எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சென்னை, பிப்.22 - திருத்தணி ஒன்றியத்திற்கு உட்பட்ட மூன்று கிராமங்களை ஒட்டுமொத்தமாக விலைக்கு வாங்கி, அங்குள்ள மக்களை வெளியேற்றத் துடிப்பவர்களுக்கு உறுதுணையாக இருக்கின்ற திருத்தணி நகராட்சியில் நிலவும் சீர்கேடுகளுக்குக் காரணமான மைனாரிட்டி தி.மு.க. அரசைக் கண்டித்து, காஞ்சிபுரம் மேற்கு மாவட்டம் அ.தி.மு.க. சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று (22.2.2011 செவ்வாய்க் கிழமை) நடைபெறும் என்று ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
கடந்த ஐந்து ஆண்டு கால மைனாரிட்டி தி.மு.க. ஆட்சியில் ஒட்டுமொத்தமாக விளை நிலங்கள் எல்லாம் அடிமாட்டு விலைக்கு வாங்கப்பட்டு, மிகப் பெரிய வணிக நிறுவனங்களுக்கு அதிக விலைக்கு விற்கப்படுவதும், அங்குள்ள மக்கள் விரட்டியடிக்கப்படுவதும் ஆங்காங்கே பெருமளவில் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில், திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி ஒன்றியம், சீனிவாசபுரம், முஸ்லீம் நகர் மற்றும் அருந்ததிபாளையம் கிராமங்களுக்கு உட்பட்ட 160 ஏக்கர் நிலத்தை, 1 கோடியே 76 லட்சம் ரூபாய்க்கு, சென்னை, கோபாலபுரம், மூன்றாவது தெருவைச் சேர்ந்த ஒரு பெண்மணிக்கு விற்க விற்பனைப் பத்திரம் தயார் செய்யப்பட்டு, திருத்தணி சார் பதிவாளர் அலுவலகத்தில் 28.10.2010 அன்று பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, சென்னையைச் சேர்ந்தவர்கள் மேற்படி கிராமங்களுக்குச் சென்று அங்கு காலம் காலமாக தங்களுடைய பட்டா நிலத்தில் வசித்து வந்த மக்களை வெளியேறுமாறு மிரட்டியதாக கூறப்படுகிறது. இது குறித்து, சார் பதிவாளர் அலுவலகத்தை அணுகிய போது, எங்களுக்கு பத்திரப் பதிவு முக்கியம். பட்டாவின் நம்பகத்தன்மை, நிலம் யாருக்குச் சொந்தம் என்ற விசாரணையில் ஈடுபட முடியாது என்று தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. ஆனால், பதிவுத் துறைத் தலைவரோ, சீனிவாசபுரம், முஸ்லீம் நகர் மற்றும் அருந்ததிபாளையத்தில் 160 ஏக்கர் நிலம் குறித்து விற்பனை ஆவணம் ஏதும் பதிவு செய்யப்படவில்லை என்று கூறி இருக்கிறார். இது முழுப் nullசணிக்காயை சோற்றில் மறைக்கும் விதமாக அமைந்துள்ளது.
மேற்படி விற்பனையின் மூலம் 1,200 குடும்பங்களைச் சேர்ந்த 5000க்கும் மேற்பட்ட ஏழை, எளிய கிராம மக்கள் வெளியேற்றப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அண்மையில் நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை பட்ஜெட் கூட்டத் தொடரின் போது, மேற்படி பிரச்சினை குறித்து விவாதிக்க கட்சியின் சார்பில் ஒத்தி வைப்புத் தீர்மானம் கொடுக்கப்பட்டும், அதற்கு அனுமதி அளிக்கப்படவில்லை. இது குறித்து முதலமைச்சர் முதல் தாசில்தார் வரை அனைவருக்கும் புகார் மனுக்கள் அனுப்பப்பட்டும், எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதிலிருந்து மைனாரிட்டி தி.மு.