எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, ஏப்.18 - தன்னிச்சையான செயல்பாடு காரணமாக தங்கபாலுவின் பதவி பறிபோகிறது. தமிழக காங்கிரஸ் என்றாலே கோஷ்டி பூசல், அடிதடி, அறிக்கை போர் என்று எல்லாம் நடக்கும். தமிழக காங்கிரஸ் வரலாற்றிலேயே நகைப்புக்குரிய ஒரு தலைவர் இருந்தது கிடையாது. காமராஜர் முதல் பல்வேறு தலைவர்கள் இருந்த தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் பதவியில் தனது மனைவிக்கு ஓட்டு இருப்பது கூட தெரியாத ஒரு தலைவர் தமிழ்நாட்டில் உள்ளார் என்றால் அது தங்கபாலுவாகத்தான் இருக்க முடியும்.
கூட்டணி கட்சி என்ற முறையில் நட்பு பாராட்டுவது நாகரீகம். ஆனால், கூட்டணி கட்சியான தி.மு.க.விலேயே ஒரு கோஷ்டி தலைவராக மாறியது தான் தங்கபாலுவின் சாதனை.
5 ஆண்டுகால தி.மு.க. ஆட்சியில் ஒட்டி உறவாடி மக்களைப்பற்றி கவலைப்படாத தங்கபாலு, தி.மு.க. தலைமையின் மூலம் தனது தலைவர் பதவியை காப்பாற்றிக்கொள்வதில் குறியாக இருந்தார். தமிழக காங்கிரசின் எந்த கோஷ்டியும் தங்கபாலுவை கண்டு கொண்டதில்லை. ஆனாலும் தங்கபாலுதான் தலைவர்.
சட்டசபை தேர்தல் அறிவிக்கப்பட்டவுடன் தங்கபாலு தனது செல்வாக்கை பயன்படுத்தி கூட்டணி பற்றி பேசப்பட்ட ஐவர் குழுவில் பிரச்சனைக்குரிய இளங்கோவன் போன்றோரை இடம்பெறாமல் செய்தார்.
பின்பு, தி.மு.க.வுடன் நடத்திய பேச்சுவார்த்தை இழுபறி நடந்தபோது தி.மு.க.வை ஊழல்கட்சி என்று விமர்சித்தார். மறுநாள் சேர்ந்தவுடன் வெற்றி கூட்டணி என்றார். கூட்டணியில் 63 தொகுதிகள் முடிவானதும் வேட்பாளர் ஒதுக்குவதில் ஐவர் குழுவை கலந்தாலோசிக்காமல் தனியொருவராக 63 தொகுதிகளில் வேட்பாளர் தேர்வு செய்தார். இவரது பட்டியலை நிராகரிக்க வேண்டுமென்று சிதம்பரம், ஜி.கே.வாசன், இளங்கோவன் உள்ளிட்டோர் சோனியாவிடம் முறையிட்டனர்.
ஆனாலும், தங்கபாலுவின் பட்டியல் வெளியானது. அதன்பிறகு தான் தமிழக காங்கிரஸில் வெட்டு, குத்து அதிகமானது. போட்டி வேட்பாளர்கள், மோதல், மறியல், கொடும்பாவி எரிப்பு என தொடர்ந்தது. தேர்தல் முழுதும் இந்த போராட்டங்கள் தொடர்ந்து, வாக்குப்பதிவு வரையும் கூட நீடித்தது. இதனால் காங்கிரஸ் 63 தொகுதிகளிலும் எதிர்க்கட்சி வேட்பாளர்களுடன் தனது கட்சிக்குள் உள்ள போட்டி வேட்பாளர்களுடன் சேர்ந்து தேர்தலை சந்தித்தது.
தங்கபாலு இன்னும் ஒருபடி மேலே போய், தனது மனைவியை மயிலாப்பூர் தொகுதி வேட்பாளராக்கினார். டம்மி வேட்பாளராக காங்கிரஸ் கட்சியின் தலைவரான தன் பெயரையே முன்மொழிந்துகொண்டார். மனைவியின் படிவத்தை சரிவர நிரப்பாததால் தள்ளுபடி ஆகி, டம்மி வேட்பாளர் தங்கபாலு காங்கிரஸ் வேட்பாளரானார். இதே போல் கிருஷ்ணகிரி மற்றும் விளவங்கோடு தொகுதிகளிலும் வேட்பாளர் தேர்வில் ஏகப்பட்ட குழப்பம். ஒரு தலைவர் சட்டசபை தேர்தலில் நிற்கலாமா என்ற சர்ச்சை எழுந்தது.
