முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாகிஸ்தானில் தற்கொலைப்படைத் தாக்குதல்: 13 பேர் பலி

வெள்ளிக்கிழமை, 14 பெப்ரவரி 2014      உலகம்
Image Unavailable

 

கராச்சி, பிப்.15 - பாகிஸ்தானில் கராச்சி நகரில் போலீஸாரை ஏற்றிச் சென்ற பஸ் மீது தற்கொலைப் படை தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 11 போலீஸார் உள்பட 13 பேர் உயிரிழந்தனர். கராச்சியில் புறநகர்ப்பகுதியான ஷா லட்டீப் நகரில் உள்ள போலீஸ் பயிற்சி நிலையத்தில் இருந்து போலீஸார் பாதுகாப்பு பணிக்காக வியாழகிழமை பஸ்ஸில் சென்றனர். அப்போது வெடிகுண்டு நிரப்பப்பட்ட வாகனத்தைக் கொணடு அந்த பஸ் மீது தற்கொலைப் படைத் தீவிரவாதிரள் மோதினர். இந்தத் தாக்குதலில் 11 போலீஸார் மற்றும் அப்பாவி மக்கள் 2 பேர் உயிரிழந்தனர். 50 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். அவர்கள் அங்குள்ள ஜின்னா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் 10 பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

இநதத் தாக்குதலுக்கு தலிபான் இயக்கம் பொறுப்பேற்றுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்