க. அரசின் முதலமைச்சர் கருணாநிதியின் குடும்பத்தினருக்கு தொடர்பு இருக்கிறதோ என்ற சந்தேகம் அப்பகுதி மக்கள் மத்தியில் நிலவுகிறது. இது ஒருபுறமிருக்க, மறுபுறம் திருத்தணி நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் குடிநீnullர்ப் பஞ்சம் தலைவிரித்து ஆடுவதாகவும், அடிக்கடி மின்தடை ஏற்படுவதாகவும், துப்புறவுப் பணியாளர்கள் பற்றாக்குறை காரணமாக நகராட்சி முழுவதும் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு பலவிதமான நோய்களுக்கு பொதுமக்கள் ஆளாக்கப்பட்டு உள்ளதாகவும், நகராட்சியில் ஊழியர்கள் பற்றாக்குறை நிலவுவதாகவும், திருத்தணி நகருக்குள் உள்ளூர் பேருந்து நிலையமும், நகருக்கு வெளியே வெளியூர் பேருந்து நிலையமும் அமைக்கப்பட வேண்டும் என்ற மக்களின் கோரிக்கை தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருவதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும், திருத்தணி நகருக்கு உள்ளே வரும் தேசிய நெடுஞ்சாலையில் கட்டப்பட்டு வரும் பாலத்தை இடித்துவிட்டு வேறு பாலம் அமைக்க மைனாரிட்டி தி.மு.க. அரசு முடிவு எடுத்துள்ளதன் காரணமாக போக்குவரத்து நெரிசல் ஏற்படக்கூடிய சூழ்நிலை உருவாகி இருப்பதாகவும், நகராட்சிக்கு உட்பட்ட சாலைகள் குண்டும், குழியுமாகக் காட்சி அளிப்பதாகவும், நெசவாளர்களுக்கு கட்டுப்படியாகக் கூடிய விலை தரப்படுவதில்லை என்றும், வீட்டு வரி விதிப்பில் ஒழுங்கான நடைமுறை கடைபிடிக்கப்படுவதில்லை என்றும் தகவல்கள் வருகின்றன.
எனவே, திருத்தணி ஒன்றியத்திற்கு உட்பட்ட மூன்று கிராமங்களை ஒட்டுமொத்தமாக விலைக்கு வாங்கி, அங்குள்ள மக்களை வெளியேற்றத் துடிப்பவர்களுக்கு உறுதுணையாக இருக்கின்ற, திருத்தணி நகராட்சியில் நிலவும் சீர்கேடுகளுக்குக் காரணமான மைனாரிட்டி தி.மு.க. அரசைக் கண்டித்தும், மக்களின் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்தியும், 160 ஏக்கர் பரப்பளவு கொண்ட மூன்று கிராமங்கள் விற்பனை குறித்து உடனடியாக விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், காஞ்சிபுரம் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில், இன்று (22.2.2011 செவ்வாய்க் கிழமை) காலை 10 மணியளவில், திருத்தணி கமலா திரையரங்கம் அருகில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
இந்தக் கண்டன ஆர்ப்பாட்டம், அவைத் தலைவர் இ.மதுசூதனன் தலைமையிலும், காஞ்சிபுரம் மேற்கு மாவட்ட செயலாளர் வி. சோமசுந்தரம், மாவட்ட எம்.ஜி.ஆர். மன்றச் செயலாளர் திருத்தணி கோ. அரி, எம்.எல்.ஏ. ஆகியோர் முன்னிலையிலும் நடைபெறும்.
இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில், காஞ்சிபுரம் மேற்கு மாவட்ட நிர்வாகிகளும், எம்.ஜி.ஆர். மன்றம், ஜெ ஜெயலலிதா பேரவை, எம்.ஜி.ஆர். இளைஞர் அணி, மகளிர் அணி, மாணவர் அணி, அண்ணா தொழிற்சங்கம், வழக்கறிஞர் பிரிவு, சிறுபான்மையினர் நலப் பிரிவு, விவசாயப் பிரிவு, மீனவர் பிரிவு, மருத்துவ அணி, இலக்கிய அணி, அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணி, இளைஞர் பாசறை மற்றும் இளம் பெண்கள் பாசறை உட்பட கழகத்தின் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகளும், உள்ளாட்சி அமைப்புப் பிரதிநிதிகளும், உடன்பிறப்புகளும் பெருந்திரளான அளவில் கலந்து கொள்ள வேண்டும்.
