எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ஈரோடு -5 - ஈரோடு மாவட்டம் காளிங்கராயன் வாய்க்கால் விவசாயிகளின் நலன் கருதியும், குடிநீருக்காகவும் உண்டாக்கப்பட்டது. பவானி ஆற்றிலிருந்து காளிங்கராயன் வாய்க்கால் மூலம் நீர் கொண்டுவரப்படுகிறது. விவசாய நிலங்கள் பயன்பெறும் வகையில் 1264-ஆம் வருடம் காளியங்கராய கவுண்டர் என்பவரால் 746 வருடத்திற்கு முன்பு கால்வாய் கட்டப்பட்டது. சுமார் 34 கிராமப்புற மற்றும் நகர்ப்புற விவசாயிகளின் ஜீவநாடியாக இருந்துவந்தது இந்த கால்வாய். பல நூறு வருடங்களாக விவசாயத்திற்கும், பொதுமக்களின் சுத்தமான குடிநீர் தேவைக்கும் ஆதாரமாக விளங்கிவருகிறது.
சமீபகாலமாக இந்த கால்வாயில் தோல் தொழிற்சாலை கழிவுநீர் மற்றும் சாயப்பட்டறை கழிவுநீர் கலப்பதால் வாய்க்கால் தண்ணீர் விவசாயத்திற்கு பயன்படாத நிலை ஏற்பட்டது. இதனால் விவசாய அமைப்புகள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சிகள் பற்பல போராட்டங்களை நடத்தின. இதனால் அரசாங்கம் காளிங்கராயன் வாய்க்காலில் கழிவுநீர் கலக்காமல் தடுக்க நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டது. இதன் அடிப்படையில் பொதுப்பணித்துறை சார்பில் கான்கிரீட் தடுப்பு சுவரை 5.650 கி.மீட்டர் நீளம் மற்றும் 2.80 மீட்டர் உயரத்திற்கு கட்டும் பணிக்காகவும், பழுதடைந்த பழைய 296 மதகுகளை இடித்துவிட்டு புதிய கான்கிரீட் மதகுகளை கட்டவும், இடது புற மண் கரையை பலப்படுத்தி மண் கொட்டவும், கால்வாயின் இடது புறத்தில் பழுதடைந்த இடங்களில் கருங்கற்கள் கொண்டு தடுப்பு சுவர் கட்டும் பணிகளை மேற்கொள்ளவும், மேலும் புனரமைப்பு மற்றும் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ளவும் ரூ.11.75 கோடிக்கு டெண்டர் விடப்பட்டது. ஒரு வருடத்திற்குள் இப்பணிகளை முடிக்க வேண்டும் என்பது நிபந்தனையாகும். இத்திட்டத்தை அறிவித்தவுடன் இப்பகுதி விவசாயிகள் மிகவும் மகிழ்ச்சியடைந்தனர்.
ஆனால் விவசாயிகளின் எண்ணங்களுக்கு விரோதமாகவும் மற்றும் பொதுமக்களுக்கு சமாதி கட்டும் விதமாகவும் காளிங்கராயன் வாய்க்காலில் பணிகள் நடைபெற்று முடிந்துள்ளன.
கட்டப்பட்ட தடுப்பு சுவர் சரியான உயரத்திற்கு கட்டப்படாததால் கழிவுநீர் நேரடியாக காளிங்கராயன் வாய்க்காலில் கலக்கிறது. மேலும் மெகா மோசடியாக தடுப்பு சுவர் எழுப்பி அதில் கழிவுநீர் தேங்குவதுபோல பொதுமக்கள் பார்வைக்கு காண்பித்து, கழிவுநீர் இனி வாய்க்காலில் கலக்காது என்ற மாயத் தோற்றத்தை ஏற்படுத்திவிட்டு, பொதுப்பணித்துறையினர் சாயப்பட்டறை மற்றும் தோல் பதனிடும் தொழிற்சாலை முதலாளிகளிடம் கையூட்டை பெற்றுக்கொண்டு, தடுப்பு சுவரின் அடியில் மெகா கான்கிரீட் சிமெண்ட் குழாய்களை பதித்து கழிவுநீரை நேரடியாக காளிங்கராயன் வாய்க்காலில் கலக்க வைத்து விவசாயிகளையும், பொதுமக்களையும் ஏமாற்றி உள்ளனர். இதனால் இப்பகுதியில் விவசாயமே அழிந்துவிடக்கூடிய காரியத்திற்கு உறுதுணையாக இருந்துள்ளனர்.
