எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

கோவை, மே.20 - ஐபிஎல் கிரிக்கெட் சூதாட்டத்தில் திருப்பூரில் கைதானவர்களிடம் கோவையில் ரகசிய இடத்தில் வைத்து தீவிர விசாரணை நடந்து வருகிறது. இதில் முக்கிய பிரமுகர்கள் சிக்கினார்கள். ஐபிஎல் கிரிக்கெட் போட்டி இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில் கிரிக்கெட் சூதாட்டமும், வீரர்கள் கைது நடவடிக்கைகளும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியில் கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்ட குற்றத்திற்காக ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரர்கள் ஸ்ரீசாந்த், அங்கீத்சவான், அஜித் சண்டிலா உள்பட 16 வீரர்கள் சிக்கினர். அதே நேரத்தில் சென்னையில் இந்த சூதாட்டத்தில் ஈடுபட்ட தரகர்களை சி.பி.சி.ஐ.டி. போலீசார் கைது செய்தனர். இதையடுத்து தமிழகம் முழுவதும் முக்கிய நகரங்களில் போலீசார் தீவிர கண்காணிப்பை முடிக்கி விட்டுள்ளனர். இந்த நிலையில் ஐபிஎல் கிரிக்கெட் சூதாட்டம் தொடர்பாக சென்னையில் கைதான தரகர் கொடுத்த தகவலின் பேரில் கோவை ஆர்.எஸ்.புரம் பொன்னையராஜபுரத்தை சேர்ந்த லட்சுமணன் (54) கைது செய்யப்பட்டார். கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட விரும்புவதாக அவரிடம் போலீசார் நைசாக செல்போனில் தொடர்பு கொண்டு பேசினர். அதை நம்பிய லட்சுமணன் சம்மதம் தெரிவித்தார். இதை தொடர்ந்து அதிரடியாக லட்சுமணன் வீட்டுக்கு போலீசார் புகுந்து அவரை கைது செய்தனர். அப்போது லட்சுமணனின் லேப்டாப்பில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும், மும்பை இந்தியன் அணியும் மோதிய ஆட்டம் ஓடிக்கொண்டிருந்தது. லட்சுமணனிடம் இருந்த லேப்டாப் ரூ.5 லட்சத்து 5ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். அவரை ரகசிய இடத்தில் அழைத்து சென்று விசாரித்ததில். கோவை சாய்பாபா காலனியை சேர்ந்த பாலசுப்பிரமணியம்(51), உக்கடம் கரும்புக்கடையை சேர்ந்த அக்பர்(51) ஆகியோருக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது. அவர்களையும் போலீசார் பிடித்து விசாரித்தனர். அவர்களிடம் இருந்த ரூ.40 ஆயிரம், லேப்டாப், 7 செல்போன்கள் மற்றும் சில முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த சூதாட்ட விவகாரத்தில் லட்சுமணன் தான் முக்கிய நபராக செயல்பட்டுள்ளார். அவருக்கு சென்னை, டெல்லி, மும்பை உள்பட பல்வேறு நகரங்களில் உள்ள சூதாட்ட தரகர்களிடம் தொடர்பு உள்ளது. அவருக்கு அடுத்த இடத்தில் பாலசுப்பிரமணியம், அக்பர் ஆகியோர் செயல்பட்டுள்ளனர்.
சூதாட்டம் மூலம் கோவையில் வசூலான பணத்தை லட்சுமணன் நெட்பேங்கிங் வழியாக சென்னை, டெல்லி, மும்பையில் உள்ள தரகர்களுக்கு அனுப்பியுள்ளார். கைதானவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட செல்போன்களில் பலரது எண்கள் உள்ளன. அவர்கள் அனைவருமே சூதாட்டத்தில் ஈடுபட்டதும். அதில் பெரும்பாலானவர்கள் தொழில் அதிபர்கள், கிளப்புகளுக்கு செல்பவர்கள் தான் என்றும் விசாரணையில் தெரியவந்துள்ளது. தொழில் அதிபர்களை பிடிக்கவும் போலீசார் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். கோவையில் கைதான இவர்களின் கீழ் இன்னும் ஏராளமான கீழ் மட்ட தரகர்களும் இருந்துள்ளனர். லட்சுமணன் கைதானதை தொடர்ந்து அனைவரும் தமது செல்போன்களை சுட்ச்ஆப் செய்து விட்டு தலைமறைவாகிவிட்டனர். அவர்களை தனிப்படை போலீசார் வலை விரித்து தேடி வருகிறார்கள்.
