எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

புதுடெல்லி,ஜூலை.- 7 -2011-12-ம் ஆண்டுக்கான தமிழக திட்டங்களுக்கு ரூ.23 ஆயிரத்து 535 கோடியை மத்திய திட் டக்குழு ஒதுக்கீடு செய்துள்ளது. திட்டக்குழுவுடன் முதல்வர் ஜெயலலிதா பேச்சுவார்த்தை நடத்திய பின்னர் இந்த நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது கடந்தாண்டை விட ரூ.3 ஆயிரத்து 467 கோடி அதிகமாகும். இந்தநிதி ஒதுக்கீடு மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது என்றும் ஜெயலலிதா கூறியுள்ளார். நாட்டிலுள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் மத்திய திட்டக்குழு நிதி ஒதுக்கீடு செய்யும். நிதி ஒதுக்கீடு செய்வதற்கு முன்பு சம்பந்தப்பட்ட மாநிலங்களின் முதல்வர்களுடன் திட்டக்கமிஷன் துணைத்தலைவர் பேச்சுவார்த்தை நடத்துவார். இந்த பேச்சுவார்த்தையின் முடிவில் அந்தந்த மாநிலங்களின் திட்டங்களுக்கு தகுந்தவாறு மத்திய திட்டக்கமிஷன் நிதி ஒதுக்கீடு செய்யும். மாநிலங்களுக்கு திட்ட நிதி ஒதுக்கீடு தொடர்பாக நேற்று மத்திய திட்டக்கமிஷன் துணைத்தலைவர் மாண்டக் சிங் அலுவாலியா தலைமையில் டெல்லியில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு வருமாறு தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு மாண்டெக் சிங் அலுவாலியா அழைப்பு விடுத்தார். இதனை ஏற்று முதல்வர் ஜெயலலிதா நேற்று சென்னையில் இருந்து தனி விமானத்தில் புதுடெல்லி சென்றார். டெல்லி சென்ற அவரை முன்னதாக தமிழக அமைச்சர்கள், அ.தி.மு.க. எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் தொண்டர்கள் ஆகியோர் பூச்செண்டு கொடுத்து வழியனுப்பி வைத்தனர். முதல்வர் ஜெயலலிதாவுடன் நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், தலைமை செயலாளர் சாரங்கி மற்றும் உயரதிகாரிகள் சென்றனர். டெல்லி விமான நிலையத்தில் வந்திறங்கிய முதல்வர் ஜெயலலிதாவுக்கு தமிழக அரசின் சிறப்பு பிரதிநிதி, நாடாளுமன்ற அ.தி.மு.க. குழு தலைவர் தம்பித்துறை மற்றும் கட்சியின் எம்.பி.க்கள் ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். பின்னர் ஜெயலலிதா நேராக தமிழ்நாடு இல்லத்திற்கு சென்றார். அங்கு ஜெயலலிதாவுக்கு போலீஸ் அணிவகுப்பு மரியாதை கொடுக்கப்பட்டது. அதை ஜெயலலிதா ஏற்றுக்கொண்டார். அதனையடுத்து மத்திய திட்டக்குழு கூட்டத்திற்கு சென்றார். கூட்டம் நடைபெற்ற இடத்திற்கு ஜெயலலிதா சென்றதும் அவருக்கு மாண்டக் சிங் அலுவாலியா பூச்செண்டு கொடுத்து அன்புடன் வரவேற்றார். மாண்டெக் சிங் அலுவாலியாவுடன் ஜெயலலிதா சிறிது நேரம் பேசினார். இந்த பேச்சுக்கு பின்னர் மத்திய திட்டக்குழு கூட்டத்தில் கலந்துகொண்டார். இதில் தமிழக நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் உயரதிகாரிகள் கலந்துகொண்டனர். மேலும் மாண்டக் சிங் அலுவாலியா மற்றும் அவரது துறையை சேர்ந்த உயரதிகாரிகளும் கலந்துகொண்டனர்.
