எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புது டெல்லி, நவ. - 22 - பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் பாராளுமன்றத்தின் குளிர்கால கூட்டத் தொடர் இன்று செவ்வாய்க் கிழமையன்று தொடங்குகிறது. இந்த கூட்டத் தொடரில் பெட்ரோல் விலை உயர்வு, விலைவாசி உயர்வு பிரச்சினைகள் மற்றும் ஊழல் பிரச்சினைகள் உட்பட பல்வேறு பிரச்சினைகளை எழுப்பி புயலைக் கிளப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன. அதே நேரம் சபையை சுமூகமாக நடத்துவதற்காக இன்று அனைத்து கட்சி கூட்டத்திற்கு சபாநாயகர் மீராகுமார் ஏற்பாடு செய்துள்ளார். பாராளுமன்றம் தொடங்குவதற்கு முன்பு இந்த சர்வகட்சி கூட்டம் நடைபெறும். பாராளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் இன்று ஆரம்பமாகிறது. இந்த கூட்டத் தொடர் கிட்டத்தட்ட ஒரு மாதம் வரை நீடிக்கும். முதல் நாளான இன்றைய தினம் விலைவாசி பிரச்சினையை எழுப்பி ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டு வர எதிர்க்கட்சிகள் திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது. இதன் மூலம் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசுக்கு நெருக்கடி கொடுக்க எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன. இந்த நெருக்கடியை காங்கிரஸ் சமாளிக்குமா என்பதுதான் இன்றைய கேள்வி. நெருக்கடியை சமாளிப்பதற்காகவும், பாராளுமன்றத்தை சுமூகமாக நடத்துவதற்காகவும் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கூட்டத்தை சபாநாயகர் மீராகுமார் இன்று கூட்டி உள்ளார். சபை கூடுவதற்கு முன்பாக இந்த கூட்டம் கூட்டப்பட்டு அப்போது எதிர்க்கட்சிகளின் ஒத்துழைப்பை சபாநாயகர் மீராகுமார் கோருவார். இடதுசாரிகளை பொறுத்தவரையில் பொதுவான பிரச்சினைகளில் மற்ற கட்சிகளோடு இணைந்து செயல்பட முடிவெடுத்திருப்பதாக தெரிகிறது. அரசை எதிர்க்கும் மற்ற கட்சிகளுடன் கலந்து ஆலோசித்த பிறகு எதிலும் ஒரு முடிவுக்கு வருவோம் என்று லோக்சபை எதிர்க்கட்சி தலைவர் சுஷ்மா சுவராஜ் தெரிவித்தார். 2 ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் இணைந்து செயல்பட முடிவெடுத்திருப்பதாக தெரிகிறது. அடுத்த ஆண்டு துவக்கத்தில் உத்தர பிரதேச மாநிலம் உட்பட 5 மாநிலங்களில் சட்டசபை தேர்தல்கள் நடக்கவிருக்கின்றன. இந்த மாநிலங்களில் உள்ள பிரச்சினைகள் குறித்தும் இந்த கூட்டத் தொடரில் பேசப்படும் என்று தெரிகிறது. உத்தர பிரதேச முதல்வர் மாயாவதி, தனது மாநிலத்தை 4 மாநிலங்களாக பிரிக்கப் போவதாக ஒரு திட்டத்தை அறிவித்து அது குறித்து தீர்மானமும் நிறைவேற்றி அதிர்ச்சி வைத்தியம் கொடுத்திருக்கிறார். இது குறித்தும் பாராளுமன்ற கூட்டத் தொடரில் விவாதம் எழுப்பப்படும் எனத் தெரிகிறது. மற்றொரு முக்கிய அம்சம், தெலுங்கானா மாநில விவகாரம். ஆந்திராவை பிரித்து தனித் தெலுங்கானா மாநிலத்தை உருவாக்க வேண்டும் என்று கோரி அந்த மாநிலத்தில் கடந்த பல நாட்களாகவே போராட்டம் நடந்து வருகிறது. இதனால் அங்கு பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. எங்கள் கோரிக்கை ஏற்கப்படும் வரை பாராளுமன்றத்தை செயல்பட அனுமதிக்கவே மாட்டோம் என்று தெலுங்கானா பகுதி எம்.பிக்களும் அறிவித்து அதிர்ச்சி வைத்தியம் கொடுத்துள்ளனர். எனவே இந்த விவகாரத்தாலும் பாராளுமன்றத்தில் புயல் வீசக்கூடும். ஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரத்தில் பல்வேறு புதிய திருப்பங்கள் ஏற்பட்டுள்ளன. பிரமோத் மகாஜன் பதவிக் காலத்தில் முறைகேடு நடந்ததாக கூறி அது தொடர்பாகவும் சி.