எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
திருவனந்தபுரம்,ஜூலை.3 - உலகிலேயே மிகப் பெரிய பணக்கார கடவுளாக கருதப்படும் திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு இந்தியா முழுக்க அசையா சொத்துக்கள் இருக்கின்றன. ஆந்திராவில் மட்டும் திருப்பதி கோவில் பெயரில் 4 ஆயிரம் ஏக்கர் நிலம் உள்ளது. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் கணக்கீடு செய்யப்பட்ட போது திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு ரூ. 53 ஆயிரம் கோடிக்கு அசையும், அசையா சொத்துக்கள், நகைகள் இருப்பது உறுதி செய்யப்பட்டது. தங்க, வைர நகைகள் மட்டும் 20 டன் அளவுக்கு உள்ளது. இந்த நகைகளில் பல 12 ம் நூற்றாண்டு காலத்தில் செய்யப்பட்டவை ஆகும். கலைநயமிக்க இந்த நகைகள் போன்று இந்தியாவில் வேறு எந்த கோவிலிலும் இல்லை என்று கருதப்படுகிறது.
இந்த நிலையில் தற்போது திருவனந்தபுரத்தில் பத்மநாபசுவாமி கோவில் கருவறை அருகே 6 பாதாள அறைகளில் இருந்து எடுக்கப்பட்டு வரும் தங்க, வைர நகைகளின் குவியல் பிரமிப்பூட்டும் வகையில் உள்ளன. சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி நடந்து வரும் இந்த கணக்கெடுப்பில் 6 அறைகளும் ஏ,பி,சி,டி,இ,எப். என கோடிடப்பட்டு ஒவ்வொரு அறையாக ஆய்வு நடந்து வருகிறது. நேற்று முன்தினம் வரை ரூ. 50 ஆயிரம் கோடிக்கு நகைகள் இருப்பது தெரியவந்துள்ளது. ஏ அறையில் மட்டும் 10 கிலோ எடையில் 18 அடி நீள தங்க மாலை இருந்தது. ஒரு பெட்டிக்குள் 1200 தங்க சங்கிலிகள் இருந்தன. 500 கிலோ எடை கொண்ட தங்க நாணயங்கள் ஒரு மூட்டையில் கட்டி வைக்கப்பட்டிருந்தது. இந்த ஒரு அறையில் மட்டும் கணக்கிடப்பட்ட நகைகளின் மதிப்பு ஒரு லட்சம் கோடியை தாண்டியதாம். திறக்கப்பட்ட பி அறையில் உள்ள பாதியளவு நகைகள் மட்டுமே மதிப்பிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இன்னும் பல அறைகள் திறக்கப்படாமலேயே உள்ளது.
தற்போது பத்மநாபசுவாமி கோவிலின் சுரங்க அறைகளில் இருந்து எடுக்கப்பட்டுள்ள தங்க நாணயங்களில் 17 கிலோ நாணயங்கள் கிழக்கு இந்திய கம்பெனிக்காரர்கள் காலத்தில் செய்யப்பட்டவை ஆகும். ஒரு சாக்கு மூட்டையில் இருந்த தங்க நாணயங்கள், நெப்போலியன் காலத்தை சேர்ந்தவை என்று தெரியவந்துள்ளது. இந்த தங்க, வைர நகைகளில் பெரும்பாலானவை பத்மநாபசுவாமிக்கு காணிக்கையாக கொடுக்கப்பட்டவை. ஒரு அறையில் இருந்த ஆபரணங்கள் அனைத்தும் திருவாங்கூர் மன்னர்கள், அரசிகள் அணிந்தவை என்று தெரியவந்துள்ளது.
பல நூற்றாண்டுகளை கடந்தாலும் இன்னும் தங்க, வைர நகைகள் தற்போது செய்யப்பட்டவை போல் பளிச்சென்று மின்னுகின்றன. பத்மநாபசுவாமி கோவிலில் இன்னும் சில ரகசிய பாதாள அறைகள் திறக்கப்படாமல் உள்ளன. இந்த கணக்கெடுப்பு முடிய சுமார் ஒரு வாரமாகும் எனத் தெரிகிறது. அதன் பிறகு பத்மநாபசுவாமி கோயில் நகைகள் மதிப்பு பற்றிய விவரம் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்படும். இதற்கிடையே நகை மதிப்பீடு தகவல்கள் வெளியாவதால் பத்மநாபசுவாமி கோயிலுக்கு வெளியாவதால் கோயிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை பல மடங்கு உயர்ந்து விட்டது.