கூட்டத்தில் பேசிய ஜெயலலிதா இந்தியாவிலேயே தமிழகத்தை முதன்மை மாநிலமாக்கும் ஆயத்தப்பணிகளை மேற்கொண்டுவிட்தாக தெரிவித்தார். மேலும் தமிழகத்தில் குக்கிராமங்களுக்கும் சாலை வசதி செய்து கொடுத்தல், மாநிலத்தில் சுகாதார வசதிகளை பெருக்கவும், வறுமையை ஒழிக்கவும் தமிழகத்திற்கு ரூ.23 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்றார். ஜெயலலிதா கூறிய நியாயமான திட்டங்களை ஆய்வு செய்த திட்டக்கமிஷன் ஜெயலலிதா கேட்டதை விட ரூ.535 கோடி ரூபாய் கூடுதலாக ஒதுக்கியது. அதாவது 2011-12-ம் ஆண்டுக்கான மொத்த திட்ட நிதி ரூ.23 ஆயிரத்து 535 கோடியை திட்டக்கமிஷன் ஒதுக்கீடு செய்தது. இந்த நிதி ஒதுக்கீடு கடந்த ஆண்டு தமிழகத்திற்கு திட்டக்கமிஷன் ஒதுக்கீடு செய்த தொகையை விட ரூ. 3 ஆயிரத்து 535 கோடி அதிகமாகும் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்தாண்டுகளில் மத்தியில் காங்கிரஸ் கூட்டணி அரசில் தி.மு.க. இடம்பெற்றிருந்த போதிலும் கருணாநிதியால் தமிழக திட்டங்களுக்கு இவ்வளவு அதிகமாக நிதியை கேட்டு பெற முடியவில்லை. ஆனால் அ.தி.மு.க. கட்சியானது காங்கிரஸ் கூட்டணியில் இல்லாததோடு மத்திய அரசிலும் இடம்பெறவில்லை. அப்படி இருந்தும் ஜெயலலிதா தனது நிர்வாக திறமையால் கூடுதல் நிதி பெற்றுள்ளார்.
கூட்டம் முடிந்ததும் ஜெயலிலாதவை மாண்டெக் சிங் அலுவாலியா வாசல்படி வரை வந்து மரியாதையுடன் வழியனுப்பி வைத்தார். வெளியே வந்ததும் நிருபர்களுக்கு பேட்டி அளித்த ஜெயலலிதா திட்டக்குழுவின் நிதி ஒதுக்கீடு ரொம்ப மகிழ்ச்சி அளிக்கிறது என்றார். இந்த நிதி ஒதுக்கீட்டை நாங்கள் எதிர்பார்த்ததுதான். தமிழக அரசின் கடன் ரூ. ஒரு லட்சம் கோடியாக உள்ளது. மேலும் 40 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பில் இருக்கிறது. இதை சமாளிக்க தமிழகத்திற்கு மத்திய அரசு சிறப்பு நிதி ஒதுக்க வேண்டும் என்று திட்டக்குழுவை நான் கேட்டுக்கொண்டேன். தமிழக அரசின் சில கோரிக்கைகள் ஏற்கப்படவில்லை. தமிழக மாணவர்களுக்கு லேப் டாப் வழங்கும் திட்டத்திற்கு மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டேன் என்று ஜெயலலிதா மேலும் கூறினார்.
பின்னர் நிருபர்களுக்கு பேட்டி அளித்த மாண்டக்சிங் அலுவாலியாவிடம் தமிழகத்திற்கு சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று முதல்வர் ஜெயலலிதா கோரியிருப்பது குறித்து நிருபர்கள் கேட்டனர். அதற்கு பதில் அளித்த மாண்டக் சிங் அலுவாலியா, இதுகுறித்து பிரதமருக்கு கடிதம் எழுதப்படும் என்றார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 9 months 1 week ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 9 months 2 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 10 months 1 week ago |
-
அ.தி.மு.க. கூட்டணிக்கு வருமாறு விஜய்க்கு மறைமுக அழைப்பு விடுத்த எடப்பாடி பழனிசாமி
05 Jul 2025சென்னை, தி.மு.க. ஆட்சியை அகற்ற நினைப்பவர்களுடன் கூட்டணி அமைப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம் என எடப்பாடி பழனிசாமி கூறினார்.
