எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ஈரோடு -5 - ஈரோடு மாவட்டம் காளிங்கராயன் வாய்க்கால் விவசாயிகளின் நலன் கருதியும், குடிநீருக்காகவும் உண்டாக்கப்பட்டது. பவானி ஆற்றிலிருந்து காளிங்கராயன் வாய்க்கால் மூலம் நீர் கொண்டுவரப்படுகிறது. விவசாய நிலங்கள் பயன்பெறும் வகையில் 1264-ஆம் வருடம் காளியங்கராய கவுண்டர் என்பவரால் 746 வருடத்திற்கு முன்பு கால்வாய் கட்டப்பட்டது. சுமார் 34 கிராமப்புற மற்றும் நகர்ப்புற விவசாயிகளின் ஜீவநாடியாக இருந்துவந்தது இந்த கால்வாய். பல நூறு வருடங்களாக விவசாயத்திற்கும், பொதுமக்களின் சுத்தமான குடிநீர் தேவைக்கும் ஆதாரமாக விளங்கிவருகிறது.
சமீபகாலமாக இந்த கால்வாயில் தோல் தொழிற்சாலை கழிவுநீர் மற்றும் சாயப்பட்டறை கழிவுநீர் கலப்பதால் வாய்க்கால் தண்ணீர் விவசாயத்திற்கு பயன்படாத நிலை ஏற்பட்டது. இதனால் விவசாய அமைப்புகள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சிகள் பற்பல போராட்டங்களை நடத்தின. இதனால் அரசாங்கம் காளிங்கராயன் வாய்க்காலில் கழிவுநீர் கலக்காமல் தடுக்க நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டது. இதன் அடிப்படையில் பொதுப்பணித்துறை சார்பில் கான்கிரீட் தடுப்பு சுவரை 5.650 கி.மீட்டர் நீளம் மற்றும் 2.80 மீட்டர் உயரத்திற்கு கட்டும் பணிக்காகவும், பழுதடைந்த பழைய 296 மதகுகளை இடித்துவிட்டு புதிய கான்கிரீட் மதகுகளை கட்டவும், இடது புற மண் கரையை பலப்படுத்தி மண் கொட்டவும், கால்வாயின் இடது புறத்தில் பழுதடைந்த இடங்களில் கருங்கற்கள் கொண்டு தடுப்பு சுவர் கட்டும் பணிகளை மேற்கொள்ளவும், மேலும் புனரமைப்பு மற்றும் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ளவும் ரூ.11.75 கோடிக்கு டெண்டர் விடப்பட்டது. ஒரு வருடத்திற்குள் இப்பணிகளை முடிக்க வேண்டும் என்பது நிபந்தனையாகும். இத்திட்டத்தை அறிவித்தவுடன் இப்பகுதி விவசாயிகள் மிகவும் மகிழ்ச்சியடைந்தனர்.
ஆனால் விவசாயிகளின் எண்ணங்களுக்கு விரோதமாகவும் மற்றும் பொதுமக்களுக்கு சமாதி கட்டும் விதமாகவும் காளிங்கராயன் வாய்க்காலில் பணிகள் நடைபெற்று முடிந்துள்ளன.
கட்டப்பட்ட தடுப்பு சுவர் சரியான உயரத்திற்கு கட்டப்படாததால் கழிவுநீர் நேரடியாக காளிங்கராயன் வாய்க்காலில் கலக்கிறது. மேலும் மெகா மோசடியாக தடுப்பு சுவர் எழுப்பி அதில் கழிவுநீர் தேங்குவதுபோல பொதுமக்கள் பார்வைக்கு காண்பித்து, கழிவுநீர் இனி வாய்க்காலில் கலக்காது என்ற மாயத் தோற்றத்தை ஏற்படுத்திவிட்டு, பொதுப்பணித்துறையினர் சாயப்பட்டறை மற்றும் தோல் பதனிடும் தொழிற்சாலை முதலாளிகளிடம் கையூட்டை பெற்றுக்கொண்டு, தடுப்பு சுவரின் அடியில் மெகா கான்கிரீட் சிமெண்ட் குழாய்களை பதித்து கழிவுநீரை நேரடியாக காளிங்கராயன் வாய்க்காலில் கலக்க வைத்து விவசாயிகளையும், பொதுமக்களையும் ஏமாற்றி உள்ளனர். இதனால் இப்பகுதியில் விவசாயமே அழிந்துவிடக்கூடிய காரியத்திற்கு உறுதுணையாக இருந்துள்ளனர்.
