஆதரவிற்கு நன்றி தெரிவிப்பதாக நிர்மலா சீதாராமன் கூறினார்.
-
30-ம் தேதி விண்ணில் பாய்கிறது நிசார் செயற்கைக்கோள்: இஸ்ரோ
06 Jul 2025சென்னை: நிசார் செயற்கைக்கோளை வருகிற 30-ம் தேதி விண்ணில் ஏவ விஞ்ஞானிகள் திட்டமிட்டு உள்ளனர்
-
டெக்சாஸ் வெள்ளம் - 51 பேர் பலி
06 Jul 2025டெக்சாஸ் : அமெரிக்காவில், வெள்ளத்தில் சிக்கி, 15 குழந்தைகள் உட்பட 43 பேர் உயிரிழந்தனர். முகாமில் இருந்து 27 பெண்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளனர்.
-
குற்றச்சம்பவங்களை தடுப்பதில் பீகார் அரசு தோல்வி: ராகுல் காந்தி
06 Jul 2025பாட்னா: குற்றச் சம்பவங்களை தடுப்பதில் பீகார் அரசு தோல்வி அடைந்து விட்டதாக ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.
-
இஸ்ரேல் ராணுவம் தாக்குதல்: காசாவில் 33 பேர் உயிரிழப்பு
06 Jul 2025காசா : காசாவில் இஸ்ரேல் ராணுவம் தாக்குதலில் 33 பேர் உயிரிழந்தனர்.
-
புரூக்குக்கு ரிஷப் பதிலடி
06 Jul 2025இந்தியா-இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி பர்மிங்காமில் நடந்தது.
-
பா.ம.க. நிர்வாக குழுவில் இருந்து அன்புமணி நீக்கம்: ராமதாஸ் அதிரடி
06 Jul 2025திண்டிவனம்: பா.ம.க. தலைமை நிர்வாக குழுவில் இருந்து அன்புமணியை நீக்கம் செய்து ராமதாஸ் நடவடிக்கை எடுத்துள்ளார்.
-
சென்னை-தூத்துக்குடி விமானத்தில் திடீர் தொழில்நுட்ப கோளாறு
06 Jul 2025சென்னை : தொழில்நுட்ப கோளாறு காரணமாக சென்னையில் இருந்து தூத்துக்குடி புறப்பட வேண்டிய ஸ்பைஸ்ஜெட் விமானத்தின் புறப்பாடு தாமதமாகியுள்ளது.
-
நாமக்கல் அருகே ரயில் முன் பாய்ந்து ஆர்.டி.ஓ., மனைவி தற்கொலை
06 Jul 2025நாமக்கல்: திருச்சி வட்டாரப் போக்குவரத்து அலுவலரும் அவரது மனைவியும் நாமக்கல் அருகே ரயில்முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
-
மேல்விஷாரத்தில் வரும் 10-ம் தேதி ஆர்ப்பாட்டம்: அ.தி.மு.க. அறிவிப்பு
06 Jul 2025சென்னை: மேல்விஷாரம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் தரமான மருத்துவ சிகிச்சையை அளிப்பதற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வலியுறுத்தி வரும் ஜூலை 10 அன்று கண்டன ஆர்ப்பாட்டம் நட
-
பிரேசில் சென்றார் பிரதமர் மோடி: பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்பு
06 Jul 2025ரியோ டி ஜெனிரோ : 17-வது பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி பிரேசில் சென்றார்.
-
அடுத்த போட்டியில் 200 ரன்கள் குவிப்பேன்: வைபவ் சூர்யவன்ஷி
06 Jul 2025லண்டன்: அடுத்தப் போட்டியில் 200 ரன்கள் குவிக்க முயற்சி செய்வேன் என்று இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி தெரிவித்தார்.
-
வரும் ஆகஸ்டு 15-ம் தேதி நெல்லையில் பா.ஜ.க.வின் முதல் மாநாடு
06 Jul 2025நெல்லை : தமிழக சட்டசபை தேர்தலையொட்டி நெல்லையில் பா.ஜ.க.வின் முதல் மாநாடு ஆகஸ்டு 15-ந்தேதி நடைபெறும் என அக்கட்சி அறிவித்து உள்ளது.;
-
ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவன எக்ஸ் கணக்கு முடக்கம்: மத்திய அரசு விளக்கம்
06 Jul 2025புதுடெல்லி: ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் எக்ஸ் கணக்கு இந்தியாவில் முடக்கபட்டது குறித்து மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
-
90-வது பிறந்த நாள்: புத்த மத துறவி தலாய் லாமாவுக்கு பிரதமர் வாழ்த்து
06 Jul 2025புதுடெல்லி : தலாய் லாமாவின் நீடித்த உடல் ஆரோக்கியம் மற்றும் நீண்டகால வாழ்க்கைக்காக நாங்கள் வேண்டி கொள்கிறோம் என்று பிரதமர் மோடி பதிவிட்டு உள்ளார்.
-
பாகிஸ்தானில் சோகம்: அடுக்குமாடி இடிந்து 27 பேர் பலி
06 Jul 2025லாகூர் : பாகிஸ்தான் நாட்டின் லாகூரில் அடுக்குமாடி குடியிருப்பு இடிந்து விபத்துக்குள்ளானதில் கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கி 9 பெண்கள் உள்பட 27 பேர் உயிரிழந்தனர்.
-
'அமெரிக்கா கட்சி' என்ற பெயரில் புதிய அரசியல் கட்சியை தொடங்கினார் எலான் மஸ்க்
06 Jul 2025வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்புடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ள நிலையில், அமெரிக்கா கட்சி என்ற புதிய கட்சியை எலான் மஸ்க் தொடங்கியுள்ளார்.
-
பீகார் மாநிலத்தில் 3 கோடி வாக்காளர்கள் நீக்கப்படும் அபாயம்: சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல வழக்கு பதிவு
06 Jul 2025புதுடில்லி : பீகாரில் சுமார் 3 கோடிக்கும் மேற்பட்ட வாக்காளர்கள் வாக்குரிமையை இழக்கும் அபாயம் இருப்பதாக சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டள்ளதொரு பொதுநல மனுவில் குற
-
கவாஸ்கரின் 54 ஆண்டுகால சாதனையை முறியடித்த கில்
06 Jul 2025பர்மிங்காம்: இந்திய அணியின் கேப்டன் ஷுப்மன் கில் அதிக ரன்கள் குவித்து இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கரின் சாதனையை முறியடித்துள்ளார்.
-
தெலுங்கானாவில் இனி 10 மணி நேர வேலை: மாநில அரசு அறிவிப்பு
06 Jul 2025ஹைதராபாத் : தெலுங்கானாவில் வணிக நிறுவனங்களுக்கான தினசரி வேலை நேரம் 10 மணி நேரமாக உயர்த்தப்பட்டுள்ளது.
-
டெஸ்ட் கிரிக்கெட்டில் ஜேமி சுமித் அபார சாதனை
06 Jul 2025பர்மிங்காம்: டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் ஒரு போட்டியில் அதிக ரன் அடித்த இங்கிலாந்து விக்கெட் கீப்பர் என்ற மகத்தான சாதனையை படைத்தார்.
-
தலைக்கவசங்களுக்கு இனி பி.ஐ.எஸ். தரச்சான்று கட்டாயம் : மத்திய அரசு அறிவிப்பு
06 Jul 2025சென்னை : பி.ஐ.எஸ். தரச் சான்று பெற்ற தலைக்கவசங்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என நுகர்வோருக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.