எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சென்னை, பிப்.22 - திருத்தணி ஒன்றியத்திற்கு உட்பட்ட மூன்று கிராமங்களை ஒட்டுமொத்தமாக விலைக்கு வாங்கி, அங்குள்ள மக்களை வெளியேற்றத் துடிப்பவர்களுக்கு உறுதுணையாக இருக்கின்ற திருத்தணி நகராட்சியில் நிலவும் சீர்கேடுகளுக்குக் காரணமான மைனாரிட்டி தி.மு.க. அரசைக் கண்டித்து, காஞ்சிபுரம் மேற்கு மாவட்டம் அ.தி.மு.க. சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று (22.2.2011 செவ்வாய்க் கிழமை) நடைபெறும் என்று ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
கடந்த ஐந்து ஆண்டு கால மைனாரிட்டி தி.மு.க. ஆட்சியில் ஒட்டுமொத்தமாக விளை நிலங்கள் எல்லாம் அடிமாட்டு விலைக்கு வாங்கப்பட்டு, மிகப் பெரிய வணிக நிறுவனங்களுக்கு அதிக விலைக்கு விற்கப்படுவதும், அங்குள்ள மக்கள் விரட்டியடிக்கப்படுவதும் ஆங்காங்கே பெருமளவில் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில், திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி ஒன்றியம், சீனிவாசபுரம், முஸ்லீம் நகர் மற்றும் அருந்ததிபாளையம் கிராமங்களுக்கு உட்பட்ட 160 ஏக்கர் நிலத்தை, 1 கோடியே 76 லட்சம் ரூபாய்க்கு, சென்னை, கோபாலபுரம், மூன்றாவது தெருவைச் சேர்ந்த ஒரு பெண்மணிக்கு விற்க விற்பனைப் பத்திரம் தயார் செய்யப்பட்டு, திருத்தணி சார் பதிவாளர் அலுவலகத்தில் 28.10.2010 அன்று பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, சென்னையைச் சேர்ந்தவர்கள் மேற்படி கிராமங்களுக்குச் சென்று அங்கு காலம் காலமாக தங்களுடைய பட்டா நிலத்தில் வசித்து வந்த மக்களை வெளியேறுமாறு மிரட்டியதாக கூறப்படுகிறது. இது குறித்து, சார் பதிவாளர் அலுவலகத்தை அணுகிய போது, எங்களுக்கு பத்திரப் பதிவு முக்கியம். பட்டாவின் நம்பகத்தன்மை, நிலம் யாருக்குச் சொந்தம் என்ற விசாரணையில் ஈடுபட முடியாது என்று தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. ஆனால், பதிவுத் துறைத் தலைவரோ, சீனிவாசபுரம், முஸ்லீம் நகர் மற்றும் அருந்ததிபாளையத்தில் 160 ஏக்கர் நிலம் குறித்து விற்பனை ஆவணம் ஏதும் பதிவு செய்யப்படவில்லை என்று கூறி இருக்கிறார். இது முழுப் nullசணிக்காயை சோற்றில் மறைக்கும் விதமாக அமைந்துள்ளது.
மேற்படி விற்பனையின் மூலம் 1,200 குடும்பங்களைச் சேர்ந்த 5000க்கும் மேற்பட்ட ஏழை, எளிய கிராம மக்கள் வெளியேற்றப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அண்மையில் நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை பட்ஜெட் கூட்டத் தொடரின் போது, மேற்படி பிரச்சினை குறித்து விவாதிக்க கட்சியின் சார்பில் ஒத்தி வைப்புத் தீர்மானம் கொடுக்கப்பட்டும், அதற்கு அனுமதி அளிக்கப்படவில்லை. இது குறித்து முதலமைச்சர் முதல் தாசில்தார் வரை அனைவருக்கும் புகார் மனுக்கள் அனுப்பப்பட்டும், எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதிலிருந்து மைனாரிட்டி தி.மு.க. அரசின் முதலமைச்சர் கருணாநிதியின் குடும்பத்தினருக்கு தொடர்பு இருக்கிறதோ என்ற சந்தேகம் அப்பகுதி மக்கள் மத்தியில் நிலவுகிறது. இது ஒருபுறமிருக்க, மறுபுறம் திருத்தணி நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் குடிநீnullர்ப் பஞ்சம் தலைவிரித்து ஆடுவதாகவும், அடிக்கடி மின்தடை ஏற்படுவதாகவும், துப்புறவுப் பணியாளர்கள் பற்றாக்குறை காரணமாக நகராட்சி முழுவதும் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு பலவிதமான நோய்களுக்கு பொதுமக்கள் ஆளாக்கப்பட்டு உள்ளதாகவும், நகராட்சியில் ஊழியர்கள் பற்றாக்குறை நிலவுவதாகவும், திருத்தணி நகருக்குள் உள்ளூர் பேருந்து நிலையமும், நகருக்கு வெளியே வெளியூர் பேருந்து நிலையமும் அமைக்கப்பட வேண்டும் என்ற மக்களின் கோரிக்கை தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருவதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும், திருத்தணி நகருக்கு உள்ளே வரும் தேசிய நெடுஞ்சாலையில் கட்டப்பட்டு வரும் பாலத்தை இடித்துவிட்டு வேறு பாலம் அமைக்க மைனாரிட்டி தி.