இந்திய அஞ்சல் துறையில் உள்ள 'கிளை போஸ்ட் மாஸ்டர், உதவி கிளை போஸ்ட் மாஸ்டர் மற்றும் டக் சேவக்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது

சென்னை, நவ.14- தமிழக மக்கள் எல்லோருக்கும் எல்லாம் கிடைக்கவேண்டும் என்று முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார். முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க. அரசு பல்வேறு மக்கள் நல திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறது. அரசின் திட்டங்களை மக்களுக்கு கொண்டு போய் சேர்ப்பது, சட்டம்ஒழுங்கை நிலைநாட்டுவது ஆகியவற்றில் கலெக்டர்களும், போலீசாரும் முக்கிய பங்குவகிக்கிறார்கள். இவற்றை மேலும் சிறப்பாக செயல்படுத்துவதற்காக கலெக்டர்கள் மற்றும் போலீஸ் உயர் அதிகாரிகள் மாநாடு நடைபெறுகிறது.
இந்த முறை அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு முதல் தடவையாக கலெக்டர்கள் மாநாடு சென்னை கோட்டையில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் 2 நாள் நடக்கிறது. முதல் நாள் மாநாடு நேற்று காலை 10.30 மணியளவில் தொடங்கியது. மாநாட்டில் அமைச்சர்கள், மாவட்ட கலெக்டர்கள், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள், காவல்துறை உயர் அதிகாரிகள், அரசு துறை செயலாளர்கள் கலந்து கொண்டனர். மாநாட்டுக்கு முதல்வர் ஜெயலலிதா தலைமை தாங்கினார். தலைமை செயலாளர் தேபேந்திரநாத் சாரங்கி வரவேற்றார். அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்த 6 மாதங்களில் நிறைவேற்றப்பட்ட மக்கள் நல திட்டங்கள், வளர்ச்சித்திட்டங்கள், சிறப்புத்திட்டங்கள் ஆகியவை குறித்து மாநாட்டில் விவாதிக்கப்பட்டது. இந்த திட்டங்களை சிறப்பாக செயல்படுத்துவது எப்படி என்பது குறித்து முதல்வர் ஜெயலலிதா ஆலோசனை வழங்கினார். திட்டப்பணிகள் சிறப்பாக நடைபெறுகிறதா? சட்டம்- ஒழுங்கை மேலும் சிறப்பாக செயல்படுத்துவது எப்படி என்பது குறித்தும் விவாதிக்கப்பட்டது. ஆலோசனைகளும் வழங்கப்பட்டது.
கலெக்டர்கள் மாநாட்டில் முதல்வர் ஜெயலலிதா பேசியதாவது:-
மாவட்ட கலெக்டர்கள், போலீஸ் சூப்பிரண்டுகள், உயர் அதிகாரிகள் பங்கேற்கும் இந்த மாநாட்டை தொடங்கி வைப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். இந்த மாநிலத்தில் மக்களுக்கு ஆற்ற வேண்டிய நமது கடமை, பணிகள் குறித்து ஆலோசிக்க இது போன்ற மாநாடுகள் நடத்தப்படுகின்றன. இதில் எடுக்கப்படும் முடிவுகள், செயல்படுத்தும் திட்டங்கள் மக்களின் எதிர்கால தேவையை nullர்த்தி செய்யும் வகையில் இருக்க வேண்டும்.
நான் முதல்வராக பொறுப்பேற்கும் போதெல்லாம் மக்கள் நலத்திட்டங்களை சிறப்பாக செயல்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறேன். சமூக, பொருளாதார நலத்திட்டங்களை செயல்படுத்தவும் வருவாயை மேம்படுத்தவும், நிர்வாகத்தை சிறப்பாக, திறமையாக நடத்துவதற்கும் எனது அரசு முன்னுரிமை அளித்து வருகிறது.
நேர்மையான, திறமையான, பொறுப்பான, நிர்வாகத்தில் உறுதிnullண்டு அதை செயல்படுத்தி வருகிறோம். தமிழக மக்கள் என் மீது நம்பிக்கை வைத்து என்னிடம் பொறுப்பை ஒப்படைத்து இருக்கிறார்கள். அவர்களது எதிர்பார்ப்பை நிறைவேற்றுவதற்காக முழுமையான ஆதரவு வழங்கியிருக்கிறார்கள். தேர்தல் காலத்தில் பல்வேறு வாக்குறுதிகளை வழங்கியிருக்கிறேன். அவற்றை படிப்படியாக நிறைவேற்றியும் வருகிறேன்.
