எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சென்னை, மே.12 - சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கையையொட்டி சென்னையில் உள்ள 17 தொகுதிகள் 4 மையங்களில் வாக்கு எண்ணப்படுகிறது. இதையொட்டி விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 3 அடுக்கு பாதுகாப்புடன் 4 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர் என்று போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் தெரிவித்தார்.
இது பற்றி நேற்று செய்தியாளர்களை சந்தித்த போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் கூறியதாவது:-
சென்னையில் உள்ள 16 தொகுதிகள் மற்றும் காஞ்சிபுரத்தில் ஒரு தொகுதி சேர்த்து 17 தொகுதிகளுக்கு 4 மையங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.
சென்னைக்கு உட்பட்ட இடத்தில் 3 மையங்களும், காஞ்சிபுரத்தில் ஒரு வாக்கு எண்ணிக்கை மையமும் சென்னை போலீசாரின் பாதுகாப்பில வருகிறது. லயோலா கல்லூரி, அண்ணா பலக்கலைக்கழகம், ராணி மேரி கல்லூரி ஆகிய மையங்கள் சென்னையிலும், முகமது சதக் கலைக்கல்லூரி காஞ்சி மாவட்டத்திலும் வருகிறது. லயோலா கல்லூரி வாக்கு எண்ணும் மையத்தில் பெரம்பூர், கொளத்தூர், வில்லவாக்கம், திரு.வி.க.நகர், எழும்பூர், ஆயிரம்விளக்கு, அண்ணாநகர் ஆகிய தொகுதிகளும், அண்ணா பல்கலைக்கழக வாக்கு மையத்தில், விருகம்பாக்கம், சைதாப்பேட்டை, தி.நகர், மயிலாப்பூர், வேளச்சேரி ஆகிய தொகுதிகளும், ராணி மேரி கல்லூரி வாக்கு மையத்தில் ஆர்.கே.நகர், துறைமுகம், ராயபுரம், சேப்பாக்கம் திருவல்லிக்கேணி ஆகிய தொகுதிகளும், முகமதுசதக் கலைக்கல்லூரி வாக்கு மையத்தில் சோளிங்நல்லூர் தொகுதியின் வாக்குகளும் எண்ணப்படும்.
ஒவ்வொரு வாக்கு எண்ணிக்கை மையத்திற்கும், ஒவ்வொரு இணை ஆணையர் தலைமையில் இரண்டு துணை ஆணையர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள். ஒரு துணை ஆணையர் வாக்கு மையத்தின் உள்ளேயும், ஒரு துணை ஆணையர் வாக்கு மையத்தின் வெளியிலும் பாதுகாப்புக்களை கவனிப்பார்கள். ஒவ்வொரு தொகுதிக்கும் ஒரு உதவி ஆணையர் பாதுகாப்பு பணிக்கு நியமிக்கப்படுவார்கள்.
அண்ணா பல்கலைக்கழகத்தில் 2 துணை ஆணையர்கள், 7 உதவி ஆணையர்கள், 27 ஆய்வாளர்கள், 63 உதவி ஆய்வாளர்கள் உட்பட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள். லயோலா கல்லூரியில் 2 துணை ஆணையர்கள், 2 கூடுதல் துணை ஆணையர்கள், 10 உதவி ஆணையர்கள், 30 ஆய்வாளர்கள், 60 உதவி ஆய்வாளர்கள் உட்பட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள்.
ராணி மேரி கல்லூரி வாக்கு மையத்தில் 2 துணை ஆணையர்கள், 7 உதவி ஆணையர்கள், 28 ஆய்வாளர்கள், 55 உதவி ஆய்வாளர்கள் உட்பட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். முகமதுசதக் கலைக்கல்லூரி வாக்கு மையத்தில் 1 துணை ஆணையர், 3 உதவி ஆணையர், 9 ஆய்வாளர்கள், 20 உதவி ஆய்வாளர்கள் உட்பட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள்.
மொத்தம் 2700 போலீசார், 320 துணை ராணுவப்படை உட்பட 4 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர். வாக்கு எண்ணும் மையத்தில் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்படுகிறது. வாக்கு எண்ணிக்கை மையத்தில் வெளியே 1 அடுக்கும், வாக்கு எண்ணிக்கை மைய வாயிலுக்கும் வாக்கு எண்ணிக்கை மைய கட்டிடத்திற்கும் இடையேயில் 1 அடுக்கு பாதுகாப்பும், வாக்கு எண்ணிக்கை மைய கட்டிட வாசலில் 1 அடுக்கு பாதுகாப்பும் போடப்படுகிறது.