மேலும் வாய்க்காலின் இடதுகரையின் பழுதடைந்த இடங்களை மண்ணைக் கொட்டி பலப்படுத்தி உள்ளோம் எனக்கூறி, மண்ணை கொட்டாமல் இருப்பதை இடதுபுற கரையின் மேற்பாதையை பார்த்தாலே புரியும். ஆனால் இப்பணிக்காக பல்வேறு பகுதிகளில் இருந்து மண் கொண்டுவரப்பட்டதாக கணக்கு காட்டப்பட்டு சுமார் 15 லட்சத்திற்கு பில் மோசடி செய்யப்பட்டுள்ளது.
மேலும் இந்த பணிகளை பார்வையிட தற்காலிக பணியாளர்களை நியமித்து உள்ளதாகவும் அவர்களுக்கு மாதம் ரூ. 3,670 சம்பளம் 12.4.2010 முதல் 11.10.2010 வரை கொடுத்துள்ளதாகவும் கூறி, பணியாளர்களை பணியில் அமர்த்தாமலேயே சம்பளம் வழங்கியதாக கூறி ரூ.12 லட்சம் அளவுக்கு மோசடி செய்து உள்ளனர். மேலும் கழிவுநீர் தடுப்பு சுவர் ஒப்பந்தத்தில் கூறியதுபோல் 2.80 மீட்டர் உயரத்திற்கு கட்டப்படாததால் கழிவு நீர் ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு மேல் நேரடியாக காளிங்கராயன் வாய்க்காலிலேயே கலக்கிறது. இதிலும் மிகப்பெரிய ஊழல் நடைபெற்றுள்ளது. பழைய மதகுகள் 294 புதுப்பித்தல் மற்றும் கான்கிரீட் மதகுகள் புதுப்பித்து கட்டப்பட்டு உள்ளதாக கூறி உள்ளனர். இதில் பல இடங்களில் பழைய மதகுகளை சிமெண்ட் பூசி புதிய மதகுகளாக கணக்கு காட்டி ரூ.2.50 கோடிக்கு ஊழல் நடந்துள்ளது. மேலும் கரை ஓரங்களில் இருந்த பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள மரங்களையும் வெட்டி கடத்தி உள்ளனர்.
பொதுமக்கள் மற்றும் விவசாயிகளின் பெரிய எதிர்பார்ப்பாக இருந்த இப்பணிக்கு ஒதுக்கப்பட்ட 11.75 கோடி பணம் முறையாக செயல்படுத்தப்படாததால் பல கோடி ரூபாய் ஊழல் நடந்து இருப்பது வெட்ட வெளிச்சமாக தெரியவருகிறது. பொதுப்பணியை தன் பொறுப்பில் வைத்திருக்கும் முதலமைச்சருக்கும் இதில் பங்கு உண்டா என நாட்டின் மீது அக்கறை உள்ள சமூக ஆர்வலர்களும், விவசாயிகளும் கேள்வி எழுப்பியுள்ளனர்.
இப்பணி என்ன நோக்கத்திற்கு தீட்டப்பட்டதோ, அந்த நோக்கம் நிறைவேறாமலேயே, விவசாயிகளும், பொதுமக்களும் பயன் அடையாமல் திட்டம் தீட்டியவர்களே பயனடைந்து உள்ளனர் என்பது தெள்ளத்தெளிவாக தெரியவருகிறது. நாட்டின் முதன்மைத் தொழிலான விவசாயத்தையே சீரழிக்கக்கூடிய விதத்திலும், குடிதண்ணீரில் சாயபட்டறை கழிவுகளை கலக்கவிட்டு பொதுமக்களின் உயிர்களோடும் விளையாடுகின்ற விதத்தில் இந்தபணிகள் நடைபெற்றுள்ளன. முதல்வர் கவனிக்கும் இலாகாவான பொதுப்பணித்துறையிலேயே இத்தகைய ஊழல்கள் நடந்திருப்பது மிகவும் வெட்கக்கேடானது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 11 months 4 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 12 months 4 days ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 2 weeks ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 18-09-2025.
