எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சென்னை, ஜன.19 - முதல்வர் ஜெயலலிதாவின் உத்தரவுபடி கடந்த ஆண்டை விட சன்னரக நெல்லுக்கு ஊக்கத்தொகையாக ரூ.70 உயர்த்தி குவிண்டாலுக்கு ரூ.1350 எனவும் சாதரண ரக நெல்லுக்கு ரூ.50 உயர்த்தி 1300 என வழங்கப்படும் என உணவு துறை அமைச்சர் காமராஜ் அறிவித்துள்ளார். இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியுறள்ளதாவது:-
தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா ஆணையின்படி அத்தியாவசியப் பொருள்கள் கையிருப்பு, விநியோகம் குறித்த கலந்தாய்வுக் கூட்டம் நேற்று (18.1.2013) தமிழ்நாடு நுகர் பொருள் வாணிபக் கழகம், சென்னை தலைமை அலுவலகத்தில் உணவுத் துறை அமைச்சர் இரா. காமராஜ் தலைமையில் நடைபெற்றது.
தமிழ்நாட்டில் நடப்பு 2012 -13 கரீப் நெல் கொள்முதல் பருவத்தில் பருவ மழை பொய்த்த போதிலும், தமிழகத்திற்குக் கிடைக்க வேண்டிய உரிய பங்கு தண்ணீர் கிடைக்காத நிலையிலும், குறுவை சாகுபடி முற்றிலும் நடைபெறாத நிலையிலும், சம்பா சாகுபடியும் சரிவர நடைபெறாத நிலையில் தமிழக விவசாயிகளின் நலனில் அக்கறை கொண்ட தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா விவசாயிகளின் துயர் துடைத்து, மும்முனை மின்சாரம் வழங்கி ஆழ்துளைக் கிணறுகள் மூலம் நெல் சாகுபடி செய்ய அனைத்து நடவடிக்கைககளையும் எடுக்க உத்தரவிட்டார்.
சென்ற நெல் கொள்முதல் பருவம் 2011 -12 ல் 23.82 இலட்சம் மெ.டன் நெல் கொள்முதல் செய்து 149 கோடி ரூபாய் விவசாயிகளுக்கு ஊக்கத் தொகையாக வழங்கப்பட்டது. இந்த வருடமும் முதலமைச்சர் சன்ன ரக நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.70/ம், சாதா ரக நெல்லுக்கு ரூ. 50/ம் ஊக்கத் தொகையாக விவசாயிகளுக்கு வழங்க ஆணையிட்டுள்ளார். இதன்படி சன்ன ரக நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.1350/க்கும், சாதா ரக நெல் ரூ.1300/-க்கும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் கொள்முதல் செய்யப்படும்.
காவிரியில் போதுமான தண்ணீர் இல்லாதபோதும் ஆழ்துளைக் கிணறுகள் மூலம் நெல் பயிரிட்டு அறுவடை துவங்கிய பின் வெளிச் சந்தையில் வியாபாரிகள் குறைந்த விலையில் கொள்முதல் செய்ய முற்படும்போது விவசாயிகள் தங்கள் விளைபொருள்களை குறைந்த விலையில் விற்க வேண்டிய சூழ்நிலை (க்ஷடுஙூசிஙுடீஙூஙூ ஙூஹங்டீ)உருவாவதைத் தவிர்க்கும் பொருட்டு குறைந்தபட்ச ஆதார விலையுடன் தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ள ஊக்கத் தொகையையும் சேர்த்து பெற்று பயன்பெறும் வகையில் அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படவேண்டும். மாவட்ட ஆட்சியர், மக்கள் பிரதிநிதிகள் கோரும் இடங்களில் எல்லாம் நெல் கொள்முதல் நிலையங்கள் தேவையான அளவு திறக்கப்பட வேண்டுமென அமைச்சர் அறிவுறுத்தினார்.
இது தவிர நடமாடும் நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் அனைத்து விவசாயிகள், கோயில் நிலங்கள் வசம் இருக்கும் நெல் முழுவதும் அவரவர் இடத்திலேயே கொள்முதல் செய்ய உத்தரவு வழங்கப்பட்டுள்ளது. அந்தந்த மாவட்டத்தில் உள்ள மண்டல மேலாளர் அலுவலுகத்தில் தங்கள் பெயரைப் பதிவு செய்யும் விவசாயிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் அவர்களது நெல் கொள்முதல் செய்யப்பட்டு, உரிய தொகை தலத்திலேயே வழங்கப்படும்.
