எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புது டெல்லி, நவ. - 22 - பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் பாராளுமன்றத்தின் குளிர்கால கூட்டத் தொடர் இன்று செவ்வாய்க் கிழமையன்று தொடங்குகிறது. இந்த கூட்டத் தொடரில் பெட்ரோல் விலை உயர்வு, விலைவாசி உயர்வு பிரச்சினைகள் மற்றும் ஊழல் பிரச்சினைகள் உட்பட பல்வேறு பிரச்சினைகளை எழுப்பி புயலைக் கிளப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன. அதே நேரம் சபையை சுமூகமாக நடத்துவதற்காக இன்று அனைத்து கட்சி கூட்டத்திற்கு சபாநாயகர் மீராகுமார் ஏற்பாடு செய்துள்ளார். பாராளுமன்றம் தொடங்குவதற்கு முன்பு இந்த சர்வகட்சி கூட்டம் நடைபெறும். பாராளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் இன்று ஆரம்பமாகிறது. இந்த கூட்டத் தொடர் கிட்டத்தட்ட ஒரு மாதம் வரை நீடிக்கும். முதல் நாளான இன்றைய தினம் விலைவாசி பிரச்சினையை எழுப்பி ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டு வர எதிர்க்கட்சிகள் திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது. இதன் மூலம் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசுக்கு நெருக்கடி கொடுக்க எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன. இந்த நெருக்கடியை காங்கிரஸ் சமாளிக்குமா என்பதுதான் இன்றைய கேள்வி. நெருக்கடியை சமாளிப்பதற்காகவும், பாராளுமன்றத்தை சுமூகமாக நடத்துவதற்காகவும் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கூட்டத்தை சபாநாயகர் மீராகுமார் இன்று கூட்டி உள்ளார். சபை கூடுவதற்கு முன்பாக இந்த கூட்டம் கூட்டப்பட்டு அப்போது எதிர்க்கட்சிகளின் ஒத்துழைப்பை சபாநாயகர் மீராகுமார் கோருவார். இடதுசாரிகளை பொறுத்தவரையில் பொதுவான பிரச்சினைகளில் மற்ற கட்சிகளோடு இணைந்து செயல்பட முடிவெடுத்திருப்பதாக தெரிகிறது. அரசை எதிர்க்கும் மற்ற கட்சிகளுடன் கலந்து ஆலோசித்த பிறகு எதிலும் ஒரு முடிவுக்கு வருவோம் என்று லோக்சபை எதிர்க்கட்சி தலைவர் சுஷ்மா சுவராஜ் தெரிவித்தார். 2 ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் இணைந்து செயல்பட முடிவெடுத்திருப்பதாக தெரிகிறது. அடுத்த ஆண்டு துவக்கத்தில் உத்தர பிரதேச மாநிலம் உட்பட 5 மாநிலங்களில் சட்டசபை தேர்தல்கள் நடக்கவிருக்கின்றன. இந்த மாநிலங்களில் உள்ள பிரச்சினைகள் குறித்தும் இந்த கூட்டத் தொடரில் பேசப்படும் என்று தெரிகிறது. உத்தர பிரதேச முதல்வர் மாயாவதி, தனது மாநிலத்தை 4 மாநிலங்களாக பிரிக்கப் போவதாக ஒரு திட்டத்தை அறிவித்து அது குறித்து தீர்மானமும் நிறைவேற்றி அதிர்ச்சி வைத்தியம் கொடுத்திருக்கிறார். இது குறித்தும் பாராளுமன்ற கூட்டத் தொடரில் விவாதம் எழுப்பப்படும் எனத் தெரிகிறது. மற்றொரு முக்கிய அம்சம், தெலுங்கானா மாநில விவகாரம். ஆந்திராவை பிரித்து தனித் தெலுங்கானா மாநிலத்தை உருவாக்க வேண்டும் என்று கோரி அந்த மாநிலத்தில் கடந்த பல நாட்களாகவே போராட்டம் நடந்து வருகிறது. இதனால் அங்கு பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. எங்கள் கோரிக்கை ஏற்கப்படும் வரை பாராளுமன்றத்தை செயல்பட அனுமதிக்கவே மாட்டோம் என்று தெலுங்கானா பகுதி எம்.பிக்களும் அறிவித்து அதிர்ச்சி வைத்தியம் கொடுத்துள்ளனர். எனவே இந்த விவகாரத்தாலும் பாராளுமன்றத்தில் புயல் வீசக்கூடும். ஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரத்தில் பல்வேறு புதிய திருப்பங்கள் ஏற்பட்டுள்ளன. பிரமோத் மகாஜன் பதவிக் காலத்தில் முறைகேடு நடந்ததாக கூறி அது தொடர்பாகவும் சி.