பி.ஐ. வழக்கு பதிவு செய்துள்ளது. மேலும் சில முன்னாள் செயலாளர்கள் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. வோடபோன், ஏர்டெல் அலுவலகங்களிலும் அதிரடி சோதனைகள் நடந்துள்ளன. இந்த விவகாரமும் பாராளுமன்றத்தில் பூதாகரமாக வெடிக்கலாம். பெட்ரோல் விலை அடிக்கடி உயர்த்தப்படுகிறது. இந்த விவகாரமும் சபையில் எழுப்பப்படலாம். மொத்தத்தில் விலைவாசி உயர்வு, ஊழல் போன்ற பல பிரச்சினைகளை எழுப்பி சபையில் புயலை கிளப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டிருப்பதால் ஆளும் அரசான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு சற்று கலங்கிப் போயிருப்பதை யாராலும் மறுக்க முடியாது. தனித் தெலுங்கானா மாநில பிரச்சினை, விவசாயிகள் தற்கொலை செய்து கொள்ளும் பிரச்சினை, கறுப்பு பணம், ஊழல் போன்ற பிரச்சினைகளை எழுப்ப தமது கட்சி விரும்புவதாக லோக்சபையின் பா.ஜ.க. தலைமை கொறடா ரமேஷ்பயாஸ் தெரிவித்தார். மேலும் இந்த கூட்டத் தொடரில் மத்திய, மாநில உறவுகள், காஷ்மீர் பிரச்சினை, இந்திய பாகிஸ்தான் உறவு உள்ளிட்ட முக்கிய பிரச்சினைகளை எழுப்பவும் எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன. பல்வேறு பிரச்சினைகளை மையமாக வைத்து இரு சபைகளையும் அடிக்கடி ஒத்திவைக்க பா.ஜ.க மற்றும் இடதுசாரிகள் திட்டமிட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. அதே நேரம் எந்த பிரச்சினையாக இருந்தாலும் முழுமையாக விவாதிக்க அரசு தயாராகவே இருக்கிறது என்று பாராளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் பவன்குமார் பன்சால் தெரிவித்தார். முன்னதாக, தலைமை கொறடாக்களின் கூட்டமும் டெல்லியில் நடந்தது. அப்போது கேள்வி நேரம் உட்பட சபையை சுமூகமாக நடத்த வேண்டியதன் அவசியத்தை பல தலைவர்கள் வலியுறுத்தியதாக நிருபர்களிடம் பேசிய பவன்குமார் பன்சால் தெரிவித்தார். சபையை சுமூகமாக நடத்த அரசுடன் ஒத்துழைக்க வேண்டும் என்றும் அவர் எதிர்க்கட்சிகளை கேட்டுக் கொண்டார். கடந்த முறை மழைக்கால கூட்டத் தொடர் நடந்த போது பல அலுவல்கள் நடக்கவே இல்லை. காரணம், எதிர்க்கட்சிகள் பல்வேறு பிரச்சினைகளை எழுப்பி சபையை நடத்தவிடாமல் இடையூறு செய்தன. இந்த முறையும் லோக்பால் மசோதா உட்பட பல பிரச்சினைகள் எழுப்பப்படவுள்ளன. அரசும் பல முக்கிய மசோதாக்களை நிறைவேற்ற திட்டமிட்டுள்ளது. கிட்டத்தட்ட 30 க்கும் மேற்பட்ட மசோதாக்கள் நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மகளிர் இட ஒதுக்கீடு மசோதா இன்னமும் நிறைவேற்றப்படவில்லை. இந்த முறையாவது அது நிறைவேறுமா என்பதே பெண் எம்.பிக்களின் கேள்வியாகும். இந்த கேள்விக்கு இந்த கூட்டத் தொடரில் விடை கிடைக்கலாம். இப்படிப்பட்ட ஒரு பரபரப்பான சூழ்நிலையில்தான் பாராளுமன்றம் இன்று கூடுகிறது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 1 month ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 1 month ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 1 month ago |
-
விஜய் பிரச்சார பயணம் தொடரும்: த.வெ.க. துணை பொதுச்செயலாளர்
29 Oct 2025சென்னை : த.வெ.க. தலைவர் விஜய்யின் பிரச்சார பயணம் தொடரும் என்று அக்கட்சியின் துணை பொதுச்செயலாளர் சி.டி.ஆர்.நிர்மல் குமார் தெரிவித்துள்ளார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 29-10-2025.
