எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, மே.12 - சென்னை சட்டமன்ற தொகுதிகளின் வாக்கு எண்ணிக்கையில் 1300 அரசு ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளதாகவும், கொளத்தூர், வேளச்சேரி உள்ளிட்ட சில தொகுதிகளின் முடிவுகள் தாமதமாக வெளிவரும். என்றும் மாவட்ட தேர்தல் அதிகாரியும், மாநகராட்சி ஆணையருமான கார்திகேயன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
இது பற்றி அவர் கூறியதாவது:-
சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 16 தொகுதிகளில் 210 டேபிள்கள் அமைக்கப்பட்டு வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. ஒரு வேட்பாளருக்கு ஒரு ஏஜெண்ட் என்ற முறையில் எண்ணிக்கையை பார்வையிட அனுமதிக்கப்படுவார்கள். வேட்பாளர்கள் அதிகமுள்ள தொகுதிகளுக்கு ஏற்ற முறையில் டேபிள்கள் அமைக்கப்படும். வாக்கு எண்ணிக்கை சுற்றுகளும் இதையொட்டி மாறும். மொத்தம் 254 சுற்றுகள் வாக்கு எண்ணிக்கை நடைபெறும்.
கொளத்தூர், வேளச்சேரி ஆகிய தொகுதிகளுக்கு அதிக சுற்றுகள் வாக்கு எண்ணிக்கை நடைபெறும். வாக்கு எண்ணிக்கை நடைபெறும் இடத்தில் வாக்கு எண்ணிக்கை அலுவலர், கண்காணிப்பாளர், ஒரு வீடியோ கிராஃபர், ஒரு உதவியாளர் உட்பட 4 பேர்கள் இருப்பார்கள். மொத்தம் 16 தொகுதிகளில் 1050 அரசு ஊழியர்கள் நேரடியாகவும், பிற அலுவல்களுக்கு 250 அரசு ஊழியர்கள் உட்பட 1300 பேர் வாக்கு எண்ணிக்கை பயன்படுத்தப்படுவார்கள்.
தேர்தல் முடிவுகள் வெளிப்படையான தன்மையுடன் இருக்கவேண்டும் என்ற தேர்தல் ஆணையத்தின் அறிவிப்புப்படி வாக்கு சாவடிகளில் பயன்படுத்தப்பட்ட அதே படிவங்கள் வாக்கு எண்ணிக்கையின் போதும் பயன்படுத்தப்படும். ஒவ்வொரு சுற்று வாக்கு எண்ணிக்கையின் முடிவுகள் கண்காணிப்பாளர் மற்றம் தேர்தல் அலுவலரிடம் காண்பிக்கப்பட்டு அவர்களுடைய ஒப்புதலுக்கு பிறகு அவரின் கையொப்பத்தை பெற்றபின் அறிவிக்கப்படும்.
செய்தியாளர்களுக்கு உள்ள தனி அறையில் இதற்கான அலுவலர்கள் ஒவ்வொரு சுற்றின் முடிவின்போதும் முறைப்படி வாக்கு எண்ணிக்கையின் முடிவை அறிவிப்பார்கள். அங்கு வைக்கப்பட்டுள்ள கரும் பலகையில் வாக்கு சுற்று எண்ணிக்கை விபரம் எழுதி வைக்கப்படும். இவைகள் அனைத்தும் கணினியில் பின்பு பதிவு செய்யப்படும். செய்தியாளர்கள் அறையில் செல்போன்களை பயன்படுத்திக்கொள்ளலாம். வாக்குகள் நடத்தும் இடத்தை செய்தியாளர்கள் பார்வையிட அங்குள்ள தேர்தல் அதிகாரிகளின் அனுமதியுடன் பார்வையிடலாம். செய்தியாளர்களுக்கு அனுமதிக்கப்பட்ட இடத்தை தவிர வேறு இடங்களில் செல்போன்களை பயன்படுத்தக்கூடாது.
இதேபோல் வேட்பாளர்களும், அவரது தலைமை ஏஜெண்டுகளும், அவர்களுக்கு அனுமதிக்கப்பட்ட தனி அறைகளில் மட்டுமே பயன்படுத்தவேண்டும். வாக்கு எண்ணிக்கை நடைபெறும் இடத்திற்கு வேட்பாளர்களும், தலைமை ஏஜெண்டுகளும் அவர்களுக்கு அனுமதிக்கப்பட்ட தனி அறையில் வைத்துவிட்டு செல்லவேண்டும். வாக்கு ஏஜெண்டுகள் பென்சில், பேப்பர், சாதாரண ரக கால்குலெட்டர்கள் கொண்டு வர அனுமதி உண்டு. எக்காரணம் கொண்டு வாக்கு எண்ணிக்கை ஏஜெண்டுகள் வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு சொல்போன்களை கொண்டு வரக்கூடாது. மீறிக்கொண்டு வரும் வாக்கு ஏஜெண்டுகள் திருப்பி அனுப்பப்படுவார்கள். செய்தியாளர்கள் தேர்தல் ஆணையம் அளித்துள்ள அடையாள அட்டை, அரசு அளித்துள்ள அடையாள அட்டை, செய்தி ஒளிபரப்பு துறை அளித்துள்ள அடையாள அட்டை இவற்றில் ஏதேனும் ஒன்று இருந்தால் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்.
