எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சென்னை, மே.12 - சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கையையொட்டி சென்னையில் உள்ள 17 தொகுதிகள் 4 மையங்களில் வாக்கு எண்ணப்படுகிறது. இதையொட்டி விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 3 அடுக்கு பாதுகாப்புடன் 4 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர் என்று போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் தெரிவித்தார்.
இது பற்றி நேற்று செய்தியாளர்களை சந்தித்த போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் கூறியதாவது:-
சென்னையில் உள்ள 16 தொகுதிகள் மற்றும் காஞ்சிபுரத்தில் ஒரு தொகுதி சேர்த்து 17 தொகுதிகளுக்கு 4 மையங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.
சென்னைக்கு உட்பட்ட இடத்தில் 3 மையங்களும், காஞ்சிபுரத்தில் ஒரு வாக்கு எண்ணிக்கை மையமும் சென்னை போலீசாரின் பாதுகாப்பில வருகிறது. லயோலா கல்லூரி, அண்ணா பலக்கலைக்கழகம், ராணி மேரி கல்லூரி ஆகிய மையங்கள் சென்னையிலும், முகமது சதக் கலைக்கல்லூரி காஞ்சி மாவட்டத்திலும் வருகிறது. லயோலா கல்லூரி வாக்கு எண்ணும் மையத்தில் பெரம்பூர், கொளத்தூர், வில்லவாக்கம், திரு.வி.க.நகர், எழும்பூர், ஆயிரம்விளக்கு, அண்ணாநகர் ஆகிய தொகுதிகளும், அண்ணா பல்கலைக்கழக வாக்கு மையத்தில், விருகம்பாக்கம், சைதாப்பேட்டை, தி.நகர், மயிலாப்பூர், வேளச்சேரி ஆகிய தொகுதிகளும், ராணி மேரி கல்லூரி வாக்கு மையத்தில் ஆர்.கே.நகர், துறைமுகம், ராயபுரம், சேப்பாக்கம் திருவல்லிக்கேணி ஆகிய தொகுதிகளும், முகமதுசதக் கலைக்கல்லூரி வாக்கு மையத்தில் சோளிங்நல்லூர் தொகுதியின் வாக்குகளும் எண்ணப்படும்.
ஒவ்வொரு வாக்கு எண்ணிக்கை மையத்திற்கும், ஒவ்வொரு இணை ஆணையர் தலைமையில் இரண்டு துணை ஆணையர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள். ஒரு துணை ஆணையர் வாக்கு மையத்தின் உள்ளேயும், ஒரு துணை ஆணையர் வாக்கு மையத்தின் வெளியிலும் பாதுகாப்புக்களை கவனிப்பார்கள். ஒவ்வொரு தொகுதிக்கும் ஒரு உதவி ஆணையர் பாதுகாப்பு பணிக்கு நியமிக்கப்படுவார்கள்.
அண்ணா பல்கலைக்கழகத்தில் 2 துணை ஆணையர்கள், 7 உதவி ஆணையர்கள், 27 ஆய்வாளர்கள், 63 உதவி ஆய்வாளர்கள் உட்பட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள். லயோலா கல்லூரியில் 2 துணை ஆணையர்கள், 2 கூடுதல் துணை ஆணையர்கள், 10 உதவி ஆணையர்கள், 30 ஆய்வாளர்கள், 60 உதவி ஆய்வாளர்கள் உட்பட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள்.
ராணி மேரி கல்லூரி வாக்கு மையத்தில் 2 துணை ஆணையர்கள், 7 உதவி ஆணையர்கள், 28 ஆய்வாளர்கள், 55 உதவி ஆய்வாளர்கள் உட்பட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். முகமதுசதக் கலைக்கல்லூரி வாக்கு மையத்தில் 1 துணை ஆணையர், 3 உதவி ஆணையர், 9 ஆய்வாளர்கள், 20 உதவி ஆய்வாளர்கள் உட்பட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள்.
மொத்தம் 2700 போலீசார், 320 துணை ராணுவப்படை உட்பட 4 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர். வாக்கு எண்ணும் மையத்தில் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்படுகிறது. வாக்கு எண்ணிக்கை மையத்தில் வெளியே 1 அடுக்கும், வாக்கு எண்ணிக்கை மைய வாயிலுக்கும் வாக்கு எண்ணிக்கை மைய கட்டிடத்திற்கும் இடையேயில் 1 அடுக்கு பாதுகாப்பும், வாக்கு எண்ணிக்கை மைய கட்டிட வாசலில் 1 அடுக்கு பாதுகாப்பும் போடப்படுகிறது.
