எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஈரோடு -5 - ஈரோடு மாவட்டம் காளிங்கராயன் வாய்க்கால் விவசாயிகளின் நலன் கருதியும், குடிநீருக்காகவும் உண்டாக்கப்பட்டது. பவானி ஆற்றிலிருந்து காளிங்கராயன் வாய்க்கால் மூலம் நீர் கொண்டுவரப்படுகிறது. விவசாய நிலங்கள் பயன்பெறும் வகையில் 1264-ஆம் வருடம் காளியங்கராய கவுண்டர் என்பவரால் 746 வருடத்திற்கு முன்பு கால்வாய் கட்டப்பட்டது. சுமார் 34 கிராமப்புற மற்றும் நகர்ப்புற விவசாயிகளின் ஜீவநாடியாக இருந்துவந்தது இந்த கால்வாய். பல நூறு வருடங்களாக விவசாயத்திற்கும், பொதுமக்களின் சுத்தமான குடிநீர் தேவைக்கும் ஆதாரமாக விளங்கிவருகிறது.
சமீபகாலமாக இந்த கால்வாயில் தோல் தொழிற்சாலை கழிவுநீர் மற்றும் சாயப்பட்டறை கழிவுநீர் கலப்பதால் வாய்க்கால் தண்ணீர் விவசாயத்திற்கு பயன்படாத நிலை ஏற்பட்டது. இதனால் விவசாய அமைப்புகள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சிகள் பற்பல போராட்டங்களை நடத்தின. இதனால் அரசாங்கம் காளிங்கராயன் வாய்க்காலில் கழிவுநீர் கலக்காமல் தடுக்க நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டது. இதன் அடிப்படையில் பொதுப்பணித்துறை சார்பில் கான்கிரீட் தடுப்பு சுவரை 5.650 கி.மீட்டர் நீளம் மற்றும் 2.80 மீட்டர் உயரத்திற்கு கட்டும் பணிக்காகவும், பழுதடைந்த பழைய 296 மதகுகளை இடித்துவிட்டு புதிய கான்கிரீட் மதகுகளை கட்டவும், இடது புற மண் கரையை பலப்படுத்தி மண் கொட்டவும், கால்வாயின் இடது புறத்தில் பழுதடைந்த இடங்களில் கருங்கற்கள் கொண்டு தடுப்பு சுவர் கட்டும் பணிகளை மேற்கொள்ளவும், மேலும் புனரமைப்பு மற்றும் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ளவும் ரூ.11.75 கோடிக்கு டெண்டர் விடப்பட்டது. ஒரு வருடத்திற்குள் இப்பணிகளை முடிக்க வேண்டும் என்பது நிபந்தனையாகும். இத்திட்டத்தை அறிவித்தவுடன் இப்பகுதி விவசாயிகள் மிகவும் மகிழ்ச்சியடைந்தனர்.
ஆனால் விவசாயிகளின் எண்ணங்களுக்கு விரோதமாகவும் மற்றும் பொதுமக்களுக்கு சமாதி கட்டும் விதமாகவும் காளிங்கராயன் வாய்க்காலில் பணிகள் நடைபெற்று முடிந்துள்ளன.
கட்டப்பட்ட தடுப்பு சுவர் சரியான உயரத்திற்கு கட்டப்படாததால் கழிவுநீர் நேரடியாக காளிங்கராயன் வாய்க்காலில் கலக்கிறது. மேலும் மெகா மோசடியாக தடுப்பு சுவர் எழுப்பி அதில் கழிவுநீர் தேங்குவதுபோல பொதுமக்கள் பார்வைக்கு காண்பித்து, கழிவுநீர் இனி வாய்க்காலில் கலக்காது என்ற மாயத் தோற்றத்தை ஏற்படுத்திவிட்டு, பொதுப்பணித்துறையினர் சாயப்பட்டறை மற்றும் தோல் பதனிடும் தொழிற்சாலை முதலாளிகளிடம் கையூட்டை பெற்றுக்கொண்டு, தடுப்பு சுவரின் அடியில் மெகா கான்கிரீட் சிமெண்ட் குழாய்களை பதித்து கழிவுநீரை நேரடியாக காளிங்கராயன் வாய்க்காலில் கலக்க வைத்து விவசாயிகளையும், பொதுமக்களையும் ஏமாற்றி உள்ளனர். இதனால் இப்பகுதியில் விவசாயமே அழிந்துவிடக்கூடிய காரியத்திற்கு உறுதுணையாக இருந்துள்ளனர்.