மேலும் வாய்க்காலின் இடதுகரையின் பழுதடைந்த இடங்களை மண்ணைக் கொட்டி பலப்படுத்தி உள்ளோம் எனக்கூறி, மண்ணை கொட்டாமல் இருப்பதை இடதுபுற கரையின் மேற்பாதையை பார்த்தாலே புரியும். ஆனால் இப்பணிக்காக பல்வேறு பகுதிகளில் இருந்து மண் கொண்டுவரப்பட்டதாக கணக்கு காட்டப்பட்டு சுமார் 15 லட்சத்திற்கு பில் மோசடி செய்யப்பட்டுள்ளது.
மேலும் இந்த பணிகளை பார்வையிட தற்காலிக பணியாளர்களை நியமித்து உள்ளதாகவும் அவர்களுக்கு மாதம் ரூ. 3,670 சம்பளம் 12.4.2010 முதல் 11.10.2010 வரை கொடுத்துள்ளதாகவும் கூறி, பணியாளர்களை பணியில் அமர்த்தாமலேயே சம்பளம் வழங்கியதாக கூறி ரூ.12 லட்சம் அளவுக்கு மோசடி செய்து உள்ளனர். மேலும் கழிவுநீர் தடுப்பு சுவர் ஒப்பந்தத்தில் கூறியதுபோல் 2.80 மீட்டர் உயரத்திற்கு கட்டப்படாததால் கழிவு நீர் ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு மேல் நேரடியாக காளிங்கராயன் வாய்க்காலிலேயே கலக்கிறது. இதிலும் மிகப்பெரிய ஊழல் நடைபெற்றுள்ளது. பழைய மதகுகள் 294 புதுப்பித்தல் மற்றும் கான்கிரீட் மதகுகள் புதுப்பித்து கட்டப்பட்டு உள்ளதாக கூறி உள்ளனர். இதில் பல இடங்களில் பழைய மதகுகளை சிமெண்ட் பூசி புதிய மதகுகளாக கணக்கு காட்டி ரூ.2.50 கோடிக்கு ஊழல் நடந்துள்ளது. மேலும் கரை ஓரங்களில் இருந்த பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள மரங்களையும் வெட்டி கடத்தி உள்ளனர்.
பொதுமக்கள் மற்றும் விவசாயிகளின் பெரிய எதிர்பார்ப்பாக இருந்த இப்பணிக்கு ஒதுக்கப்பட்ட 11.75 கோடி பணம் முறையாக செயல்படுத்தப்படாததால் பல கோடி ரூபாய் ஊழல் நடந்து இருப்பது வெட்ட வெளிச்சமாக தெரியவருகிறது. பொதுப்பணியை தன் பொறுப்பில் வைத்திருக்கும் முதலமைச்சருக்கும் இதில் பங்கு உண்டா என நாட்டின் மீது அக்கறை உள்ள சமூக ஆர்வலர்களும், விவசாயிகளும் கேள்வி எழுப்பியுள்ளனர்.
இப்பணி என்ன நோக்கத்திற்கு தீட்டப்பட்டதோ, அந்த நோக்கம் நிறைவேறாமலேயே, விவசாயிகளும், பொதுமக்களும் பயன் அடையாமல் திட்டம் தீட்டியவர்களே பயனடைந்து உள்ளனர் என்பது தெள்ளத்தெளிவாக தெரியவருகிறது. நாட்டின் முதன்மைத் தொழிலான விவசாயத்தையே சீரழிக்கக்கூடிய விதத்திலும், குடிதண்ணீரில் சாயபட்டறை கழிவுகளை கலக்கவிட்டு பொதுமக்களின் உயிர்களோடும் விளையாடுகின்ற விதத்தில் இந்தபணிகள் நடைபெற்றுள்ளன. முதல்வர் கவனிக்கும் இலாகாவான பொதுப்பணித்துறையிலேயே இத்தகைய ஊழல்கள் நடந்திருப்பது மிகவும் வெட்கக்கேடானது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 9 months 2 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 9 months 3 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 10 months 2 weeks ago |
-
தங்கம் விலை 3-வது நாளாக உயர்வு
12 Jul 2025சென்னை, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சனிக்கிழமை அதிரடியாக பவுனுக்கு ரூ.520 உயா்ந்து ரூ.73,120-க்கு விற்பனையாகிறது.