ஒரு சுற்று எண்ணிக்கை முடிய 1 மணி நேரம் ஆகலாம். முதல் சுற்று எண்ணிக்கை காலை 8.00 மணிக்கு தொடங்குகிறது. முதலில் சென்னையில் பதிவான 3082 தபால் ஓட்டுகள் எண்ணப்படும். பிறகு வாக்கு சாவடியில் பதிவான வாக்குகள் எண்ணப்படும். முதல் சுற்று அறிவிக்க 9 மணியிலிருந்து 9.15 ஆகலாம். முழுமையான முடிவுகள் அறிவிக்க மாலை 5 மணி வரை ஆகும்.
இவ்வாறு மாநகராட்சி ஆணையர் கார்திகேயன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு பிரெட்2 days 17 sec ago |
மினி பான் கேக்5 days 19 hours ago |
ஸ்வீட் பால்.1 week 2 days ago |
-
சித்திரை திருவிழா: ஸ்ரீரங்கம் கோவிலில் இன்று தேரோட்டம்
05 May 2024திருச்சி : திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சித்திரை திருவிழா தேரோட்டம் இன்று நடைபெறுகிறது.
-
ஊழலுக்கு எதிராக பா.ஜ.க, ஜனசேனா, தெலுங்குதேசம் இணைந்து போராடும் : ஆந்திராவில் அமித்ஷா பிரசாரம்
05 May 2024அமராவதி : ஆந்திராவில் ஊழல், குற்றம், மாபியா, மதமாற்றம் ஆகியவற்றுக்கு எதிராக பா.ஜ., ஜனசேனா, தெலுங்கு தேசம் ஆகிய கட்சிகள் இணைந்து போராடுகின்றன என மத்திய உள்துறை அமைச்சர்
-
காங்கிரஸ் மாவட்ட தலைவர் கொலை வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்ற வேண்டும் : தமிழக பா.ஜ.க. வலியுறுத்தல்
05 May 2024சென்னை : நெல்லை காங்கிரஸ் மாவட்ட தலைவரின் கொலை வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றி அரசு உத்தரவிட வேண்டும் என்று தமிழக பா.ஜ.க.
-
போதை மருந்து கொடுத்து பாலியல் துன்புறுத்தல் : ஆஸ்திரேலிய எம்.பி. புகார்
05 May 2024போதை மருந்து கொடுத்து பாலியல் துன்புறுத்தல் : ஆஸ்திரேலிய எம்.பி. புகார்
-
பெட்ரோல் டீசல் விலை நிலவரம்
05 May 2024சென்னை : சென்னையில் பெட்ரோல், டீசல் விலை மாற்றமின்றி விற்பனையானது.
-
மோசமான வானிலை:தென்கொரியாவில் 40 விமானங்கள் ரத்து
05 May 2024சியோல் : தென்கொரியாவின் தெற்குப் பகுதியில் உள்ள ஜேஜு தீவில் மோசமான வானிலை நிலவுவதால் குறைந்தது 40 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக விமான நிலைய அதிகாரிகள் ஞாயிற்றுக்க
-
வில்லேஜ் குக்கிங் யூடியூப் சேனல் தாத்தாவிடம் நலம் விசாரித்த ராகுல்
05 May 2024சென்னை : பிரபல வில்லேஜ் குக்கிங் யூடியூப் சேனல் குழுவின் முன்னாள் சமையல் கலைஞரான தாத்தாவிடம் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நலம் விசாரித்துள்ளார்.
-
ஆஸ்திரேலியாவில் பொதுமக்களை கத்தியால் குத்திய சிறுவனை சுட்டுக்கொன்ற போலீசார்
05 May 2024மெல்போர்ன் : ஆஸ்திரேலியாவில் பொதுமக்களை கத்தியால் குத்திய சிறுவனை போலீசார் சுட்டுக் கொன்றனர்.
-
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இளநிலை படிப்புகளுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்: தமிழக அரசு
05 May 2024சென்னை : தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2024-25 ஆம் ஆண்டுக்கான இளநிலைப் பட்டப்படிப்புகளில் சேர இன்று (மே 6) முதல் விண்ணப்பிக்கலாம
-
இந்திய விமானப்படை கான்வாய் மீது நடந்த பயங்கரவாத தாக்குதல் : கார்கே, ராகுல் காந்தி கண்டனம்
05 May 2024புதுடெல்லி : காஷ்மீரில் இந்திய விமானப்படை கான்வாய் மீது நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல் சம்பவத்திற்கு காங்கிரஸ் தலைவர்கள் மல்லிகார்ஜூன கார்கே, ராகுல் காந்தி ஆகியோ
-
பேடிஎம் நிறுவன தலைவர் பவேஷ் குப்தா ராஜினாமா
05 May 2024புது டெல்லி : பேடிஎம் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியும், தலைவருமான பாவேஷ் குப்தா தன்னுடைய பொறுப்பை ராஜினாமா செய்துள்ளார்.
