இந்திய மத்திய வங்கியில் உள்ள 'தொழிற்பழகுநர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சென்னை, ஜன.20 - மருத்துவக் கல்லூரிகள் மேம்பாட்டிற்கு முதல்வர் ஜெயலலிதா நிதி ஒதுக்கீடு செய்துள்ளார். நலமான நாடே வளமான நாடாகும். மக்கள் நல்வாழ்வு என்பது ஒரு சமுதாயத்தின் அனைத்து வளர்ச்சியிலும் முக்கிய பங்கு வகிக்கிறது. நாட்டின் ஒட்டு மொத்த வளர்ச்சிக்கு அடித்தளமாக அமைவது மக்களின் ஆரோக்கியமாகும். நோயற்ற வாழ்வாகிய குறைவற்ற செல்வத்தை அனைவரும் பெற வேண்டும் என்பதன் அடிப்படையில், தமிழகத்தில் ஏழை எளிய மக்கள் அனைவருக்கும் உயர்தர மருத்துவ சிகிச்சை கிடைக்கும் வகையில் பல்வேறு திட்டங்களை தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான அரசு செயல்படுத்தி வருகிறது.
நகர்ப்புற மக்களுக்கு இணையாக கிராமப்புற மக்களுக்கும் மருத்துவ வசதி கிடைக்கச் செய்யவேண்டும் என்ற உன்னத நோக்கத்துடன், கிராமப்புறங்களில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள் தரம் உயர்த்தப்பட்டு, அவசர மகப்பேறு, அறுவை சிகிச்சை போன்றவற்றிற்குத் தேவையான அனைத்து உபகரணங்களும் அளிக்கப்பட்டுள்ளன. இது மட்டுமல்லாமல் தமிழகத்தில் பல்வேறு மருத்துவ நிலையங்களுக்கு புதிய கட்டடங்கள் கட்டுதல், பழுதுபார்த்தல், புதிய மருத்துவ நிலையங்கள் ஏற்படுத்துதல் போன்ற பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
மேலும் பல் மருத்துவத்திற்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில், அனைத்து மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் மற்றும் 15 வட்டம் சாரா மருத்துவமனைகளில் பல் மருத்துவப் பிரிவு இயங்கி வருகின்றன. மேலும் பல் பராமரிப்பின் அவசியத்தை கிராம மக்களுக்கு உணர்த்தும் வகையில் 22 வட்டம் சாரா மருத்துவமனைகள் மற்றும் 208 ஆரம்ப சுகாதார நிலையங்களில் வாரத்திற்கு மூன்று நாட்கள் பல் மருத்துவ சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகிறது.
சென்னையில் உள்ள அரசு பல் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையை விரிவாக்கம் செய்யும் பொருட்டு 14 கோடி ரூபாய் செலவில் பல் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனைக்கென புதிய அடுக்குமாடிகள் கொண்ட கட்டடம் சமீபத்தில் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவால் திறந்து வைக்கப்பட்டது.
சென்னையிலுள்ள பல் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையை ஒரு ஒப்புயர் மையமாக தரம் உயர்த்துவதற்கு தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா ஒப்புதல் அளித்துள்ளார். இதற்காக புதிய கட்டடங்கள் கட்டுவதற்கும், புதிதாக மருத்துவக் கருவிகள் வாங்குவதற்கும் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். மேலும், மருத்துவக் கல்லூரியில் மருத்துவ மேற்படிப்புக்கான இருக்கைகளை 35-லிருந்து 58 ஆக உயர்த்தவும், 27 பல் மருத்துவ ஆசிரியர்கள், 6 மருத்துவ ஆசிரியர்கள் மற்றும் 3 மருத்துவம் சாரா பணியிடங்களை தோற்றுவிக்க அனுமதி அளித்ததுடன், இந்த பணிகளுக்காக 10 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
பாளையங்கோட்டையில் செயல்பட்டு வரும் அரசு சித்த மருத்துவக் கல்லூரியின் கட்டடங்கள் பழமையானதாகவும், போதிய உட்கட்டமைப்பு வசதிகள் இன்றியும் உள்ளன. இதனால் இங்கு பயிலும் மாணவ, மாணவியர்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர். எனவே, இக்கல்லூரி வளாகத்தில் 5 கோடி ரூபாய் செலவில் 7681 சதுர அடியில் 3 நிலைகள் கொண்ட அடுக்குமாடி கட்டடம் கட்ட தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இந்த அடுக்குமாடி கட்டடத்தில் தரைதளத்தில் நிர்வாக அலுவலகமும், முதல் தளத்தில் உடற்கூறு ஆய்வுக் கூடம் மற்றும் வகுப்பறையும், இரண்டாம் தளத்தில் நுண்ணுயிரியல் ஆய்வுக் கூடம் மற்றும் வகுப்பறையும், மூன்றாம் தளத்தில் தேர்வு கூடம் மற்றும் அவைகூடம் ஆகியவைகள் இடம் பெறும்.