இக்கூட்டத்தில் பேசிய உணவுத்துறை அமைச்சர் பொங்கல் பண்டிகைக்கு முன்பாகவே பச்சரிசி உள்ளிட்ட அனைத்து அத்தியாவசியப் பொருட்களும் மாநிலத்திலுள்ள எல்லா மாவட்ட பொது விநியோகத் திட்ட கிடங்குகளுக்கும் 100 சதவிகிதம் நகர்வு செய்யப்பட்டு, கிடங்குகளிலிருந்து நியாய விலை அங்காடிகளுக்கும் ஒதுக்கீடு முழுவதும் இயக்கம் செய்யப்பட்டு ஜனவரி மாதத்தில் இதுவரை துவரம் பருப்பு 76 சதவீதமும், உளுத்தம்பருப்பு 72 சதவீதமும், செறிவூட்டப்பட்ட பாமாயில் 78 சதவீதமும் குடும்ப அட்டைதாரர்களுக்கு சிறப்பு பொது விநியோகத் திட்டத்தின் கீழ் மானிய விலையில் வழங்கப்பட்டுள்ளது. அரிசி உள்ளிட்ட அனைத்து அத்தியாவசியப் பொருள்களும் போதுமான அளவு கையிருப்பில் உள்ளது என்று கூறினார்.
தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உத்தரவினை சிரமேற்கொண்டு தரமான பச்சரிசி உள்ளிட்ட பொங்கல் பரிசு தொகுப்பு விநியோகத்தை உணவு, கூட்டுறவு மற்றும் வருவாய்த் துறை அலுவலர்கள் அற்பணிப்பு மனப்பான்மையுடன் செயல்பட்டு சிறப்பாகச் செய்தமைக்காக அனைவரையும் பாராட்டினார்.
இக்கூட்டத்தில் உணவுத் துறை செயலர் எம்.பி. நிர்மலா, நிர்வாக இயக்குநர் எம். சந்திரசேகரன், கூட்டுறவுத் துறை கூடுதல் பதிவாளர் ஆர்.கார்த்திகேயன், டெல்டா, மற்றும் டெல்டா அல்லாத பிற மாவட்ட, மண்டல மேலாளர்கள் மற்றும் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 9 months 2 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 9 months 3 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 10 months 1 week ago |
-
தமிழகத்தில் 6 நாட்கள் மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்
07 Jul 2025சென்னை, தமிழகத்தில் வருகிற 13-ம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
ஸ்ரீகாந்த், கிருஷ்ணா ஜாமீன் மனு: உயர் நீதிமன்றம் இன்று உத்தரவு
07 Jul 2025சென்னை, போதைப் பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணாவின் ஜாமீன் மனுக்கள் மீது இன்று (ஜூலை 8) உத்தரவு பிறப்பிக்கப்படும் என சென்னை உயர் நீதி
-
இரட்டைமலை சீனிவாசன் ஏற்றிய உரிமைச் சுடரை அரசு என்றும் பாதுகாக்கும்: முதல்வர் ஸ்டாலின்
07 Jul 2025சென்னை, “திராவிடமணி இரட்டைமலை சீனிவாசன் ஏற்றிய உரிமைச் சுடரை இந்த திராவிட மாடல் அரசு என்றும் அணையாமல் பாதுகாக்கும்.” என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ள