வாக்கு எண்ணிக்கை 100 மீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் அனுமதிக்கப்படாது. வாக்கு எண்ணிக்கை மையங்களுக்கு தலைமை தேர்தல் ஆணையம் உள்ளிட்ட அங்கீகரிக்கப்பட்ட அடையாள அட்டை வைத்திருப்பவர்கள் மட்டுமே உள்ளே அனுமதிக்கப்படுவார்கள். தேர்தல் அதிகாரிகள் வாகனம் மட்டுமே வாக்கு எண்ணிக்கை மையத்தில் அனுமதிக்கப்படும். கண்காணிப்பாளர்கள், தேர்தல் அலுவலர்கள், வேட்பாளர்கள், தலைமை ஏஜெண்டுகள், செய்தியாளர்கள் மட்டுமே செல்போன் உள்ளே கொண்டு செல்ல அனுமதிக்கப்படுவார்கள், காவலர்களில் உதவி ஆணையர், மற்றும் அதற்கு மேல் பதவியில் உள்ள காவல் அதிகாரிகள் மட்டுமே உள்ளே கொண்டு செல்லலாம்.
வாக்கு எண்ணிக்கை ஏஜெண்டுகள் பென்சில் மட்டுமே எடுத்துச்செல்ல அனுமதிக்கப்படுவார்கள். கேமரா, வீடியோ கேமரா, சாதாரண ரக கால்குலெட்டர் அனுமதி உண்டு. தேர்தல் அலுவலர்கள் வாகனம் தவிர மற்றவர்களின் வாகனங்கள் குறிப்பிட்ட அனுமதிக்கப்பட்ட இடங்களிலும் மட்டுமே அனுமதிக்கப்படும். உணவுப்பொருட்கள், தண்ணீர், தீப்பெட்டிகள், சயின்டிபிக் கால்குலெட்டர், இங்க்பேனா உள்ளே கொண்டு செல்ல அனுமதி இல்லை. அனுமதி இன்றி எடுத்து வரும் பொருட்கள் போலீஸ் கவுன்டரில் பாதுகாக்கப்பட்டு சம்மந்தப்பட்டவர்களிடம் டோக்கன் வழங்கப்படும்.
வாக்கு மைய கட்டிடத்தின் உள்ளே 4 பிரிவுகள் பிரிக்கப்பட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. முதல் பிரிவு வாக்கு எண்ணிக்கை நடைபெறும். இங்கு வாக்கு எண்ணிக்கை அலுவலர்கள் அனுமதிக்கப்படுவார்கள். 2 பிரிவில் தேர்தல் அலுவலக கண்காணிப்பு அலுவலகம் இயங்கும், 3 -வது பிரிவில் செய்தியாளர்கள் செய்தி சேகரிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும், அவர்கள் இங்கு அமர்ந்து செய்திகளை சேகரிக்கலாம். இந்த அறையில் மட்டுமே கேமராக்கள், செல்போன்கள் வைத்துக்கொள்ளலாம். 4-வது பிரிவில் வேட்பாளரும், அவர்களுடைய ஏஜெண்டுகளும் பயன்படுத்தும் வகையில் அமைந்திருக்கும். இங்கு அவர்களது செல்போன்களை பயன்படுத்திக்கொள்ளலாம்.
இவ்வாறு போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 12 months 1 day ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 1 year 2 days ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 3 weeks ago |
-
பங்குச்சந்தை முதலீடு: மதுரை தொழில் அதிபரிடம் கோடிக்கணக்கில் மோசடி
21 Sep 2025மதுரை : மதுரையை சேர்ந்தவர் சிவக்குமார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 21-09-2025.
21 Sep 2025 -
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 21-09-2025.