திருநெல்வேலி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் போடப்பட்டுள்ள ஆழ்துளை கிணறுகள் வறண்டுவிட்டன. திருநெல்வேலி மாநகராட்சி வழங்கும் தண்ணீர் போதுமானதாக இல்லை. எனவே திருநெல்வேலி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு தங்கு தடையின்றி தண்ணீர் கிடைத்திட தாமிரபரணி ஆற்றிலிருந்து நேரடியாக மருத்துவமனைக்கு தண்ணீர் வழங்கிடும் திட்டத்திற்கு 6 கோடியே 55 லட்சம் ரூபாயும் மற்றும் ஆண்டுதோறும் பராமரிப்பு செலவுக்கு 12 லட்சத்து 37ஆயிரம் ரூபாயும் நிதி ஒதுக்கீடு செய்து தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியில் உள்ள வெள்ளி விழா அரங்கத்தை புதுப்பிக்கும் பணிகளுக்கு 1 கோடியே 90 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
தற்போதைய உலகம் போட்டிகள் நிறைந்த உலகம். இத்தகைய சூழ்நிலையை எதிர் கொள்ள இயலாமையினாலும் மற்றும் குடும்ப சூழ்நிலைக் காரணமாகவும் மனதளவில் பாதிக்கப்படும் வளர் இளம் பருவத்தினரின் பிரச்சினைகளை கண்டறிந்து, அவர்களுடன் கலந்துபேசி, அவற்றை தீர்ப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்க மாவட்டத்திற்கு
ஒரு மனவள ஆலோசனை மையம் என்று 31 மாவட்டங்களிலும், சென்னையில் 3 மையங்கள் என 34 ஆலோசனை மையங்களை ஏற்படுத்த 2 கோடியே 51 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கீரை ஆம்லெட்![]() 1 day 18 hours ago |
உருளை கிழங்கு புட்டு![]() 5 days 18 hours ago |
தயிர் உருளைக்கிழங்கு![]() 1 week 1 day ago |
-
பேச்சுவார்த்தைக்காக சீனாவுக்கு உக்ரைன் அதிபர் அழைப்பு
23 Mar 2023உக்ரைன் - ரஷ்யா போரில் அமைதி ஏற்பட பேச்சுவார்த்தைக்காக சீனாவுக்கு அழைப்பு விடுத்துள்ளோம் என்று உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம்-23-03-2023.
23 Mar 2023 -
தமிழை வழக்காடு மொழியாக்க வேண்டும் என்ற தமிழக அரசின் கோரிக்கையை நிராகரித்தது சுப்ரீம் கோர்ட் பாராளுமன்றத்தில் மத்திய அரசு தகவல்
23 Mar 2023புதுடெல்லி: சென்னை ஐகோர்ட்டில் தமிழை வழக்காடு மொழியாக அறிவிக்க வேண்டும் என்ற தமிழக அரசின் கோரிக்கையை சுப்ரீம் கோர்ட் நிராகரித்துள்ளது என்று பாராளுமன்றத்தில் மத்திய அரசு
-
இன்று முதல் ரமலான் நோன்பு தொடக்கம்: அரசு தலைமை காஜி அறிவிப்பு
23 Mar 2023ஆண்டுதோறும் ரமலான் பிறைதொடங்கிய நாளில் இருந்து இஸ்லாமியர்கள் நோன்பு நோற்பார்கள். ரமலான் மாத இறுதி நாளில் ரமலான் பண்டிகை கொண்டாடப்படுகிறது.
