முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நைஜீரியாவில் ஒரு குடும்பத்தை சேர்ந்த 10 பேர் சுட்டுக்கொலை

ஞாயிற்றுக்கிழமை, 24 பெப்ரவரி 2013      உலகம்
Image Unavailable

 

அபுஜா, பிப். 25 - நைஜீரியாவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 10 பேரை ஆயுதம் தாங்கிய கும்பல் ஒன்று சுட்டுக் கொன்றது. நைஜீரியாவின் மத்திய பிளாட்டியால் மாநிலத்தில் லோம் மாவட்டத்தில் ஜோஸ் நகரத்தின் அருகே உள்ள கோக்வோம் கிராமத்தில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. 

சுட்டுக் கொல்லப்பட்டவர்களில் 5 பேர் 10 வயதுக்கு குறைவான குழந்தைகள் ஆவர். தகவல் அறிந்து போலீசார் அங்கு வருவதற்குள் குற்றவாளிகள் தப்பியோடி விட்டனர். இந்த தகவலை ராணுவ செய்தி தொடர்பாளர் லெப்டினென்ட் கிங்ஸ்லி எக்போ உறுதிப்படுத்தினார். 

இந்த தாக்குதல் காட்டுமிராண்டித்தனமானது ஆகும். தாக்குதலில் 2 மாத குழந்தையும் கொல்லப்பட்டுள்ளது. மாநிலத்தில் அமைதியை ஏற்படுத்த அரசு அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ளும் என்று அரசு செய்தி தொடர்பாளர் அயூபா பம் தெரிவித்தார். 

தாக்குதலில் ஈடுபட்டவர்கள் ராணுவ உடையில் இருந்ததால் இச்சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் ராணுவத்தினராக இருக்கலாம் என்று கூறப்பட்டது. அதை ராணுவம் மறுத்துள்ளது. இங்கு அடிக்கடி இன மோதல்கள் நடக்கின்றன. சமீபத்திய மோதல்களில் மட்டும் நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்