எனவே இனி மதிப்பீடு செய்யப்படும் தகவல்களை வெளியிடக் கூடாது என்று பத்மநாபசுவாமி கோயில் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பல ஆயிரம் கோடிக்கு தங்க, வைர நகைகள் உள்ளதால் பாதுகாப்பு கருதி கோவிலை சுற்றி ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். கோயிலை பற்றி வியக்கத்தக்க தகவல்கள் வெளியான வண்ணம் உள்ளதால் தீவிரவாதிகளால் ஏற்படக் கூடும் ஆபத்தை தடுக்கவும் ராணுவ பாதுகாப்பு நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன் மூலம் திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோவில் இந்தியாவின் நம்பர் ஒன் பணக்கார கடவுள் என்ற அந்தஸ்தை எட்டியுள்ளது. உலகப் புகழ் பெற்ற திருப்பதி ஏழுமலையானை திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி முந்தியிருப்பது குறிப்பிடத்தக்கது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு ப்ரை2 days 12 hours ago |
ஆப்பிள் பான் கேக்4 days 13 hours ago |
சிக்கன் மிளகு வறுவல்1 week 2 days ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் - 18-03-2024.
18 Mar 2024 -
வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் 6 பேர் உயிரிழப்பு
18 Mar 2024பெஷாவர் : வடமேற்கு பாகிஸ்தானில் நேற்று காலை ஒரு வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் உயிரிழந்த சோக சம்பவம் நடைபெற்றது.
-
பிரதமர் நரேந்தி மோடி இன்று சேலம் வருகை : பிரம்மாண்ட பிரச்சார கூட்டத்தில் பேசுகிறார்
18 Mar 2024சேலம் : இன்று சேலம் நகருக்கு வருகை தரும் பிரதமர் மோடி அங்கு நடைபெறவுள்ள பிரம்மாண்ட பிரச்சார பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசுகிறார்.
-
பொன்முடி பதவியேற்பு விவகாரம்: கவர்னருக்கு எதிராக தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு
18 Mar 2024புதுடெல்லி : பொன்முடிக்கு அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்து வைக்க மறுப்பு தெரிவிப்பதாக கவர்னர் ஆர்.என்.
-
தமிழகத்தில் நாளை முதல் லேசான மழைக்கு வாய்ப்பு : சென்னை வானிலை மையம் தகவல்
18 Mar 2024சென்னை : தமிழகத்தில் நாளை முதல் 23-ம் தேதி வரை லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
பொன்முடிக்கு பதவிப்பிரமாணம் செய்து வைக்க மறுப்பு: கவர்னர் ரவிக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு: அவசர வழக்காக விசாரிக்க தமிழக அரசு மனு தாக்கல்
18 Mar 2024புதுடெல்லி, பொன்முடிக்கு அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்து வைக்க மறுப்பு தெரிவிப்பதாக கவர்னர் ரவிக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மனு தாக்கல் செய்துள்ளது.
-
சபர்மதி- ஆக்ரா எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டு விபத்து : பெரும் உயிர்சேதம் தவிர்ப்பு
18 Mar 2024ஜோத்பூர் : ராஜஸ்தானில் ஆஜ்மீர் அருகே சபர்மதி - ஆக்ரா விரைவு ரயிலின் 4 பெட்டிகள் தடம் புரண்டன. இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை
-
கோவை பார்லி. தொகுதியில் பா.ஜ.க.தான் போட்டியிடும் : அமைச்சர் எல்.முருகன் திட்டவட்டம்
18 Mar 2024கோவை : கோவை பா.ஜ.க. கோட்டையாக உள்ளது. இத்தொகுதியில் பா.ஜ.க. வேட்பாளர் போட்டியிடுவது உறுதி என்று மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் திட்டவட்டமாக தெரிவித்தார்.
-
போதை பொருள் புழக்கம் அதிகரிப்பு: தமிழக அரசுக்கு எடப்பாடி கண்டனம்
18 Mar 2024சென்னை : தமிழகத்தில் போதை பொருள் புழக்கம் அதிகரிப்புக்கு காரணமான தமிழக அரசுக்கு அ.தி.மு.க. பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
-
ரஷ்ய அதிபர் தேர்தலில் விளாடிமிர் புடின் வெற்றி : மே மாதம் பதவியேற்பு விழா நடக்கிறது
18 Mar 2024மாஸ்கோ : ரஷ்ய அதிபர் தேர்தலில் 87.29 சதவீத வாக்குகள் பெற்று புடின் வெற்றி பெற்றதாக தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக நேற்று அறிவித்துள்ளது.
-
தேர்தல் தேதி அறிவிப்பு எதிரொலி: தமிழகத்தில் ஏப்ரல் 13-ம் தேதிக்குள் தேர்வுகளை முடிக்க பள்ளிக்கல்வி துறை திட்டம்
18 Mar 2024சென்னை : பாராளுமன்ற தேர்தல் அறிவிப்பு எதிரொலியாக, தமிழகத்தில் ஏப்ரல், 13க்குள் அனைத்து தேர்வுகளையும் நடத்தி முடிக்க, பள்ளிக்கல்வி துறை திட்டமிட்டு உள்ளது.
