எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சென்னை, ஏப்.14 - தமிழகம் முழுவதும் நேற்று நடந்த தேர்தலில் பரவலாக வாக்குப்பதிவு சுறுசுறுப்பாக இருந்தது. இதில் சென்னையில் ஆர்வமாக வாக்களிக்க வந்த பலரது பெயர்கள், வாக்குச்சாவடி அதிகாரிகள் வைத்திருக்கும் லிஸ்டில் இல்லை என மறுத்து திருப்பி அனுப்பியதால் வாக்காளர்கள் பலர் வெறுத்து திரும்பினர்.
தமிழக சட்டசபை தேர்தல் நேற்று காலை 8 மணிக்கு துவங்கியதும் விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் வில்லிவாக்கம் தொகுதிக்குட்பட்ட சிங்காரம்பிள்ளை மேல்நிலைப்பள்ளியில் காலை 7 மணி முதற்கொண்டே வாக்காளர்கள் வரிசையில் நிற்கத்துவங்கிவிட்டனர். ஆனால் வாக்குச்சாவடிக்கான தேர்தல் அதிகாரிகள் காலை 8 மணிக்குப்பிறகே வந்தனர். அதன்பிறகு வேட்பாளர்களின் ஏஜென்டுகள் வரவில்லை என மேலும் ஒரு அரைமணி நேரம் தாமதமாகி பிறகு 8.30 மணிக்கு பிறகுதான் வாக்குப்பதிவு துவங்கியது.
அதே போல் சிட்கோ நகரில் உள்ள அரசினர் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் வாக்குப்பதிவு துவங்கியதும் அங்கிருந்த வாக்குச்சாவடியில் இருந்த ஒரு எந்திரம் பழுதடைந்து இதனால் ஒரு மணி நேரம் கால தாமதமானதாக இங்கிருந்த மக்கள் தெரிவித்தனர்.
கொளத்தூர் தொகுதிக்குட்பட்ட ஸ்ரீனிவாச நகர் சென்னை துவக்கப்பள்ளி மற்றும் டான்போஸ்கோ பள்ளிகளில் உள்ள வாக்குச்சாவடிகளில் வாக்காளர்கள் பலருக்கு வாக்கில்லை என திருப்பி அனுப்பப்பட்டதாக புகார் தெரிவித்தனர். கடந்த ஜூலை மாதம் வழங்கப்பட்ட வாக்காளர் அடையாள அட்டையை காட்டிய பின்னரும், புதிதாக வெளியிடப்பட்ட லிஸ்ட்டில் பெயர் இல்லாததால் வாக்களிக்க முடியாது என மறுத்துவிட்டனராம்.
இதுபோல் சென்னை நகர் முழுவதும் பல இடங்களில் வாக்காளர்கள் தங்களது பழைய வாக்காளர் அட்டையை காட்டியபின்னரும் வாக்களிக்க அனுமதிக்கவில்லை. இதனால், பலர் ஆர்வமாக வாக்களிக்க வந்து, ஓட்டுப்போட முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பினர்.
மேலும் ஒருசிலர் கூறும்போது, புதிய வாக்காளர் அட்டை வழங்கும்படி விண்ணப்பித்ததில் சிலருக்கு புதிய அட்டை கிடைத்துள்ளது, சிலருக்கு கிடைக்கவில்லை என கூறினர். அதிலும் குறிப்பாக ஒரே குடும்பத்தில் 2,3 பேருக்கு விண்ணப்பித்தபோது அதில் ஒருவருக்கு மட்டும் தரப்பட்டுள்ளது. மற்றவர்களுக்கு தரப்படவில்லை என்றனர்.
இளம் தலைமுறை வாக்காளர்கள் பலர் முதன்முதலாக வாக்களிப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது என்றனர். கென்னடி சதுக்கத்தில் உள்ள பாலாஜி வித்யாஸ்ரம் பள்ளியில் போலீஸ் பாதுகாப்பு அறவே இல்லை. பெயரளவுக்கு ஒரு பெண் காவலரும், ஊர்க்காவல் படை வீரர் ஒருவரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
ஆனால், அதே சமயத்தில் பதட்டம் நிறைந்த வாக்குச்சாவடிகள் என எதிர்பார்க்கப்பட்ட அனைத்திலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. தமிழக போலீசாருடன் மத்திய ரிசர்வ் போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்ததால், பெரிய அளவில் அசம்பாவிதம் ஏதும் ஏற்படாமல் தேர்தல் மிக அமைதியாகவே நடைபெற்றது.
