எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

மதுரை,ஏப்.27 - மதுரையில் மருந்துக்கடை பெண் ஊழியர் ஒருவர் கொலை செய்யப்பட்டு தகர பெட்டியில் வைத்து வீசப்பட்ட சம்பவம் நடந்துள்ளது. இது தொடர்பாக செல்போனில் பேசிய 8 பேர் பிடிபட்டுள்ளனர்.
மதுரை விராட்டிப்பத்து இருளாண்டித்தேவர் காலனி முல்லை நகர் 2வது தெருவை சேர்ந்தவர் குணசேகரன். தனியார் நிறுவனத்தில் என்ஜினீயராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி லதா(23) இந்த பகுதியில் உள் ஒரு மருந்து கடையில் வேலை பார்த்து வந்தார். இவருக்கு திருமணமாகி ஒன்றரை ஆண்டுகள் ஆகிறது. இவர்களுக்கு ஒரு குழந்தை பிறந்து இறந்து விட்டது. கடந்த வாரம் புதன்கிழமை மதியம் மருந்துக்கடையை அடைத்து விட்டு வீட்டுக்கு சென்ற போது லதா மாயமானார். இது குறித்து கணவர் குணசேகரன் எஸ்எஸ்காலனி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். ஆனால் போலீசார் உடனடியாக புகாரை வாங்காமல் 3 நாட்கள் கழித்தே புகாரை பெற்றுள்ளனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை தேனி ரோடு செக் போஸ்டில் இருந்த போலீசாரிடம் சிலர் வந்து மாடக்குளம் செல்லும் கால்வாயில் பழைய தகர பெட்டியில் இருந்து பிணவாடை வருகிறது என தெரிவித்தனர்.
இதைதொடர்ந்து செக்போஸ்டில் இருந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்த போது பெட்டிக்குள் இளம்பெண் ஒருவரது உடல் மடக்கி வைக்கப்பட்டிருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். முகம் சிதைக்கப்பட்டிருந்தது. சந்தன நிற டாப்ஸ், பச்சை நிற சுடிதார் ஆடை அணிந்திருந்தார். கைகால்கள் ஒன்றாக சேர்த்து கட்டப்பட்ட நிலையில் ஒரு கையில் வெட்டுக்காயம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. யாரோ அவரை கொலை செய்து தகர பெட்டிக்குள் வைத்து கால்வாயில் வீசி இருப்பது தெரியவந்தது. இது குறித்து எஸ்எஸ்காலனி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து விசாரணை நட.த்தினர். மோப்பநாயும் வரவழைக்கப்பட்டது. கைரேகை நிபுணர்கள் ரேகைகளை பதிவு செய்தனர். காணாமல் போன லதாவாக இருக்கலாம் என்று கருதிய போலீசார் அவரின் உறவினர்களை வரவழைத்து பிணத்தை பார்க்க செய்தனர். கொலையான பெண் அணிந்திருந்த உடைகள் மற்றும் அவர் அணிந்திருந்த கைக்கடிகாரம் ஆகியவற்றை பார்த்து கொலை செய்யப்பட்ட பெண் லதாதான் என்று உறுதி செய்யப்பட்டது. கொலை செய்யப்பட்டு 4 நாட்களுக்கு மேலாகி விட்டதால் பிணம் அழுகிய நிலையில் இருந்தது.
இதை தொடர்ந்து தனிப்படை அமைத்து போலீசார் கொலையாளிகளை தேடத்துவங்கினர். வழக்கமாக காலை 6 மணிக்கு வேலைக்கு செல்லும் கணவர் குணசேகரன் மாலை மூன்றரை மணிக்குத்தான் வீடு திரும்புவார். இதே போல் காலை 10 மணிக்கு மருந்துக்கடைக்கு செல்லும் லதா மதியம் வீட்டுக்கு வந்துவிட்டு மீண்டும் 4 மணிக்கு வேலைக்கு சென்று விட்டு இரவு 7 மணிக்குத்தான் வீடு திரும்புவார். ஏப்.20 ம் தேதி கடையில் இருந்து வீட்டுக்கு திரும்பும் போது ஒரு ஆட்டோவில் ஏறி லதா சென்றதாக அந்த பகுதியை சேர்ந்தவர்கள் தெரிவித்துள்ளனர். இதை தொடர்ந்து இந்த பகுதி ஆட்டோ டிரைவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். மேலும் மருந்துக்கடை உரிமையாளர்களிடமும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் லதாவின் செல்போனில் கடைசியாக பேசிய 8 பேரின் எண்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவர்களையும் பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். பட்டப்பகலில் இளம் பெண்ஒருவர் ஆட்டோவில் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 11 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 11 months 4 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 2 weeks ago |
-
மக்களுக்கு இடையூறு செய்யும் கட்சி அல்ல தி.மு.க. - முதல்வர்
13 Sep 2025சென்னை : மக்களுக்கு இடையூறு செய்யும் கட்சி அல்ல தி.மு.க. என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
மணிப்பூரை வளர்ச்சியின் அடையாளமாக மாற்ற விரும்புகிறேன்: பிரதமர் மோடி
13 Sep 2025இம்பால், மணிப்பூரை வளர்ச்சியின் அடையாளமாக மாற்ற விரும்புகிறேன் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.
