எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, ஆக.10 - விழுப்புரம் மாவட்டத்தின் மேற்குப் பகுதியில் கள்ளக்குறிச்சி மற்றும் சங்கராபுரம் என இரண்டு தாலுகாக்கள் உள்ளன. இவை இரண்டும் மிகப் பெரிய தாலுகாவாகும். கள்ளக்குறிச்சி மற்றும் சங்கராபுரம் ஆகிய வட்டங்கள் சேர்த்து சுமார் 330 வருவாய் கிராம ஊராட்சிகளை உள்ளடக்கி செயல்பட்டு வருகின்றன. ஆகவே, பொதுமக்கள் நலன் கருதி, இவ்விரு தாலுகா அலுவலகங்களில் குவியும் மக்கள் நெரிசலைக் குறைக்கவும், ஜெயலலிதாவின் தொலைநோக்கு திட்டங்கள் பொதுமக்களுக்கு காலதாமதமின்றி சென்றடையவும், நிருவாக வசதிக்காகவும், மேற்சொன்ன 330 வருவாய் கிராம ஊராட்சிகளை முறையாகப் பிரித்து, சின்னசேலம் என்கிற பெயரில் புதிய தாலுகா ஒன்றை உருவாக்கித் தர ஆணையிட வேண்டுமென்று முதல்வர் ஜெயலலிதாவை பணிவோடு கேட்டுக்கொள்கிறேன்.
எனது சங்கராபுரம் தொகுதிக்குட்பட்ட சின்னசேலம் ஊராட்சி ஒன்றியம், சின்னசேலம் பகுதியில் 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்நகரைச் சுற்றி ஏறக்குறைய 65 கிராமங்கள் உள்ளன. சின்னசேலத்திற்கு தீயணைப்பு நிலையம் அமைக்க வேண்டுமென்று ஏறக்குறைய 25 ஆண்டுகளாக முயற்சி செய்யப்பட்டும் இன்னும் அங்கு தீயணைப்பு நிலையம் அமைக்கப்படவில்லை. தட்டுங்கள் திறக்கப்படும், கேளுங்கள் தரப்படும் என்ற இயேசுவின் சொல்லுக்கிணங்க, கேட்காமலேயே பல திட்டங்களைத் தரும் ஜெயலலிதாவின் அரசு, சின்னசேலம் பகுதி மக்களின் கோரிக்கையை பரிவுடன் ஏற்று, தீயணைப்பு நிலையம் அமைக்க ஆணையிடுமாறு தாழ்மையுடன் வேண்டுகிறோம்.
கள்ளக்குறிச்சி -2 - கூட்டுறவு சர்க்கரை ஆலை விவசாயிகளின் துயர் துடைத்திட, கரும்பு விவசாயிகளின் நலன் காத்திட, போக்குவரத்து நெரிசலைக் குறைத்திட, 40 ஆண்டுகளாக விவசாயிகளிடையே உள்ள கோரிக்கை நிறைவேறிட, கோமுகி ஆற்றின் குறுக்கே உயர்மட்ட பாலம் அமைத்து தர தாழ்மையுடன் வேண்டுகிறேன்.
மேலும், சங்கராபுரம் தொகுதிக்குட்பட்ட கல்வராயன்மலைப் பகுதியை சுற்றுலாத் தலமாக அறிவிக்க வேண்டுமென்றும், அங்கு வசித்து வரும் மலைவாழ் பகுதி மக்கள் மின்கட்டணம் செலுத்த வேண்டுமென்றால், மலைப் பகுதியில் மின்கட்டண அலுவலகம் ஏதுமில்லை. அவர்கள் மலையைவிட்டு இறங்கி nullநீண்ட தூரம் செல்லவேண்டியிருப்பதால், கல்வராயன் மலைப் பகுதிக்கென்று தனியாக மின்கட்டண அலுவலகம் ஒன்றைத் தொடங்க ஜெயலலிதா ஆணையிட வேண்டுமென்று மிகவும் பணிவோடு கேட்டுக்கொள்கிறேன்.
சங்கராபுரம் தொகுதி, கல்வராயன் மலைப் பகுதியை உள்ளடக்கிய பகுதி ஆகும். மிகவும் பின்தங்கிய இந்தப் பகுதியில் பாலிடெக்னிக் கல்லூரி ஒன்றை அமைத்துத் தருமாறு முதல்வர் ஜெயலலிதாவை பணிவுடன் வேண்டுகிறேன். இறுதியாக, சங்கராபுரம் ஒன்றியத்தில் உள்ள அரசம்பட்டு கிராமத்தில் ஆரம்ப சுகாதார நிலையம் ஒன்றைத் தொடங்கிட ஆவன செய்ய வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 7 months ago |