தமிழக மக்கள் எல்லோரும், எல்லாம் பெற வேண்டும் என்பது எனது ஆசை. அடிமட்டத்தில் உள்ள மக்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்து அவர்கள் சிறப்பாக வாழ்வதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் இந்த அரசு எடுக்கும். சட்டம்ஒழுங்கை நிலை நாட்டுவது, நலத்திட்டங்களை மக்களிடம் முழுமையாக கொண்டு சேர்ப்பது, வேகமான பொருளாதார வளர்ச்சி, கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது, மாநிலத்தை வளர்ச்சி பாதைக்கு கொண்டு செல்வது ஆகியவை இந்த மாநாட்டின் நோக்கமாகும். சமூக விரோதிகளையும், ரவுடிகளையும் கட்டுப்படுத்த இந்த அரசு உறுதியான நடவடிக்கைகளை எடுத்துள்ளது. நிலங்களை அபகரித்தவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது மக்களிடையே நம்பிக்கையை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த நடவடிக்கை தொடரும். மீட்கப்பட்ட நிலங்கள் உரியவர்களிடம் ஒப்படைக்கப்படும். இதற்கு முன்பும் எனது ஆட்சி காலங்களில் தமிழக போலீசார் சிறப்பாக செயல்பட்டு சாதனை படைத்துள்ளனர். நான் ஆட்சி பொறுப்பு ஏற்றதும் போலீசார் அச்சமின்றி சுதந்திரமாக செயல்படுகிறார்கள். அனைத்து பிரச்சினைகளிலும் பயமின்றி சுதந்திரமாக செயல்பட அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள்.
நமது நோக்கம் நிறைவேற ஊழல் பிரச்சினை பெரும் தடையாக உள்ளது. எனவே ஊழலற்ற நேர்மையான நிர்வாகம் அவசியம். ஆட்சி தலைவர்களிடமும், அரசு அதிகாரிகளிடமும் மக்கள் நேர்மையான பணியை எதிர்பார்க்கிறார்கள். அதை கண்காணிக்கும் கடமை மாவட்ட கலெக்டர்களுக்கும், அதிகாரிகளுக்கும் உண்டு. அரசின் திட்டங்களை சிறப்பாக செயல்படுத்துவதும், அவர்கள் கையில்தான் உள்ளது. எனவே மாவட்ட கலெக்டர்களும், அரசு அதிகாரிகளும் மக்கள் நலத் திட்டங்களை அவர்களிடம் நேரடியாக கொண்டு சேர்க்கும் வகையில் பணி புரிவார்கள் என்று எதிர்பார்க்கிறேன்.
நாம் ஏராளமான திட்டங்களை நிறைவேற்ற வேண்டியுள்ளது. குறிப்பாக உள்ளாட்சி, சுகாதாரம், கல்வி, நலத்திட்டங்கள் குறிப்பாக தாழ்த்தப்பட்டவர்கள் மிகவும் தாழ்த்தப்பட்டவர்கள், பழங்குடியின மக்களின் வளர்ச்சி திட்டங்களை சிறப்பாக செயல்படுத்த வேண்டும். இந்த அரசு வறுமை ஒழிப்பு, கட்டமைப்பு, வருமானம், வேலை வாய்ப்பு, திறமை போன்றவற்றில் நகர்புற, கிராமப்புற வேறுபாடுகளை களைவதற்கு முக்கியத்துவம் கொடுக்கும். பல்வேறு திட்டங்களை செயல்படுத்தியும், விவசாயிகளின் பொருளாதார வளர்ச்சி முன்னேற்றம் ஏற்படவில்லை. வளர்ச்சி திறன் அதிகரிக்கப்படவில்லை. எனவே எனது அரசு வேளாண்மை துறைக்கு முக்கியத்துவம் கொடுக்கும்.