தேர்தல் பிரச்சாரத்தில் சிதம்பரம், வாசன், இளங்கோவனின் பங்கு சொல்லிக்கொள்ளும்படி இல்லை. இந்நிலையில் தேர்தல் முடிந்தவுடன் அதிரடியாக கராத்தே தியாகராஜன் உள்பட 18 பேர்களை காங்கிரஸ் கட்சியை விட்டு தங்கபாலு நீக்கினார்.
இது கட்சி விரோத செயல். நீக்குவதற்கு தங்கபாலுக்கு உரிமை இல்லை என்று அனைவரும் குரல் கொடுத்தனர். நீக்கப்பட்டவர்களில் வாசன், சிதம்பரம், இளங்கோவன் கோஷ்டியை சேர்ந்தவர்கள் இருந்தனர். ஐவர்குழுவில் இருந்த ஜெயக்குமார் எம்.எல்.ஏ. கட்சி விதிகளை காரணம் காட்டி தங்கபாலு கட்சி விரோத செயல்களில் ஈடுபடுகிறார். யாரையும் நீக்க தங்கபாலுக்கு உரிமையில்லை. வேட்பாளர் தேர்விலும் தங்கபாலு தன்னிச்சையாக செயல்பட்டார் என்று குற்றம் சாட்டினார்.
தமிழக காங்கிரஸ் தி.மு.க.விடம் 63 இடங்களை போராடி பெற்றது. அதை ஒழுங்காக அறுவடை செய்யாமல் வேட்பாளர் தேர்வில் ஏகப்பட்ட குளறுபடி செய்ததால் காங்கிரஸ் தமிழ்நாட்டில் 8 இடங்கள் பெற்றால் பெரிய விஷயம் என்ற செய்தி சோனியாகாந்தி வரை எடுத்து சொல்லப்பட்டு இருப்பதால் தங்கபாலுவை நீக்கும் முடிவுக்கு சோனியா வந்துவிட்டாராம்.
தேர்தல் முடிவும் தி.மு.க. காங்கிரஸ் கூட்டணிக்கு எதிராக அமையும் என்பதால் இனியும் தி.மு.க.வை கூட்டணியில் வைத்துக்கொள்ள சோனியா விரும்பவில்லை. ஆகவே, மற்றவர்களும் ஏற்றுக்கொள்ளும் ஒரு தலைவர் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சிக்கு வரலாம். அது ஜி.கே.வாசன் அல்லது சுதர்சன நாச்சியப்பனாக இருக்கலாம் என்ற கருத்து காங்கிரசுக்குள் ஓடுகிறது.
எது எப்படி இருந்தாலும் தங்கபாலுவுக்கு கல்தா உறுதி என்று காங்கிரஸ் வட்டாரங்களில் பேச்சு பலமாக உள்ளது. உடனே அறிவிப்பு வெளிவரும் என்று அனைவரும் எதிர்பார்க்கின்றனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 4 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் –18-01-2026
18 Jan 2026 -
எஸ்.ஐ.ஆர். பணிகளுக்குப்பின் கேரளாவில் தலைமை தேர்தல் அதிகாரி கேல்கர் பெயர் நீக்கப்பட்டதால் அதிர்ச்சி!
18 Jan 2026திருவனந்தபுரம், கேரளாவில் எஸ்.ஐ.ஆர்.
-
ஈரோடு மாவட்டம் வெள்ளோட்டில் காலிங்கராயரின் சிலையை திறந்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
18 Jan 2026ஈரோடு, ஈரோடு மாவட்டம் வெள்ளோட்டில் நதிநீர் இணைப்பின் முன்னோடி என போற்றப்படும் காலிங்கராயர் சிலையை காணொலி காட்சி மூலம் முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
-
யாரையும் கஷ்டப்படுத்த சொல்லவில்லை: தன் மீதான குற்றச்சாட்டுகளுக்கு விளக்கமளித்த ஏ.ஆர்.ரஹ்மான்
18 Jan 2026சென்னை, இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் தன் மீதான சமீபத்திய குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளிக்கும் வகையில் வீடியோ வெளியிட்டுள்ளார்.