21 Sep 2025 -
தூத்துக்குடியில் புதிதாக அமைகிறது: ரூ. 30 ஆயிரம் கோடி முதலீட்டில் இரண்டு கப்பல் கட்டும் தளங்கள்
21 Sep 2025சென்னை : தூத்துக்குடியில் 30 ஆயிரம் கோடி ரூபாய் முதலீட்டில், 55 ஆயிரம் பேர் வேலைவாய்ப்பு பெறும் வகையில் இரு கப்பல் கட்டும் தளங்கள் அமையவுள்ளன என்றும் இவை தென் தமிழ்நாட்
-
'சென்னை ஒன்' செயலி மூலம் பயணம் செய்யும் புதிய வசதி : முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்
21 Sep 2025சென்னை : இந்தியாவிலேயே முதன் முறையாக 'சென்னை ஒன்' செயலி மூலம் பஸ், புறநகர் ரெயில், மெட்ரோ ரெயில் மற்றும் கேப், ஆட்டோக்களை ஒரே கியூஆர் கோடு பயணச்சீட்டு பயணம் செய்யும் வச
-
சென்னைக்கு கூடுதல் குடிநீர் வழங்கும் திட்டத்தால் 20 லட்சம் பேருக்கு பயன் : முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
21 Sep 2025சென்னை : சென்னை மாநகருக்கு செம்பரம்பாக்கம் நீர் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து கூடுதலாக நாளொன்றுக்கு 265 மில்லியன் லிட்டர் குடிநீர் வழங்கும் திட்டம் மூலம் சென்னையின் அ
-
ஜி.எஸ்.டி குறைப்பால் நாட்டில் மக்களின் சேமிப்பு அதிகரிக்கும் : பிரதமர் மோடி பேச்சு
21 Sep 2025புதுடெல்லி : ஜி.எஸ்.டி குறைப்பால் நாட்டில் மக்களின் சேமிப்பு அதிகரிக்கும் என்று நாட்டு மக்களிடம் உரையாற்றிய பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
-
அ.தி.மு.க. கூட்டணிக்கு வருமாறு த.வெக. தலைவர் விஜய்க்கு ராஜேந்திர பாலாஜி அழைப்பு
21 Sep 2025விருதுநகர் : அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி விஜய்க்கு அழைப்பு விடுத்துள்ளார்.
-
கூட்டணியில் 30 தொகுதிகள் கேட்போம்: ராமதாஸ் தலைமையில் நடந்த உயர்மட்ட குழு கூட்டத்தில் முடிவு
21 Sep 2025திண்டிவனம் : பா.ம.க.வில் தந்தை ராமதாசுக்கும், மகன் அன்புமணிக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் முன்பு அன்புமணியை கட்சியில் இருந்து அதிரடியாக நீக்கினார் ராமதாஸ்.
-
த.வெ.க.வுக்கு பெருகும் ஆதரவால் பயந்து பொய்யை பரப்புகின்றனர் : விஜய் கடும் விமர்சனம்
21 Sep 2025சென்னை : நம்மைப் பற்றி, ஆள் வைத்து பொய்யான கதையாடல்களை செய்தோர், செய்வோர், ஒவ்வொரு நாளும் மக்களிடையே நமக்குப் பெருகி வரும் அங்கீகாரத்தைக் கண்டு அஞ்சி நடுங்குகின்றனர்.
-
விர்ஜீனியா மாகாண வழக்கறிஞராக லிண்ட்சேவை நியமித்தார் அமெரிக்க அதிபர்
21 Sep 2025வாஷிங்டன் : அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக ட்ரம்ப் பொறுப்பேற்று கொண்ட பிறகு நாட்டு முன்னேற்றத்திற்காக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.