இந்த துறையில் நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்த மிகுந்த முக்கியத்துவம் வழங்கப்படும். 2வது பசுமை புரட்சி ஏற்படும் என்று நம்புகிறேன். இதில் மாவட்ட கலெக்டர்களின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்க வேண்டும். தமிழக அரசு புதிதாக செயல்படுத்த உள்ள திட்டத்தின் மூலம் நமது விவசாயியின் வருமானம் 3 மடங்காக உயரும் என்று நம்புகிறேன். ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ள இலவச மாடு, ஆடு வழங்கும் திட்டம் விவசாயிகள் முன்னேற்றத்துக்கு கை கொடுக்கும். கடலோர மாவட்ட கலெக்டர்கள் மீன்பிடி திட்டங்களுக்கு, மீன்பிடி கட்டமைப்புகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். அதை செய்வார்கள் என்று நம்புகிறேன். அத்தியாவசிய பொருட்களின் விலைவாசி உயர்வு மிகவும் கவலை அளிப்பதாக உள்ளது. இதை கட்டுப்படுத்தும் வகையில் பொது விநியோகம் மூலம் இலவச அரிசியை வழங்கி வருகிறது. பருப்பு, உளுந்து, சமையல் எண்ணை போன்றவை நியாய விலை கடைகளில் மானிய விலைக்கு வழங்கி வருகிறது. இதற்காக அரசு பெருந்தொகையை மானியமாக கொடுக்கிறது. அரசின் நோக்கத்தை செயல்படுத்தும் வகையில் மாவட்ட கலெக்டர்கள் மக்களுக்கு உண்மையான பலன் கிடைக்கும் வகையில் திறமையாக கண்காணிக்க வேண்டும்.
உணவு பொருட்கள் வீணாகாமல் மக்களிடம் போய் சேர வேண்டும். போலி ரேஷன் கார்டுகள் முழுமையாக ஒழிக்கப்பட வேண்டும். உணவு பொருள் கடத்தலை தடுக்க வேண்டும். கல்வி, குடும்ப நலம் ஆகியவற்றுக்கு அடிப்படை முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்பதில் இந்த அரசு உறுதியாக உள்ளது. மக்களுக்கு உடல் நலம் முக்கியம். அவர்களுக்கு சுகாதார பயன் கிடைக்கிறதா? என்பதை மாவட்ட கலெக்டர்கள் கண்காணிக்க வேண்டும். சமீபத்தில் வெளியான புள்ளி விவரப்படி புற்று நோய், nullநீரிழிவு, மாரடைப்பு ஆகியவை அதிகரித்து இருப்பதாக தெரிய வந்துள்ளது. விரைவில் தமிழ்நாட்டில் புதிய மருத்துவ காப்பீட்டு திட்டம் செயல்படுத்தப்பட இருக்கிறது. அனைத்து மருத்துவமனைகளும் சுத்தமாக பேணப்பட வேண்டும். மருத்துவர்கள் தன்னலமின்றி பணிபுரிய வேண்டும். இதில் கலெக்டர்கள் முழு கவனம் செலுத்த வேண்டும். அனைத்து குழந்தைகளும் மேல்நிலைப்பள்ளி வரை கல்வி பெற வேண்டும். அவர்கள் முழுமையாக பயன்பெறும் வகையில் எனது அரசு சிறப்பான திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
இதற்காக மாணவ- மாணவிகளுக்கு ஊக்கத் தொகை, இலவச லேப்-டாப் ஆகியவற்றை எனது அரசு வழங்கி வருகிறது. இது மாணவர்களின் கல்வி கற்கும் முயற்சியை மேலும் அதிகரிக்கச் செய்யும். சுத்தமான குடிnullநீர், அடிப்படை சுகாதார வசதி, மருத்துவமனை, சிறந்த பள்ளிகள் அமையும் வகையில் கலெக்டர்கள் திடீர் சோதனை நடத்தி கண்காணிக்க வேண்டும். மாணவ-மாணவிகளுக்கான தங்கும் விடுதிகள் புதிதாக கட்ட அரசு திட்டமிட்டு உள்ளது. இதற்கான இடங்களை விரைவில் தேர்வு செய்து கொடுக்க வேண்டும். கட்டிட பணிகள் தரமாக இருக்கிறதா? என்பதையும் கண்காணிக்க வேண்டும். உள்ளாட்சி தேர்தல் நடந்து முடிந்து விட்டது. தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகள் அரசு திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்க்கும் பாலமாக இருப்பார்கள் என்பதை உங்கள் கவனத்துக்கு கொண்டு வருகிறேன்.
