எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
திருப்பரங்குன்றம்,ஏப்.27 - மதுரை மோசடி மன்னன் பயன்படுத்தி விற்ற 3 வது காரை(ஸ்கார்பியோ) ஓசூரில் போலீசார் நேற்று பறிமுதல் செய்தனர். ஏற்கனவே ஆடி, போர்டு கார்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
மதுரை திருப்பரங்குன்றம் அருகே திருநகரில் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு வாடகை வீட்டில் மனைவி, குழந்தைகள் மற்றும் மைத்துனருடன் குடியேறியவர் விவேகானந்தன். அங்கு வசித்த நாட்களில் மதுரை மற்றும் மதுரையை சுற்றியுள்ள பகுதிகளிலும் மேலும் திருநகர், திருப்பரங்குன்றத்திலும் பலரை ஏமாற்றி பல லட்சம் ரூபாய் மோசடி செய்து குடும்பத்துடன் தலைமறைவானார்.
இவர் பயன்படுத்திய சொகுசுகார்களை பல இடங்களில் விற்பனை செய்துள்ளது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. அதன்படி திருநகர் அருகே உள்ள தனக்கன்குளத்தை சேர்ந்த ஒருவரிடம் ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள ஆடி காரை வெறும் 3 லட்சம் ரூபாய்க்கு விலை பேசி முதலில் 2 லட்சம் ரூபாய் பெற்றுக் கொண்டு காரின் ஆவணங்களை கொடுத்த பின்பு ஒரு லட்சம் தருமாறு கூறிய விவேகானந்தன், தலைமறைவானார். சில தினங்களுக்கு முன்பு அந்த காரை போலீசார் பறிமுதல் செய்தனர். விவேகானந்தன் பயன்படுத்தி விற்ற போர்டு காரை கம்பத்தில் உள்ள ஹானஸ்ட் ராஜ் என்பவரிடம் போலீசார் பறிமுதல் செய்தனர்.
இந்நிலையில் விவேகானந்தன் விற்ற ஸ்கார்பியோ காரை ஓசூரில் நேற்று தனிப்படை போலீசார் பறிமுதல் செய்து திருநகர் காவல் நிலையத்திற்கு கொண்டு வந்தனர். விவேகானந்தனிடம் வேலைக்காக பணம் கொடுத்து ஏமாந்தவர்களின் பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது. விவேகானந்தன் மீது புகார் கொடுப்பவர்கள் தினம் போலீஸ் ஸ்டேசனை முற்றுகையிட்டு வருகின்றனர். விவேகானந்தனின் மோசடிக்குஉடந்தையாக இருந்த மனைவி மற்றும் மைத்துனர் கெவின் ஆகியோரும் விவேகானந்தனுடன் தலைமறைவாகி விட்டதால் இவர்களுக்கும் இந்த மோசடியில் பங்கு இருப்பதாக போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இந்நிலையில் நேற்று திண்டுக்கல்லை சேர்ந்த நந்தகோபால் என்பவர் டி.எஸ்.பி பொன்ராமிடம் புகார் கொடுத்தார். அவர் கூறுகையில், திண்டுக்கல் அரசு கலைக்கல்லூரியில் உதவி பேராசிரியையாக வேலை பார்த்து மாறுதலாகி தற்போது கோவையில் உள்ள கல்லூரியில் வேலை பார்க்கும் நிகிதா என்பவர் திண்டுக்கல் கலைக் கல்லூரியில் உதவியாளராக பணியாற்றிய ஜோசப் என்பவரிடம், தனது அண்ணனுடைய நண்பர் மிகப் பெரிய செல்வந்தர், அரசியல் பெரும் புள்ளிகளுடன் தொடர்பு உடையவர். அவர், அரசு வேலைகளை பலருக்கு வாங்கிகொடுத்து வருகிறார். உங்களுக்கு வேண்டப்பட்டவர்களுக்கு யாருக்கேனும் அரசு வேலை வேண்டும் என்றால் கேளுங்கள். வாங்கிக் கொடுக்கிறோம் என்றார். அவரது பேச்சை நம்பிய ஜோசப், என்னிடம் கூறினார். நானும் எனது அக்கா மகளின் ஆசிரியர்பணிக்காக ஜோசப் உதவியுடன் நிகிதாவை நாடினேன். அவர் ரூ. 6 லட்சம் பணம் கேட்டார். என்னால் 5 லட்சம் ரூபாய் மட்டுமே ஏற்பாடு செய்ய முடிந்தது. இதை நிகிதாவிடம் கூறினேன். அவர் மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள ஆலம்பட்டியில் உள்ள அவரது பங்களாவிற்கு வருமாறு கூறினார்.
பிப்ரவரி 17 ம் தேதி ஆலம்பட்டி பங்களாவிற்கு சென்றேன். அங்கு நிகிதாவிடம் ரூ. 5 லட்சத்தை கொடுத்தேன். பணத்தை பெற்றுக் கொண்ட அவர், மீதம் ஒரு லட்சம் கட்டாயம் வேண்டும். விரைவில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட உள்ளது. அதற்குள் வேலையை வாங்கி விட வேண்டும். அதனால் மீதத் தொகையான ஒரு லட்சத்திற்கு ஜோசப் ஜாமீன் ஏற்றுக் கொள்ள வேண்டும் என நிகிதா கூறினார். என்னுடன் வந்த ஜோசப்பும் அதற்கு சம்மதித்தார். அதன் பின்னர் வீட்டிற்குள் இருந்து பணம் எண்ணும் எந்திரத்தை எடுத்து வந்து நான் கொடுத்தபணத்தை அந்த எந்திரத்தில் எண்ணி சரிபார்த்து எடுத்துச் சென்றார். அப்போது நிகிதாவின் அண்ணன் கவியும் உடனிருந்தார்.
சில நாட்களுக்கு பின்பு நிகிதாவின் செல்போனுக்கு தொடர்பு கொண்ட போது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. அது மட்டுமின்றி அவர் கொடுத்த பல செல்போன் எண்களும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. இந்த எண்களை தவிர கோவையை சேர்ந்த வக்கீல் ஒருவரின் செல்போன் எண்களையும் நிகிதா கொடுத்திருந்தார். அதைதொடர்பு கொண்ட போது அவர்களை பற்றி எங்களுக்கு தெரியாது. என்னை தொடர்பு கொண்டால் உங்களுக்கு தெரிவிக்கிறேன் என கூறினார். ஆசிரியர் வேலை வாங்கி தருவதாக எங்களை ஏமாற்றி விட்டனர் என புகார் கூறியுள்ளேன். இவ்வாறு நந்தகோபால் கூறினார்.
ஆலம்பட்டியில் உள்ள பங்களாவை மோசடி மன்னன் விவேகானந்தன் கட்டி அதை ஓய்வு பெற்ற ஒரு அரசு அதிகாரிக்கு விற்று விட்டதாகவும், அந்த அதிகாரியின் மகன்தான் கவி என்பதும், விவேகானந்தனின் மோசடிகளுக்கு கவியும் உடந்தையாக இருந்திருக்கலாமோ என்று நந்தகோபாலிடம் பெற்ற பணத்தை கவியும் நிகிதாவும் சுருட்டினரா? அல்லது விவேகானந்தனுக்கு கொடுத்தனரா அல்லது இருவருமே பங்கிட்டு கொண்டனரா என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு டோனட்11 hours 59 min ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்4 days 12 hours ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி1 week 6 hours ago |
-
தனியார் பள்ளிகளில் இடஒதுக்கீடு நிறைவேற்றப்படுகிறதா? கண்காணிக்க அரசுக்கு செல்வப்பெருந்தகை கோரிக்கை
24 Apr 2024சென்னை, தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் கல்வி உரிமைச் சட்டப்படி தனியார் பள்ளிகளில் 25 சதவிகித இடஒதுக்கீடு முழுமையாக நிறைவேற்றப்படுகிறதா என்பதை நாள்தோறும் கண்காணித்து உரிய த
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 24-04-2024.