-
மத்திய கல்வி அமைச்சகத்தின் ஆலோசனைக்குழு உறுப்பினராக இன்பதுரை எம்.பி. நியமனம்
13 Sep 2025சென்னை : மத்திய கல்வி அமைச்சகத்தின் ஆலோசனைக்குழு உறுப்பினராக இன்பதுரை எம்.பி. நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
-
பிரதமருக்கு மணிப்பூர் நினைவு வந்துள்ளது: கனிமொழி எம்.பி.
13 Sep 2025மணிப்பூர் : தேர்தல் வருவதால் பிரதமருக்கு மணிப்பூர் நினைவு வந்துள்ளது என்று கனிமொழி எம்.பி. கூறியுள்ளார்.
-
இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளராக வீரபாண்டியன் தேர்வு
13 Sep 2025சென்னை, இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளராக வீரபாண்டியன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
-
சென்னையில் திருப்பதி திருக்குடை ஊர்வலம் : பக்தர்களுக்கு ஆர்.ஆர்.கோபால்ஜி அழைப்பு
13 Sep 2025சென்னை : சென்னையில் திருப்பதி திருக்குடை ஊர்வலம் நடப்பதையொட்டி வருகிற 22-ம் தேதி பக்தர்களுக்கு ஆர்.ஆர். கோபால்ஜி அழைப்பு விடுத்துள்ளார்.
-
இங்கிலாந்தில் இந்திய பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை - அதிர்ச்சி
13 Sep 2025லண்டன் : இங்கிலாந்தில் இந்திய பெண் கூட்டு பாலியல் வன்கொடுமையால் அதிர்ச்சி சம்பவம் நிளவியுள்ளது.
-
திருச்சி பிரச்சாரத்தில் வேலை செய்யாத மைக்: விஜய் பேச்சை கேட்க வந்த தொண்டர்கள் ஏமாற்றம்
13 Sep 2025திருச்சி : விஜய் பேசியபோது திடீர் என்று தொழில்நுட்ப கோளாறால் மைக்கில் வேலை செய்யவில்லை இதனால் தொண்டர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
-
சாம்சனுக்கு பயிற்சியாளர் ஆதரவு
13 Sep 2025சஞ்சு சாம்சன் மிடில் ஆர்டரில் சொதப்புவார் என்று அர்த்தமில்லை என இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளர் சித்தான்சு கோட்டக் தெரிவித்துள்ளார்.
-
இந்தியாவின் வளர்ச்சியை பார்த்து உலக நாடுகள் பயப்படுகின்றன’ - மோகன் பகவத்
13 Sep 2025மும்பை : இந்தியாவின் வளர்ச்சியை பார்த்து உலக நாடுகள் பயப்படுகின்றன என்று மோகன் பகவத் கூறியுள்ளார்.
-
மீண்டும் அ.தி.மு.க. ஆட்சி அமைந்ததும் கோவையில் மெட்ரோ ரயில் திட்டம் கொண்டு வரப்படும் : எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம்
13 Sep 2025சிங்காநல்லூர் : கோவையில் மெட்ரோ ரயில் பணிக்காக விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டது, ஆட்சி மாற்றத்தின் காரணமாக ஏதேதோ பிரச்னை சொல்லி முடக்கிவைத்துள்ளனர்.