மேலும் வாய்க்காலின் இடதுகரையின் பழுதடைந்த இடங்களை மண்ணைக் கொட்டி பலப்படுத்தி உள்ளோம் எனக்கூறி, மண்ணை கொட்டாமல் இருப்பதை இடதுபுற கரையின் மேற்பாதையை பார்த்தாலே புரியும். ஆனால் இப்பணிக்காக பல்வேறு பகுதிகளில் இருந்து மண் கொண்டுவரப்பட்டதாக கணக்கு காட்டப்பட்டு சுமார் 15 லட்சத்திற்கு பில் மோசடி செய்யப்பட்டுள்ளது.
மேலும் இந்த பணிகளை பார்வையிட தற்காலிக பணியாளர்களை நியமித்து உள்ளதாகவும் அவர்களுக்கு மாதம் ரூ. 3,670 சம்பளம் 12.4.2010 முதல் 11.10.2010 வரை கொடுத்துள்ளதாகவும் கூறி, பணியாளர்களை பணியில் அமர்த்தாமலேயே சம்பளம் வழங்கியதாக கூறி ரூ.12 லட்சம் அளவுக்கு மோசடி செய்து உள்ளனர். மேலும் கழிவுநீர் தடுப்பு சுவர் ஒப்பந்தத்தில் கூறியதுபோல் 2.80 மீட்டர் உயரத்திற்கு கட்டப்படாததால் கழிவு நீர் ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு மேல் நேரடியாக காளிங்கராயன் வாய்க்காலிலேயே கலக்கிறது. இதிலும் மிகப்பெரிய ஊழல் நடைபெற்றுள்ளது. பழைய மதகுகள் 294 புதுப்பித்தல் மற்றும் கான்கிரீட் மதகுகள் புதுப்பித்து கட்டப்பட்டு உள்ளதாக கூறி உள்ளனர். இதில் பல இடங்களில் பழைய மதகுகளை சிமெண்ட் பூசி புதிய மதகுகளாக கணக்கு காட்டி ரூ.2.50 கோடிக்கு ஊழல் நடந்துள்ளது. மேலும் கரை ஓரங்களில் இருந்த பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள மரங்களையும் வெட்டி கடத்தி உள்ளனர்.
பொதுமக்கள் மற்றும் விவசாயிகளின் பெரிய எதிர்பார்ப்பாக இருந்த இப்பணிக்கு ஒதுக்கப்பட்ட 11.75 கோடி பணம் முறையாக செயல்படுத்தப்படாததால் பல கோடி ரூபாய் ஊழல் நடந்து இருப்பது வெட்ட வெளிச்சமாக தெரியவருகிறது. பொதுப்பணியை தன் பொறுப்பில் வைத்திருக்கும் முதலமைச்சருக்கும் இதில் பங்கு உண்டா என நாட்டின் மீது அக்கறை உள்ள சமூக ஆர்வலர்களும், விவசாயிகளும் கேள்வி எழுப்பியுள்ளனர்.
இப்பணி என்ன நோக்கத்திற்கு தீட்டப்பட்டதோ, அந்த நோக்கம் நிறைவேறாமலேயே, விவசாயிகளும், பொதுமக்களும் பயன் அடையாமல் திட்டம் தீட்டியவர்களே பயனடைந்து உள்ளனர் என்பது தெள்ளத்தெளிவாக தெரியவருகிறது. நாட்டின் முதன்மைத் தொழிலான விவசாயத்தையே சீரழிக்கக்கூடிய விதத்திலும், குடிதண்ணீரில் சாயபட்டறை கழிவுகளை கலக்கவிட்டு பொதுமக்களின் உயிர்களோடும் விளையாடுகின்ற விதத்தில் இந்தபணிகள் நடைபெற்றுள்ளன. முதல்வர் கவனிக்கும் இலாகாவான பொதுப்பணித்துறையிலேயே இத்தகைய ஊழல்கள் நடந்திருப்பது மிகவும் வெட்கக்கேடானது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 1 month ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 1 month ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 2 months ago |
-
ஒரு சவரன் தங்கம் விலை ரூ.90 ஆயிரத்திற்கு கீழ் சரிவு
05 Nov 2025சென்னை, தங்கம் விலை நேற்றும் சரிவை சந்தித்துள்ளது.
-
சின்சினாட்டி மேயர் தேர்தல்: ஜே.டி.வான்ஸ் சகோதரரை தோற்கடித்தார் அஃப்தாப்
05 Nov 2025சின்சினாட்டி, அமெரிக்காவின் சின்சினாட்டி மேயர் தேர்தலில் துணை அதிபர் ஜே.டி. வான்ஸின் சகோதரர் கோரி போமனை இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அஃப்தாப் புரேவல் தோற்கடித்துள்ளார்.
