முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் மறைவுக்கு இரங்கல்

திங்கட்கிழமை, 8 ஆகஸ்ட் 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஆக.9 - முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் மறைவுக்கு தமிழக சட்டசபையில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது. தமிழக சட்டசபை யில் 2011-2012 ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையின் மீதான விவாதம் நேற்று துவங்கியது.இந்த சபை நடவடிக்கையின் முதல் நிகழ்ச்சியாக சபை துவங்கியதும்,  சபாநாயகர் டி.ஜெயக்குமார் திருக்குறள் படித்து, அதற்கு விளக்கம் அளித்தார். முதல் நிகழ்ச்சியாக முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் மறைவுக்கு சபையில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது. 

 மறைந்த முன்னாள் எம்.எல்.ஏ.க்கள், எஸ்.எஸ்.கருப்பசாமி, என்.சண்முகசுந்தரம்(மேட்டுப்பாளையம்), இரா.ஆதிசுவாமி(குளச்சல்), ஜி.ஜி.குருமூர்த்தி(பவானி), மு.பரமசிவம்(தாரமங்கலம்), சைதை கா.கிட்டு(சைதாப்பேட்டை) ஆகியோர் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டு 2 நிமிட நேர மெளன அஞ்சலி செலுத்தப்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்