29 Oct 2025 -
தங்கம் விலை மீண்டும் உயர்வு
29 Oct 2025சென்னை : சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரே நாளில் ரூ. 2,000 அதிகரித்து விற்பனையானது மீண்டும் நகைப்பிரியர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
இன்று முத்துராமலிங்க தேவர் குருபூஜை விழா: பசும்பொன்னில் துணை ஜனாதிபதி, முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை: துணை முதல்வர் உதயநிதி, அமைச்சர்களும் பங்கேற்பு
29 Oct 2025மதுரை, இன்று முத்துராமலிங்க தேவர் குருபூஜை விழாவை முன்னிட்டு பசும்பொன்னில் துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன், முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை, துணை முதல்வர் உதயநிதி உள்ள
-
நவ. 5-ல் த.வெ.க. சிறப்பு பொதுக்குழு கூட்டம் : விஜய் அறிவிப்பு
29 Oct 2025சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் சிறப்பு பொதுக்குழு கூட்டம் நவ. 5 ஆம் தேதி நடைபெறும் என்று அந்தக் கட்சியின் தலைவர் விஜய் அறிவித்துள்ளார்.
-
ரபேல் போர் விமானத்தில் பறந்தார் ஜனாதிபதி முர்மு
29 Oct 2025சென்னை : ரபேல் போர் விமானத்தில் ஜனாதிபதி திரெளபதி பறந்தார்.
-
வலிமையான, போற்றத்தக்க தலைவர்: பிரதமர் மோடிக்கு ட்ரம்ப் புகழாரம்
29 Oct 2025சியோல் : இந்தியப் பிரதமர் மோடி வலிமையான, போற்றத்தக்க தலைவர் ஆனால், இந்தியா - பாகிஸ்தான் போர் நான் வர்த்தக ஒப்பந்தம் செய்யமாட்டேன் என்று சொன்னதாலேயே நிறுத்தப்பட்டது.” என
-
தென்காசிக்கு 10 புதிய அறிவிப்புகள்: முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார்
29 Oct 2025தென்காசி, தென்காசியில் ரூ.1,020 கோடியில் முடிவுற்ற பணிகளைத் திறந்து வைத்து புதிய பணிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.
-
ஸ்ரீஹரிகோட்டாவில் பாகுபலி ராக்கெட்: வரும் 1-ம் தேதி கவுண்ட்டவுன் துவக்கம்
29 Oct 2025ஆந்திரா : ஸ்ரீஹரிகோட்டாவில் பாகுபலி ராக்கெட் தயார் நிலையில் உள்ளது வருகிற 1-ந்தேதி முதல் கவுண்ட்டவுன் தொடங்கப்பட உள்ளது.
