Idhayam Matrimony

மீனாட்சி அம்மன் திருக்கல்யாணத்தில் 60 ஆயிரம் பேருக்கு விருந்து

புதன்கிழமை, 13 ஏப்ரல் 2011      ஆன்மிகம்
Image Unavailable

 

மதுரை,ஏப்.13 - மதுரை மீனாட்சி அம்மன் திருக்கல்யாணத்தில் 60 ஆயிரம் பக்தர்களுக்கு விருந்து வழங்கப்படுகிறது. 16 ஆயிரம் பேருக்கு அனுமதி சீட்டு வழங்கப்படுகிறது. பக்த சபை சார்பாக நடந்த பத்தாண்டுகாளக ஸ்ரீமீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவில் வளாகத்தில் பக்தர்களுக்கு வழங்கி வந்த திருக்கல்யாணவிருந்தை சென்ற ஆண்டு ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வர் கோவில் பாதுகாப்பு மற்றும் பொதுமக்களின் நலன் கருதி காவல்துறை ஆணையாளரின் அறிவுரைப்படி வடக்கு வெளி வீதியில் உள்ள சேதுபதி மேல்நிலைப்பள்ளியில் திருக்கல்யாண விருந்து நடைபெற்றது. இந்த ஆண்டு வரும் 16 -ம் தேதி அன்று நடைபெறவுள்ள திருக்கல்யாண தினத்தில் அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை வருகின்ற அனைத்து ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் பக்தர்களுக்கும், பொது மக்களுக்கும் திருக்கல்யாண விருந்தை சேதுபதி மேல் நிலைப்பள்ளி விளையாட்டு மையதானத்தில் சுமார் 60 ஆயிரம் பக்தர்களுக்கு விருந்து வழங்கப்படுகிறது.

 விருந்தில் வாழைஇலை போட்டு பழங்கள் பச்சடி,பூந்தி, அப்பளம், பாயசாம், வாழைப்பழம், உருளைகிழங்குவருவல், கோஸ் பொறியல், பூசணிக்காய் கூட்டு, சாம்பார், ரசம், மோர் ஊறுகாயும் வழங்கப்படுகிறது.

இந்த ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வர் திருக்கல்யாண விருந்துக்கு தேவையான அனைத்து காய்கறிகளை மதுரை பரவையில் உள்ள மொத்த காய்கறி வியாபாரிகளும், மட்டுத்தாவணி காய்கறி வியாபாரிகளும் சேர்ந்த ஒரு லாரி நிறைய காய்கறிகளையும், வாழை இலைகளையும் வழங்க உள்ளனர்.பழ வியாரிகள் சங்கம் பலவிதமான பழங்களை பெட்டி பெட்டியாக வழங்கப்பட உள்ளது. விருந்துக்கு தேவையான அரிசி, எங்கள்சபை உறுப்பினர்களும், நண்பர்களும், மீனாட்சி சுந்தரேஸ்வரர் பக்தர்களும் வழங்க உள்ளனர்.   கீழமாசிவீதி, வியாபாரிகள் விருந்துக்கு தேவையான மளிகை பொருள்களையும், எண்ணெய், நெய் வியாபாரிகள் எண்ணெய்,நெய் டின்களையும் வழங்க உள்ளனர்.

வரும் 16 -ம் தேதி காலை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெறுகிறது. திருக்கல்யாணத்தை காண வரும் பக்தர்களுக்கு சிறப்பு நுழைவு அனுமதி சீட்டு வழங்கப்பட இருக்கிறது. ஊதா, மஞ்சள், ரோஸ் ஆகிய வண்ணங்களில் அனுமதி சீட்டு அச்சடிக்கப்பட்டு உள்ளது. மஞ்சள் அட்டை வைத்து இருப்பவர்கள் மேற்கு நுழைவு வாயில் வழியாகவும், ரோஸ் அட்டை வைத்து இருப்பவர்கள் கிழக்கு கோபுர வாசல் வழியாகவும் அனுமதிக்கப்படுவார்கள். மொத்தம் 16 ஆயிரம் பேருக்கு அனுமதி சீட்டு வழங்கப்படும். இந்த தகவல் பழமுதிர் சோலை திருவருள் முருகன் பக்த சபையின் அறிவித்து உள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago