எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சென்னை, மார்ச்.8 - உலக மகளிர் தினத்தையொட்டி பல்வேறு கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
தி.மு.க. தலைவர் கருணாநிதி:
மார்ச் திங்கள் 8ஆம் நாள் உலக மகளிர் நாள். மக்கள் தொகையில் சரிபாதியாக விளங்கும் மகளிர் சமுதாயம் அனைத்து வகையிலும் முன்னேறவேண்டும் என்பதற்காக உலகெங்கும் கொண்டாடப்படும் எழுச்சித் திருநாள். ஜனநாயகத்திற்கு வலிமை சேர்க்கும் வகையில் மகளிர்க்குத் தேர்தல்களில் வாக்களிக்கும் உரிமையையும், வேட்பாளராகப் போட்டியிடும் உரிமையையும் முதன்முதலில் பெற்றுத் தந்தது nullநீதிக் கட்சி. அந்த நீnullதிக் கட்சியின் வழியில் திராவிட இயக்கத்தை வழிநடத்திய தந்தைபெரியார், பேரறிஞர் அண்ணா ஆகியோர் அறிவுறுத்திய நெறியில் மகளிர்சமுதாயம் முன்னேற்றம் காண்பதற்காக திராவிட முன்னேற்றக் கழக அரசுஅமையும் காலங்களில் உருவாக்கிச் செயல்படுத்திய பல்வேறு திட்டங்களை புதிது புதிதாக உருவாக்கி, நடைமுறைப்படுத்தியதால் பெண்கள் சமுதாயம் இன்று சமூக, அரசியல், பொருளாதார நிலைகளில் எழுச்சி பெற்று, ஏற்றம் கண்டுவருவதை எண்ணி எண்ணி இறும்nullதெய்தும் இதயத்துடன், மகளிர் சமுதாயம் மேலும் மேலும் அறிவிலும் ஆற்றலிலும் ஒற்றுமையுடன் சிறந்தோங்கிச் செழித்திட உளமார்ந்த மகளிர் தின நல்வாழ்த்துகளை உரித்தாக்குகிறேன்.
தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன் :
தாய் மொழி, தாய் நாடு என்று தாயை முன்னிறுத்தி வழிபடும் தேசம் இது. பெண்கள் முன்னேற்றம் என்பது சுதந்திர இந்தியாவில் முக்கியமாக கருதப்பட்டு, பெண்களுக்கான நல சட்டங்களை நிறைவேற்றி வந்திருக்கிறது. இரண்டு பெண் முதலமைச்சர்களை இந்த நாடு பெற்றிருக்கிறது. பல்வேறு அரசியல் கட்சிகளில் பெண்கள் முக்கிய பங்கு வகிக்கிறார்கள். இந்திய நாடாளுமன்ற சபாநாயகராக ஒரு பெண்ணும், நாடாளுமன்ற எதிர்கட்சித் தலைவராக ஒரு பெண்ணும் அமர்ந்திருக்கிற காட்சியை இந்த நாடு பார்த்துக்கொண்டிருக்கிறது. பல்வேறு உயர் பதவிகளில் பெண்கள் தலைமை தாங்குகிற ஒருநிலை இன்றைக்கு சமுதாயம் பெற்றிருக்கிறது.
தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த்:
சமுதாயத்தில் சரிபாதியாக இருப்பவர்கள் பெண்கள். ஒரு சமுதாயம் முன்னேற வேண்டுமானால் அவர்களும் அந்த வளர்ச்சியில் பங்கு பெற வேண்டும். அதற்குரிய தகுதிகளைப் பெற சமூக, அரசியல், பொருளாதார வளர்ச்சியில் அவர்கள் முழு பங்கு பெற வேண்டும். மத்திய, மாநில அரசுகள் இதுவரை எடுத்துள்ள நடவடிக்கைகள் மூலம் ஓரளவு வாய்ப்புகளை அவர்கள் பெற்றுள்ளனரே தவிர, இன்னும் போதுமான முன்னேற்றம் ஏற்படவில்லை. சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களில் மூன்றில் ஒரு பகுதியினர் பெண்களாக இருக்க வேண்டும் என்ற சட்டம் இன்னும் நிறைவேறவில்லை என்பதே இதற்கு எடுத்துக்காட்டு.இந்த நன்னாளில் அவர்கள் அனைத்து துறைகளிலும் முன்னேறி நல்வாழ்வு பெற மகளிர் தின வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் ஜி.ராமகிருஷ்ணன்:
8 மணி நேர வேலை, வாக்குரிமை, உலக சமாதானம் ஆகிய முப்பெரும் கோரிக்கைகளை முன்வைத்து, 1910ல் கோபன்ஹேகனில் கூடிய இரண்டாவது உலக சோஷலிசப் பெண்கள் மாநாட்டில், சோஷலிச இயக்கத்தின் தலைவர்களில் ஒருவரான கிளாரா ஜெட்கின் முன்மொழிந்த பிரகடனத்தின் அடிப்படையில், உலகெங்கும் நடக்கும் பெண்களின் போராட்டங்களுக்குப் பரஸ்பரம் ஆதரவும், ஒத்துழைப்பும் தருவதற்கான தினமாக உருவானது தான், உலகப் பெண்கள் தினம்.
100 ஆண்டுகளுக்கு மேல் கடந்த பின்னும், அந்தக் கோரிக்கைகளின் தேவை, இன்னும் nullநீடிக்கிறது. நவீன தாராளமயக் கொள்கைகளின் பின்னணியில் தொழிலாளர் நல சட்டங்கள் பின்னடைவு, தொழிற்சங்க உரிமைகள் மறுப்பு, மொத்த உழைப்பாளிகளில் 93 சதவிகிதமாக உள்ள முறைசாரா துறையினருக்கு சட்டப் பாதுகாப்பின்மை, வாழ்வதற்கேற்ற கூலி கிடைக்காமை என்ற பல தாக்குதல்களை, பெண் தொழிலாளிகளும் சந்தித்துக் கொண்டுள்ளனர். விவசாயத்தில், கட்டுமானத்தில், நெசவுத் தொழிலில், உப்பளத்தில், தையலில், ஏற்றுமதி வளாகங்களில், சுமங்கலி திட்டத்தில், இன்ன பிற துறைகளில் உழைப்புச் சுரண்டலுக்கு உள்ளாகி வருகின்றனர். வீட்டுப் பணியாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கால்சென்டர், தகவல் தொழில்நுட்பத் துறைகளிலும் கூட பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. வெளி மாநிலங்களிலிருந்து குடிபெயர்ந்து இங்கு வந்து வேலை செய்யும் தொழிலாளர்கள், குறிப்பாக, பெண்களின் நிலை, மிக மோசமாக உள்ளது. ஊரக வேலை உறுதி திட்டத்தில், சட்டக் கூலி கிடைப்பதில்லை.
தனித்து வாழும் பெண்கள் கண்ணியமாக வாழ உதவும் சில்லறை வர்த்தகத் துறை, பன்னாட்டு நிறுவனங்களின் லாபவேட்டைக்குப் பலிகடாவாக்க மத்திய அரசு முயற்சித்து வருகிறது. இந்த நடவடிக்கைகள் அத்தனையும் தொடர்ந்து உயரும் விலைவாசிக்கு மத்தியில் செய்யப்படுவதுதான் சொல்ல முடியாத கொடூரம்.
33 சதவிகித இட ஒதுக்கீடு இன்னும் சட்டமாகவில்லை. உள்ளாட்சி நிர்வாகத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளும் முழுமையாக சுயமாக செயல்படும் சூழல் இல்லை. பாலின சமத்துவத்துக்கான போராட்டம் ஒருபுறம் ஜனநாயகத் தேவையாகவும், மறுபுறம் சமூக மாற்றத்துக்கான இயக்கத்தின் ஒரு பகுதியாகவும் உள்ளது. இத்தகைய போராட்டங்கள் பல முனைகளில் துடிப்புடன் எழுவதை மார்க்சிஸ்ட் கட்சி ஆதரிக்கும், ஊக்குவிக்கும் என்பதுடன், தமிழகத்தில் இவற்றைக் கட்சியின் சார்பில் முன்னெடுத்துச் செல்லவும் உறுதியேற்று உலகப் பெண்கள் தின வாழ்த்துக்களை, உரித்தாக்கிக் கொள்கிறேன்.
இவ்வாறு அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 9 months 2 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 9 months 3 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 10 months 2 weeks ago |
-
தமிழ்நாடு உங்களுக்கு தலைவணங்காது: டெல்லியை அச்சுறுத்தும் தமிழ்நாட்டின் வளர்ச்சி: முதல்வர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை
11 Jul 2025சென்னை, தமிழ்நாடு உங்களுக்கு தலைவணங்காது என்று தெரிவித்துள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், அனைவருக்கும் மருத்துவம் மற்றும் கல்வி போன்றவற்றில் தமிழ்நாட்டின் வளர்ச்சி டெல்லியை
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 11-07-2025.
11 Jul 2025 -
தமிழ்நாட்டு பயங்கரவாத செயல்கள் இல்லாத மாநிலம் : டி.ஜி.பி., சங்கர் ஜிவால் உறுதி
11 Jul 2025சென்னை : வரும் காலங்களில் தமிழகத்தில் பயங்கரவாத செயல்பாடுகள் மற்றும் கடுமையான குற்றங்கள் நடக்காது என்ற நிலை உறுதி செய்யப்பட்டுள்ளது என்று டி.ஜி.பி., சங்கர் ஜிவால் தெரிவ
-
ரஷ்யா வெளியுறவு அமைச்சர் வடகொரியா பயணம்
11 Jul 2025மாஸ்கோ : ரஷ்யா வெளியுறவு அமைச்சர் வடகொரியாவுக்கு பயணம் மேற்கொண்டார்.
-
தங்கம் விலை ரூ.440 உயர்வு
11 Jul 2025சென்னை, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று (ஜூலை 11) பவுனுக்கு ரூ.440 உயர்ந்து விற்பனையானது.
-
கூட்டணி இருந்தாலும், இல்லாவிட்டாலும் அ.தி.மு.க. பலமாக இருக்கும்: இ.பி.எஸ்.
11 Jul 2025விழுப்புரம் : கூட்டணி இல்லை என்றால் தி.மு.க. இல்லை. கூட்டணி இருந்தாலும், இல்லையென்றாலும் பலமாக இருக்கும் கட்சி அ.தி.மு.க. என எடப்பாடி பழனிசாமி பேசினார்.
-
அழகுமுத்துக்கோன் தியாகத்தை எந்நாளும் போற்றுவோம்: விஜய்
11 Jul 2025சென்னை : மாவீரர் அழகுமுத்துக்கோன் தியாகத்தை எந்நாளும் போற்றுவோம் என விஜய் தெரிவித்துள்ளார்.
-
வரும் ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் கனடா நாட்டு பொருட்களுக்கு 35 சதவீத வரி: டிரம்ப் அறிவிப்பு
11 Jul 2025வாஷிங்டன் : ''ஆகஸ்ட் 1ம் தேதி முதல் கனடா பொருட்களுக்கு 35 சதவீத வரி அமலுக்கு வரும்'' என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவித்துள்ளார்.
-
பிரதமரின் வெளிநாட்டு பயணம்: பஞ்சாப் முதல்வர் விமர்சனம்
11 Jul 2025புதுடெல்லி : “பிரதமர் மோடி நினைத்தால் பாகிஸ்தானுக்கும் செல்லலாம். ஆனால், அவரைப் போல நம்மால் செல்ல முடியாது” என்று பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் விமர்சித்துள்ளார்.
-
தமிழகத்தில் 6,990 நடுநிலைப் பள்ளிகளில் ‘ஹைடெக்’ ஆய்வகங்கள் வரும் 15-ம் தேதி திறப்பு
11 Jul 2025சென்னை, தமிழகத்தில் உள்ள 6,990 அரசு நடுநிலைப் பள்ளிகளில் அமைக்கப்பட்டு வரும் ‘ஹைடெக்’ ஆய்வகங்களை, காமராஜர் பிறந்த தினமான ஜூலை 15 கல்வி வளர்ச்சி நாளன்று முதல்வர் மு.க.ஸ்
-
தமிழ்நாடு கால்பந்தாட்ட சங்க தேர்தலை ரத்து செய்து சென்னை ஐகோர்ட் உத்தரவு
11 Jul 2025சென்னை : தமிழ்நாடு கால்பந்தாட்ட சங்கத்தின் தலைவரை தேர்ந்தெடுப்பதற்காக நடைபெற்ற தேர்தலை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
பாக்.கில் கிளர்ச்சியாளர்களால் பயணிகள் 9 பேர் சுட்டுக்கொலை
11 Jul 2025கராச்சி : பாகிஸ்தானில் பஸ்சில் சென்ற 9 பேரை கிளர்ச்சியாளர்கள் சுட்டுக்கொன்றனர்.
-
குன்றக்குடி அடிகளாரின் தொண்டு தொடரட்டும்: முதல்வர் புகழாரம்
11 Jul 2025சென்னை : தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளாரின் தொண்டு தொடரட்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
ஆடு, மாடுகள் முன் சீமான்: அமைச்சர் சிவசங்கர் வருத்தம்
11 Jul 2025அரியலூர் : ஆடு, மாடுகளுக்கு முன்பு பேசும் நிலைக்கு சீமான் தள்ளபட்டுள்ளார் என அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் கூறியுள்ளார்.