-
உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதி: அமைச்சர் துரைமுருகனை நேரில் சந்தித்து நலம் விசாரித்த முதல்வர்
18 Jan 2026சென்னை, உடல்நல குறைவு ஏற்பட்டதால் அமைச்சர் துரைமுருகன், சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
-
தமிழ்நாட்டில் ஒரு சில இடங்களில் வரும் 24-ம் தேதி மழைக்கு வாய்ப்பு
18 Jan 2026தமிழ்நாட்டில் ஒரு சில இடங்களில் வரும் 24-ம் தேதி மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
-
ஓசூர் விமான நிலைய திட்டம்: ஒப்புதல் அளிக்க மத்திய அரசு மறுப்பு
18 Jan 2026டெல்லி, ஓசூர் சர்வதேச விமான நிலையத் திட்டத்திற்கு மத்திய பாதுகாப்பு அமைச்சகம் மீண்டும் ஒப்புதல் அளிக்க மறுத்துள்ளது, இது, தமிழக அரசியல் மற்றும் தொழில் வட்டாரத்தில் பெரு
-
டெல்லி சி.பி.ஐ. அலுவலகத்தில் இன்று நேரில் ஆஜராகிறார் விஜய்
18 Jan 2026சென்னை, கரூர் கூட்ட நெரிசல் விசாரணை தொடர்பாக டெல்லி சி.பி.ஐ. அலுவலகத்தில் விஜய் இன்று மீண்டும் நேரில் ஆஜராகிறார்.
-
அசாமில் ரூ.6,957 கோடி மதிப்பிலான மேம்பாலப்பணிகளுக்கு பிரதமர் மோடி அடிக்கல்
18 Jan 2026அசாம் மாநிலத்தின் நாகோன் மாவட்டத்தில் நடந்த அரசு நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரதமர் மோடி, 6 ஆயிரத்து 957 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைய உள்ள சாலை மேம்பாலப்பணிகளுக்கு பிரதமர
-
காற்றின் தரத்தை அறிய மாநகராட்சி நடவடிக்கை: சென்னையில் 100 இடங்களில் டிஜிட்டல் பலகைகள் அமைப்பு
18 Jan 2026சென்னை, சென்னையில் காற்றின் தரத்தை உடனுக்குடன் அறிந்து கொள்வதற்காக 100 முக்கிய இடங்களில் டிஜிட்டல் பலகைகளை அமைக்க சென்னை மாநகராட்சி நடவடிக்கை எடுத்துள்ளது.
-
மக்கள் நலத்திட்டங்களுக்கு எப்பவுமே ஒரிஜினல் சொந்தக்காரங்க நாங்கதான்: அ.இ.அ.தி.மு.க. அறிக்கை
18 Jan 2026சென்னை, மக்கள் நலத்திட்டங்களுக்கு எப்பவுமே ஒரிஜினல் சொந்தக்காரங்க நாங்கதான் என்று தி.மு.க. அமைச்சர்களின் விமர்சனங்களுக்கு பதிலளக்கும் விதமாக அ.இ.அ.தி.மு.க.
-
தமிழகத்திற்கான உரிய நிதியை வழங்குவதில்லை: மத்திய அரசு மீது நிதியமைச்சர் : தங்கம் தென்னரசு குற்றச்சாட்டு
18 Jan 2026மத்திய அரசு தமிழகத்துக்கு உரிய நிதி பகிர்வு வழங்காத நிலையிலும், உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டங்களுக்கு முதல்வர் மு.க.
-
தி.மு.க. கூட்டணியை யாராலும், ஒருபோதும் உடைக்க முடியாது: அமைச்சர் ரகுபதி மீண்டும் திட்டவட்டம்