பி.ஐ. வழக்கு பதிவு செய்துள்ளது. மேலும் சில முன்னாள் செயலாளர்கள் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. வோடபோன், ஏர்டெல் அலுவலகங்களிலும் அதிரடி சோதனைகள் நடந்துள்ளன. இந்த விவகாரமும் பாராளுமன்றத்தில் பூதாகரமாக வெடிக்கலாம். பெட்ரோல் விலை அடிக்கடி உயர்த்தப்படுகிறது. இந்த விவகாரமும் சபையில் எழுப்பப்படலாம். மொத்தத்தில் விலைவாசி உயர்வு, ஊழல் போன்ற பல பிரச்சினைகளை எழுப்பி சபையில் புயலை கிளப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டிருப்பதால் ஆளும் அரசான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு சற்று கலங்கிப் போயிருப்பதை யாராலும் மறுக்க முடியாது. தனித் தெலுங்கானா மாநில பிரச்சினை, விவசாயிகள் தற்கொலை செய்து கொள்ளும் பிரச்சினை, கறுப்பு பணம், ஊழல் போன்ற பிரச்சினைகளை எழுப்ப தமது கட்சி விரும்புவதாக லோக்சபையின் பா.ஜ.க. தலைமை கொறடா ரமேஷ்பயாஸ் தெரிவித்தார். மேலும் இந்த கூட்டத் தொடரில் மத்திய, மாநில உறவுகள், காஷ்மீர் பிரச்சினை, இந்திய பாகிஸ்தான் உறவு உள்ளிட்ட முக்கிய பிரச்சினைகளை எழுப்பவும் எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன. பல்வேறு பிரச்சினைகளை மையமாக வைத்து இரு சபைகளையும் அடிக்கடி ஒத்திவைக்க பா.ஜ.க மற்றும் இடதுசாரிகள் திட்டமிட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. அதே நேரம் எந்த பிரச்சினையாக இருந்தாலும் முழுமையாக விவாதிக்க அரசு தயாராகவே இருக்கிறது என்று பாராளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் பவன்குமார் பன்சால் தெரிவித்தார். முன்னதாக, தலைமை கொறடாக்களின் கூட்டமும் டெல்லியில் நடந்தது. அப்போது கேள்வி நேரம் உட்பட சபையை சுமூகமாக நடத்த வேண்டியதன் அவசியத்தை பல தலைவர்கள் வலியுறுத்தியதாக நிருபர்களிடம் பேசிய பவன்குமார் பன்சால் தெரிவித்தார். சபையை சுமூகமாக நடத்த அரசுடன் ஒத்துழைக்க வேண்டும் என்றும் அவர் எதிர்க்கட்சிகளை கேட்டுக் கொண்டார். கடந்த முறை மழைக்கால கூட்டத் தொடர் நடந்த போது பல அலுவல்கள் நடக்கவே இல்லை. காரணம், எதிர்க்கட்சிகள் பல்வேறு பிரச்சினைகளை எழுப்பி சபையை நடத்தவிடாமல் இடையூறு செய்தன. இந்த முறையும் லோக்பால் மசோதா உட்பட பல பிரச்சினைகள் எழுப்பப்படவுள்ளன. அரசும் பல முக்கிய மசோதாக்களை நிறைவேற்ற திட்டமிட்டுள்ளது. கிட்டத்தட்ட 30 க்கும் மேற்பட்ட மசோதாக்கள் நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மகளிர் இட ஒதுக்கீடு மசோதா இன்னமும் நிறைவேற்றப்படவில்லை. இந்த முறையாவது அது நிறைவேறுமா என்பதே பெண் எம்.பிக்களின் கேள்வியாகும். இந்த கேள்விக்கு இந்த கூட்டத் தொடரில் விடை கிடைக்கலாம். இப்படிப்பட்ட ஒரு பரபரப்பான சூழ்நிலையில்தான் பாராளுமன்றம் இன்று கூடுகிறது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் –17-01-2026
17 Jan 2026 -
இதுவரை வாங்காதவர்கள் பொங்கல் பரிசுத்தொகுப்பை நாளை முதல் பெற்றுக்கொள்ளலாம்: அரசு
17 Jan 2026சென்னை, பொங்கல் பரிசுத்தொகுப்பை இதுவரை வாங்காதவர்கள் திங்கட்கிழமை முதல் பெற்றுக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
-
இமானுவேல் சேகரனாருக்கு பரமக்குடியில் மணிமண்டபம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
17 Jan 2026பரமக்குடி, பரமக்குடியில் அமைக்கப்பட்டுள்ள சுதந்திரப் போராட்ட வீரர் தியாகி வே. இமானுவேல் சேகரனார் மணிமண்டபத்தை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார்.