-
அரசு மருத்துவ கல்லூரி டீன் நியமனம்: தனி நீதிபதியின் உத்தரவை உறுதி செய்தது ஐகோர்ட்
05 Jul 2025சென்னை, அரசு மருத்துவ கல்லூரி டீன் நியமனம் தொடர்பாக, தனி நீதிபதியின் உத்தரவை சென்னை ஐகோர்ட் உறுதி செய்துள்ளது.
-
தி.மு.க.வுக்கு ஆதரவு எப்படி? 3 தொகுதிகளின் நிர்வாகிகளுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை
05 Jul 2025சென்னை, பட்டுக்கோட்டை, பாபநாசம், மணப்பாறை 3 சட்டப்பேரவை தொகுதிகளின் நிர்வாகிகளுடன் தி.மு.க. தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 05-07-2025.
05 Jul 2025 -
வரும் 8-ம் தேதி ராமதாஸ் தலைமையில் பா.ம.க. செயற்குழு கூட்டம்
05 Jul 2025திண்டிவனம், பா.ம.க. செயற்குழு கூட்டம் வரும் 8ம் தேதி நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
சர்வதேச ஸ்கேட்டிங் போட்டியில் தங்கம்: தூத்துக்குடி மாணவிக்கு துணை முதல்வர் வாழ்த்து
05 Jul 2025சென்னை, சர்வதேச ஸ்கேட்டிங் போட்டியில் வெற்றி பெற்ற தூத்துக்குடி மாணவிக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார்.
-
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து மேலும் அதிகரிப்பு
05 Jul 2025தர்மபுரி : ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்தனை முன்னிட்டு சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
-
ஆயுர்வேத மருந்துகளுக்கு இறக்குமதி உரிமம் கட்டாயம்: சென்னை ஐகோர்ட்
05 Jul 2025சென்னை : ஆயுர்வேத மருந்துகளுக்கு இறக்குமதி உரிமம் கட்டாயம் பெற வேண்டும் என்று ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
-
விஜய் கட்சியிலிருந்து பிரசாந்த் கிஷோர் திடீர் விலகல்
05 Jul 2025சென்னை, விஜய் கட்சிக்கு தேர்தல் ஆலோசனை வழங்கும் பொறுப்பை ஏற்றிருந்த பிரசாந்த் கிஷோர், அதில் இருந்து விலகிக் கொண்டுள்ளார்.
-
உ.பி., யில் சோகம்: கல்லூரி சுவரில் கார் மோதி மணமகன் உட்பட 8 பேர் பலி
05 Jul 2025லக்னோ, உத்தரபிரதேச மாநிலத்தில் கல்லூரி வளாக சுவரில் கார் மோதிய விபத்தில் மணமகன் உட்பட 8 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
-
புதிய வரி விகிதம் ஆகஸ்ட் 1 முதல் அமல்: 12 நாடுகளுக்கான வரி கடிதத்தில் கையெழுத்திட்டார் அதிபர் ட்ரம்ப்
05 Jul 2025வாஷிங்டன் : வரி விகிதம் தொடர்பாக 12 நாடுகளுக்கான கடிதத்தில் தான் கையெழுத்து இட்டுவிட்டதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
-
தி.மு.க. ஆட்சியின் ஆன்மீக புரட்சிக்கு ஒரு மைல்கல்: அமைச்சர் சேகர்பாபு
05 Jul 2025சென்னை, திருச்செந்தூர் கோவில் குடமுழுக்கு விழா தி.மு.க. ஆட்சியின் ஆன்மீக புரட்சிக்கு ஒரு மைல்கல் என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.
-
இந்தித் திணிப்புக்கு எதிராக மத்திய பா.ஜ.க. அரசுக்கு மறக்க முடியாத பாடத்தை தமிழ்நாடு மீண்டும் கற்பிக்கும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் காட்டம்
05 Jul 2025சென்னை, தமிழுக்கும் தமிழ்நாட்டுக்கும் பா.ஜ.க. செய்துவரும் துரோகத்துக்கு பா.ஜ.க. பரிகாரம் தேட வேண்டும்.
-
'தமிழ் மாநில பகுஜன் சமாஜ்' புதிய கட்சி தொடங்கினார் பொற்கொடி ஆம்ஸ்ட்ராங்
05 Jul 2025சென்னை : தமிழ் மாநில பகுஜன் சமாஜ் கட்சியின் புதிய கட்சியை ஆம்ஸ்ட்ராங் மனைவி பொற்கொடி தொடங்கியுள்ளார்.
-
காசாவில் 613 பாலஸ்தீனியர்கள் கொலை: ஐ.நா. குற்றச்சாட்டு
05 Jul 2025வாஷிங்டன் : கடந்த மே மாதத்தில் இருந்து காசாவில் நிவாரண உதவி பெற முயன்ற 613 பாலஸ்தீனியர்கள் கொலை செய்யப்பட்டுள்ளதாக ஐ.நா. தெரிவித்துள்ளது.