18 Jan 2026புதுக்கோட்டை, தி.மு.க.
-
நீலகிரியில் சோக சம்பவம்: மண் சரிவில் சிக்கிய 3 வடமாநில தொழிலாளர்கள் பரிதாபமாக பலி
18 Jan 2026நீலகிரி, நீலகிரியில் மண் சரிவில் சிக்கிய 3 வடமாநில தொழிலாளர்கள் பரிதாபமாக பலியானதை அடுத்து 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
-
த.வெ.க. தேர்தல் அறிக்கை குழு நாளை ஆலோசனைக் கூட்டம்
18 Jan 2026சென்னை, தமிழக வெற்றிக் கழகம் சார்பில் தேர்தல் அறிக்கைக் குழு நாளை (20.01.2026) செவ்வாய்க்கிழமை அன்று காலை 10.30 மணிக்கு, சென்னையில் உள்ள கழகத் தலைமை நிலையச் செயலகத்தில்
-
போட்டியின்றி தேர்வாகிறார்: பா.ஜ.க. தேசிய தலைவராக நிதின் நபினுக்கு வாய்ப்பு
18 Jan 2026டெல்லி, பா.ஜ.க. தேசிய தலைவராக போட்டியின்றி தேர்வாக நிதின் நபினுக்கு வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
பிற இந்திய மொழிகளின் சிறந்த இலக்கிய படைப்புகளுக்கு விருது முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
18 Jan 2026சென்னை, "தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஒடியா, வங்காளம் மற்றும் மராட்டிய மொழிகளில் வெளியாகின்ற தலைசிறந்த இலக்கிய படைப்புகளுக்கு தமிழ்நாடு அரசு சார்பில் ஆண்டுதோறும்
-
இந்தியா - பாகிஸ்தான் எல்லையில் ஏகே-47 துப்பாக்கிகள் கண்டெடுப்பு
18 Jan 2026சண்டிகர், இந்தியா - பாகிஸ்தான் எல்லையில் துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்கள் கண்டெடுக்கப்பட்டதாக பஞ்சாப் காவல்துறை தெரிவித்துள்ளது.
-
1,500 குழந்தைகளை காப்பாற்றிய பெண் ரயில்வே காவல் அதிகாரிக்கு மிக உயரிய சேவை விருது அறிவிப்பு
18 Jan 2026லக்னோ, உத்தரப் பிரதேசத்தில் ரயில்வே பாதுகாப்புப் படை ஆய்வாளர் சந்தனா சின்ஹாவுக்கு இந்திய ரயில்வேயின் உயரிய சேவை விருதான 'அதி விசிஷ்ட் ரயில் சேவா புரஸ்கார்' வழங்கி கவுரவ
-
வெளியூர் சென்றவர்கள் சென்னை திரும்ப தமிழ்நாடு முழுவதும் 5,192 சிறப்பு பேருந்துகள் இயக்கம்
18 Jan 2026சென்னை, பொங்கல் விடுமுறையில் வெளியூர் சென்றவர்கள் சென்னை திரும்ப வசதியாக நேற்று 5,192 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளதாக போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.
-
11-வது நாளாக தொடர்ந்த போராட்டம்: இடைநிலை ஆசிரியர்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை
18 Jan 2026சென்னை, “தி.மு.க.
-
அமெரிக்க படைகள் தாக்குதல்: சிரியாவில் அல் கொய்தா முக்கிய தலைவர் கொலை
18 Jan 2026டமாஸ்கஸ், சிரியாவின் வடமேற்குப் பகுதியில் அமெரிக்க ராணுவம் நடத்திய தாக்குதலில், டிசம்பர் மாதம் அமெரிக்க வீரர்களை கொன்ற ஐ.எஸ் பயங்கரவாதியுடன் தொடர்புடைய அல்-கொய்தாவின் ம
-
கிரீன்லாந்து விவகாரத்தில் ட்ரம்ப் முடிவு வீழ்ச்சிக்கு வழிவகுக்கும்: ஐரோப்பிய ஒன்றியம் எச்சரிக்கை
18 Jan 2026பிரஸ்ஸல்ஸ், கிரீன்லாந்து விவகாரத்தில் டொனால்ட் ட்ரம்ப் கடுமையாக நடந்து கொள்வது ஆபத்தான வீழ்ச்சிப் பாதைக்கு வழி வகுக்கும் என்று ஐரோப்ப்பிய ஒன்றியம் அவரை எச்சரித்துள்ளது.
-
வெடிகுண்டு மிரட்டல் எதிரொலி: லக்னோவில் இண்டிகோ விமானம் தரையிறக்கம்
18 Jan 2026லக்னோ, வெடிகுண்டு மிரட்டலைத் தொடர்ந்து இண்டிகோ விமானம் லக்னோவில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
-
குடியரசு தினம் எதிரொலி: சென்னை விமான நிலையத்தில் ஐந்து அடுக்கு பாதுகாப்பு அமல்
18 Jan 2026சென்னை, இந்தியாவின் 77-வது குடியரசு தின விழாவை (ஜனவரி 26, 2026) முன்னிட்டு, சென்னை சர்வதேச விமான நிலையத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.