வாக்கு எண்ணிக்கை 100 மீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் அனுமதிக்கப்படாது. வாக்கு எண்ணிக்கை மையங்களுக்கு தலைமை தேர்தல் ஆணையம் உள்ளிட்ட அங்கீகரிக்கப்பட்ட அடையாள அட்டை வைத்திருப்பவர்கள் மட்டுமே உள்ளே அனுமதிக்கப்படுவார்கள். தேர்தல் அதிகாரிகள் வாகனம் மட்டுமே வாக்கு எண்ணிக்கை மையத்தில் அனுமதிக்கப்படும். கண்காணிப்பாளர்கள், தேர்தல் அலுவலர்கள், வேட்பாளர்கள், தலைமை ஏஜெண்டுகள், செய்தியாளர்கள் மட்டுமே செல்போன் உள்ளே கொண்டு செல்ல அனுமதிக்கப்படுவார்கள், காவலர்களில் உதவி ஆணையர், மற்றும் அதற்கு மேல் பதவியில் உள்ள காவல் அதிகாரிகள் மட்டுமே உள்ளே கொண்டு செல்லலாம்.
வாக்கு எண்ணிக்கை ஏஜெண்டுகள் பென்சில் மட்டுமே எடுத்துச்செல்ல அனுமதிக்கப்படுவார்கள். கேமரா, வீடியோ கேமரா, சாதாரண ரக கால்குலெட்டர் அனுமதி உண்டு. தேர்தல் அலுவலர்கள் வாகனம் தவிர மற்றவர்களின் வாகனங்கள் குறிப்பிட்ட அனுமதிக்கப்பட்ட இடங்களிலும் மட்டுமே அனுமதிக்கப்படும். உணவுப்பொருட்கள், தண்ணீர், தீப்பெட்டிகள், சயின்டிபிக் கால்குலெட்டர், இங்க்பேனா உள்ளே கொண்டு செல்ல அனுமதி இல்லை. அனுமதி இன்றி எடுத்து வரும் பொருட்கள் போலீஸ் கவுன்டரில் பாதுகாக்கப்பட்டு சம்மந்தப்பட்டவர்களிடம் டோக்கன் வழங்கப்படும்.
வாக்கு மைய கட்டிடத்தின் உள்ளே 4 பிரிவுகள் பிரிக்கப்பட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. முதல் பிரிவு வாக்கு எண்ணிக்கை நடைபெறும். இங்கு வாக்கு எண்ணிக்கை அலுவலர்கள் அனுமதிக்கப்படுவார்கள். 2 பிரிவில் தேர்தல் அலுவலக கண்காணிப்பு அலுவலகம் இயங்கும், 3 -வது பிரிவில் செய்தியாளர்கள் செய்தி சேகரிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும், அவர்கள் இங்கு அமர்ந்து செய்திகளை சேகரிக்கலாம். இந்த அறையில் மட்டுமே கேமராக்கள், செல்போன்கள் வைத்துக்கொள்ளலாம். 4-வது பிரிவில் வேட்பாளரும், அவர்களுடைய ஏஜெண்டுகளும் பயன்படுத்தும் வகையில் அமைந்திருக்கும். இங்கு அவர்களது செல்போன்களை பயன்படுத்திக்கொள்ளலாம்.
இவ்வாறு போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 9 months 2 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 9 months 3 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 10 months 1 week ago |
-
தங்கம் விலை சற்று சரிவு
09 Jul 2025சென்னை : சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.400 குறைந்து ஒரு சவரன் ரூ.72,000-க்கு விற்பனையானது.
-
கடலூர் ரயில் விபத்திற்கு காரணம்? - வெளியான தகவலால் அதிர்ச்சி
09 Jul 2025கடலூர் : ரயில் வரும் நேரத்தில் கேட் கீப்பர் பங்கஜ் சர்மா தூங்கி கொண்டிருந்ததால் விபத்து நேரிட்டதாக தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
திருத்தணியில் 14ம்தேதி அ.தி.மு.க சார்பில் ஆர்ப்பாட்டம்: இ.பி.எஸ்.
