எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, ஜூலை.16 - ``வல்லக்கோட்டை'' படத் தயாரிப்பாளர் கொடுத்த பண மோசடி புகாரில் சக்சேனா 4 வது முறையாக கைது செய்யப்பட்டார். இதற்கிடையில் 3 வது வழக்கில் அவரை 2 நாள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்த விபரம் வருமாறு:-
சென்னை சாலிகிராமத்தை சேர்ந்தவர் பி.டி.ராஜா(31). இவர் நடிகர் அர்ஜுன் நடித்த ``வல்லக்கோட்டை '' என்ற படத்தின் தயாரிப்பாளர் ஆவார். 2010 ஜூன் மாதம் இவரை சன் பிக்சர்ஸ் தலைமை நிர்வாகி சக்சேனா மற்றும் அவரது உதவியாளர்கள் அணுகி, வல்லக்கோட்டை படத்தை சன் டி.வி. சாட்டிலைட் ஒளிபரப்பு உரிமைக்காக ரூ.1.50 கோடி தருவதாக பேசி உள்ளனர். அக்டோபர் மாதம் 30-ம் தேதி இதற்கான பேச்சுவார்த்தையை இறுதி செய்துள்ளனர்.
இதையடுத்து தயாரிப்பாளர் ராஜா, வல்லக்கோட்டை படத்தை நவம்பர் 23-ந் தேதி ரிலீஸ் செய்துள்ளார். இதற்கிடையில் ராஜாவை தொடர்பு கொண்ட சக்சேனா, சென்னை சூளைமேட்டில் உள்ள புளூ ஸ்கை என்ற நிறுவனத்திற்கு வந்து பணத்தை பெற்றுக்கொள்ளுமாறு கூறியுள்ளார்.
இந்த புளு ஸ்கை நிறுவனம் சக்சேனா மைத்துனர் சுரேஷ் என்பவருக்கு சொந்தமானது என்று கூறப்படுகிறது. அங்கு சென்ற படத் தயாரிப்பாளர் ராஜாவை சுரேஷ் மற்றும் சக்சேனாவின் உதவியாளர்கள் ஐயப்பன், தம்பிதுரை ஆகியோர் மிரட்டி உங்கள் படம் ``பாக்ஸ் ஆபிஸ் கிட்'' அடிப்படையில் சரியாக ஓடவில்லை. எனவே ரூ.1.50 கோடி கொடுக்க முடியாது. ரூ.70 லட்சம் மட்டும்தான் தருவோம் என்று கூறியுள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த ராஜா, எவ்வளவோ கெஞ்சி கேட்டும் ரூ.70 லட்சத்திற்கு மேல் அதிக பணம் கொடுக்க அவர்கள் சம்மதிக்க மறுத்ததால் அவர்கள் கொடுக்கும் ரூ.70 லட்சத்தை வாங்கிக்கொள்ள சம்மதித்துள்ளார்.
ஆனால் ரூ.70 லட்சத்தை கொடுக்காமல் அரசு வரி என்று கூறி ரூ.5 லட்சத்தை பிடித்துக் கொண்டு ரூ.65 லட்சம் மட்டும் கொடுத்துள்ளார்கள். இதில் வருத்தமடைந்த ராஜா, யாரிடமும் சொல்லிக் கொள்ளாமல் மனதுக்குள்ளேயே சங்கடப்பட்டுள்ளார். இந்நிலையில் சன் பிக்சர்ஸ் சார்பில் வல்லக்கோட்டை படத்தை ரூ.1.50 கோடிக்கு வாங்கியுள்ளதாக வெளியில் செய்திகளை பரப்பியுள்ளனர். இதனால் மன வருத்தத்திற்கு ஆளான ராஜா, தான் மோசடி செய்யப்பட்டதை பொறுத்தக் கொள்ள முடியாமல், இதுகுறித்து விருகம்பாக்கம் போலீசில் புகார் அளித்துள்ளார்.
அப்போது தி.மு.க. ஆட்சி நடைபெற்றதால் இந்த புகார் மீது போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தற்போது ஆட்சி மாற்றம் ஏற்பட்டு சன் பிக்சர்ஸ் மோசடி குறித்து 3 புகார்கள் அடிப்படையில் தலைமை சன் பிக்சர்ஸ் நிர்வாகி சக்சேனா கைது செய்யப்பட்ட நிலையில் தான் ஏமாற்றப்பட்ட விவரத்தை ராஜா விருகம்பாக்கம் போலீசில் புகாராக அளித்துள்ளார். இதை பெற்றுக் கொண்ட போலீசார் வழக்குப்பதிவு செய்து இந்த 4 வது வழக்கில் சக்சேனா மற்றும் ஐயப்பனை மீண்டும் போலீசார் கைது செய்தனர். தலைமறைவான ஐயப்பன் மற்றும் சுரேசை போலீசார் தேடி வருகின்றனர்.