-
அங்கன்வாடி மையங்களின் எண்ணிக்கை குறைக்கப்படாது: அமைச்சர் கீதா ஜீவன்
07 Jul 2025சென்னை, தமிழ்நாட்டில் அங்கன்வாடி மையங்களின் எண்ணிக்கை குறைக்கப்படாது என்று கீதா ஜீவன் தெரிவித்துள்ளார்.
-
திருச்செந்தூர் கேவில் கும்பாபிஷேகத்திற்கு 5 லட்சம் பேர் வருகை: அமைச்சர் தகவல்
07 Jul 2025தூத்துக்குடி, கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு திருச்செந்தூருக்கு சுமார் 5 லட்சம் பேர் வருகை தந்துள்ளனர் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
-
உலகின் கவனத்தை கவர்ந்த இந்திய பாதுகாப்புத்துறை: மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங் பெருமிதம்
07 Jul 2025புதுடில்லி, ஆபரேஷன் சிந்தூரின் மூலம் இந்திய ராணுவத்தின் வீரமும், உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ராணுவ ஆயுதங்களின் வலிமையும் நிருபிக்கப்பட்டுள்ளதாக மத்திய பாதுகாப்புத்துறை அ
-
பட்டமளிப்பு விழா மேடையில் பா.ம.க.வை விமர்சித்த அமைச்சர்
07 Jul 2025தருமபுரி : அரசு மருத்துவக் கல்லூரி பட்டமளிப்பு விழா மேடையில் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் பா.ம.க.வை விமர்சித்தது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியல் வெளியீடு : இந்தியா நிலை என்ன?
07 Jul 2025துபாய் : உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் வெளியிட்டுள்ளது.
டெஸ்ட் சாம்பியன்ஷிப்...
-
கே.என்.நேருவின் சகோதரர் மீதான சி.பி.ஐ. வழக்கு நிபந்தனையுடன் ரத்து : சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
07 Jul 2025சென்னை : தமிழக நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சர் கே.என். நேருவின் சகோதரர் ரவிச்சந்திரன் மீது சி.பி.ஐ.
-
அழுத்தமான சூழ்நிலைகளை கவிதையாய் மாற்றியவர்: தோனிக்கு முதல்வர் பிறந்தநாள் வாழ்த்து
07 Jul 2025சென்னை, “அழுத்தமான சூழ்நிலையையும் கவிதையாய் மாற்றும் தனித்துவமிக்கவர்” என்று கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனிக்கு முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ள
-
17 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 9-ம் தேதி நாடு தழுவிய 'ஸ்டிரைக்' முக்கிய தொழிற்சங்கங்கள் பங்கேற்பு
07 Jul 2025சென்னை, நாடு தழுவிய அளவில் வரும் 9-ம் தேதி நடைபெறவுள்ள நாடு தழுவிய வேலைநிறுத்தத்தில் தொ.மு.ச, சி.ஐ.டி.யு, ஏ.ஐ.டி.யு.சி உள்ளிட்ட 13 முக்கிய தொழிற்சங்கங்கள் ப
-
பிரிக்ஸ் கூட்டமைப்பு நாடுகளுக்கு கூடுதலாக 10 சதவீதம் வரி விதிப்பு: அதிபர் ட்ரம்ப் எச்சரிக்கை
07 Jul 2025வாஷிங்டன், அமெரிக்க விரோத கொள்கைகளை ஆதரிக்கும் நாடுகளுக்கு கூடுதலாக 10% வரி விதிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் எச்சரித்துள்ளார்
-
பீனிக்ஸ் திரைவிமர்சனம்
07 Jul 2025அண்ணன் கொலைக்கு பழி வாங்கும் ஒரு தம்பியின் கதை தான் பீனிக்ஸ் படத்தின் ஒரு வரிக்கதை.
-
அமெரிக்காவில் சிக்கிய காலிஸ்தான் பயங்கரவாதியை இந்தியா அழைத்து வர ஏற்பாடு
07 Jul 2025புதுடில்லி : அமெரிக்காவில் கைது செய்யப்பட்டுள்ள காலிஸ்தான் பயங்கரவாதி ஹேப்பி பாசியாவை, விரைவில் நாடு கடத்தி அழைத்து வர இருப்பதாக மத்திய அரசு வட்டாரங்கள் கூறியுள்ளன.
-
தமிழ்நாடு முழுவதும் சாலை பணிகளுக்கு ரூ.7,500 கோடி ஒதுக்கீடு
07 Jul 2025சென்னை : தமிழ்நாடு முழுவதும் சாலை, மேம்பால பணிகளை மேற்கொள்வதற்காக ரூ.7,500 கோடி ஒதுக்கீடு செய்து அரசு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
-
வரி விதிப்பு விவகாரம்: அமெரிக்காவுக்கு சீனா ஆலோசனை
07 Jul 2025பீஜிங் : நாங்கள் மோதலை விரும்பவில்லை. இது போன்ற நடவடிக்கைகள் பயனற்றவை என டிரம்பின் வரி விதிப்பு மிரட்டலுக்கு சீனா பதில் அளித்துள்ளது.