உள்ளாட்சி நிர்வாகிகளுடன், கலெக்டர்கள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். திட்டப்பயன் மக்களுக்கு விரைவாகவும், முறையாகவும் கிடைக்க கலெக்டர்கள் வழிகாட்டியாக விளங்க வேண்டும். சுத்தமான குடிநீnullர், தரமான சாலைகள், கிராம சுகாதாரப்பணிகள் போன்றவற்றில் அந்த நிர்வாகிகளுடன் இணைந்து செயல்பட வேண்டியது அவசியம். கிராமப்புறங்கள் கழிவு பொருட்களை கொட்டும் இடமாகி வருவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இது மழைக்காலம். தேவையான நிவாரண உதவிகள் வழங்கவும், முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவும் நீnullங்கள் தயாராக இருக்க வேண்டும். சமீபத்தில் பெய்த மழையினால் ஏற்பட்ட வெள்ள பாதிப்பின் போது nullநீங்கள் எடுத்த நடவடிக்கைகள் பாராட்டத்தக்கது.
ஏழைஎளிய மக்களுக்கு பயன் அளிக்கும் திருமண உதவி திட்டம், முதியோர் பென்ஷன் திட்டம் போன்ற சமூக நல திட்டங்களுக்கு உண்மையான பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு அது வழங்கப்பட வேண்டும். அப்போது தான் அந்த திட்டத்தின் முழு பலன் கிடைக்கும். பல திட்டப்பணிகள் உள்ளன. அவற்றில் முக்கியமானவற்றை இங்கு தெரிவித்துள்ளேன். அவற்றை சிறப்பாக நிறைவேற்ற ஒருங்கிணைத்து செயல்பட்டு எனது எதிர் பார்ப்பை நிறைவேற்ற வேண்டும். இதன் மூலம் திட்டங்களை நிறைவேற்றுவதில் மற்ற மாநிலங்களுக்கு முன் உதாரணமாக திகழ்வீர்கள் என்று நம்புகிறேன். இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா பேசினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
முருங்கைப்பூ பாயாசம்.![]() 1 day 6 hours ago |
அகத்திக்கீரை சாம்பார்![]() 4 days 6 hours ago |
ராகி அடை![]() 1 week 1 day ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம்-29-01-2023
29 Jan 2023 -
ஜெப ஆலய தாக்குதல்: இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு கண்டனம்
29 Jan 2023ஜெருசலேம் ; ஜெருசலேமில் யூத வழிபாட்டு தலத்தில் நடந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில் 7 பேர் உயிரிழந்த சம்பவத்திற்கு இஸ்ரேல் பிரதமர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
-
வங்க கடலில் நீடிக்கும் காற்றழுத்த தாழ்வு பகுதி: தமிழகத்தில் 2-ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்
29 Jan 2023சென்னை : தென் கிழக்கு வங்க கடல் மற்றும் இந்திய பெருங்கடலின் கிழக்கு பகுதியில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று அதே பகுதியில
-
நவாஸ் மகள் மரியம் ; நாடு திரும்பினார்
29 Jan 2023லாகூர், ஜன.
-
செக் குடியரசில் புதிய அதிபர் தேர்வு
29 Jan 2023பராக் ; செக் குடியரசு நாட்டில் நடந்த அதிபர் தேர்தலில் ஓய்வு பெற்ற ராணுவ ஜெனரல் பீட்டர் பாவெல் புதிய அதிபராக தேர்வு செய்யப்பட்டார்.
-
பெண்கள் பல்கலைக்கழக நுழைவுத்தேர்வு எழுத தடை : ஆப்கனில் தலிபான்கள் அறிவிப்பு
29 Jan 2023xகாபூல் ; பெண்கள் பல்கலைக் கழக நுழைவு தேர்வை எழுத தடை விதித்து ஆப்கன் அரசு உத்தரவிட்டுள்ளது.
-
மருத்துவ துறையில் தன்னிறைவு பெற்ற மாநிலமாக தமிழ்நாடு விளங்குகிறது : முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
29 Jan 2023சென்னை : மருத்துவத் துறையில் தன்னிறைவு பெற்ற மாநிலமாக தமிழ்நாடு விளங்கிக் கொண்டு இருக்கிறது என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறினார்.