24 Apr 2024 -
தங்கம் விலை மீண்டும் உயர்வு
24 Apr 2024சென்னை, சென்னையில் நேற்று ஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ரூ.53.840-க்கு விற்பனையானது.
-
நாட்டின் கவனத்தை திசை திருப்புவதே பாஜக தலைவர்களின் பாணி: பிரியங்கா
24 Apr 2024திருவனந்தபுரம், உண்மையான பிரச்சினைகளில் இருந்து நாட்டின் கவனத்தை திசை திருப்புவதே பா.ஜ.க.
-
தீர்ப்பு தாமதம்: சுப்ரீம் கோர்ட்டில் ஹேமந்த் சோரன் மனு தாக்கல்
24 Apr 2024புது டெல்லி, பணமோசடி வழக்கில் அமலாக்கத் துறையின் கைது நடவடிக்கையை எதிர்த்து தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பை ஐகோர்ட் தாமதப்படுத்துவதாகக் கூறி, ஜார்கண்ட் முன்னாள் முதல்
-
தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம்: கவர்னர் ஆர்.என்.ரவி வாழ்த்து
24 Apr 2024சென்னை, ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 24-ம் தேதி தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம் கொண்டாடப்படுகிறது. அதன்படி நேற்று தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம் கொண்டாடப்பட்டது.
-
சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தல் எதிரொலி: பெரிய அளவில் விளம்பரம் வெளியிட்டு மன்னிப்பு கோரியது பதஞ்சலி நிறுவனம்
24 Apr 2024புதுடெல்லி, சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தலை அடுத்து 67 தேசிய செய்தித்தாள்களில் பெரிய அளவில் விளம்பரம் வெளியிட்டு நிபந்தனையற்ற பொதுமன்னிப்பு கோரியது பதஞ்சலி நிறுவனம்.
-
இன்டியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து வடமாநிலங்களில் தேர்தல் பிரசாரம் செய்ய முதல்வர் ஸ்டாலின் திட்டம்
24 Apr 2024சென்னை, இன்டியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து டெல்லி உள்ளிட்ட மாநிலங்களுக்கு சென்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரசாரம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
-
வி.வி.பாட் வழக்கில் தேர்தல் ஆணையம் விளக்கம்:தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தது சுப்ரீம் கோர்ட்
24 Apr 2024புதுடெல்லி:வி.வி.பாட் தொடர்பான வழக்கில் தேர்தல் ஆணையம் விளக்கமளித்ததை அடுத்து தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை சுப்ரீம் கோர்ட் ஒத்திவைத்தது.
-
நீர்மட்டம் தொடர் சரிவு: மேட்டூர் அணை பகுதியில் வெளியே தெரியும் நந்தி சிலை, தேவாலயம்
24 Apr 2024சேலம், மேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து வருவதால் நந்தி சிலை, கிறிஸ்தவ தேவாலயம் முழுவதும் வெளியே தெரிகிறது.
-
போர் தொடங்கியதில் இருந்து தற்போது வரை உக்ரைனில் 5 லட்சம் ராணுவ வீரர்கள் உயிரிழப்பு: ரஷ்யா
24 Apr 2024மாஸ்கோ, போர் தொடங்கியதில் இருந்து தற்போது வரை 5 லட்சம் ராணுவ வீரர்களை உக்ரைன் இழந்துள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது
-
கிர்கிஸ்தானில் நீர் வீழ்ச்சியில் விழுந்து இந்திய மாணவர் பலி
24 Apr 2024கிர்கிஸ்தான், கிர்கிஸ்தானில் உள்ள நீர்வீழ்ச்சியில் விழுந்து ஆந்திர மாணவர் பலியானார்.
-
கஷ்டப்பட்டு உழைத்து சேர்த்த உங்கள் செல்வத்தை காங்கிரஸ் பறித்துவிடும்: சத்தீஷ்கரில் பிரதமர் மோடி பேச்சு
24 Apr 2024புதுடெல்லி, நீங்கள் கஷ்டப்பட்டு உழைத்து சேர்த்த செல்வத்தை உங்கள் பிள்ளைகள் பெறமாட்டார்கள், அதை காங்கிரஸ் கட்சி பறித்துவிடும் என்று சத்தீஷ்கர் மாநிலத்தில் நடந்த கூட்டத்த
-
பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்ன ஆகும்? இளையராஜா தரப்புக்கு உயர் நீதிமன்றம் கேள்வி
24 Apr 2024சென்னை, இளையராஜா பாடலை பயன்படுத்த விதித்த இடைக்கால தடையை நீக்கக்கோரி நிறுவனங்கள் தொடர்ந்த மேல்முறையீடு வழக்கில் பாடலுக்கு பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்ன ஆகும்? 