-
பொங்கல் பரிசு தொகுப்பு விநியோகத்தால் ஜனவரி மாத பொருட்களை பிப்ரவரி மாதமும் சேர்த்து வழங்க கோரிக்கை
17 Jan 2026சென்னை, பொங்கல் பரிசு தொகுப்பு விநியோகத்தால் ஜனவரி மாத ரேஷன் பொருட்களை பெறுவதில் ஏற்பட்ட சிக்கலை அடுத்து அந்த பொருட்களை பிப்ரவரி மாதம் சேர்த்து வழங்க பொதுமக்கள் கோரிக்
-
தமிழகத்தில் 6 நாட்களுக்கு வறண்ட வானிலை நிலவும்: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
17 Jan 2026சென்னை, தமிழகத்தில் 6 நாட்களுக்கு வறண்ட வானிலை நிலவும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
கறிக்கோழி பண்ணையாளர்களின் நியாயமான கோரிக்கைகளை உடனே நிறைவேற்ற வேண்டும் : அரசுக்கு எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்
17 Jan 2026சென்னை, கறிக்கோழி பண்ணையாளர்களின் நியாயமான கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்றும் கைது செய்யப்பட்ட கறிக்கோழி பண்ணை விவசாயிகளை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் எ
-
தமிழ்நாடு முழுவதும் 2.15 கோடி பேருக்கு 6,453.54 கோடி ரூபாய் பொங்கல் ரொக்க பணம் வழங்கி சாதனை: அமைச்சர் பெரியகருப்பன் பெருமிதம்
17 Jan 2026சென்னை, தமிழ்நாடு முழுவதும் 2.15 கோடி பேருக்கு ரூ.6,453.54 கோடி பொங்கல் ரொக்க பணம் வழங்கி சாதனை படைத்துள்ளதாக அமைச்சர் பெரியகருப்பன் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
-
சாமானியர்களுக்கும் அதிகாரமளித்தவர்: எம்.ஜி.ஆருக்கு விஜய் புகழாரம்
17 Jan 2026சென்னை, மறைந்த எம்.ஜி.ஆரின் பிறந்த நாளை முன்னிட்டு சாமானியர்களுக்கும் அதிகாரமளித்தவர் என்று த.வெ.க. தலைவர் விஜய் அவருக்கு புகழாரம் சூட்டியுள்ளார்.
-
தமிழ்நாடு முழுவதும் காணும் பொங்கல் விழா கோலாகலம் சுற்றுலா தலங்களில் அலைமோதிய கூட்டம்
17 Jan 2026சென்னை, காணும் பொங்கல் தமிழகம் முழுவதும் நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. தமிழகம் முழுவதும் அனைத்து சுற்றுலாத் தலங்களிலும் பொதுமக்கள் குவிந்தனர்.
-
சட்டசபை தேர்தல் அறிக்கையாக அ.தி.மு.க. தி.மு.க. அரசின் பழை திட்டங்களை காப்பியடித்து வெளியிட்டுள்ளது: அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா விமர்சனம்
17 Jan 2026சென்னை, தி.மு.க. அரசின் பழை திட்டங்களை காப்பியடித்து சட்டசபை தேர்தல் அறிக்கையாக அ.இ.அ.தி.மு.க. வெளியிட்டுள்ளது என்று அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா விமர்சனம் செய்துள்ளார்.
-
மராட்டியத்தில் பா.ஜ.க.-சிவசேனா கூட்டணி 116 வார்டுகளில் வெற்றி: மும்பையில் ‘தாக்கரே’வின் ஆதிக்கத்தை தகர்த்த பா.ஜ.க.
17 Jan 2026மும்பை, மராட்டியத்தில் நடைபெற்ற மாநகராட்சி தேர்தலில் மும்பையில் 25 ஆண்டுகால ‘தாக்கரே’ ஆதிக்கத்தை பா.ஜ.க. தகர்த்துள்ளது. மேலும் அங்கு பா.ஜ.க.
-
யு.பி.ஐ. மூலம் இ.பி.எப். நிதியில் இருந்து பணம் எடுக்கும் வசதி ஏப்ரல் 1-ம் தேதி முதல் அமல்
17 Jan 2026சென்னை, யு.பி.ஐ. மூலம் வருங்கால வைப்பு நிதியில் இருந்து பணம் எடுக்கும் வசதி ஏப்ரல் 1-ம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது.