-
பின்லேடன் உங்கள் நாட்டில்தான் பதுங்கியிருந்தார்: ஐ.நா. சபையில் பாகிஸ்தான் மீது இஸ்ரேல் குற்றச்சாட்டு
13 Sep 2025நியூயார்க் : பின்லேடன் உங்கள் நாட்டில்தான் பதுங்கியிருந்தார் என்று பாகிஸ்தான் மீது இஸ்ரேல் கடுமையாக குற்றஞ்சாட்டி ஐ.நா. சபையில் கேள்வி எழுப்பியது.
-
இரிடியம் மோசடி-30 பேர் கைது: சி.பி.சி.ஐ.டி. அதிரடி விசாரணை
13 Sep 2025சென்னை : இரிடியம் மோசடியில் 30 பேரை சி.பி.சி.ஐ.டி.யினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
திருச்சி எனக்கு திருப்புமுனை அமையும்: த.வெ.க. தலைவர் விஜய் பரபரப்பு பேச்சு
13 Sep 2025திருச்சி, திருச்சி திருப்புமுனையாக அமையும் என்று திருச்சியில் தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் நடிகர் விஜய் பேசினார்.
-
இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளராக மு.வீரபாண்டியன் தேர்வு - மு.க.ஸ்டாலின் வாழ்த்து
13 Sep 2025சென்னை : இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளராக வீரபாண்டியன் தேர்வு செய்யப்பட்டுள்ளதையடுத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
உங்களுடன் ஸ்டாலின் திட்ட செயல்பாடுகள்: முதல்வர் ஸ்டாலின் தலைமையில் ஆய்வு : துறை வாரியாக பெறப்பட்ட மனுக்கள், அதன் மீதான தீர்வு குறித்து கேட்டறிந்தார்
13 Sep 2025சென்னை : உங்களுடன் ஸ்டாலின் திட்ட செயல்பாடுகள் குறித்து நேற்று தலைமை செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆய்வு மேற்கொண்டார்.
-
துவரம்பருப்பு கொள்முதலில் தமிழகத்திற்கு ஒரு விலையா? - டி.டி.வி. தினகரன் கேள்வி
13 Sep 2025சென்னை : துவரம்பருப்பு கொள்முதலில் தமிழகத்திற்கு ஒரு விலையா என்று டி.டி.வி. தினகரன் கேள்வி எழுப்பி உள்ளது.
-
நான் முதல்வன் ஸ்கவுட் திட்டத்தின் கீழ் தமிழ்நாடு மாணவர்கள் உலகளாவிய பயிற்சி பெற புரிந்துணர்வு ஒப்பந்தம் : துணை முதல்வர் உதயநிதி முன்னிலையில் நடந்தது
13 Sep 2025சென்னை : நான் முதல்வன் ஸ்கவுட் திட்டத்தின் கீழ் தமிழ்நாடு மாணவர்கள் உலகளாவிய பயிற்சி பெற புரிந்துணர்வு ஒப்பந்தம் துணை முதல்வர் உதயநிதி முன்னிலையில் மேற்கொள்ளப்பட்
-
பா.ம.க. தட்டி எழுப்பினால் தான் திராவிட மாடல் அரசுக்கு விழிப்பு வருமா? - அன்புமணி
13 Sep 2025சென்னை : பா.ம.க. தட்டி எழுப்பினால் தான் திராவிட மாடல் அரசுக்கு விழிப்பு வருமா என்று அன்புமணி கூறியுள்ளார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 14-09-2025.
14 Sep 2025 -
தி.மு.க. அரசின் தேர்தல் வாக்குறுதிகள்: திருச்சி பிரச்சாரத்தில் விஜய் கேள்வி
13 Sep 2025திருச்சி, தி.மு.க. அரசின் தேர்தல் வாக்குறுதிகளில் கல்வி கடன் ரத்து, டீசல் விலை குறைக்கப்படும் என்று சொன்னீர்களே என்று விஜய் அடுக்கடுக்கான கேள்விகளை கேட்டார்.
-
கடலூரில் தொடர் விபத்துகள் குறித்து விசாரணை நடத்த வேண்டும் - வைகோ
13 Sep 2025கடலூர், கடலூரில் தொடர் விபத்துகள் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார்.
-
அ.தி.மு.க. கூட்டத்தை தொடர்ந்து த.வெ.க. கூட்டத்திலும் நுழைந்த ஆம்புலன்ஸ்..!
13 Sep 2025திருச்சி, அ.தி.மு.க. கூட்டத்தை தொடர்ந்து திருச்சியில் நடந்த தமிழக வெற்றிக்கழகத்தின் கூட்டத்திலும் ஆம்புலன்ஸ் நுழைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.