-
சீர்கெட்டுள்ள சட்ட நடைமுறைகள்: தலைமை நீதிபதி கவாய் வேதனை
12 Jul 2025ஐதராபாத் : நம்முடைய சட்ட நடைமுறைகளில் சில திருத்தங்களை மேற்கொள்ள வேண்டிய அளவுக்கு அது சீர்கெட்டு காணப்படுகிறது என சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி பி.ஆர்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 12-07-2025.
12 Jul 2025 -
3.5 கோடி வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும்: பிரதமர் மோடி
12 Jul 2025புதுடெல்லி, வேலைவாய்ப்புடன் இணைக்கப்பட்ட ஊக்கத் தொகை திட்டம் தோராயமாக 3.5 கோடி வேலை வாய்ப்புகளை உருவாக்க உதவும் என்று தெரிவித்துள்ளார்.
-
மதுரையில் த.வெ.க. 2-வது மாநில மாநாடு?
12 Jul 2025சென்னை : த.வெ.க. 2-வது மாநில மாநாட்டை மதுரையில் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டு்ள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
-
3 மாதத்தில் குரூப் 4 தேர்வு முடிவு: டி.என்.பி.எஸ்.சி. தலைவர் பேட்டி
12 Jul 2025சென்னை, குரூப் 4 தேர்வு முடிவுகள் 3 மாதத்தில் வெளியிடப்படும் என டி.என்.பி.எஸ்.சி. தலைவர் தெரிவித்துள்ளார்.
-
இன்ஜின்கள் அணைக்கப்பட்டதால் விபத்து: அகமதாபாத் விமான விபத்து குறித்து முதற்கட்ட அறிக்கையில் பரபரப்பு தகவல்
12 Jul 2025புதுடெல்லி, ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானதற்கு அதன் 2 இன்ஜின்களும் அணைக்கப்பட்டதே காரணம் என்பது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
-
வரும் 25-ம் தேதி எம்.பியாக பதவியேற்கிறார் கமல்ஹாசன்
12 Jul 2025சென்னை : மக்கள் நீதி மய்யம் தலைவா் கமல்ஹாசன் வரும் 25-ம் தேதி எம்.பியாக பதவியேற்கிறார்.
-
ராசிபுரம் நகராட்சியை கண்டித்து ஆர்ப்பாட்டம்: எடப்பாடி பழனிசாமி
12 Jul 2025சென்னை, ராசிபுரம் நகராட்சியை கண்டித்து வரும் 16-ம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
-
கும்பாபிஷேகத்தை முன்னிட்டு திருப்பரங்குன்றம் தாலுகாவுக்கு 14-ம் தேதி உள்ளூர் விடுமுறை
12 Jul 2025மதுரை, கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, திருப்பரங்குன்றம் தாலுகாவுக்கு மட்டும் 14-ந்தேதி உள்ளூர் விடுமுறை விடப்படும் என மாவட்ட கலெக்டர் பிரவீன் குமார் தெரிவித்துள்ளார்
-
தமிழக சட்டசபை தேர்தலில் வெற்றிபெறுவோம்: அ.தி.மு.க. அமைச்சரவையில் பா.ஜ.க. நிச்சயம் இடம்பெறும்: அமித்ஷா மீண்டும் திட்டவட்டம்
12 Jul 2025சென்னை, தமிழ்நாட்டில் அ.தி.மு.க. அமைக்கும் அரசின் அமைச்சரவையில் பா.ஜ.க. நிச்சயம் இடம்பெறும் என்று அமித்ஷா கூறினார்.
-
‘ஓரணியில் தமிழ்நாடு’ இயக்கம்: 77 லட்சத்தை தாண்டிய உறுப்பினர் சேர்க்கை: முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
12 Jul 2025சென்னை, 'ஓரணியில் தமிழ்நாடு' பரப்புரையில் இதுவரை 77,34,937 பேர் (49,11,090 புதிய உறுப்பினர்கள்) தி.மு.க.வில் தங்களை இணைத்துக் கொண்டுள்ளனர் என தி.மு.க.
-
முழு கொள்ளளவை எட்டிய வீராணம் ஏரி
12 Jul 2025கடலூர், கடலூர் மாவட்டத்தில் மிகப்பெரிய நீராதாரமாக காட்டுமன்னார்கோவில் லால் பேட்டையில் வீராணம் ஏரி உள்ளது.
-
கடலூர் ரயில் விபத்துக்கு கேட் கீப்பரின் அலட்சியமே காரணம் : விசாரணையில் தகவல்
12 Jul 2025கடலூர் : கடலூர் ரயில் விபத்துக்கு கேட் கீப்பரின் அலட்சியமே காரணம் என விசாரணையில் தெரியவந்துள்ளது.
-
திருவக்கரை வக்கரகாளியம்மன் கோவிலில் இ.பி.எஸ். தரிசனம்
12 Jul 2025விழுப்புரம், விழுப்புரம் மாவட்டத்தில் 2 நாள் சுற்றுபயணம் மேற்கொண்டுள்ள எடப்பாடி பழனிசாமி, திருவக்கரை வக்கரகாளியம்மன் கோவிலில் நள்ளிரவு சுவாமி தரிசனம் செய்தார்.