09 Jul 2025சென்னை, திருத்தணியில் ஜவுளிப் பூங்கா மற்றும் தனி வாரியம் அமைக்கப்படும் என்ற தி.மு.க.
-
கடலூர் ரயில் விபத்து: கேட் கீப்பராக 'தமிழர்' நியமனம்
09 Jul 2025சென்னை, கடலூர் ரயில் விபத்தை அடுத்து அங்கு புதிய கேட் கீப்பராக தமிழர் ஒருவர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
-
தமிழ்நாட்டில் வெப்பநிலை 3 நாட்களுக்கு உயர வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம் தகவல்
09 Jul 2025சென்னை : தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு அதிகபட்ச வெப்பநிலை வழக்கத்தை விட 7 டிகிரி ஃபாரன்ஹீட் வரை உயர வாய்ப்புள்ளது.
-
பிரம்மபுத்திரா நதிகள் வறண்டு போகும்: சீனாவின் அணையால் இந்தியாவுக்கு ஆபத்து : அருணாசல் முதல்வர் எச்சரிக்கை
09 Jul 2025பெய்ஜிங் : பிரம்மப்புத்திரா நதியின் குறுக்கே புதிய அணையால் இந்தியாவுககு ஆபத்து என்று அருணாசல முதல்வர் எச்சரித்துள்ளார்.
-
பொது வேலைநிறுத்தம் எதிரொலி: தமிழ்நாடு - கேரளா இடையே பஸ்கள் இயக்கப்படவில்லை
09 Jul 2025கோவை, தமிழ்நாட்டிற்கு வழக்கமாக இயக்கப்படும் கேரளா அரசு பஸ்களும் இயக்கப்படவில்லை.இரு மாநிலங்களுக்கு இடையே பஸ்கள் இயக்கப்படாததால் பயணிகள் கடும் அவதி அடைந்துள்ளனர்.
-
குஜராத்த்தில் பாலம் இடிந்து 10 பேர் பலி: ரூ.2 லட்சம் நிவாரண நிதி அறிவித்த பிரதமர் மோடி
09 Jul 2025காந்திநகர் : குஜராத் பாலம் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
-
நீதிமன்றத்தைவிட ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மேலானவரா..? - அரசு அதிகாரிக்கு நீதிபதி கேள்வி
09 Jul 2025சென்னை : ஐ.ஏ.எஸ். அதிகாரி என்றால் நீதிமன்றத்தைவிட மேலானவர் என தன்னை நினைத்துக் கொள்கிறாரா?
-
மத்திய அரசை எதிர்த்து தொழிற்சங்கங்கள் நடத்திய நாடு தழுவிய வேலை நிறுத்தத்தால் தமிழகத்தில் எந்த பாதிப்பும் இல்லை- வழக்கம்போல் அரசு, தனியார் பேருந்துகள், கடைகள் இயங்கின - கேரளா, மேற்கு வங்கம், ஒடிசாவில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
09 Jul 2025சென்னை : மத்திய அரசை எதிர்த்து 17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 13 தொழிற்சங்கங்கள் நடத்திய பாரத் பந்த்தால் தமிழ்நாட்டில் எந்த பாதிப்பும் இல்லை.
-
மத்திய அரசை கண்டித்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தொழிற்சங்கத்தினர் போராட்டம்
09 Jul 2025சென்னை, மத்திய அரசை கண்டித்து நேற்று தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தொழிற்சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
-
'வள்ளுவர் மறை வைரமுத்து உரை' 13-ம் தேதி வெளியிடுகிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
09 Jul 2025சென்னை : வள்ளுவர் மறை வைரமுத்து உரை' என்ற பெயரில் கவிஞர் வைரமுத்து திருக்குறளுக்கு உரை எழுதியிருக்கிறார்.
-
திருவாரூரில் முதல்வர் 'ரோடு ஷோ'
09 Jul 2025திருவாரூர் : முதல்வர் மு.க.ஸ்டாலின் பவித்திரமாணிக்கம், துர்க்காலயா ரோடு, தெற்கு வீதி, பனகல் சாலை, பழைய பஸ் நிலையம், ரெயில்வே ரவுண்டானா வரை 'ரோடு ஷோ' மூலம் சாலையில
-
மத்திய அரசை கண்டித்து 'பந்த்': புதுச்சேரியில் கடைகள் அடைப்பு; தனியார் பேருந்துகள் ஓடவில்லை
09 Jul 2025புதுச்சேரி, மத்திய அரசை கண்டித்தும்,17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தியும் புதுச்சேரியில் நேற்று (ஜூலை 9) பந்த் நடந்தது.