தலைமறைவாக இருப்பவர்கள் குறித்தும் சூதாட்ட பணத்தை வெளிமாநில தரகர்களுக்கு அனுப்பியது எப்படி என்பது குறித்தும் கைதானவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. இதற்கிடையில் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக திருப்பூரை சேர்ந்த 2 தரகர்கள் போலீசாரிடம் சிக்கியுள்ளனர். அவர்களை போலீசார் கோவைக்கு அழைத்து வந்து ரகசிய இடத்தில் வைத்து விசாரித்து வருகிறார்கள். சில பனியன் அதிபர்களும் இந்த கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்டுவந்தது தெரியவந்துள்ளது. தற்போது கைதானவர்களின் பெயர் விபரங்களை போலீசார் வெளியிடவில்லை. அவர்களுக்கு பின்னால் உள்ளவர்கள் தலைமறைவாகிவிடக்கூடும் என்பதால் கைதானவர்களின் பெயர்கள் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது. மேலும் கோவையில் கைதான லட்சுமணன் 2000ம் ஆண்டு முதலே கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்டு வந்துள்ளார். இப்போது நடந்துள்ள சூதாட்டம் ரூ.10ஆயிரம் முதல் ரூ.1லட்சும் வரை நடந்துள்ளது. ரூ.10 ஆயிரம் கட்டுபவர்கள் பெட்டிங்கில் வெற்றி பெற்றால் ரூ.20 ஆயிரமும் ரூ.1லட்சம் கட்டுபவர்களுக்கு ரூ.2லட்சமும் என எவ்வளவு பணம் கட்டப்படுகிறதோ அவர்களுக்கு அப்படியே இரட்டிப்பு பணம் கொடுக்கப்பட்டுள்ளது என்று புலன் விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த சூதாட்ட சம்பவம் கோவை, திருப்பூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 9 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 10 months 11 hours ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 10 months 2 weeks ago |
-
தங்கம் விலை மேலும் சரிவு
16 Jul 2025சென்னை, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.360 குறைந்து ஒரு சவரன் ரூ.72,800-க்கு விற்பனையானது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 16-07-2025.
16 Jul 2025 -
விஜய் சேதுபதி - நித்யா மேனன் நடிக்கும் 'தலைவன் தலைவி'
16 Jul 2025சத்யஜோதி பிலிம்ஸ் டி ஜி தியாகராஜன் வழங்க, செந்தில் தியாகராஜன் - அர்ஜுன் தியாகராஜன் தயாரிப்பில் பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி - நித்யா மேனன் நடித்திருக்கும்
-
மயிலாடுதுறை மாவட்டத்திற்கு 8 புதிய அறிவிப்புகள் வெளியீடு
16 Jul 2025மயிலாடுதுறை, மயிலாடுதுறை மாவட்டத்திற்கு 8 புதிய அறிவிப்புகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.
-
ஆகஸ்ட் 25-ல் மதுரையில் நடைபெறுகிறது: த.வெ.க.வின் 2-வது மாநில மாநாடு: விஜய் அறிவிப்பு
16 Jul 2025சென்னை, தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு, வருகிற ஆகஸ்ட் மாதம் 25ஆம் தேதி (25.08.2025) திங்கட்கிழமை அன்று மதுரையில் நடைபெற உள்ளது என அக்கட்சியின் தலைவர் வ
-
டிஜே அருணாச்சலம் நடிக்கும் உசுரே
16 Jul 2025ஸ்ரீகிருஷ்ணா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் உசுரே படத்தின் ட்ரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது.
-
அமெரிக்காவில் சிகிச்சை முடிந்து முதல்வர் பினராயி கேரளா திரும்பினார்
16 Jul 2025திருவனந்தபுரம் : அமெரிக்காவில் சிகிச்சை முடிந்து கேரளா முதல்வர்பினராய் விஜயன் திரும்பினார்.
-
ரஷ்யாவிடம் வர்த்தகம் செய்தால்... இந்தியா, சீனா, பிரேசிலுக்கு நேட்டோ கடும் எச்சரிக்கை
16 Jul 2025வாஷிங்டன், பிரேசில், சீனா மற்றும் இந்தியா ஆகிய நாடுகள் ரஷ்யாவுடன் தொடர்ந்து வணிகம் செய்தால் கடுமையான பொருளாதாரத் தடைகளை சந்திக்க நேரிடும் என்று நேட்டோ பொதுச் செயலாளர் ம
-
பாட்னா ஏர்போர்ட்டில் பரபரப்பு: நொடி பொழுதில் விபத்தில் இருந்து தப்பிய விமானம்
16 Jul 2025பாட்னா : பாட்னாவில் விபத்தில் இருந்து தப்பிய இண்டிகோ விமானத்தால் பரபரப்பு ஏற்பட்டது.
-
ரூ.2.4 கோடிக்கு ஆன்லைன் ஷாப்பிங் செய்த மூதாட்டி..!
16 Jul 2025பீஜிங், சீனாவின் ஜியாடிங் பகுதியை சேர்ந்த 66 வயது மூதாட்டி ஒருவர் ஆன்லைனில் மூலம் ரூ.2.4 கோடிக்கு ஷாப்பிங் செய்தார்.
-
சென்னை, தேனி உள்ளிட்ட 11 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு
16 Jul 2025சென்னை, தமிழகத்தில் சென்னை,நீலகிரி, தேனி, தென்காசி, வேலூர், திருவண்ணாமலை உள்ளிட்ட 11 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
டிராகன் நூறாவது நாள் வெற்றி விழா
16 Jul 2025ஏ.ஜி.எஸ். தயாரிப்பில் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில், பிரதீப் ரங்கநாதன், நடிப்பில் வெளியான படம் டிராகன் திரைப்படம் நூறாவது நாளைக் கடந்து ஓடிக்கொண்டிருக்கிறது.