-
தமிழகத்தில் நிபா வைரஸ் இல்லை: பொதுசுகாதாரத்துறை
11 Jul 2025சென்னை : தமிழகத்தில் 'நிபா' வைரஸ் இல்லை. மக்கள் பீதி அடைய தேவையில்லை என பொதுசுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
-
குரூப்-4 வினாத்தாள் கசிவா? - டி.என்.பி.எஸ்.சி. தலைவர் மறுப்பு
11 Jul 2025சென்னை : குரூப் 4 தேர்வுக்கான வினாத்தாள் கசியவில்லை என டி.என்.பி.எஸ்.சி. தலைவர் விளக்கமளித்துள்ளார்.
-
ஜி-மெயில் பயனர்களுக்கு கூகுள் கொண்டு வரும் புதிய அப்டேட்
11 Jul 2025வாஷிங்டன் : ஜி மெயில் பயனர்களுக்கு கூகுள் கொண்டு வரும் புதிய அப்டேட்டை கொண்டு வந்துள்ளது.
-
எடப்பாடி பழனிசாமி தனது பெயரை மாற்றிக்கொள்ளலாம்: அமைச்சர் சேகர்பாபு
11 Jul 2025சென்னை : எடப்பாடி பழனிசாமி தனது பெயரை 'பல்டி' பழனிசாமி என மாற்றிக்கொள்ளலாம் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
-
வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தை: அமெரிக்காவுக்கு இந்திய குழு விரைவில் பயணம்
11 Jul 2025புதுடெல்லி : வர்த்தக ஒப்பந்த பேசசுவார்த்தைககு அமெரிக்காவுககு இந்திய குழுவினர் பயணம் செய்ய உள்ளனர்.
-
வரும் 27,28-ம தேதிகளில் 2 நாள் பயணமாக தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி
11 Jul 2025சென்னை, வரும் 27, 28-ம் தேதிகளில் தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி.
-
பீகார் தேர்தலை 'திருட' பா.ஜ.க. முயற்சி: ராகுல் காந்தி குற்றச்சாட்டு
11 Jul 2025புவனேஸ்வர் : மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தலைப் போல, பீகார் தேர்தலையும் திருட பா.ஜ.க. முயல்கிறது என்று ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.
-
வழக்கின் சாட்சிகளை அழிக்க முயற்சி: தென்கொரியா முன்னாள் அதிபர் மீண்டும் சிறையில் அடைப்பு
11 Jul 2025சியோல் : தென் கொரியா அதிபராக இருந்தவர் யூன் சுக் இயோல். கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் நாட்டில் அவசர நிலையை பிரகடனம் செய்தார்.
-
வெள்ளம், நிலச்சரிவு பாதித்த 6 மாநிலங்களுக்கு ரூ.1,067 கோடி நிதி
11 Jul 2025புதுடெல்லி : வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட அசாம், மணிப்பூர், மேகாலயா, மிசோரம், கேரளா, உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களுக்கு ரூ.1,066 கோடியே 80 லட்சத்தை விடுவிக்க
-
கடமை தவறுவது போல் தெரிகிறது: அ.தி.மு.க. தொடர்பான மனுக்கள் மீது எப்போது முடிவெடுக்கப்படும்? தேர்தல் ஆணையத்திற்கு ஐகோர்ட் கேள்வி
11 Jul 2025சென்னை, அ.தி.மு.க. உட்கட்சி விவகாரத்தில் தேர்தல் ஆணையம் கடமை தவறுவது போல் தெரிவதாக சென்னை ஐகோர்ட் தெரிவித்துள்ளது.
-
கீழடி விவகாரம்: மத்திய அரசுக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு கண்டனம்
11 Jul 2025சென்னை : கீழடி விவகாரத்தில் மத்திய அரசு தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ள வேண்டும் என்று அமைச்சர் தங்கம் தென்னரசு வலியுறுத்தி உள்ளார்.