-
உக்ரைன் மீது ரஷ்யா நடத்திய டிரோன் தாக்குதலில் 10 பேர் பலி
23 Mar 2023உக்ரைன் மீது ரஷ்யா நடத்திய டிரோன் தாக்குதலில் 10 பேர் பலியாகினர்.
-
ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா தாக்கல்: மனசாட்சியை உறங்க வைத்து விட்டு ஆட்சி நடத்த முடியாது சட்டசபையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
23 Mar 2023சென்னை: மனசாட்சியை உறங்க வைத்து விட்டு எங்களால் ஆட்சி நடத்த முடியாது என்று ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவை தாக்கல் செய்து முதல்வர் பேசினார்.
-
தங்க, வைர நகைகளை பறிகொடுத்த ஐஸ்வர்யாவின் பினாமி நான் எனக்கூறி கணவரையே ஏமாற்றிய பணிப்பெண்: விசாரணையில் மேலும் திடுக்கிடும் தகவல்கள்
23 Mar 2023நடிகர் ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யா வீட்டில் திருடியதாக பெண் பணியாளர் ஈஸ்வரி, ஓட்டுனர் வெங்கடேசன் ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
-
சென்னை, கோவை, ஓசூரில் டெக் சிட்டி அமைக்கப்படும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
23 Mar 2023சென்னை, கோயம்புத்தூர் மற்றும் ஓசூர் ஆகிய பகுதிகளிலே டெக் சிட்டி என்று அழைக்கப்படும் தமிழ்நாடு தொழில்நுட்ப நகரங்களைத் தமிழ்நாடு அரசு தொடங்கவுள்ளதாக முதல்வர் மு.க.
-
நிதி மோசடி வழக்கு: இம்ரான்கானின் ஜாமீனை ரத்து செய்ய கோர்ட்டு மறுப்பு
23 Mar 2023நிதி மோசடி வழக்கில் இம்ரான்கானின் ஜாமீனை ரத்து செய்ய கோர்ட் மறுப்பு தெரிவித்துள்ளது.
-
ராகுலுக்கு தண்டனை அளிக்கப்பட்ட விவகாரம்: கே.எஸ். அழகிரி தலைமையில் கும்பகோணத்தில் ரயில் மறியல்
23 Mar 2023கும்பகோணம்: காங்கிரஸ் கட்சி எம்.பி.
-
கோயில் அறங்காவலர்களைத் தேர்வு செய்ய மாவட்டக்குழுக்கள் மே மாத இறுதிக்குள் நியமிக்கப்படும் ஐகோர்ட்டில் இந்து சமய அறநிலையத்துறை தகவல்
23 Mar 2023சென்னை: கோயில் அறங்காவலர்களைத் தேர்வு செய்வதற்கான மாவட்ட குழுக்கள் மே மாத இறுதிக்குள் நியமிக்கப்படும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் இந்து சமய அறநிலையத் துறை தகவல் தெரிவ
-
புதுச்சேரியில் ரூ.50 கோடி மதிப்பில் புதிதாக சித்த மருத்துவக் கல்லூரி முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு
23 Mar 2023புதுச்சேரி: புதுச்சேரியில் ரூ.50 கோடியில் 5 ஏக்கரில் புதிய சித்த மருத்துவக்கல்லூரி இந்த நிதியாண்டில் துவங்கப்படும் என்று முதல்வர் ரங்கசாமி அறிவித்தார்.
-
காஷ்மீரில் ‘லியோ’ படப்பிடிப்பு நிறைவு
23 Mar 2023ஜம்மு: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் ‘லியோ’ படத்தின் காஷ்மீர் ஷெட்யூல் நிறைவடைந்துள்ள நிலையில், படக்குழு சென்னை திரும்ப உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
பிரதமர் மோடி குறித்து அவதூறு பேச்சு: ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை 30 நாள் ஜாமீன் வழங்கி சூரத் நீதிமன்றம் தீர்ப்பு
23 Mar 2023சூரத்: கடந்த 2019-ம் ஆண்டு தேர்தல் பிரச்சாரத்தின்போது, பிரதமர் நரேந்திர மோடியின் பெயர் குறித்து ராகுல் காந்தி அவதூறாக பேசியது தொடர்பாக தொடரப்பட்ட அவதூறு வழக்கில், அ
-
ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா மீதான விவாதம்: ஓ.பன்னீர்செல்வம் பேசியதற்கு எடப்பாடி பழனிசாமி எதிர்ப்பு சட்டசபையில் சலசலப்பு - அ.தி.மு.க. உறுப்பினர்கள் வெளிநடப்பு
23 Mar 2023சென்னை: ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா மீதான விவாதத்தில் ஓ.பி.எஸ். பேசியதற்கு இ.பி.எஸ் எதிர்ப்பு தெரிவித்தார். மேலும் இதை தொடர்ந்து ஏற்பட்ட சலசலப்பை அடுத்து அ.தி.மு.க.