தோழமைக் கட்சிகளைச் சேர்ந்தவர்களும் இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்வார்கள் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். மக்கள் நலனை முன் வைத்து நடைபெற உள்ள இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில், பொதுமக்கள் பெருந்திரளான அளவில் கலந்து கொண்டு ஆதரவு நல்கிட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு ஜெயலலிதா தனது அறிக்கையில் கூறியுள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 11 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 12 months 1 day ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 2 weeks ago |
-
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர்: புள்ளி பட்டியல் 'ஏ' பிரிவில் முதலிடத்தில் இந்திய அணி
15 Sep 2025துபாய் : ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி தொடரில் தற்போது வரை 6 லீக் ஆட்டங்கள் நிறைவடைந்த நிலைியல் புள்ளி பட்டியலில் ஏ பிரிவில் இந்திய அணியும் பி பிரிவில் ஆப்கானிஸ்தானும்
-
வக்பு திருத்த சட்டத்திற்கு தடை விதிக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு: சில விதிகளுக்கு இடைக்காலத் தடை
15 Sep 2025புதுடெல்லி, மத்திய அரசு கொண்டு வந்த வக்ஃப் சட்டத் திருத்தத்திற்கு முழுவதுமாக தடை எந்த முகாந்திரமும் இல்லை என்று தெரிவித்துள்ள சுப்ரீம் கோர்ட், வக்ஃப் சட்டத் திருத்த சட்
-
தலைமகன் அண்ணா நிமிர்த்திய தமிழ்நாட்டை ஒருபோதும் தலைகுனிய விடமாட்டோம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு
15 Sep 2025சென்னை, தலைமகன் அண்ணா நிமிர்த்திய தமிழ்நாட்டை ஒருபோதும் தலைகுனிய விடமாட்டோம் என்று ஏ.ஐ.
-
வக்பு சட்டம் தொடர்பான சுப்ரீம் கோர்ட் தீர்ப்புக்கு கிரண் ரிஜிஜு வரவேற்பு
15 Sep 2025டெல்லி : வக்பு சட்டம் தொடர்பான சுப்ரீம் கோர்ட் உத்தரவை மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு வரவேற்றுள்ளார்.
-
இந்தியாவுடனான உறவை முறிக்க முடியாது: அமெரிக்காவுக்கு ரஷ்யா பதில்
15 Sep 2025மாஸ்கோ : எண்ணை வாங்கும் விவகாரம் தொடர்பாக இந்தியாவுடனான உறவை முறிக்க முடியாது என்று அமெரிக்காவுக்கு ரஷ்யா கூறியுள்ளது.
-
தமிழகத்தில் சேலம், வேலூர் உள்ளிட்ட 6 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு
15 Sep 2025சென்னை, தமிழகத்தில் சேலம், வேலூர் உள்ளிட்ட 6 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
வக்பு திருத்த சட்டம் தொடர்பான சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவுக்கு முதல்வர் ஸ்டாலின் வரவேற்பு
15 Sep 2025சென்னை, வக்பு திருத்த சட்டம் தொடர்பான சுப்ரீம் கோர்ட் உத்தரவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வரவேற்பு தெரிவித்துள்ளார்.
-
1,231 கிராம சுகாதார செவிலியர்களுக்கு பணிநியமன ஆணைகளை முதல்வர் வழங்க உள்ளார் : அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
15 Sep 2025சென்னை : 1,231 கிராம சுகாதார செவிலியர்களுக்கு பணிநியமன ஆணையை 22ம் தேதி முதல்வர் வழங்குகிறார் என மா. சுப்பிரணியன் தெரிவித்துள்ளார்.
-
இந்தியா-பாகிஸ்தான் பேட்டியை ரத்து செய்ய மறியல்: 37 பேர் கைது
15 Sep 2025கோவை : இந்தியா - பாகிஸ்தான் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியை ரத்து செய்யகோரி கோவையில் ரெயில் மறியலில் ஈடுபட்ட 37 பேரை பேலீசார் கைது செய்தனர்.
-
மிராய் திரைவிமர்சனம்
15 Sep 2025பேரரசர் அசோகர் சாகாவரம் பெறக்கூடிய ரகசியங்களை 9 புத்தகங்களில் எழுதி அதனை ஒரு இடத்தில் மறைத்து வைக்கிறார்.
-
ரஷ்யா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை மீது உக்ரைன் தாக்குதல்
15 Sep 2025மாஸ்கோ : ரஷ்யாவில் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை மீது உக்ரைன் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளது.
-
தீபாவளி பண்டிகைக்கு மறுநாள் அரசு விடுமுறை விட கோரிக்கை
15 Sep 2025சென்னை, தீபாவளி பண்டிகைக்கு மறுநாள் அரசு விடுமுறை விட வேண்டும் என்று அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் இப்போதே கோரிக்கை விடுக்க தொடங்கியுள்ளனர்.
-
பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு மாதம் 2,000 ரூபாய் உதவித்தொகை வழங்கும் 'அன்புக்கரங்கள' திட்டம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடக்கி வைத்தார்
15 Sep 2025சென்னை, பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு ரூ. 2000 உதவித்தொகை வழங்கிடும் அன்புக் கரங்கள் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் நேற்று (செப். 15) தொடக்கி வைத்தார்.