-
மற்ற வீரர்களுடன் இணைந்து பணியாற்றியது சிறந்த அனுபவம்: சுபான்ஷு சுக்லா பதிவு
16 Jul 2025வாஷிங்டன், சர்வதேச விண்வெளி நிலையத்தில் மற்ற வீரர்களுடன் இணைந்து பணியாற்றியது சிறப்பாக இருந்ததாக தெரிவித்துள்ள இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா, என் மீதும், என் பண
-
மாநிலங்களவை எம்.பியாக பதவியேற்பு: ரஜினியை சந்தித்து வாழ்த்து பெற்ற நடிகர் கமல்ஹாசன்
16 Jul 2025சென்னை, மாநிலங்களவை எம்.பியாக வரும் 25-ம் தேதி பதவியேற்கவுள்ள நிலையில், மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்ட சான்றிதழை சக நடிகரும், தனது நண்பருமான ரஜினிகாந்திடம்
-
கூட்டணியைப் பொருத்தவரை நான் சொல்வதே இறுதியானது: எடப்பாடி பழனிசாமி விளக்கம்
16 Jul 2025சிதம்பரம், தமிழகத்தில் கூட்டணி ஆட்சி என்று அமித்ஷா சொல்லவில்லை. எங்கள் கூட்டணியே ஆட்சி அமைக்கும் என்றுதான் சொன்னார்.
-
ஈரான் பயணத்தை தவிர்க்குமாறு இந்திய தூதரகம் அறிவுறுத்தல்
16 Jul 2025தெஹ்ரான் : அத்தியாவசியமற்ற ஈரான் பயணத்தை தவிர்க்குமாறு அந்நாட்டில் உள்ள இந்திய தூதரகம் இந்தியர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.
-
ஜென்ம நட்சத்திரம் இசை வெளியீட்டு விழா
16 Jul 2025அமோகம் ஸ்டுடியோஸ் விஜயன் தயாரிப்பில் மணிவர்மன் இயக்கத்தில் தமன் நடிப்பில் உருவாகியுள்ள படம் ’ஜென்ம நட்சத்திரம்.
-
உருட்டு உருட்டு' பட இசை வெளியீட்டு விழா
16 Jul 2025ஜெய் ஸ்டுடியோ கிரியேஷன்ஸ், சாய் காவியா மற்றும் சாய் கைலாஷ் வழங்க, பத்மராஜு ஜெய்சங்கர் தயாரிப்பில் பாஸ்கர் சதாசிவம் இயக்கத்தில், உருவாகியுள்ள படம் உருட
-
AI தொழில்நுட்பத்தில் பன் பட்டர் ஜாம்
16 Jul 2025பன் பட்டர் ஜாம் படத்தின் Veo3 AI எனும் தொழில்நுட்பத்தை பயன்படுத்தியுள்ளார். Veo3 AI என்பது, இயற்கையான தோற்றம் மற்றும் சினிமா தரம் கொண்ட வீடியோக்களை உருவாக்க
-
வள்ளிமலை வேலன் இசை வெளியீட்டு விழா
16 Jul 2025எம் என் ஆர் பிக்சர்ஸ், எம் நாகரத்தினம் தயாரித்து நடிக்க, எஸ் மோகன் எழுதி இயக்க, கிராமத்துக் கதைக்களத்தில் கமர்ஷியல் படைப்பாக உருவாகியுள்ள படம், வள்ளிமலை வேலன்.
-
துருவ் சர்ஜா நடிக்கும் 'கே.டி-தி டெவில்'
16 Jul 2025துருவ் சர்ஜா நடிப்பில் இயக்குநர் பிரேம் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் கே.டி.
-
குழந்தைகளின் ஆதாரை புதுப்பிக்க அறிவுறுத்தல்
16 Jul 2025சென்னை : குழந்தைகளின் ஆதாரை புதுப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
-
இன்று தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம்
16 Jul 2025சென்னை : முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் என துரைமுருகன் அறிவித்துள்ளார்.;
-
ஐ.நா., பாதுகாப்பு படையினர் மீது தாக்குதல்; நடவடிக்கை எடுக்க இந்தியா வலியுறுத்தல்
16 Jul 2025நியூயார்க் : ஐ.நா., படையினர் தாக்கப்படும் சம்பவங்களில் குற்றவாளிகள் தண்டிக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என ஐ.நா.,வில் இந்தியாவுக்கான நிரந்தர பிரதிநிதி பர்வதநேனி ஹரிஷ்
-
'ஃப்ரீடம்' திரைவிமர்சனம்
16 Jul 2025சசிகுமார் மற்றும் அவரது நண்பர்கள் சிலர் 1991 ஆம் ஆண்டு இலங்கையிலிருந்து படகு மூலம் தமிழகத்துக்கு வருகிறார்கள். அவர்கள் ராமேஸ்வரம் முகாமில் தங்க வைக்கப்படுகிறார்கள்.