மு.க. அரசு முடிவு எடுத்துள்ளதன் காரணமாக போக்குவரத்து நெரிசல் ஏற்படக்கூடிய சூழ்நிலை உருவாகி இருப்பதாகவும், நகராட்சிக்கு உட்பட்ட சாலைகள் குண்டும், குழியுமாகக் காட்சி அளிப்பதாகவும், நெசவாளர்களுக்கு கட்டுப்படியாகக் கூடிய விலை தரப்படுவதில்லை என்றும், வீட்டு வரி விதிப்பில் ஒழுங்கான நடைமுறை கடைபிடிக்கப்படுவதில்லை என்றும் தகவல்கள் வருகின்றன.
எனவே, திருத்தணி ஒன்றியத்திற்கு உட்பட்ட மூன்று கிராமங்களை ஒட்டுமொத்தமாக விலைக்கு வாங்கி, அங்குள்ள மக்களை வெளியேற்றத் துடிப்பவர்களுக்கு உறுதுணையாக இருக்கின்ற, திருத்தணி நகராட்சியில் நிலவும் சீர்கேடுகளுக்குக் காரணமான மைனாரிட்டி தி.மு.க. அரசைக் கண்டித்தும், மக்களின் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்தியும், 160 ஏக்கர் பரப்பளவு கொண்ட மூன்று கிராமங்கள் விற்பனை குறித்து உடனடியாக விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், காஞ்சிபுரம் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில், இன்று (22.2.2011 செவ்வாய்க் கிழமை) காலை 10 மணியளவில், திருத்தணி கமலா திரையரங்கம் அருகில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
இந்தக் கண்டன ஆர்ப்பாட்டம், அவைத் தலைவர் இ.மதுசூதனன் தலைமையிலும், காஞ்சிபுரம் மேற்கு மாவட்ட செயலாளர் வி. சோமசுந்தரம், மாவட்ட எம்.ஜி.ஆர். மன்றச் செயலாளர் திருத்தணி கோ. அரி, எம்.எல்.ஏ. ஆகியோர் முன்னிலையிலும் நடைபெறும்.
இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில், காஞ்சிபுரம் மேற்கு மாவட்ட நிர்வாகிகளும், எம்.ஜி.ஆர். மன்றம், ஜெ ஜெயலலிதா பேரவை, எம்.ஜி.ஆர். இளைஞர் அணி, மகளிர் அணி, மாணவர் அணி, அண்ணா தொழிற்சங்கம், வழக்கறிஞர் பிரிவு, சிறுபான்மையினர் நலப் பிரிவு, விவசாயப் பிரிவு, மீனவர் பிரிவு, மருத்துவ அணி, இலக்கிய அணி, அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணி, இளைஞர் பாசறை மற்றும் இளம் பெண்கள் பாசறை உட்பட கழகத்தின் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகளும், உள்ளாட்சி அமைப்புப் பிரதிநிதிகளும், உடன்பிறப்புகளும் பெருந்திரளான அளவில் கலந்து கொள்ள வேண்டும்.
தோழமைக் கட்சிகளைச் சேர்ந்தவர்களும் இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்வார்கள் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். மக்கள் நலனை முன் வைத்து நடைபெற உள்ள இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில், பொதுமக்கள் பெருந்திரளான அளவில் கலந்து கொண்டு ஆதரவு நல்கிட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு ஜெயலலிதா தனது அறிக்கையில் கூறியுள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 9 months 2 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 9 months 3 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 10 months 2 weeks ago |
-
தங்கம் விலை 3-வது நாளாக உயர்வு
12 Jul 2025சென்னை, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சனிக்கிழமை அதிரடியாக பவுனுக்கு ரூ.520 உயா்ந்து ரூ.73,120-க்கு விற்பனையாகிறது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 12-07-2025.