-
இதுவரை 7 போர்களை நிறுத்தியுள்ள தனக்கு அமைதிக்கான நோபல் பரிசு கொடுங்கள்: அதிபர் ட்ரம்ப்
21 Sep 2025வாஷிங்டன் : வர்த்தக ஒப்பந்தத்தை சுட்டிக்காட்டி இந்தியா - பாகிஸ்தான் போரை நிறுத்தியது உள்பட 7 போர்களை நிறுத்தியதற்காக எனக்கு அமைதிக்கான நோபல் பரிசு கொடுக்க வேண்டும் என்ற
-
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து உயர்வு
21 Sep 2025மேட்டூர் : காவிரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையின் காரணமாக மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு விநாடிக்கு 9731கன அடியிலிருந்து விநாடிக்கு 11,397 கன அடி
-
பெண்களை வாதாடி ஜெயிக்க முடியாது : சுப்ரீம் கோர்ட் நீதிபதி பேச்சு
21 Sep 2025சென்னை : 'இயற்கையாகவே பெண்களுக்கு வாதாடும் திறமை உண்டு என்ப தால் அவர்களை எளிதில் வாதாடி ஜெயிக்க முடியாது' என பெண் வழக்கறிஞர்கள் சங்க ஆண்டு விழாவில் பங்கேற்ற சுப்ரீம் கோ
-
நடிகர் எஸ்.வி.சேகர் வீட்டிற்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்
21 Sep 2025சென்னை : நடிகர் எஸ்.வி. சேகர் வீட்டிற்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
-
நவராத்திரி விழா: குமரியில் இருந்து கேரளாவுக்கு சென்ற சுவாமி சிலை
21 Sep 2025திருவனந்தபுரம் : நவராத்திரி விழாவை முன்னட்டு குமரியில் இருந்து சுவாமி சிலைகள் கேரளாவுக்கு கொண்டு செல்லப்பட்டது.
-
கேரளாவில் மகாவிஷ்ணு கோவிலில் பிரியங்கா காந்தி துலாபாரம்
21 Sep 2025திருவனந்தபுரம் : கேரளாவில் மகாவிஷ்ணு கோவிலில் பிரியங்கா காந்தி துலாபாரம் மூலம் வழங்கி நேர்த்திக்கடன் செலுத்தினார்.
-
முந்தைய தலைவர்களால் 'ஆபரேஷன் சிந்தூரை' நடத்தியிருக்க முடியுமா? - தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி கேள்வி
21 Sep 2025சென்னை : ‘ஆபரேஷன் சிந்தூர்' போன்ற நடவடிக்கைகள், இதற்கு முந்தைய தலைவர்களால் செய்திருக்க முடியுமா? தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி கேள்வி எழுப்பியுள்ளார்.
-
4 ரிக்டர் அளவில் வங்காளதேசத்தில் நிலநடுக்கம்
21 Sep 2025டாக்கா : 4 ரிக்டர் அளவில் வங்காளதேசத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
-
அமெரிக்காவில் அமலுக்கு வந்த எச் 1-பி விசா கட்டணம் உயர்வு : 71 சதவீதம் இந்தியர்கள் பாதிக்கப்படும் அபாயம்
21 Sep 2025வாஷிங்டன் : அமெரிக்காவில் அமலுக்கு வந்த எச் 1-பி விசா கட்டணம் உயர்வால் சுமார் 71 சதவீதம் இந்தியர்கள் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
-
விஜய்க்கு வருகின்ற கூட்டம் கண்டிப்பாக ஓட்டாக மாறாது : நடிகர் கமல்ஹாசன் ஆருடம்
21 Sep 2025சென்னை : விஜய்க்கு கூடுகிற கூட்டம் கண்டிப்பாக ஓட்டாக மாறாது என்று கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
-
தாதாசாகேப் பால்கே விருது அறிவிப்பு: வாழ்த்திய பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்த மோகன்லால்
21 Sep 2025திருவனந்தபுரம் : தனக்கு தாதாசாகேப் பால்கே விருதை மத்திய அரசு அறிவித்த நிலையில், அதற்கு வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடிக்கு நடிகர் மோகன்லால் நன்றி தெரிவித்துள்ளார்
-
எச்1-பி விசா திடீர் கட்டண உயர்வால் மனிதாபிமான விளைவுகள் ஏற்படும் : மத்திய அரசு கருத்து
21 Sep 2025புதுடெல்லி : எச்1-பி விசா திடீர் கட்டண உயர்வால் மனிதாபிமான விளைவுகள் ஏற்படும் என்று மத்திய அரசு கருத்து தெரிவித்துள்ளது.
-
தாலிபான்கள் பாக்ராம் விமான தள கட்டுப்பாட்டை அமெரிக்காவிடம் விரைவில் ஒப்படைக்க வேண்டும்: ட்ரம்ப்
21 Sep 2025நியூயார்க் : ஆப்கானிஸ்தானில் தாலிபான்களின் ஆட்சி நடந்து வருகிறது. கடந்த 2021-ம் ஆண்டு அமெரிக்க ஆதரவு பெற்ற அரசு கவிழ்ந்ததையடுத்து ஆட்சியை தலிபான்கள் கைப்பற்றினர்.