-
அ.தி.மு.க. (ஓ.பி.எஸ்) என்ற பெயரில் போட்டியிட அனுமதிக்க கோரி இந்திய தேர்தல் ஆணையத்தில் ஓ.பி.எஸ். மனு
18 Mar 2024சென்னை, அ.தி.மு.க. (ஓ.பி.எஸ்) என்ற பெயரில் தேர்தலில் போட்டியிட அனுமதிக்க கோரி ஓ.பன்னீர்செல்வம் தேர்தல் ஆணையத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
-
பாராளுமன்ற தேர்தல்: தமிழகத்தில் தி.மு.க. கூட்டணியில் காங். போட்டியிடும் 9 தொகுதிகள் : ம.தி.மு.க.வுக்கு திருச்சி ஒதுக்கீடு
18 Mar 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் போட்டியிடும் 9 தொகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. ம.தி.மு.க.
-
தி.மு.க.வின் பார்லி. தேர்தல் அறிக்கை 20-ம் தேதி வெளியாக வாய்ப்பு
18 Mar 2024சென்னை : பாராளுமன்ற தேர்தலையொட்டி தி.மு.க.வின் தேர்தல் அறிக்கை 20-ம் தேதி வெளியாக வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றனய
-
திருச்செந்தூர் கோவிலில் ஓ.பி.எஸ். சிறப்பு வழிபாடு
18 Mar 2024திருச்செந்தூர் : திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் நேற்று சுவாமி தரிசனம் செய்தார்.
-
செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 27-வது முறை நீட்டிப்பு
18 Mar 2024சென்னை, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 27-வது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது.
-
தமிழ்நாட்டில் பாராளுமன்ற தேர்தலுக்கான தி.மு.க. கூட்டணி தொகுதி பங்கீடு நிறைவு பெற்றது: எந்தெந்த தொகுதிகளில் போட்டி - முழுவிவரம் வெளியீடு
18 Mar 2024சென்னை, தமிழ்நாட்டில் தி.மு.க.
-
டிராக்டருடன் கார் மோதிய விபத்தில் 3 குழந்தைகள் உள்பட 9 பேர் பலி
18 Mar 2024பாட்னா : பீகாரில் டிராக்டருடன் கார் மோதி விபத்துக்குள்ளானதில் 3 குழந்தைகள் உட்பட 9 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
-
போதைப்பொருள் கடத்தல் வழக்கு: ஜாபர் சாதிக், சென்னை அழைத்து வரப்பட்டார்
18 Mar 2024சென்னை : போதை பொருள் கடத்தல் வழக்கில் கைதான ஜாபர் சாதிக் சென்னை அழைத்து வரப்பட்டுள்ளார்.
-
கவர்னர் பொறுப்பில் இருந்து விலகுவதாக தமிழிசை சவுந்தரராஜன் ஜனாதிபதிக்கு கடிதம் : தமிழகத்தில் போட்டியிட போவதாக அறிவிப்பு
18 Mar 2024சென்னை : தெலுங்கானா மற்றும் புதுவை மாநில கவர்னராக இருக்கும் தமிழிசை சவுந்தரராஜன் தனது பொறுப்பில் இருந்து விலகுவதாக ஜனாதிபதிக்கு கடிதம் எழுதியுள்ளார். மேலும் மக்கள
-
டெல்லி குடிநீர் வாரிய ஒப்பந்த ஊழல் வழக்கு: அமலாக்க துறையின் சம்மனை புறக்கணித்தார் கெஜ்ரிவால்
18 Mar 2024புதுடெல்லி : டெல்லி குடிநீர் வாரிய ஒப்பந்தம் அளிக்கப்பட்டதில் ஊழல் நடந்ததாக தொடரப்பட்ட வழக்கில் சம்மன் அனுப்பியதை தொடர்ந்து அமலாக்கத்துறையின் விசாரணைக்கு முதல்வர் கெஜ்ர
-
புதிய அரசின் முதல் 100 நாட்களுக்கான செயல்திட்டத்தை வகுக்க வேண்டும் : மத்திய அமைச்சர்களுக்கு பிரதமர் மோடி அறிவுறுத்தல்
18 Mar 2024புதுடெல்லி : தேர்தலுக்கு பிறகு அமையும் புதிய அரசின் முதல் 100 நாட்கள் மற்றும் 5 ஆண்டுகளுக்கான செயல்திட்டத்தை வகுக்குமாறு மத்திய அமைச்சர்களை பிரதமர் மோடி கேட்டுக் கொண்டு
-
பாராளுமன்ற தேர்தல்: 24-ம் தேதி திருச்சியில் பிரசாரத்தை துவக்குகிறார் எடப்பாடி பழனிசாமி
18 Mar 2024சென்னை : பாராளுமன்ற தேர்தலுக்கான பிரசாரத்தை வருகிற 24-ம் தேதி அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி திருச்சியில் தொடங்குகிறார்.
-
பாராளுமன்ற தேர்தலுக்கான அ.தி.மு.க. தேர்தல் அறிக்கை இ.பி.எஸ்.யிடம் ஒப்படைப்பு
18 Mar 2024சென்னை : பாராளுமன்ற தேர்தலுக்கான அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையின் இறுதி தொகுப்பை அ.தி.மு.க.
-
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர்கள் அறிவிப்பு
18 Mar 2024சென்னை : பாராளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழகத்தில் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. தி.மு.க.