எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புது டெல்லி,பிப்.26 - ரூ. 1.76 லட்சம் கோடி இழப்பை நாட்டுக்கு ஏற்படுத்திய 2 ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரம் தொடர்பாக பா.ஜ.க.வை சேர்ந்த முன்னாள் தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் அருண்ஷோரி நேற்று சி.பி.ஐ. முன்னிலையில் ஆஜரானார்.
டெல்லியில் உள்ள சி.பி.ஐ. தலைமை அலுவலகத்திற்குள் நுழைவதற்கு முன்னால் அருண்ஷோரி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது கூறிய அவர், மத்திய அரசை சரமாரியாக குற்றம் சாட்டினார். ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் உண்மையான பிரச்சினைகளில் இருந்து திசை திருப்பவே மத்திய அரசு முயல்கிறது என்று குற்றம் சாட்டினார். மத்திய அரசின் வாதங்கள் குப்பைத்தனமான வாதங்களாக இருப்பதாகவும் அருண்ஷோரி குற்றம் சாட்டினார். வாஜ்பாய் அரசில் தொலைத் தொடர்புத் துறை அமைச்சராக இருநதவர் அருண்ஷோரி.
ஸ்பெக்ட்ரம் விவகாரம் தொடர்பாக ஆஜராகுமாறு இவருக்கு சி.பி.ஐ. சம்மன் அனுப்பி இருந்தது. அதை ஏற்று நேற்று அருண்ஷோரி சி.பி.ஐ. முன்னிலையில் ஆஜரானார். அதற்கு முன் நிருபர்களை சந்தித்த அவர், எந்த வகையில் எல்லாம் உதவ முடியுமோ அந்த வகையில் எல்லாம் சி.பி.ஐ.க்கு உதவத் தயார் என்று குறிப்பிட்டார். பல்வேறு விவரங்கள் அடங்கிய 50 பக்க ஆவணத்தை தாம் தயாரித்திருப்பதாகவும் அதை சி.பி.ஐ.யிடம் தாக்கல் செய்யப் போவதாகவும் அருண்ஷோரி தெரிவித்தார்.
முதலில் வந்தவருக்கே முன்னுரிமை என்ற கொள்கை பின்பற்றப்பட்டதோ, இல்லையோ ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் ராசா பணம் சம்பாதிததது உண்மை என்றும் அருண்ஷோரி தெரிவித்தார். அரசின் கவலை எல்லாம் பின்பற்றப்பட்ட கொள்கை பற்றி அல்ல. அதன் கவலை வேறு விதமாக இருப்பதாகவும் அருண்ஷோரி தெரிவித்தார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