தேர்தல் கமிஷனின் கடும் கட்டுப்பாட்டாலும், பலத்த போலீஸ் பாதுகாப்பாலும், பொதுமக்களில் பலர் திருப்தி அடைந்து வாக்களிக்க பெருமளவில் வாக்குச்சாவடிகளுக்கு வந்திருந்ததை நேரடியாக காண முடிந்தது. அதிலும் இதுவரை தேர்தலில் அவ்வளவாக கவனம் செலுத்தாக பணக்காரர்கள் கூட, தங்களது கார்களில் வாக்குச்சாவடிகளுக்கு வந்து பல மணி நேரம் கொளுத்தும் வெயிலிலும் காத்திருந்து வாக்களித்தது, தமிழகத்தில் வாக்காளர் மத்தியில் ஒரு பெரிய விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளதை உணர முடிந்தது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 9 months 1 week ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 9 months 2 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 10 months 1 week ago |
-
தொடர் மழை, வெள்ளம்: அமெரிக்காவில் 13 பேர் பலி
05 Jul 2025நியூயார்க் : அமெரிக்காவில் தொடர் மழை வெள்ளத்தில் இதுவரை 13 பேர் உயிரிழந்துள்ளனர்.
-
மொஹரம் பண்டிகை: வரும் 7-ம் தேதி அரசு விடுமுறை என பரவும் தகவலுக்கு மறுப்பு
05 Jul 2025சென்னை, மொஹரம் பண்டிகை ஜூலை 6-ம் தேதிதான் என்றும், இந்தப் பண்டிகையை முன்னிட்டு ஜூலை 7, 2025 (திங்கட்கிழமை) அரசு விடுமுறை என்ற தகவல் தவறானது என்றும் தமிழக அரசின் உண்மை ச
-
தி.மு.க.வுக்கு ஆதரவு எப்படி? 3 தொகுதிகளின் நிர்வாகிகளுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை
05 Jul 2025சென்னை, பட்டுக்கோட்டை, பாபநாசம், மணப்பாறை 3 சட்டப்பேரவை தொகுதிகளின் நிர்வாகிகளுடன் தி.மு.க. தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.
-
அரசு மருத்துவ கல்லூரி டீன் நியமனம்: தனி நீதிபதியின் உத்தரவை உறுதி செய்தது ஐகோர்ட்
05 Jul 2025சென்னை, அரசு மருத்துவ கல்லூரி டீன் நியமனம் தொடர்பாக, தனி நீதிபதியின் உத்தரவை சென்னை ஐகோர்ட் உறுதி செய்துள்ளது.
-
அ.தி.மு.க. கூட்டணிக்கு வருமாறு விஜய்க்கு மறைமுக அழைப்பு விடுத்த எடப்பாடி பழனிசாமி
05 Jul 2025சென்னை, தி.மு.க. ஆட்சியை அகற்ற நினைப்பவர்களுடன் கூட்டணி அமைப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம் என எடப்பாடி பழனிசாமி கூறினார்.
-
வரும் 8-ம் தேதி ராமதாஸ் தலைமையில் பா.ம.க. செயற்குழு கூட்டம்
05 Jul 2025திண்டிவனம், பா.ம.க. செயற்குழு கூட்டம் வரும் 8ம் தேதி நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
சர்வதேச ஸ்கேட்டிங் போட்டியில் தங்கம்: தூத்துக்குடி மாணவிக்கு துணை முதல்வர் வாழ்த்து
05 Jul 2025சென்னை, சர்வதேச ஸ்கேட்டிங் போட்டியில் வெற்றி பெற்ற தூத்துக்குடி மாணவிக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார்.
-
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து மேலும் அதிகரிப்பு
05 Jul 2025தர்மபுரி : ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்தனை முன்னிட்டு சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
-
காசாவில் 613 பாலஸ்தீனியர்கள் கொலை: ஐ.நா. குற்றச்சாட்டு
05 Jul 2025வாஷிங்டன் : கடந்த மே மாதத்தில் இருந்து காசாவில் நிவாரண உதவி பெற முயன்ற 613 பாலஸ்தீனியர்கள் கொலை செய்யப்பட்டுள்ளதாக ஐ.நா. தெரிவித்துள்ளது.
-
தி.மு.க. ஆட்சியின் ஆன்மீக புரட்சிக்கு ஒரு மைல்கல்: அமைச்சர் சேகர்பாபு
05 Jul 2025சென்னை, திருச்செந்தூர் கோவில் குடமுழுக்கு விழா தி.மு.க. ஆட்சியின் ஆன்மீக புரட்சிக்கு ஒரு மைல்கல் என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.
-
புதிய வரி விகிதம் ஆகஸ்ட் 1 முதல் அமல்: 12 நாடுகளுக்கான வரி கடிதத்தில் கையெழுத்திட்டார் அதிபர் ட்ரம்ப்
05 Jul 2025வாஷிங்டன் : வரி விகிதம் தொடர்பாக 12 நாடுகளுக்கான கடிதத்தில் தான் கையெழுத்து இட்டுவிட்டதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
-
சி.பி.எஸ்.இ. பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான விதிமுறைகள் வெளியீடு
05 Jul 2025புதுடில்லி : 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு இரண்டு முறை நடத்தப்படும் என சி.பி.எஸ்.இ. அறிவித்திருந்தது. அதற்கான தகுதி அளவுகோல் மற்றும் விதிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது.