-
நாக்பூரில் இருந்து மும்பை சென்ற விமானத்தின் அவசர கதவை திறக்க முயன்றவர் மீது வழக்கு
29 Jan 2023மும்பை : நாக்பூரில் இருந்து மும்பைக்கு இண்டிகோ விமானம் ஒன்று சென்று கொண்டிருந்தது.
-
50 ஆயிரம் ஆண்டுகளுக்கு பின் மீண்டும் பூமிக்கு அருகே நெருங்கி வரும் அரிய வால் நட்சத்திரம்
29 Jan 2023கலிபோர்னியா ; 50,000 ஆண்டுகளில் முதன்முறையாக பூமியை நெருங்கும் ஒரு பச்சை நிற வால் நட்சத்திரத்தை வானியலாளர்கள் சமீபத்தில் கண்டுபிடித்துள்ளனர்.
-
2 நாட்களே அவகாசம்: மின் இணைப்புடன் ஆதார் இணைக்கப்பட்டதை சரிபார்ப்பது எப்படி?
29 Jan 2023சென்னை : மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண் இணைக்கப்பட்டுள்ளதை சரிபார்க்கும் வசதியை மின்சார வாரியம் அறிமுகம் செய்துள்ளது.
-
காவல்துறை குறித்த அவதூறு பேச்சு: கூட்டணி கட்சியினர் மீது நடவடிக்கை எடுக்க அரசுக்கு அண்ணாமலை கோரிக்கை
29 Jan 2023சென்னை : காவல் துறை குறித்து அவதூறாக கோஷமிட்ட கூட்டணி கட்சியினர் மீது முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அண்ணாமலை கோரிக்கை விடுத்துள்ளார்.
-
ராகுலின் பாதயாத்திரை இன்று நிறைவு: ஸ்ரீநகரில் பிரம்மாண்ட பொதுக்கூட்ட ஏற்பாடுகள்: 21கட்சிகளுக்கு அழைப்பு
29 Jan 2023புதுடெல்லி : ராகுல் காந்தியின் ஒற்றுமை யாத்திரை இன்றுடன் நிறைவு பெறுகிறது. இதையொட்டி ஸ்ரீநகரில் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
-
மருத்துவமனை மீது உக்ரைன் நடத்திய குண்டு வீச்சு தாக்குதல் 14 பேர் பலி: ரஷ்யா குற்றச்சாட்டு
29 Jan 2023நொவைடர் ; ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் உள்ள நொவைடர் நகர் மருத்துவமனை மீது உக்ரைன் நடத்திய குண்டுவீச்சு தாக்குதலில் 14 பேர் பலியானார்கள்.
-
நீட் தேர்வு விலக்கு மசோதா குறித்து பார்லி.யில் குரல் எழுப்ப வேண்டும் : தி.மு.க. எம்.பி.க்களுக்கு ஸ்டாலின் அறிவுறுத்தல்
29 Jan 2023சென்னை : நீட் தேர்வுக்கு விலக்களிக்கும் மசோதாவிற்கு ஜனாதிபதியின் ஒப்புதலைப் பெறுவது குறித்து பாராளுமன்ற கூட்டத்தில் இரு அவைகளிலும் குரல் எழுப்பி வலியுறுத்த வேண்டும் என்
-
நீதிமன்றம் உத்தரவு எதிரொலி: ஹூரியத் அலுவலகத்துக்கு சீல் வைத்த என்.ஐ.ஏ. அதிகாரிகள்
29 Jan 2023ஜம்மு ; டெல்லி கோர்ட்டின் உத்தரவை தொடர்ந்து ஹூரியத் அலுவலகத்திற்கு என்.ஐ.ஏ. அதிகாரிகள் சீல் வைத்தனர்.
-
முதியோர்களுக்கான உதவி தொகையை நிறுத்தி விட்டது : தி.மு.க. அரசு மீது எடப்பாடி குற்றச்சாட்டு
29 Jan 2023சேலம் : முதியோர்களுக்கு வழங்கப்பட்ட உதவித் தொகையை தி.மு.க. அரசு நிறுத்தி விட்டது என்று எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டி உள்ளார்.