12 Jul 2025 -
சீர்கெட்டுள்ள சட்ட நடைமுறைகள்: தலைமை நீதிபதி கவாய் வேதனை
12 Jul 2025ஐதராபாத் : நம்முடைய சட்ட நடைமுறைகளில் சில திருத்தங்களை மேற்கொள்ள வேண்டிய அளவுக்கு அது சீர்கெட்டு காணப்படுகிறது என சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி பி.ஆர்.
-
3 மாதத்தில் குரூப் 4 தேர்வு முடிவு: டி.என்.பி.எஸ்.சி. தலைவர் பேட்டி
12 Jul 2025சென்னை, குரூப் 4 தேர்வு முடிவுகள் 3 மாதத்தில் வெளியிடப்படும் என டி.என்.பி.எஸ்.சி. தலைவர் தெரிவித்துள்ளார்.
-
இன்ஜின்கள் அணைக்கப்பட்டதால் விபத்து: அகமதாபாத் விமான விபத்து குறித்து முதற்கட்ட அறிக்கையில் பரபரப்பு தகவல்
12 Jul 2025புதுடெல்லி, ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானதற்கு அதன் 2 இன்ஜின்களும் அணைக்கப்பட்டதே காரணம் என்பது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
-
3.5 கோடி வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும்: பிரதமர் மோடி
12 Jul 2025புதுடெல்லி, வேலைவாய்ப்புடன் இணைக்கப்பட்ட ஊக்கத் தொகை திட்டம் தோராயமாக 3.5 கோடி வேலை வாய்ப்புகளை உருவாக்க உதவும் என்று தெரிவித்துள்ளார்.
-
வரும் 25-ம் தேதி எம்.பியாக பதவியேற்கிறார் கமல்ஹாசன்
12 Jul 2025சென்னை : மக்கள் நீதி மய்யம் தலைவா் கமல்ஹாசன் வரும் 25-ம் தேதி எம்.பியாக பதவியேற்கிறார்.
-
மதுரையில் த.வெ.க. 2-வது மாநில மாநாடு?
12 Jul 2025சென்னை : த.வெ.க. 2-வது மாநில மாநாட்டை மதுரையில் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டு்ள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
-
‘ஓரணியில் தமிழ்நாடு’ இயக்கம்: 77 லட்சத்தை தாண்டிய உறுப்பினர் சேர்க்கை: முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
12 Jul 2025சென்னை, 'ஓரணியில் தமிழ்நாடு' பரப்புரையில் இதுவரை 77,34,937 பேர் (49,11,090 புதிய உறுப்பினர்கள்) தி.மு.க.வில் தங்களை இணைத்துக் கொண்டுள்ளனர் என தி.மு.க.
-
ராசிபுரம் நகராட்சியை கண்டித்து ஆர்ப்பாட்டம்: எடப்பாடி பழனிசாமி
12 Jul 2025சென்னை, ராசிபுரம் நகராட்சியை கண்டித்து வரும் 16-ம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
-
கும்பாபிஷேகத்தை முன்னிட்டு திருப்பரங்குன்றம் தாலுகாவுக்கு 14-ம் தேதி உள்ளூர் விடுமுறை
12 Jul 2025மதுரை, கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, திருப்பரங்குன்றம் தாலுகாவுக்கு மட்டும் 14-ந்தேதி உள்ளூர் விடுமுறை விடப்படும் என மாவட்ட கலெக்டர் பிரவீன் குமார் தெரிவித்துள்ளார்
-
தமிழக சட்டசபை தேர்தலில் வெற்றிபெறுவோம்: அ.தி.மு.க. அமைச்சரவையில் பா.ஜ.க. நிச்சயம் இடம்பெறும்: அமித்ஷா மீண்டும் திட்டவட்டம்
12 Jul 2025சென்னை, தமிழ்நாட்டில் அ.தி.மு.க. அமைக்கும் அரசின் அமைச்சரவையில் பா.ஜ.க. நிச்சயம் இடம்பெறும் என்று அமித்ஷா கூறினார்.