-
ரூ.23 கோடி செலவில் மேம்படுத்தப்பட்ட திருச்செங்கோடு அரசு மருத்துவமனையை திறந்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
05 Nov 2025சென்னை, ரூ.23 கோடி செலவில் தரை மற்றும் நான்கு தளங்கள் கொண்ட புதிய மருத்துவக் கட்டிடத்துடன் 225 படுக்கை வசதிகளுடன் மேம்படுத்தப்பட்ட திருச்செங்கோடு அரசு மருத்துவமனையை முத
-
ஜனநாயகத்தை அழிக்கும் புதிய ஆயுதம் சிறப்பு தீவிர திருத்தம்: ராகுல் காந்தி பரபரப்பு குற்றச்சாட்டு
05 Nov 2025புதுடெல்லி, வாக்காளர் பட்டியலில் தீவிர திருத்தம் என்பது ஜனநாயகத்தை அழிக்க பா.ஜ.க.வின் புதிய ஆயுதம் என்று எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பகிரங்கமாகக் குற்றம்சாட்டிய
-
அரியாணா வாக்காளர் பட்டியலில் பிரேசில் பெண் மாடல் படம்: ஆதாரங்களுடன் ராகுல் குற்றச்சாட்டு
05 Nov 2025புதுடெல்லி, அரியாணா மாநில வாக்காளர் பட்டியலில் பிரேசில் நாட்டைச் சேர்ந்த மாடல் பெண் ஒருவரின் புகைப்படத்தைப் பயன்படுத்தி பல போலி வாக்காளர்கள் உருவாக்கப்பட்டுள்ளனர் என்று
-
பீகாரில் 121 தொகுதிகளில் இன்று முதல் கட்ட தேர்தல்: ஓட்டுப்பதிவுக்கான ஏற்பாடுகள் தயார்
05 Nov 2025பாட்னா, பீகாரில் 121 தொகுதிகளில் இன்று முதல் கட்ட சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது.
-
14-வது ஆடவர் ஹாக்கி இளையோர் உலகக்கோப்பை: வெற்றி கோப்பையை அறிமுகம் செய்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
05 Nov 2025சென்னை, தமிழகத்தில் வரும் 28-ம் தேதி முதல் நடைபெறும் 14-வது ஆடவர் ஹாக்கி இளையோர் உலகக்கோப்பை தொடருக்கான வெற்றி கோப்பையை முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிமுகப்படுத்தினார்
-
கோவை வன்கொடுமை சம்பவம்: பாதிக்கப்பட்ட மாணவியை போலீசார் மீட்க தாமதம் ஏன்? எடப்பாடி பழனிசாமி கேள்வி
05 Nov 2025சென்னை, கோவையில் பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட மாணவியை மீட்க தாமதம் ஏன்..? என்று கோவை போலீசாருக்கு எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
-
வரும் 2026 சட்டசபை தேர்தலில் த.வெ.க.வுக்கு 100 சதவீத வெற்றி சிறப்பு பொதுக்குழுவில் விஜய் பேச்சு
05 Nov 2025சென்னை: 2026 சட்டசபை தேர்தலில் தமிழக வெற்றிக்கழகத்திற்கு 100 சதவீத வெற்றி நிச்சயம் என்று பொதுக்குழுவில் விஜய் பேசினார்.
-
ஸ்மிருதி, ஜெமிமா ரோட்ரிக்ஸ், ராதாவுக்கு தலா ரூ.2.25 கோடி மகாராஷ்டிரா அரசு அறிவிப்பு
05 Nov 2025மும்பை: மகளிர் ஒருநாள் உலக கோப்பை வென்றதற்காக மகாராஷ்டிர வீராங்கனைகள் ஸ்மிருதி மந்தனா, ஜெமிமா ரோட்ரிக்ஸ், ராதா யாதவுக்கு அம்மாநில அரசு தலா ரூ.2.25 கோடி பரிசுத் தொகையை அ