18 Sep 2025 -
காசா கொடூரத்தை உடனே தடுத்து நிறுத்த வேண்டும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்
18 Sep 2025சென்னை, காசாவில் அரங்கேறி வரும் கொடுமைகளை தடுக்க இந்தியா உறுதியான நிலைப்பாட்டோடு பேச வேண்டும், உலகம் மொத்தமும் ஒன்றிணைய வேண்டும்.
-
மோசடி செய்பவர்களை தலைமை தேர்தல் ஆணையர் காப்பாற்றுகிறார்: ராகுல் காந்தி குற்றச்சாட்டு
18 Sep 2025புதுடெல்லி, கர்நாடகாவின் ஆலந்த் தொகுதியில் 6,000 வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டிய ராகுல் காந்தி, அதற்கான ஆதாரங்களை வெளியிட்டார்.
-
5 மாவட்டங்களில் இன்று கனமழை
18 Sep 2025சென்னை, தமிழகத்தில் திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட 5 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
-
விஜய்யை கடுமையாக விமர்சனம் செய்வது ஏன்? - சீமான் விளக்கம்
18 Sep 2025சென்னை: விஜய்யை கடுமையாக விமர்சனம் செய்வது ஏன்? என்று சீமான் விளக்கம் அளித்துள்ளார்.
-
தி.மு.க. முப்பெரும் விழாவில் பெரியார் விருது பெற்ற கனிமொழி, துரைமுருகனை சந்தித்து வாழ்த்து
18 Sep 2025சென்னை: பெரியார் விருது பெற்ற கனிமொழி தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகனை சந்தித்து வாழ்த்து பெற்றுள்ளார்.
-
சென்னையில் 5-க்கும் மேற்பட்ட இடங்களில் இ.டீ. சோதனை
18 Sep 2025சென்னை, சட்டவிரோத பண பரிமாற்றம் தொடர்பாக சென்னையில் துப்பாக்கி ஏந்திய சி.ஆர்.பி.எப்.
-
பொதுக்கூட்ட விதிமுறைகளை காவல்துறை வகுக்க வேண்டும்: த.வெ.க. வழக்கில் உயர் நீதிமன்றம் உத்தரவு
18 Sep 2025சென்னை, அரசியல் கட்சிகளின் கூட்டங்களுக்கு அனுமதியளிக்கும் போது, அனைத்து கட்சிகளுக்கும் பொருந்தக்கூடிய வகையில் விதிமுறைகளை வகுக்கவும், பொதுச் சொத்துகள் சேதமடைந்தால் அதற்
-
விருதுநகர் பட்டாசு ஆலை விபத்து: 3 பேர் மீது வழக்குப்பதிவு
18 Sep 2025விருதுநகர்: பட்டாசு ஆலைல் பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டு இதில் உரிமையாளர் உள்பட 3 பேர் மீது 4 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
-
எடப்பாடி - அமித்ஷா சந்திப்பு தி.மு.க.வுக்கு பதட்டம்: தமிழிசை சவுந்தரராஜன் விளக்கம்
18 Sep 2025கோவை: எடப்பாடி பழனிசாமி - அமித்ஷா சந்திப்பு தி.மு.க.வுக்கு பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது என்று தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார்.
-
ஜனவரியில் மதுரை மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கு: மதுரை ஐகோர்ட் கிளையில் தகவல்
18 Sep 2025மதுரை, வருகிற 2026 ஜனவரியில் மதுரை மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கு நடைபெறும் என நீதிமன்றத்தில் கோயில் நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.
-
அமராவதி அணையிலிருந்து தண்ணீர் திறக்க அரசு ஆணை
18 Sep 2025சென்னை: 47,117 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் வகையில் அமராவதி அணையிலிருந்து தண்ணீர் திறக்க அரசு ஆணை வெளியிட்டுள்ளது.