ஏற்கனவே மாப்பிள்ளை படத் தயாரிப்பாளர் ஹித்தேஷ் புகார் கொடுத்துள்ள ரூ.3.37 கோடி மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சக்சேனாவை போலீஸ் காவலில் வைத்து 2 நாள் விசாரிக்க சைதாப்பேட்டை 17 வது அமர்வு நீதிபதி அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளார்.
ஏற்கனவே தீராத விளையாட்டுப்பிள்ளை, பொல்லாதவன், மாப்பிள்ளை ஆகிய 3 படத் தயாரிப்பாளர்கள் சக்சேனா மீது மோசடி புகார் கொடுத்துள்ளனர். தற்போது வல்லக்கோட்டை படத் தயாரிப்பாளர் ராஜா கொடுத்துள்ள 4 வது புகாரின் பேரில் மீண்டும் சக்சேனா கைது செய்யப்படுவது குறிப்பிடத் தக்கது. இந்த புகார் பட்டியல் நீளும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து சக்சேனா மீது குண்டர் சட்டம் பாய்வதற்கு வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
சூப்பர் சாஃப்ட் இட்லி2 days 6 hours ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி6 days 5 hours ago |
ரவா பர்பி1 week 2 days ago |
-
ஆர்வமுடன் வாக்களித்த உலகின் குள்ளமான பெண்
19 Apr 2024நாக்பூர், நாக்பூரில் உள்ள வாக்குச்சாவடியில் உலகின் குள்ளமான பெண்மணியான ஜோதி ஆம்ஜி என்பவர் வாக்களித்தார்.
-
கடற்படையின் அடுத்த தளபதியாக தினேஷ் குமார் திரிபாதி நியமனம்
19 Apr 2024புது டெல்லி, கடற்படைத் துணைத் தளபதியாக தற்போது பணியாற்றி வரும் வைஸ் அட்மிரல் தினேஷ் குமார் திரிபாதியை வரும் 30-ம் தேதி முதல் கடற்படையின் அடுத்த தளபதியாக அரசு நியமித்துள
-
மாலத்தீவு முன்னாள் அதிபரின் 11 ஆண்டு சிறை தண்டனை ரத்து: மறுவிசாரணைக்கு நீதிமன்றம் உத்தரவு
19 Apr 2024மாலே, மாலத்தீவு முன்னாள் அதிபரின் 11 ஆண்டு சிறை தண்டனையை ரத்து செய்து உத்தரவிட்ட நீதிமன்றம் இந்த வழக்கில் மறுவிசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.
-
பார்லி. தேர்தல்: சொந்த கிராமத்தில் வாக்களித்த எடப்பாடி பழனிசாமி
19 Apr 2024சேலம், தமிழகம் முழுவதும் நேற்று பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது.
-
பார்லி. தேர்தல்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாக்களித்தார்
19 Apr 2024சென்னை : தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளில் பாராளுமன்ற தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி நேற்று நடைபெற்றது. இந்த தேர்தலை
-
சைக்கிள் ஓட்டிச்சென்று நடிகர் விஷால் வாக்களிப்பு
19 Apr 2024சென்னை : நடிகர் விஷால் சைக்கிள் ஓட்டிச்சென்று வாக்களித்தது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
-
கர்நாடகாவில் காங்கிரசில் இணைந்த முன்னாள் எம்.எல்.ஏ.-க்கள் 2 பேர்
19 Apr 2024பெங்களூர், கர்நாடகா மாநிலத்தின் முன்னாள் பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் இருவர் மலிகாய்யா கட்டேதார், சாரதா மோகன் ஷெட்டி ஆகியோர் நேற்று காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர்.
-
பார்லி. தேர்தல்: வாக்களிக்க சென்ற 3 பேர் மயங்கி விழுந்து உயிரிழப்பு
19 Apr 2024சென்னை, தமிழகத்தில் நேற்று நடந்த பாராளுமன்ற தேர்தலில் வாக்களிக்க சென்ற 3 பேர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
ம.பி.யில் காங்கிரசின் நகுல் நாத்துக்கு வாக்களிக்க கோரிய பா.ஜ.க. மேயர்
19 Apr 2024சிந்த்வாரா, மத்தியப் பிரதேசத்தின் நட்சத்திர தொகுதியான சிந்த்வாராவில் நேற்று முதல்கட்ட வாக்குப்பதிவு நடந்தது.
-
புதுச்சேரியில் மோட்டார் சைக்கிளில் சென்று வாக்களித்த முதல்வர் ரங்கசாமி
19 Apr 2024புதுச்சேரி, புதுச்சேரியில் மோட்டார் சைக்கிளில் சென்று தனது வாக்கினை பதிவு செய்தார் அம்மாநில முதல்வர் ரங்காசமி.