-
கடலூர் ரயில் விபத்துக்கு கேட் கீப்பரின் அலட்சியமே காரணம் : விசாரணையில் தகவல்
12 Jul 2025கடலூர் : கடலூர் ரயில் விபத்துக்கு கேட் கீப்பரின் அலட்சியமே காரணம் என விசாரணையில் தெரியவந்துள்ளது.
-
முழு கொள்ளளவை எட்டிய வீராணம் ஏரி
12 Jul 2025கடலூர், கடலூர் மாவட்டத்தில் மிகப்பெரிய நீராதாரமாக காட்டுமன்னார்கோவில் லால் பேட்டையில் வீராணம் ஏரி உள்ளது.
-
யுனெஸ்கோ பட்டியலில் செஞ்சி கோட்டை: அமைச்சர் தங்கம் தென்னரசு பெருமிதம்
12 Jul 2025சென்னை : செஞ்சி கோட்டை தமிழர்களின் கட்டிடக்கலை நுட்பத்தையும், வீரம் செறிந்த வரலாற்றையும் உலகுக்குப் பறைசாற்றுகிறது என்று அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
-
இந்திய அணி அதனை செய்திருக்க கூடாது: இங்கிலாந்து முன்னாள் வீரர் விமர்சனம்
12 Jul 2025லண்டன் : இந்திய அணி பந்து மாற்றத்தை தேர்வு செய்திருக்கக்கூடாது என இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரரான ஸ்டீவ் ஹார்மிசன் விமர்சித்துள்ளார்.
-
ஆடித் திருவாதிரை விழாவில் பிரதமர் மோடி பங்கேற்பு: நினைவு நாணயம் வெளியிடுகிறார்
12 Jul 2025அரியலூர், கங்கைகொண்டசோழபுரத்தில் ராஜேந்திர சோழனின் பிறந்தநாளான ஆடித் திருவாதிரையன்று நடைபெறும் விழாவில் பிரதமர் மோடி பங்கேற்கிறார்.
-
திருவக்கரை வக்கரகாளியம்மன் கோவிலில் இ.பி.எஸ். தரிசனம்
12 Jul 2025விழுப்புரம், விழுப்புரம் மாவட்டத்தில் 2 நாள் சுற்றுபயணம் மேற்கொண்டுள்ள எடப்பாடி பழனிசாமி, திருவக்கரை வக்கரகாளியம்மன் கோவிலில் நள்ளிரவு சுவாமி தரிசனம் செய்தார்.
-
இங்கிலாந்து ஜோடி சாம்பியன்
12 Jul 2025'கிராண்ட்ஸ்லாம்' போட்டிகளில் மிகவும் கவுரவமிக்கதான விம்பிள்டன் டென்னிஸ் லண்டனில் நடந்து வருகிறது.
-
ஆர்.சி.பி. கூட்டநெரிசலுக்கு ஒட்டுமொத்த அலட்சியமே காரணம் : விசாரணை அறிக்கையில் தகவல்
12 Jul 2025பெங்களூரு : பெங்களூரில், ஆர்.சி.பி.
-
தனியார் பால் நிறுவன மேலாளர் மரணம் தற்கொலையே: சென்னை காவல் ஆணையர்
12 Jul 2025சென்னை : தனியார் பால் நிறுவனத்தில் கருவூல மேலாளர் மரணம் தற்கொலை போன்றே தெரிகிறது என சென்னை மாநகரக் காவல் ஆணையர் அருண் தெரிவித்தார்.
-
பள்ளி வகுப்பறைகளில் ‘ப’ வடிவில் இருக்கைகள்: தமிழக அரசு அறிவுறுத்தல்
12 Jul 2025சென்னை : தமிழகத்தில் உள்ள அனைத்துப் பள்ளி வகுப்பறைகளில் ‘ப’ வடிவில் இருக்கைகளை அமைக்க பள்ளிக் கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது.
-
குளத்தில் மூழ்கி 3 சிறுவர்கள் பலி: முதல்வர் மு.க.ஸ்டாலின் நிதியுதவி அறிவித்தார்
12 Jul 2025சென்னை, தஞ்சாவூரில் குளத்தில் மூழ்கி பலியான 3 சிறுவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
சர்ச்சை கேள்விகள் தவிர்ப்பு: டி.என்.பி.எஸ்.சி. தலைவர் தகவல்
12 Jul 2025சென்னை : குரூப்-4 தேர்வு வினாத்தாளில் அரசியல் மற்றும் சாதி, சமயம் சார்ந்த கேள்விகளை கேட்கக்கூடாது என்று அறிவுறுத்தப்பட்டு இருந்ததாக டி.என்.பி.எஸ்.சி.
-
பா.ஜ.க. உடன் கூட்டணி இல்லை என்பதில் ஆயிரம் சதவீதம் உறுதி: த.வெ.க. திட்டவட்டம்
12 Jul 2025சென்னை, பா.ஜ.க. உடன் கூட்டணி இல்லை என்ற நிலைப்பாட்டில் 100 சதவீதம் அல்ல 1000 சதவீதம் உறுதியாக உள்ளோம் என்று த.வெ.க. தெரிவித்துள்ளது.