-
யுனெஸ்கோ பட்டியலில் செஞ்சி கோட்டை: அமைச்சர் தங்கம் தென்னரசு பெருமிதம்
12 Jul 2025சென்னை : செஞ்சி கோட்டை தமிழர்களின் கட்டிடக்கலை நுட்பத்தையும், வீரம் செறிந்த வரலாற்றையும் உலகுக்குப் பறைசாற்றுகிறது என்று அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
-
ஆடித் திருவாதிரை விழாவில் பிரதமர் மோடி பங்கேற்பு: நினைவு நாணயம் வெளியிடுகிறார்
12 Jul 2025அரியலூர், கங்கைகொண்டசோழபுரத்தில் ராஜேந்திர சோழனின் பிறந்தநாளான ஆடித் திருவாதிரையன்று நடைபெறும் விழாவில் பிரதமர் மோடி பங்கேற்கிறார்.
-
இங்கிலாந்து ஜோடி சாம்பியன்
12 Jul 2025'கிராண்ட்ஸ்லாம்' போட்டிகளில் மிகவும் கவுரவமிக்கதான விம்பிள்டன் டென்னிஸ் லண்டனில் நடந்து வருகிறது.
-
இந்திய அணி அதனை செய்திருக்க கூடாது: இங்கிலாந்து முன்னாள் வீரர் விமர்சனம்
12 Jul 2025லண்டன் : இந்திய அணி பந்து மாற்றத்தை தேர்வு செய்திருக்கக்கூடாது என இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரரான ஸ்டீவ் ஹார்மிசன் விமர்சித்துள்ளார்.
-
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் குளிக்க, பரிசல் இயக்க 18-வது நாளாக தடை
12 Jul 2025ஒகேனக்கல், ஒகேனக்கல் காவிரி ஆற்றில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் விதிக்கப்பட்ட தடையானது 18-வது நாளாக நீடிக்கிறது.
-
குளத்தில் மூழ்கி 3 சிறுவர்கள் பலி: முதல்வர் மு.க.ஸ்டாலின் நிதியுதவி அறிவித்தார்
12 Jul 2025சென்னை, தஞ்சாவூரில் குளத்தில் மூழ்கி பலியான 3 சிறுவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
சர்ச்சை கேள்விகள் தவிர்ப்பு: டி.என்.பி.எஸ்.சி. தலைவர் தகவல்
12 Jul 2025சென்னை : குரூப்-4 தேர்வு வினாத்தாளில் அரசியல் மற்றும் சாதி, சமயம் சார்ந்த கேள்விகளை கேட்கக்கூடாது என்று அறிவுறுத்தப்பட்டு இருந்ததாக டி.என்.பி.எஸ்.சி.
-
எதிர்க்கட்சிகள் அமைத்துள்ளது கூட்டணியல்ல: தமிழ்நாட்டின் ஒற்றுமையை சிதைக்கும் ஒரு சதித்திட்டம் : முதல்வர் மு.க. ஸ்டாலின் கடும் விமர்சனம்
12 Jul 2025சென்னை, அ.தி.மு.க. - பாஜக கூட்டணி, தமிழ்நாட்டின் ஒற்றுமையைச் சிதைக்கும் சதித்திட்டம் என முதல்வர் மு.க. ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
-
பி.சி.சி.ஐ. விதிமுறை குறித்த விமர்சனம்: விராட் கோலிக்கு சுரேஷ் ரெய்னா ஆதரவு
12 Jul 2025மும்பை : பி.சி.சி.ஐ. விதிமுறை குறித்த விமர்சனம் தொடர்பாக விராட் கோலிக்கு சுரேஷ் ரெய்னா ஆதரவு தெரிவித்துள்ளார்.
-
ஆர்.சி.பி. கூட்டநெரிசலுக்கு ஒட்டுமொத்த அலட்சியமே காரணம் : விசாரணை அறிக்கையில் தகவல்
12 Jul 2025பெங்களூரு : பெங்களூரில், ஆர்.சி.பி.