-
மாணவர்களுக்கு அரசியல் புரிதல் வேண்டும்: 'ஓரணியில் தமிழ்நாடு' நின்றால் நம்மை யாராலும் வீழ்த்த முடியாது : திருச்சி கல்லூரி விழாவில் முதல்வர் முக.ஸ்டாலின் பேச்சு
09 Jul 2025திருச்சி : “காந்தி வழி, அம்பேத்கர் வழி, பெரியார் வழி என்று மாணவர்கள் பின்பற்ற வழிகள் உள்ளன.
-
குஜராத்: பால விபத்தில் பலி எண்ணிக்கை 10 ஆக உயர்வு
09 Jul 2025ஆனந்த் : குஜராத்தில் திடீரென பாலம் இடிந்து வாகனங்கள் ஆற்றில் விழுந்தது இதில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.
-
டெக்ஸாஸ் வெள்ளம்: பலி 109 ஆக உயா்வு
09 Jul 2025டெக்ஸாஸ் : டெக்ஸாஸில் ஏற்பட்ட திடீா் கடும் வெள்ளப்பெருக்கு காரணமாக உயிரிழந்தோா் எண்ணிக்கை 109 ஆக உயா்ந்துள்ளது.
-
ஜூலை 28-ல் சி.எஸ்.ஐ.ஆர். நெட் தேர்வு
09 Jul 2025சென்னை : உதவி பேராசிரியர் பணிக்கான சி.எஸ்.ஐ.ஆர். நெட் தேர்வு ஒரேகட்டமாக ஜூலை 28-ம் தேதி நடைபெறுகிறது என்று என்டிஏ அறிவித்துள்ளது.
-
நம் உரிமைகளை பாதுகாக்கக்கூடிய ஆட்சி தி.மு.க. ஆட்சி மட்டும்தான்: கனிமொழி எம்.பி. பேச்சு
09 Jul 2025தூத்துக்குடி, நம்முடை உரிமைகளையும் பாதுகாக்கக்கூடிய ஆட்சி தி.மு.க. ஆட்சி மட்டும்தான் என்று கனிமொழி எம்.பி. தெரிவித்துள்ளார்.
-
பும்ரா குறித்த தகவலால் அதிர்ச்சி
09 Jul 2025ஜஸ்பிரீத் பும்ரா இல்லாமல் இந்திய அணி அதிகமான போடிகளில் வென்றுள்ளதாக வெளியாகியுள்ள புள்ளி விவரங்கள் இந்தியர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
ஆசியாவின் அதிக வயதான யானை உயிரிழப்பு
09 Jul 2025போபால் : ஆசியாவிலேயே அதிக வயதான யானை வட்சலா உயிரிழந்தது.
-
சுங்கச்சாவடிகளில் அரசு பஸ்களுக்கு தடை? ஐகோர்ட்டில் அரசுத்தரப்பில் முறையீடு
09 Jul 2025சென்னை, தென்மாவட்டங்களில் உள்ள 4 சுங்கச்சாவடிகளில் நாளை (வியாழக்கிழமை) முதல் அரசு பஸ்களை அனுமதிக்கக்கூடாது என ஐகோர்ட்டு உத்தரவிட்டிருந்த நிலையில், அரசுத்தரப்பில் முறையீ
-
பிரான்சில் திடீர் காட்டுத்தீ: 700 ஹெக்டேர் நிலப்பரப்பு எரிந்து நாசம்
09 Jul 2025பாரீஸ் : பிரான்சில் காட்டுத்தீக்கு 13 பேர் காயம் அடைந்தனர். இதில் 700 ஹெக்டேர் நிலப்பரப்பு தீயில் எரிந்தது.
-
யு-19 தொடரில் சூரியவன்ஷி புதிய சாதனை
09 Jul 2025லண்டன் : இங்கிலாந்து யு-19 அணிக்கு எதிராக ஐந்து போட்டிகள் கொண்ட இளையோர் ஒருநாள் தொடரில் இந்தியா யு-19 அணி 3-2 என்ற கணக்கில் தொடரை வென்றதில் வைபவ் சூர்யவன்ஷி நட்சத்திரமா
-
பிரதமர் மோடிக்கு நமீபியாவின் உயரிய விருது வழங்கி கவுரவிப்பு
09 Jul 2025விண்ட்ஹோக் : நமீபியா நாட்டின் உயரிய விருது பிரதமர் மோடிக்கு வழங்கி கவுரவிக்கப்பட்டது.