-
அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு கோலாகலம்: போட்டியை நேரில் கண்டுகளித்தார் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின்
17 Jan 2026அலங்காநல்லூர், உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப் போட்டியை நேற்று நேரில் கண்டுகளித்த முதல்வர் மு.க.ஸ்டாலின், ஜல்லிக்கட்டில் வெற்றி பெற்ற காளையின் உரிமையாளர்
-
மகளிருக்கு மாதம் ரூ.2 ஆயிரம் உள்ளிட்ட அ.தி.மு.க. தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்டார் எடப்பாடி பழனிசாமி
17 Jan 2026சென்னை, மகளிருக்கு மாதம் ரூ. 2,000, ஆண்களுக்கு கட்டணமில்லா பேருந்து உள்ளிட்ட முதற்கட்டமாக தேர்தல் வாக்குறுதிகளை அ.தி.மு.க.
-
ஜல்லிக்கட்டில் அதிக காளைகளை அடக்கும் சிறந்த வீரருக்கு அரசு வேலை முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
17 Jan 2026அலங்காநல்லூர், ஜல்லிக்கட்டில் அதிக காளைகளை அடக்கும் சிறந்த வீரருக்கு முன்னுரிமை அடிப்படையில் கால்நடைப் பராமரிப்புத்துறையில் அரசுப் பணி வழங்கப்படும் என முதல்வர் மு.க.
-
வாழ்க்கையை ஏழைகளுக்கு அர்ப்பணித்தவர்: எம்.ஜி.ஆர். பிறந்த நாளில் பிரதமர் மோடி புகழாரம்
17 Jan 2026புதுடெல்லி, எம்.ஜி.ஆரின் வாழ்க்கையும், முழு அரசியல் பயணமும் ஏழைகளுக்கு அர்ப்பணிக்கப்பட்டது என்றும் சமூகத்தின் இளைஞர்களும் பெண்களும் அவரை மிகவும் மதித்தனர் என்றும் பிரதம
-
அடுத்த 2 நாட்களுக்குள் தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை விலக வாய்ப்பு
17 Jan 2026சென்னை, அடுத்த இரு நாட்களுக்குள் தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தமிழகத்தைவிட்டு விலக வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
மேற்கு வங்கம் -அசாம் இடையே நாட்டின் முதல் வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில் சேவை: பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்
17 Jan 2026கொல்கத்தா, மேற்கு வங்கத்தின் ஹவ்ரா ரயில் நிலையத்திலிருந்து அசாம் மாநிலத்தின் கவுகாத்தி காமாக்யா ரயில் நிலையம் வரை இயங்கும் நாட்டின் முதல் வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில் சே
-
மேற்கு வங்கத்தில் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால்தான் வளர்ச்சி: பிரதமர் மோடி
17 Jan 2026கொல்கத்தா, திரிணமூல் காங்கிரஸ் தோற்கடிக்கப்பட்டு, ஆட்சிக்கு பா.ஜ.க. வந்தால்தான் மேற்கு வங்கத்தின் வளர்ச்சி என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.
-
சத்தீஷ்கரில் 2 மாவோயிஸ்டுகள் என்கவுன்ட்டரில் படுகொலை
17 Jan 2026ராய்ப்பூர், சத்தீஷ்கரில் 2 மாவோயிஸ்டுகள் என்கவுன்டரில் சுட்டு கொலை செய்யப்பட்டனர்.
-
ஆஸி., ஓபன் டென்னிஸ் இன்று தொடக்கம்
17 Jan 2026மெல்போர்ன், ஆண்டின் முதல் கிராண்ட் சிலாமான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்ன் நகரில் இன்று (18-ந்தேதி) தொடங்குகிறது.
-
நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரை இந்தியா கைப்பற்றுமா? இந்தூரில் இன்று இறுதிப்போட்டி
17 Jan 2026சென்னை, நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரை இந்திய அணி கைப்பற்றுமா என்ற ஆவல் ரசிகர்கள் இடையே எழுந்துள்ள நிலையில் இன்று இந்தூரில் இறுதிப்போட்டி நடக்கிறது.
-
யு-19 உலகக் கோப்பையில் கைகுலுக்க மறுத்த இந்தியா, வங்கதேச அணி கேப்டன்கள்
17 Jan 2026புலவாயோ, இந்தியா - வங்கதேசம் இடையேயான மோதல் வலுத்துவரும் நிலையில், யு-19 உலகக் கோப்பைத் தொடரில் கேப்டன்கள் இருவரும் பரஸ்பரம் கைகுலுக்க மறுத்த சம்பவம் பேசுபொருளாகி உள்ளத
-
வார ராசிபலன்
17 Jan 2026