-
கல்விச் சுற்றுலா, பிற நிகழ்வுகளில் மாணவர்களின் பாதுகாப்புக்கு உரிய நடவடிக்கை அவசியம் கல்வி நிறுவனங்களுக்கு ஐகோர்ட் உத்தரவு
23 Mar 2023சென்னை: கல்விச் சுற்றுலா மற்றும் பிற நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்யும் கல்வி நிறுவனங்கள், மாணவர்களின் பாதுகாப்புக்குத் தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கவே
-
பாடகி வாணி ஜெயராம் மறைவு: தமிழக சட்டசபையில் இரங்கல்
23 Mar 2023பாடகி வாணி ஜெயராம் மறைவுக்கு தமிழக சட்டசபையில் நேற்று இரங்கல் தெரிவிக்கப்பட்டது.
-
தமிழக சட்டப்பேரவையில் ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா மீண்டும் ஒருமனதாக நிறைவேற்றம்
23 Mar 2023சென்னை: தமிழக சட்டப்பேரவையில் ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா ஒருமனதாக மீண்டும் நிறைவேற்றப்பட்டது.
-
புதுச்சேரியில் மீனவர்களுக்கான நிவாரணம் ரூ. 6,500 ஆக உயர்வு கவர்னர் தமிழிசை ஒப்புதல்
23 Mar 2023புதுச்சேரி: மீன்பிடித் தடைக்கால நிவாரணம் மற்றும் விடுமுறைக் கால நிதி உதவியை உயர்த்தி வழங்குவதற்கான கோப்பிற்கு துணை நிலை கவர்னர் ஒப்புதல் அளித்துள்ளார்.
-
கடலுக்கு மீன்பிடிக்க சென்ற ஜெகதாப்பட்டினம் மீனவர்கள் 12 பேரை கைது செய்தது இலங்கை கடற்படை
23 Mar 2023புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினத்தில் இருந்து நேற்று முன்தினம் 2 விசைப்படகுகளில் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்ற 12 மீனவர்களை இலங்கை கடற்படை நேற்று (மார்ச்.23) அதிகால
-
பட்டாசு ஆலை விபத்துகளை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஓ.பன்னீர் செல்வம் வலியுறுத்தல்
23 Mar 2023பட்டாசு ஆலைகளில் அடிக்கடி நிகழும் விபத்துகளை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முன்னாள் முதல்வர் ஓ.
-
நாட்டிலேயே முதல் முறையாக ராஜஸ்தானில் சுகாதார உரிமை மசோதா நிறைவேற்றம்
23 Mar 2023ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் நாட்டிலேயே முதல் முறையாக சுகாதார உரிமை மசோதாவை நிறைவேற்றி அனைவரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது ராஜஸ்தான்.
-
பலத்த காற்று, வெள்ளத்தில் மிதக்கும் கலிபோர்னியா: வீடுகளில் மின்சாரமின்றி தவிக்கும் மக்கள்
23 Mar 2023அமெரிக்காவின் கலிபோர்னியாவில் வீசிய பலத்த காற்று மற்றும் வெள்ளம் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
-
தேசிய டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப்: மணிகா பாத்ராவின் பி.எஸ்.பி.பி. அணியை வீழ்த்தியது தமிழ்நாடு
23 Mar 2023ஜம்மு: நடப்பு தேசிய டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் தொடரில் மகளிர் பிரிவில் மணிகா பாத்ரா இடம்பெற்று விளையாடி வரும் பெட்ரோலியம் ஸ்போர்ட்ஸ் புரோமோஷன் போர்டு (PSPB) அணியை வீ
-
தினசரி பாதிப்பு மேலும் அதிகரிப்பு- புதிதாக 1,300 பேருக்கு கொரோனா பாதிப்பு
23 Mar 2023புதுடெல்லி: கொரோனா தொற்று பாதிப்பில் இருந்து நேற்று முன்தினம் 718 பேர் உள்பட இதுவரை 4 கோடியே 41 லட்சத்து 60 ஆயிரத்து 997 பேர் குணமடைந்துள்ளனர்.