-
டி.என்.பி.எஸ்.சி. குரூப்-2 தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு
18 Sep 2025சென்னை: டி.என்.பி.எஸ்.சி. குரூப் 2 தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியாகியுள்ளது.
-
ராகுல் காந்தியின் வாக்கு திருட்டு புகார் எதற்காக? அமித்ஷா பேச்சால் பரபரப்பு
18 Sep 2025பாட்னா, வங்காளதேசத்தில் இருந்து வந்த ஊடுருவல்காரர்களை பாதுகாப்பதற்காகதான் ராகுல் காந்தி வாக்கு திருட்டு புகாரை தெரிவித்துள்ளார் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பே
-
16 மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்பு
18 Sep 2025சென்னை: தமிழகத்தில் 16 மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
அ.தி.மு.க. விவகாரத்தில் பா.ஜ.க. தலையீடு இல்லை: டெல்லி பயணம் குறித்து இ.பி.எஸ். விளக்கம்
18 Sep 2025சேலம், கூட்டணியை பொறுத்தவரை அ.தி.மு.க.வில் நான், பா.ஜ.க.வில் அமித்ஷா கூறுவது தான் இறுதி என தெரிவித்துள்ள எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, அ.தி.மு.க.
-
சமரசமற்ற சமூகநீதி போராளி: இரட்டைமலை சீனிவாசனுக்கு எடப்பாடி பழனிசாமி புகழாரம்
18 Sep 2025சென்னை, கல்வியின் முக்கியத்துவத்தை உணர்ந்திருந்த இரட்டைமலை சீனிவாசன் அதற்காக தன் வாழ்நாளெல்லாம் போராடினார் என்று தெரிவித்துள்ள அ.தி.மு.க.
-
பனை மரம் வெட்ட மாவட்ட கலெக்டர் அனுமதி கட்டாயம் தமிழ்நாடு அரசாணை வெளியீடு
18 Sep 2025சென்னை: பனை மரம் வெட்ட கலெக்டர் அனுமதி கட்டாயம் என அரசாணை வெளியீட்டுள்ளது.
-
வைகை அணையில் இருந்து 120 நாட்களுக்கு நீர் திறப்பு
18 Sep 2025ஆண்டிபட்டி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை மாவட்ட ஒரு போக பாசனத்துக்காக 120 நாட்களுக்கு வைகை அணையில் இருந்து நேற்று (செப்.18) காலை தண்ணீர் திறக்கப்பட்டது.
-
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர்: சூப்பர் 4 சுற்றுக்கு பாக்., தகுதி
18 Sep 2025துபாய்: ஆசிய கோப்பை கிரிக்கெட் லீக் போட்டியில் ஐக்கிய அரபு அமீரகத்தை 41 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அபார வெற்றி பெற்று ஏ பிரிவில் இருந்து 2-வது அணியாக சூப்பர் 4 ச
-
உலக தடகள சாம்பியன்ஷிப்: பதக்க வாய்ப்பை இழந்து வெளியேறிய நீரஜ் சோப்ரா
18 Sep 2025டோக்கியோ: உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் பதக்க வாய்ப்பை இழந்து நீரஜ் சோப்ரா வெளியேறியது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
இன்று முதல் பழனி கோவிலில் ரோப்கார் சேவை நிறுத்தம்
18 Sep 2025திண்டுக்கல்: பழனி கோவிலில் ரோப்கார் இன்று முதல் இயங்காது என்று கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
-
வார விடுமுறை: இன்று முதல் 2 நாட்களுக்கு சென்னையில் இருந்து 1,035 சிறப்பு பேருந்துகள் இயக்கம்
18 Sep 2025சென்னை, வார இறுதி விடுமுறை நாட்களையொட்டி இன்று முதல் 2 நாட்களுக்கு சென்னையில் இருந்து 1,035 சிறப்பு பேருநதுகளை இயக்கவுள்ளதாக அரசு விரைவுப்போக்குவரத்து கழகம் அறிவித்துள்
-
அமேசான் காடுகள் அழிப்புக்கு எதிராக குரல்: 2,250 சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மர்மச்சாவு..!
18 Sep 2025பிரேசிலியா: அமேசான் காடுகள் அழிப்புக்கு எதிராக குரல் எழுப்பிய 2,250 சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மர்மமாக இறந்ததாக தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
தமிழகம் முழுவதும் தீர்மான கூட்டங்கள் நடத்த உத்தரவு: தி.மு.க. தலைமை அறிவிப்பு வெளியீடு
18 Sep 2025சென்னை, முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்மொழிந்த 'தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்' என்ற தீர்மான விளக்கக் கூட்டங்கள் வருகிற செப்.