-
வெயில் தாக்கம்: சதுரகிரி கோவிலுக்கு பக்தர்கள் வருகை வெகுவாக குறைந்தது
05 May 2024விருதுநகர் : வெயிலின் தாக்கத்தால் நேற்று சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு செல்லும் பக்தர்களின் வருகை குறைந்த நிலையில் காணப்பட்டது.
-
கோடை விடுமுறை: சென்னையில் இருந்து விமான சேவை அதிகரிப்பு
05 May 2024சென்னை : கோடை விடுமுறையையொட்டி சென்னை விமான நிலையத்தில் இருந்து தூத்துக்குடி, திருச்சி, மதுரை, கோவை, பெங்களூருவுக்கு கூடுதல் விமானங்கள் இயக்கப்படுகின்றன.
-
நாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து : 13-ம் தேதி முதல் மீண்டும் இயக்கம்
05 May 2024நாகப்பட்டினம் : நாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து வரும் 13-ம் தேதி மீண்டும் இயக்கப்படவுள்ளது.
-
பிரதமர் மோடி அச்சத்தில் உள்ளார்: திருச்சியில் திருமாவளவன் பேட்டி
05 May 2024திருச்சி : பிரதமர் மோடி சமீப காலமாக பேசி வருகிற கருத்துக்கள் காங்கிரஸ் மற்றும் இண்டியா கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெற்று விடும் என்ற அச்சத்தில் இருப்பதை வெளிப்படுத்த
-
ஈரான் மீன்பிடி கப்பலில் மூச்சுத் திணறலால் அவதிப்பட்ட பாகிஸ்தான் மீனவரை காப்பாற்றியது இந்திய கடற்படை
05 May 2024புதுடெல்லி : ஈரான் மீன்பிடி கப்பலில் மூச்சுத் திணறல் மற்றும் வலிப்புடன் அவதிப்பட்ட பாகிஸ்தான் மீனவரை இந்திய கடற்படையின் மருத்துவக் குழு சிகிச்சை அளித்து காப்பாற்றியது.
-
சபரிமலையில் உடனடி தரிசன முன்பதிவு ரத்து
05 May 2024திருவனந்தபுரம் : சபரிமலை ஐயப்பன் கோவிலில் உடனடி தரிசன முன்பதிவு முறை ரத்து செய்யப்படவுள்ளதாக தேவசம்போர்டு தலைவர் தெரிவித்துள்ளார்.
-
முல்லைப்பெரியாறு அணை விவகாரம்: சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மனு
05 May 2024புதுடெல்லி : முல்லைப்பெரியாறு அணையில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள அனுமதி தர கேரளாவுக்கு உத்தரவிட வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மனு தாக்கல் செய்துள்ளது.
-
கனடாவில் இந்தியர்கள் 3 பேர் கைது: மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் கருத்து
05 May 2024புதுடெல்லி : காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில், கைது செய்யப்பட்டுள்ள மூன்று இந்தியர்கள் பற்றிய விவரங்களை கனடா போலீசார் தெர
-
ஜெலன்ஸ்கியை தேடப்படுவோர் பட்டியலில் வைத்தது ரஷ்யா
05 May 2024கீவ் : உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கிக்கு எதிராக, குற்ற வழக்கு ஒன்றை பதிவு செய்துள்ள ரஷ்யா அவரை தேடப்படுவோர் பட்டியலிலும் வைத்துள்ளது.
-
சாமானிய குழந்தைகள் சாதனை படைக்க வாய்ப்பளிக்கும் நீட் தேர்வு : அண்ணாமலை பெருமிதம்
05 May 2024சென்னை : சாமானிய குடும்பத்தில் இருந்து வரும் குழந்தைகளும், மருத்துவக் கல்வியில் சாதனை படைக்க நீட் தேர்வு வாய்ப்பு வழங்குகிறது என தமிழக பா.ஜ.க.
-
தமிழகத்தில் வன்முறையாளர்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் : முதல்வருக்கு ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை
05 May 2024சென்னை : தமிழகத்தில் வன்முறையாளர்களை இரும்புக்கரம்கொண்டு ஒடுக்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலினுக்கு ஓ. பன்னீர் செல்வம் கோரிக்கை விடுத்துள்ளார்.
-
டெல்லி - மும்பை எக்ஸ்பிரஸ் சாலையில் விபத்து: 6 பேர் பலி
05 May 2024ஜெய்ப்பூர் : ராஜஸ்தான் மாநிலம் சவாய் மாதோபூர் மாவட்டத்தில் நேற்று கார் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியது.
-
இலவச யோகா வகுப்புகள்: பாகிஸ்தான் அரசு ஏற்பாடு
05 May 2024இஸ்லாமாபாத் : பாகிஸ்தானில் இலவச யோகா வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன.
-
கோடை விடுமுறை எதிரொலி: ஊட்டி தாவரவியல் பூங்காவில் குவிந்த சுற்றுலா பயணிகள்
05 May 2024ஊட்டி : கோடை விடுமுறை காரணமாக ஊட்டி தாவரவியல் பூங்காவில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது.