எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புதுடெல்லி,மே.27 - பிரபல கிரிக்கெட் வீரர் சவ்ரவ் கங்குலிக்கு கொல்கத்தாவில் ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலத்தை சுப்ரீம்கோர்ட்டு ரத்து செய்துவிட்டது. இந்திய கிரிக்கெட் அணிக்கு பல ஆண்டுகளாக கேப்டனாக இருந்த கங்குலி மேற்குவங்காள மாநிலத்தை சேர்ந்தவர். இவருக்கு கடந்த 2000-ம் ஆண்டு கொல்கத்தாவில் உள்ள சால்ட் லேக் சிட்டியில் அப்போது இருந்த இடதுசாரி கூட்டணி அரசு நில ஒதுக்கீடு செய்தது. இதை எதிர்த்து கொல்கத்தா ஐகோர்ட்டில் அந்த மாநிலத்தில் உள்ள சேவை நிறுவனம் ஒன்று சார்பாக வழக்கு தொடரப்பட்டது. இதை விசாரித்த கோர்ட்டு ஒதுக்கீடு செய்தது சரியே என்று தீர்ப்பு அளித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து அந்த சேவை நிறுவனம் சுப்ரீம்கோர்ட்டில் அப்பீல் செய்தது. இந்த அப்பீல் மனுமீதான விசாரணை நீதிபதி கங்குலி தலைமையிலான பெஞ்சில் நடைபெற்றது. விசாரணை முடிவில் தீர்ப்பு அளித்த நீதிபதி கங்குலி, மேற்குவங்க அரசானது கிரிக்கெட் வீரர் கங்குலிக்கு ஒதுக்கீடு செய்ததை ரத்து செய்தது. அந்த நிலத்தை திருப்பி ஒப்படைக்கவும் கங்குலிக்கு உத்தரவிட்டது. மேலும் நிலத்திற்கு கங்குலி கட்டிய பணத்தை அவருக்கு திருப்பி கொடுக்கவும் அரசுக்கு நீதிபதி கங்குலி உத்தரவிட்டார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