-
குடியரசு தினத்தின் நிறைவாக டெல்லியில் முப்படை வீரர்கள் பாசறை திரும்பும் நிகழ்ச்சி
29 Jan 2023புதுடெல்லி : குடியரசு தினத்தின் நிறைவாக, டெல்லியில் நேற்று முப்படை வீரர்கள் பாசறை திரும்பும் நிகழ்ச்சி நடந்தது.
-
அமைச்சராவேன் என்று கனவு கூட கண்டதில்லை வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் பேச்சு புனே ; நான் அமைச்சராவேன் என்று ஒருபோதும் கனவு கூட கண்டதில்லை என்று மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் பேசினார். மகராஷ்டிரா மாநிலம் புனே நகரில் நடந்த நிகழ்ச்சியில் ஒன்றிய வெளி
29 Jan 2023அமைச்சராவேன் என்று கனவு கூட கண்டதில்லை வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் பேச்சு
-
திரிபுரா சட்டசபை தேர்தல்: வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட காங்., பா.ஜ.க,
29 Jan 2023அகர்தலா : திரிபுரா சட்டசபை தேர்தல் நடைபெறுவதையொட்டி பா.ஜ.க. மற்றும் காங்கிரஸ் கட்சிகள் முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளன.
-
ஜனநாயகத்தை பறைசாற்றும் உத்திரமேரூர் கல்வெட்டு : மான் கீ பாத் நிகழ்வில் பிரதமர் மோடி பெருமிதம்
29 Jan 2023புது டெல்லி : இந்தியா ஜனநாயகத்தின் தாய் என்பதை தமிழ்நாட்டின் உத்திரமேரூர் கல்வெட்டுகள் பறைசாற்றுவதாக பிரதமர் நரேந்திர மோடி நேற்று நடந்த மான் கீ பாத் நிகழ்ச்சியில் தெரிவ
-
வடலூர் சத்திய ஞான சபையில் தைப்பூச ஜோதி தரிசன விழா வரும் 5-ம் தேதி நடக்கிறது
29 Jan 2023வடலூர் : வடலூர் சத்திய ஞான சபையில் தைப்பூச ஜோதி தரிசன விழா 5-ம் தேதி நடக்கிறது.
-
பாரம்பரியங்களை பாதுகாப்பதில் பழங்குடி சமூகத்தினர் ஆர்வம் : மான் கீ பாத்தில் பிரதமர் மோடி பேச்சு
29 Jan 2023புதுடெல்லி : பழங்குடி சமூகத்தினர் பலர் இந்த முறை பத்ம விருதுகளை பெற்றுள்ளனர் என்றும், தங்களது பாரம்பரியங்களை பாதுகாப்பதில் பழங்குடி சமூகத்தினர் எப்போதும் ஆர்வமுடன் உள்ள
-
இந்தியாவில் புதிதாக 109 பேருக்கு கொரோனா: குஜராத்தில் ஒருவர் பலி
29 Jan 2023புது டெல்லி ; இந்தியாவில் புதிதாக 109 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
-
ஏழைப் பெண்களுக்கு மாதம் ரூ. 1000 வழங்கும் திட்டம் : ம.பி. முதல்வர் அறிவிப்பு
29 Jan 2023போபால் : பொருளாதார ரீதியில் ஏழ்மையில் உள்ள பெண்களுக்கு மாதந்தோறும் 1000 ரூபாய் உதவித் தொகை வழங்கும் புதிய திட்டத்தை தொடங்க உள்ளதாக மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங்
-
இளவரசி டயானாவின் ஆடை ரூ. 4.9 கோடிக்கு விற்பனை
29 Jan 2023நியூயார்க் ; சாத்பைஸ் நிறுவனம் நடத்திய ஏலத்தில் இளவரசி டயானாவின் ஆடை 6 லட்சம் அமெரிக்க டாலருக்கு (இந்திய மதிப்பில் சுமார் 4.9 கோடி ரூபாய்) விற்பனை ஆகியுள்ளது.