முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விராட் கோலி டக் அவுட்

வியாழக்கிழமை, 23 அக்டோபர் 2025      விளையாட்டு
Virat

Source: provided

ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் செய்துள்ள இந்திய அணி 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. பெர்த் மைதானத்தில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் சுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி, ஆஸ்திரேலியாவிடம் படுதோல்வியை சந்தித்தது. இதையடுத்து 2-வது ஒருநாள் போட்டி அடிலெய்டு மைதானத்தில் நடைபெற்றது. 

இதற்கிடையே முதல் போட்டியில் டக் அவுட் ஆன நிலையில், இரண்டாவது போட்டியிலும் டக் அவுட் ஆகி இருப்பது கோலியின் ரசிகர்களை ஏமாற்றத்தில் ஆழ்த்தியுள்ளது. கோலியின் கிரிக்கெட் கரியரில் ஒருநாள் போட்டிகளில் அடுத்தடுத்து இரண்டு போட்டிகளில் டக் அவுட் ஆவது இதுவே முதல்முறையாகும். அடிலெய்டில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. 

டாஸில் தொடரும் சோகம்

ஆஸ்திரேலியா- இந்தியா அணிகளுக்கு இடையேயான 2-வது ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இந்த போட்டியில் டாஸை இழந்ததன் மூலம் இந்திய அணி கடைசியாக விளையாடிய 17 சர்வதேச ஒரு நாள் போட்டிகளில் ஒருமுறை கூட டாஸ் ஜெயிக்கவில்லை. கடைசியாக நடந்த 2023ஆம் ஆண்டு உலகக் கோப்பை தொடரின் அரையிறுதி போட்டியில் நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி டாஸ் வென்றிருந்தது.

இதேபோல மராட்டியத்தின் நவி மும்பை நகரில் மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி தொடர் நடந்து வருகிறது. இதில், நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் இந்தியா- நியூசிலாந்து அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து பந்து வீச்சை தேர்வு செய்தது. இந்த போட்டியிலும் டாஸை இந்திய அணி தோற்றதன் மூலம் உலக கோப்பை தொடரில் 6 போட்டியிலும் டாஸை இழந்துள்ளது. ஆடவர் அணியை தொடர்ந்து இந்திய மகளிர் அணி தொடர்ச்சியாக 6 முறை டாஸை இழந்துள்ளது பேசும் பொருளாக மாறியுள்ளது.

ஸ்மிருதி மந்தனா சதம் 

மகளிர் ஒருநாள் உலகக் கோப்பையில், நியூசிலாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய வீராங்கனை ஸ்மிருதி மந்தனா சதம் அடித்து அசத்தியுள்ளார். மகளிர் ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்று வரும் சூழலில், நவி மும்பையில் உள்ள மைதானத்தில், இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் நேற்று (அக். 23) மோதின. இந்த நிலையில், டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து, களமிறங்கிய இந்திய அணியின் வீராங்கனைகள் ஸ்மிருதி மந்தனா மற்றும் பிரத்திகா ராவல் 30 ஓவர்கள் கடந்துள்ள நிலையில், இதுவரை ஆட்டமிழக்காமல் தொடர்ந்து ஆடி வருகின்றனர்.

இதனைத் தொடர்ந்து, இந்திய வீராங்கனை ஸ்மிருதி மந்தனா 88 பந்துகளில் 100 ரன்களை குவித்து அசத்தியுள்ளார். மேலும், அவருடன் விளையாடி வரும் வீராங்கனை பிரத்திகா ராவல் 96 பந்துகளில் 76 ரன்களை எடுத்துள்ளார். இவர்கள் இருவரது கூட்டணியின் மூலம் 31 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 192 ரன்களை குவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 4 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 6 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 6 months ago
View all comments

வாசகர் கருத்து