-
அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்: கட்காரி
19 Apr 2024நாக்பூர், நாக்பூரில் வாக்களித்த பின், தேர்தலில் நான் நிச்சயம் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்தார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 19-04-2024.
19 Apr 2024 -
இ.வி.எம். குறித்த அச்சம் தேவையில்லை: வாக்குகள் பத்திரமாகவும், பாதுகாப்பாகவும் இருக்கும் : தலைமை தேர்தல் ஆணையர் உறுதி
19 Apr 2024புதுடெல்லி : மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்த அச்சங்களை மறுத்துள்ள இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், “மக்களின் வாக்குகள் பத்திரமாகவும் பாதுகாப்பாகவும
-
ஸ்காட்லாந்தில் அருவியில் குளித்த இந்திய மாணவர்கள் 2 பேர் தவறி விழுந்து உயிரிழப்பு
19 Apr 2024லண்டன், ஸ்காட்லாந்தில் அருவியில் குளித்து மகிழ்ந்த 2 இந்திய மாணவர்கள் தவறி விழுந்து உயிரிழந்தனர்.
-
பாராளுமன்ற தேர்தல்: ஜனநாயக கடமையாற்றிய திரை பிரபலங்கள்
19 Apr 2024சென்னை : தமிழகத்தில் நேற்று நடந்த பாராளுமன்ற தேர்தலில் திரை பிரபலங்கள் பலரும் தங்களது ஜனநாயக கடமையையாற்றினர்.
-
மதுரை சித்திரை திருவிழா: வைகை அணையில் இருந்து தண்ணீர் திறப்பு
19 Apr 2024தேனி : மதுரை சித்திரை திருவிழாவையொட்டி கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்திற்காக வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
-
நீங்கள் நினைப்பது போல இந்தியாவிற்கு வெற்றிதான் : வாக்களித்தப்பின் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேட்டி
19 Apr 2024சென்னை : நீங்கள் நினைப்பது போல இந்தியாவிற்கு வெற்றி தான் என வாக்களித்த பின் முதல்வர் மு.க.ஸ்டாலின் என தெரிவித்தார்.
-
பாராளுமன்ற தேர்தல்: காலையிலேயே வாக்களித்த தமிழக அரசியல் தலைவர்கள்
19 Apr 2024சென்னை, வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன்பே அரசியல் கட்சி தலைவர்கள் காத்திருந்து முதல் ஆளாக தங்களது ஜனநாயக கடமையை ஆற்றினர்.
-
சென்னையில் வாக்களித்த கவர்னர் ஆர்.என்.ரவி மகிழ்ச்சி
19 Apr 2024சென்னை : ஜனநாயகத்தின் மிகப் பெரிய திருவிழா இது.
-
தமிழகத்தில் அமைதியான வாக்குப்பதிவு தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு பேட்டி
19 Apr 2024சென்னை, தமிழ்நாடு முழுவதும் அனைத்து இடங்களிலும் அமைதியாக, நல்லபடியாக வாக்குப்பதிவு நடைபெற்றதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு கூறினார்.
-
102 பார்லி. தொகுதிகளில் முதல் கட்ட வாக்குப்பதிவு நிறைவு: தமிழகம், புதுச்சேரியில் விறுவிறு வாக்குப்பதிவு : புதுச்சேரியில் 72.84 சதவீதம் - தமிழகத்தில் 66 சதவீதம் வாக்குப்பதிவு
19 Apr 2024சென்னை : தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது.
7 கட்டங்களாக...
-
காந்திநகரில் அமித்ஷா வேட்புமனு தாக்கல்
19 Apr 2024காந்திநகர், குஜராத் மாநிலத்தில் உள்ள 26 தொகுதிகளுக்கும் 3-வது கட்டமாக மே 7-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 12-ம் தேதி தொடங்கியது.
-
புறக்கணிப்பை கைவிட்டு வாக்களித்த வேங்கைவயல் மக்கள்
19 Apr 2024புதுக்கோட்டை : புதுக்கோட்டை அருகே உள்ள வேங்கைவயல் கிராமத்தைச் சேர்ந்த மக்கள் புறக்கணிக்கும் முடிவைக் கைவிட்டு நேற்று வாக்களித்தனர்.
-
ஐ.நா.வில் பாலஸ்தீனத்தை உறுப்பினராக்கும் தீர்மானம்: வீட்டோ அதிகாரம் மூலம் முறியடித்த அமெரிக்கா
19 Apr 2024நியூயார்க், 193 உறுப்பினர்களைக் கொண்ட ஐ.நா.
-
தேர்தலில் நாங்கள் மக்களை நம்புகிறோம்: மோடி, வாக்கு இயந்திரங்களை நம்புகிறார்: செல்வப்பெருந்தகை
19 Apr 2024சென்னை : நாங்கள் மக்களை நம்பி தேர்தலை சந்திக்கிறோம்.