-
தங்கம் விலை சற்று சரிவு
15 Sep 2025சென்னை, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று (செப். 15) சவரனுக்கு ரூ. 80 குறைந்து விற்பனையானது.
-
எங்களுடைய அடிப்படையே பதவி அல்ல, பொறுப்புதான்: 'அன்பு கரங்கள்' திட்ட தொடக்க விழாவில் முதல்வர் பேச்சு
15 Sep 2025சென்னை, அரசியல் என்பது மக்கள் பணி. அது கடுமையான பணி.
-
ஜார்க்கண்ட் மாநிலத்தில் தலைக்கு ரூ. 1 கோடி அறிவிக்கப்பட்ட மாவோயிஸ்டு சுட்டுக்கொலை
15 Sep 2025ராஞ்சி : தலைக்கு ரூ. 1 கோடி சன்மானம் அறிவிக்கப்பட்ட மாவோயிஸ்டு பாதுகாப்பு படையால் சுட்டுக்கொல்லப்பட்டார்.
-
மருத்துவ படிப்பை பாதியில் உதறிய மதராசி பட நடிகர்
15 Sep 2025சிவகார்த்திகேயன் நடிப்பில் சமீபத்தில் வெளியான மதராசி படத்தில் துப்பாக்கியை எடுத்து சித்தார்தா சங்கரிடம் கொடுக்கும் காட்சி இருக்கும். திரையில் இந்த காட்சி வரும்போத
-
நாய் கடியால் பாதிக்கப்பட்டவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்: மத்திய அரசு வெளியிட்டது
15 Sep 2025புதுடெல்லி, நாய் கடியால் பாதிக்கப்பட்டவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டு விளக்கமளித்துள்ளது.
-
பி.எட். ,எம்.எட். மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க மேலும் கால அவகாசம்: அமைச்சர் கோவி.செழியன் தகவல்
15 Sep 2025சென்னை, பி.எட். ,எம்.எட். மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி. செழியன் தெரிவித்துள்ளார்.
-
பீகாரில் தொகுதி பங்கீட்டில் இழுபறி: 243 தொகுதிகளிலும் போட்டியிட தேஜஸ்வி யாதவ் அதிரடி முடிவு
15 Sep 2025பாட்னா : பீகாரில் தொகுதி பங்கீட்டில் இழுபறி 243 தொகுதிகளிலும் போட்டியிடுவோம் என்று தேஜஸ்வி யாதவ் கூறியுள்ளார்.
-
பாகிஸ்தானுக்கு எதிரான வெற்றி: இந்திய ராணுவ வீரர்களுக்கு அர்பணித்த கேப்டன் சுப்மன்
15 Sep 2025துபாய் : பாகிஸ்தானுக்கு எதிரான வெற்றி பஹல்காமில் பாதிக்கப்பட்டவர்களுக்கும், நம்மைப் பாதுகாக்கும் துணிச்சல்மிக்க நமது ஆயுதப் படைகளுக்கும் அர்ப்பணிக்கப்படுகிறது என்று இந்
-
நேபாள பிரதமர் சுசீலா கார்கியின் அமைச்சரவையில் 3 பேர் பதவியேற்பு
15 Sep 2025காத்மாண்டு : நேபாள பிரதமர் சுசீலா கார்கியின் புதிய அமைச்சரவையில் 3 பேர் அமைச்சர்களாக நேற்று பதவியேற்றனர்.
-
ஒரே இரவில் 245 மிமீ மழை: ஐதராபாத்தில் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட 3 பேர்
15 Sep 2025தெலங்கானா : தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் பெய்த தொடர் கனமழை காரணமாக அந்த நகரம் முழுவதும் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது.
-
விஜய் வருகையால் அனைத்து கட்சிகளின் வாக்குகள் சிதறும் : கார்த்தி சிதம்பரம் எம்.பி. கருத்து
15 Sep 2025மாானமதுரை : விஜய் வருகையால் அனைத்து கட்சிகளின் வாக்குகள் சிதறும் என்று கார்த்தி சிதம்பரம் எம்.பி. கூறினார்.
-
பார்லி.யில் காப்பீட்டு திருத்த மசோதா தாக்கல் செய்யப்படுவது எப்போது? - நிர்மலா சீதாராமன் பதில்
15 Sep 2025புதுடெல்லி : காப்பீட்டு திருத்த மசோதா எப்போது தாக்கல் செய்ய வேண்டும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.