-
'தமிழ் மாநில பகுஜன் சமாஜ்' புதிய கட்சி தொடங்கினார் பொற்கொடி ஆம்ஸ்ட்ராங்
05 Jul 2025சென்னை : தமிழ் மாநில பகுஜன் சமாஜ் கட்சியின் புதிய கட்சியை ஆம்ஸ்ட்ராங் மனைவி பொற்கொடி தொடங்கியுள்ளார்.
-
ஆயுர்வேத மருந்துகளுக்கு இறக்குமதி உரிமம் கட்டாயம்: சென்னை ஐகோர்ட்
05 Jul 2025சென்னை : ஆயுர்வேத மருந்துகளுக்கு இறக்குமதி உரிமம் கட்டாயம் பெற வேண்டும் என்று ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
-
உ.பி., யில் சோகம்: கல்லூரி சுவரில் கார் மோதி மணமகன் உட்பட 8 பேர் பலி
05 Jul 2025லக்னோ, உத்தரபிரதேச மாநிலத்தில் கல்லூரி வளாக சுவரில் கார் மோதிய விபத்தில் மணமகன் உட்பட 8 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
-
விஜய் கட்சியிலிருந்து பிரசாந்த் கிஷோர் திடீர் விலகல்
05 Jul 2025சென்னை, விஜய் கட்சிக்கு தேர்தல் ஆலோசனை வழங்கும் பொறுப்பை ஏற்றிருந்த பிரசாந்த் கிஷோர், அதில் இருந்து விலகிக் கொண்டுள்ளார்.
-
புத்தமத தலைவர் தலாய் லாமா 40 ஆண்டுகள் வாழ விருப்பம்
05 Jul 2025தர்மசாலா : சீனாவின் புத்தமத தலைவர் தலாய் லாமா இன்னும் 40 ஆணடுகளுக்கு மேல் வாழ ஆசைப்படுகிறேன் என்று கூறியுள்ளார்
-
நானே முதல்வர் வேட்பாளர்: அ.தி.மு.க. தலைமையில்தான் கூட்டணி; எடப்பாடி பழனிசாமி மீண்டும் உறுதி
05 Jul 2025சென்னை, 2026 தேர்தலில் அ.தி.மு.க. - பா.ஜ.க. கூட்டணியில் நானே முதல்வர் வேட்பாளர் என்று அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
-
இந்தித் திணிப்புக்கு எதிராக மத்திய பா.ஜ.க. அரசுக்கு மறக்க முடியாத பாடத்தை தமிழ்நாடு மீண்டும் கற்பிக்கும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் காட்டம்
05 Jul 2025சென்னை, தமிழுக்கும் தமிழ்நாட்டுக்கும் பா.ஜ.க. செய்துவரும் துரோகத்துக்கு பா.ஜ.க. பரிகாரம் தேட வேண்டும்.
-
வங்கி மோசடி வழக்கு; நீரவ் மோடியின் சகோதரர் கைது
05 Jul 2025வாஷிங்டன் : பஞ்சாப் நேஷனல் வங்கியில் பல ஆயிரம் கோடி மோசடி செய்த நீரவ் மோடியின் சகோதரர் நேஹல் மோடி அமெரிக்காவில் கைது செய்யப்பட்டார்.
-
சிறுமி பாலியல் வன்கொடுமை: இங்கிலாந்தில் இந்திய வம்சாவளி இளைஞருக்கு ஆயுள் தண்டனை
05 Jul 2025லண்டன் : இங்கிலாந்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் இந்திய வம்சாவளி இளைஞருக்கு ஆயுள் தண்டனை அறிவிக்கப்பட்டுள்ளது.
-
போர்நிறுத்தம் குறித்து ஹமாஸின் அறிவிப்பால் மகிழ்ச்சி
05 Jul 2025டெல் அவிவ் : காஸாவில் போர்நிறுத்தம் குறித்த வரைவுக்கு பதிலளித்துள்ளதாக ஹமாஸ் அறிவித்துள்ளது.
-
வரும் 2026 சட்டசபை தேர்தலில் அதி.மு.க. கூட்டணி வெற்றி பெற்று பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கும்: எடப்பாடி பழனிசாமி உறுதி
05 Jul 2025சென்னை, 2026 தேர்தலில் அதி.மு.க. கூட்டணி வெற்றிபெற்று பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கும் என அதி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
-
ஜார்க்கண்ட் சுரங்க விபத்தில் 4 பேர் பலி
05 Jul 2025ராஞ்சி, ஜார்க்கண்ட் நிலக்கரி சுரங்க விபத்தில் 4 பேர் பலியாகியுள்ளனர்.
-
ஜாமீன் கோரி சென்னை ஐகோர்ட்டில் நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணா மனு
05 Jul 2025சென்னை, போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணா ஆகியோர் சென்னை ஐகோர்ட்டில் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்துள்ளனர்.