-
ரசிகர்களுக்கு நன்றி சொன்ன விஜய் ஆண்டனி
07 Jul 2025லியோ ஜான் பால் இயக்கத்தில் விஜய் ஆண்டனி, அஜய் தீசன் சமுத்திரக்கனி, பிரிகிடா தீப்ஷிகா உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த ஜூன் 27 அன்று வெளியான படம் மார்கன்.
-
டெக்சாஸ் கனமழை, வெள்ளம்: பலிஎண்ணிக்கை 82 ஆக உயர்வு; பேரிடராக அறிவித்தார் ட்ரம்ப்
07 Jul 2025டெக்சாஸ் : டெக்சாஸ் மாகாணத்தில் கனமழையால் பலி எண்ணிக்கை உயர்ந்து வரும் வேளையில், அதை இயற்கை பேரிடராக அந்நாட்டு அதிபர் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
-
ஜுராசிக் பார்க் ரீபெர்த் விமர்சனம்
07 Jul 2025ஜுராசிக் பார்க் இதுவரை 2 அத்தியாயம் முடிந்து தற்போது மூன்றாவது அத்தியாயம் வெளியாகியுள்ளது.
-
அமெரிக்காவின் கூடுதல் வரி விதிப்பு: 'பிரிக்ஸ்' கண்டனம்
07 Jul 2025ரியோ டி ஜெனிரோ, அமெரிக்காவின் கூடுதல் வரி விதிப்புகள் பெரும் கவலைகளை ஏற்படுத்தி இருப்பதாகவும், பொருளாதார ரீதியில் நிச்சயமற்ற தன்மையை உருவாக்குவதாகவும் பிரிக்ஸ் நாடுகளின
-
33-வது பருவநிலை மாற்ற மாநாட்டிற்கு இந்தியா தலைமை 'பிரிக்ஸ்' நாடுகள் கூட்டறிக்கை
07 Jul 2025ரியோ டி ஜெனீரோ : பிரேசில் நாட்டின் ரியோ டி ஜெனீரோ நகரில், 17-வது பிரிக்ஸ் உச்சி மாநாடு நடைபெறுகிறது.
-
தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினார்:விவசாயிகள், மக்களுடன் எப்போதும் அ.தி.மு.க. இருக்கும்: இ.பி.எஸ். பேச்சு
07 Jul 2025கோவை, “அ.தி.மு.க. அரசாங்கம் எப்போதும் விவசாயிகள் உடன்; மக்கள் உடன் இருக்கும் என கோவையில் நடந்த விவசாயிகளுடனான கலந்துரையாடல் கூட்டத்தில் அ.தி.மு.க.
-
16 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற்றது: திருச்செந்தூர் கோவில் மகா கும்பாபிஷேகம் கோலாகலம்
07 Jul 2025திருச்செந்தூர், 16 ஆண்டுகளுக்கு பிறகு திருச்செந்தூர் கோவில் மகா கும்பாபிஷேகம் நேற்று கோலாகலமாக நடைபெற்றது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.
-
மணிப்பூரில் 5 தீவிரவாதிகள் கைது
07 Jul 2025மணிப்பூர் : மணிப்பூரில் தடைசெய்யப்பட்ட அமைப்புகளைச் சேர்ந்த 5 தீவிரவாதிகளை பாதுகாப்புப்படையினர் கைது செய்துள்ளனர்.
-
அமெரிக்காவில் 3-வது கட்சியா..? - அதிபர் ட்ரம்ப் கடும் விமர்சனம்
07 Jul 2025வாஷிங்டன் : அமெரிக்காவில் 3வது கட்சியை தொடங்குவது அபத்தம் என தொழிலதிபர் எலான் மஸ்க் கட்சி தொடங்கியது குறித்து அதிபர் ட்ரம்ப் விமர்சனம் செய்துள்ளார்.