-
கரூர் கூட்ட நெரிசல்: 3 காவல் உதவி ஆய்வாளர்களிடம் சி.பி.ஐ. விசாரணை
05 Nov 2025கரூர்: கரூர் கூட்ட நெரிசல்: 3 காவல் உதவி ஆய்வாளர்களிடம் சி.பி.ஐ. மீண்டும் விசாரணை நடத்தியது.
-
வேலூரில் ரூ.32 கோடியில் புதிய மினி டைடல் பூங்கா: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
05 Nov 2025சென்னை, 600 தகவல் தொழில்நுட்ப வல்லுநர்களுக்கு புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையில் ரூ.32 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள வேலூர் மினி டைடல் பூங்காவினை முதல்வர்
-
அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம்: கூட்டணி பற்றி கவலை வேண்டாம்; தானாகவே நடக்கும்: இ.பி.எஸ். பேச்சு
05 Nov 2025சென்னை, கூட்டணி குறித்து கவலை வேண்டாம், அது தானாகவே நடக்கும் என மாவட்டச் செயலாளர்களிடம் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
-
எங்களுக்கு சூழ்ச்சி தெரியவில்லை: கரூர் சம்பவம் குறித்து ஆதவ் அர்ஜுனா பேச்சு
05 Nov 2025சென்னை: எங்களுக்கு சூழ்ச்சி தெரியவில்லை கரூர் சம்பவம் குறித்து ஆதவ் அர்ஜுனா பேசினார்.
-
கருணை அடிப்படையிலான அரசு பணிக்கு விண்ணப்பம் தமிழக அரசாணை வெளியீடு
05 Nov 2025சென்னை: கருணை அடிப்படையிலான அரசு பணிக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்று அரசாணை வெளியிட்டது.
-
எஸ்.ஐ.ஆர் பணிகளில் குழப்பம்: என்.ஆர்.இளங்கோ குற்றச்சாட்டு
05 Nov 2025சென்னை: எஸ்.ஐ.ஆர். பணியில் கணக்கீட்டு படிவங்கள் வழங்கவில்லை என்று என்.ஆர்.இளங்கோவன் தெரிவித்தார்.
-
இந்த மாத இறுதியில் புயலுக்கு வாய்ப்பு
05 Nov 2025சென்னை: தமிழ்நாட்டில் வெப்பச்சலனம் காரணமாக இந்த மாத இறுதியில் புயலுக்கு வாய்ப்பு உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
காரை வழிமறித்து தாக்குதல்: பா.ம.க. இருதரப்பினர் மீதும் வழக்குப்பதிவு
05 Nov 2025சேலம்: காரை வழிமறித்து தாக்குதலை தொடர்ந்து இருதரப்பினர் இடையே வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
-
கோவை வன்கொடுமை சம்பவத்தில் கூடுதல் விசாரணை அதிகாரி நியமனம்
05 Nov 2025கோவை, கோவை பாலியல் வன்கொடுமை சம்பவத்தை தொடர்ந்து கூடுதல் விசாரணை அதிகாரி நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
-
பிலிப்பின்ஸில் கோர தாண்டவம்: கேல்மெகி புயலுக்கு 66 பேர் பலி
05 Nov 2025மணிலா: மத்திய பிலிப்பின்ஸை தாக்கிய டைபூன் டினோ என்றழைக்கப்படும் கேல்மெகி புயல் காரணமாக 66 பேர் உயிரிழந்துள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
-
புதுச்சேரியில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணிகள் துவக்கம்
05 Nov 2025புதுச்சேரி: புதுச்சேரியில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணிகள் தொடங்கியுள்ளது.
-
இந்தியா-அமெரிக்காவின் எதிர்கால உறவுகள் குறித்து டிரம்ப் நம்பிக்கை வெள்ளை மாளிகை தகவல்
05 Nov 2025வாஷிங்டன்: இந்தியா-அமெரிக்காவின் எதிர்கால உறவுகள் குறித்து டிரம்ப் மிகுந்த நம்பிக்கை கொண்டுள்ளார் என்று வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் கரோலின் லெவிட் தெரிவித்துள்ளார்.
-
போதைப்பொருள் கடத்தி வந்த படகு மீது அமெரிக்கா தாக்குதல் - 2 பேர் பலி
05 Nov 2025வாஷிங்டன்: போதைப்பொருள் கடத்தி வந்த படகு மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியதில் 2 பேர் உயிரிழந்தனர்.
-
வாக்கு திருட்டு விவகாரம்: ராகுலுக்கு கிரண் ரிஜிஜு பதில்
05 Nov 2025புதுடெல்லி: வாக்கு திருட்டு விவகாரத்தில் ராகுல்காந்தி பொய்யான குற்றச்சாட்டுகளைப் பரப்பி வருகிறார் என்று மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார்.
-
ஆஷஸ் தொடருக்கான ஆஸி. அணி அறிவிப்பு மீண்டும் லபுஷேனுக்கு வாய்ப்பு
05 Nov 2025பெர்த்: இங்கிலாந்துக்கு எதிரான ஆஷஸ் தொடருக்கான ஆஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணியில் மார்ன்ஸ் லபுசேனுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.