-
ஸ்மோக்கிங் பிஸ்கட்டை உட்கொள்ள வேண்டாம்: மாநில உணவு பாதுகாப்புத்துறை எச்சரிக்கை
24 Apr 2024சென்னை, ஸ்மோக்கிங் பிஸ்கட்டை உட்கொள்ள வேண்டாம் என மாநில உணவு பாதுகாப்புத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
-
கேரளாவில் சக்திவாய்ந்த வெடிகுண்டுகள் கண்டெடுப்பு
24 Apr 2024திருவனந்தபுரம், கேரள மாநிலம், கண்ணூர் மாவட்டம் மட்டன்னூரில் உள்ள ஒரு வயலில் சக்திவாய்ந்த வெடிகுண்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வரு
-
இட ஒதுக்கீட்டை அதிகரிக்க இண்டியா கூட்டணி நடவடிக்கை எடுக்கும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிக்கை
24 Apr 2024சென்னை, ஓ.பி.சி., எஸ்.சி./எஸ்.டி. மக்களின் இட ஒதுக்கீட்டை அதிகரிக்க இண்டியா கூட்டணி நடவடிக்கை எடுக்கும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
நாளை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் மணிப்பூரில் அடுத்தடுத்து குண்டுவெடிப்பு சம்பவம்
24 Apr 2024இம்பால், மணிப்பூரின் 2ம் கட்ட தேர்தல் நாளை நடைபெறவுள்ள நிலையில், அங்கு குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
தென் தமிழகத்தில் இன்று லேசான மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்
24 Apr 2024சென்னை, தென் தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
மஞ்சுமெல் பாய்ஸ் பட நடிகரை கரம் பிடித்தார் அபர்ணா தாஸ்
24 Apr 2024திருவனந்தபுரம், கேரள மாநிலம், வடக்கஞ்சேரியில் மஞ்சுமெல் பாய்ஸ் பட நடிகர் தீபக் பரம்போல்,நடிகை அபர்ணாதாஸ் ஆகியோரது திருமணம் நேற்று நடைபெற்றது.
-
கூவாகம் கூத்தாண்டவர் கோயில் தேரோட்டம் கோலாகலம்: ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு
24 Apr 2024கள்ளக்குறிச்சி, கள்ளக்குறிச்சி மாவட்டம் பிரசித்தி பெற்ற கூவாகம் கூத்தாண்டவர் கோயிலில் நடைபெற்ற தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.
-
விமான பயணத்தின்போது பெற்றோருக்கு அருகிலேயே குழந்தைகளுக்கு இருக்கை டி.ஜி.சி.ஏ. புதிய உத்தரவு
24 Apr 2024புதுடெல்லி, விமானங்களில் 12 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு அவர்களின் பெற்றோர் ஒருவருடன் இருக்கை ஒதுக்க வேண்டும் என்று விமான நிறுவனங்களுக்கு விமான போக்குவரத்து தலைமை இயக்க
-
திருச்சி விமான நிலையத்தில், சிங்கப்பூரில் இருந்து நூதனமாக காலணியில் வைத்து தங்கத்தை கடத்தி வந்தவர் கைது
24 Apr 2024திருச்சி, திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் சிங்கப்பூரிலிருந்து நூதனமாக காலணியில் தங்கத்தை பதுக்கி எடுத்து வந்த நபரை சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர்.
-
ரேசன் அரிசி கடத்தல் விவகாரம்: ஓ. பன்னீர் செல்வம் கோரிக்கை
24 Apr 2024சென்னை, ரேசன் அரிசி கடத்தலில் ஈடுபட்டு சட்டம் ஒழுங்கை சீர்குலைத்த தி.மு.க.வினரை உடனடியாக சட்டத்தின் முன் நிறுத்தி, உரிய தண்டனையை பெற்றுத் தரவேண்டுமென்று முன்னாள்
-
தமிழ்நாட்டில் ஈரோடு, சேலம் உள்ளிட்ட 15 மாவட்டங்களுக்கு வெப்ப அலைக்கான மஞ்சள் அலர்ட் வட உள்மாவட்டங்களில் 5 டிகிரி வரை வெப்பம் உயரும்
24 Apr 2024புதுடில்லி, ஏப். 25- தமிழகத்தில் ஈரோடு, சேலம் உட்பட 15 மாவட்டங்களுக்கு வெப்ப அலைக்கான மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.