-
சிறுமி பாலியல் வன்கொடுமை: இங்கிலாந்தில் இந்திய வம்சாவளி இளைஞருக்கு ஆயுள் தண்டனை
05 Jul 2025லண்டன் : இங்கிலாந்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் இந்திய வம்சாவளி இளைஞருக்கு ஆயுள் தண்டனை அறிவிக்கப்பட்டுள்ளது.
-
சி.பி.எஸ்.இ. பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான விதிமுறைகள் வெளியீடு
05 Jul 2025புதுடில்லி : 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு இரண்டு முறை நடத்தப்படும் என சி.பி.எஸ்.இ. அறிவித்திருந்தது. அதற்கான தகுதி அளவுகோல் மற்றும் விதிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது.
-
போர்நிறுத்தம் குறித்து ஹமாஸின் அறிவிப்பால் மகிழ்ச்சி
05 Jul 2025டெல் அவிவ் : காஸாவில் போர்நிறுத்தம் குறித்த வரைவுக்கு பதிலளித்துள்ளதாக ஹமாஸ் அறிவித்துள்ளது.
-
புத்தமத தலைவர் தலாய் லாமா 40 ஆண்டுகள் வாழ விருப்பம்
05 Jul 2025தர்மசாலா : சீனாவின் புத்தமத தலைவர் தலாய் லாமா இன்னும் 40 ஆணடுகளுக்கு மேல் வாழ ஆசைப்படுகிறேன் என்று கூறியுள்ளார்
-
ஜாமீன் கோரி சென்னை ஐகோர்ட்டில் நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணா மனு
05 Jul 2025சென்னை, போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணா ஆகியோர் சென்னை ஐகோர்ட்டில் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்துள்ளனர்.
-
வங்கி மோசடி வழக்கு; நீரவ் மோடியின் சகோதரர் கைது
05 Jul 2025வாஷிங்டன் : பஞ்சாப் நேஷனல் வங்கியில் பல ஆயிரம் கோடி மோசடி செய்த நீரவ் மோடியின் சகோதரர் நேஹல் மோடி அமெரிக்காவில் கைது செய்யப்பட்டார்.
-
வரும் 2026 சட்டசபை தேர்தலில் அதி.மு.க. கூட்டணி வெற்றி பெற்று பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கும்: எடப்பாடி பழனிசாமி உறுதி
05 Jul 2025சென்னை, 2026 தேர்தலில் அதி.மு.க. கூட்டணி வெற்றிபெற்று பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கும் என அதி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
-
ஜார்க்கண்ட் சுரங்க விபத்தில் 4 பேர் பலி
05 Jul 2025ராஞ்சி, ஜார்க்கண்ட் நிலக்கரி சுரங்க விபத்தில் 4 பேர் பலியாகியுள்ளனர்.
-
மொஹரம் பண்டிகை: வரும் 7-ம் தேதி அரசு விடுமுறை என பரவும் தகவலுக்கு மறுப்பு
05 Jul 2025சென்னை, மொஹரம் பண்டிகை ஜூலை 6-ம் தேதிதான் என்றும், இந்தப் பண்டிகையை முன்னிட்டு ஜூலை 7, 2025 (திங்கட்கிழமை) அரசு விடுமுறை என்ற தகவல் தவறானது என்றும் தமிழக அரசின் உண்மை ச
-
20 ஆண்டு கால மோதல் முடிவுக்கு வந்தது: ஒரே மேடையில் உத்தவ் - ராஜ்தாக்கரே
05 Jul 2025மும்பை, மும்பை ஆசாத் மைதானத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் ஒரே மேடையில் உத்தவ் - ராஜ்தாக்கரே பங்கேற்றனர்.