-
ட்ரம்ப்புக்கு மோடி தைரியமாக பதிலளிக்க வேண்டும்: ராகுல்
29 Oct 2025டெல்லி : ட்ரம்ப்புக்கு மோடி தைரியமாக பதிலளிக்க வேண்டும் என்று ராகுல் கூறினார்.
-
மக்கள்தொகை கணக்கெடுப்பிற்கான முன் சோதனை: தமிழக அரசு அறிவிப்பு
29 Oct 2025சென்னை : மக்கள்தொகை கணக்கெடுப்பிற்கான முன் சோதனை குறித்து தமிழக அரசு அறிவித்துள்ளது.
-
போக்சோ வழக்குகளில் பாதிக்கப்பட்ட 6,999 பேருக்கு 103.62 கோடி ரூபாய் நிவாரணம் : அமைச்சர் கீதாஜீவன் தகவல்
29 Oct 2025சென்னை : போக்சோ வழக்குகளில் பாதிக்கப்பட்ட 6,999 பேருக்கு ரூ.103.62 கோடி நிவாரண நிதி வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கீதாஜீவன் தெரிவித்துள்ளார்.
-
மாணவியின் கனவு இல்லத்தை பார்வையிட்ட முதல்வர் ஆய்வு
29 Oct 2025சென்னை : சென்னையில் நடந்த கல்வியில் சிறந்த தமிழ்நாடு’ நிகழ்ச்சியில், தென்காசி மாவட்டம், கழுநீர்குளத்தைச் சேர்ந்த மாணவி பிரேமாவுக்கு ‘கலைஞர் கனவு இல்லம்’ திட்டத்தின் கீழ
-
மக்கள் 100 சதவீதம் விஜய் மீது நம்பிக்கை வைத்துள்ளனர் : த.வெ.க. துணை பொதுச்செயலர் பேட்டி
29 Oct 2025சென்னை : தமிழக வெற்றிக்கழகத்தை முடக்க முயற்சி செய்தனர். அவர்களின் எண்ணம் நிச்சயமாக ஈடேறாது.
-
அரசு பணிகளுக்கு ஊழியர்களை நியமிக்கும் தேர்வில் முறைகேடு : எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு
29 Oct 2025சென்னை : நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறைகளில் காலியாக இருந்த பல்வேறு பதவிகளுக்கு ஊழியர்களை
-
ஐ.சி.சி. ஒருநாள் தரவரிசை: முதலிடம் பிடித்தார் ரோகித்; சச்சின் சாதனை முறியடிப்பு
29 Oct 2025துபாய் : ஐ.சி.சி. ஒருநாள் பேட்டர்களுக்கான தரவரிசைப் பட்டியலில் இந்திய கிரிக்கெட் வீரர் ரோகித் சர்மா முதலிடத்தை பிடித்துள்ளார்.
-
ஆஸி.க்கு எதிரான டி-20 தொடர்: நிதீஷ் குமார் ரெட்டி விலகல்
29 Oct 2025பெர்த், : ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் மூன்று டி20 போட்டிகளில் இருந்து இந்திய ஆல்ரவுண்டர் நிதீஷ்குமார் ரெட்டி விலகியுள்ளார்.
-
நகராட்சி நிர்வாகம் - குடிநீர் வழங்கல் துறை பணி நியமனத்தில் முறைகேடா? - அமைச்சர் கே.என்.நேரு விளக்கம்
29 Oct 2025சென்னை : நகராட்சி நிர்வாகம் - குடிநீர் வழங்கல் துறையில் பணி நியமனத்தில் முறைகேடு நடைபெற்றதாக வெளியான தகவல் குறித்து அமைச்சர் கே.என்.நேரு விளக்கமளித்துள்ளார்.
-
கலைஞரின் கனவு இல்ல ஒரு லட்சமாவது பயனாளிக்கு வீட்டிற்கான சாவியை வழங்கினார் : தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின்
29 Oct 2025சென்னை : கலைஞரின் கனவு இல்லத்தின் 1 லட்சமாவது பயனாளிகளுக்கு வீட்டின் சாவியை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
-
வருவாயின் ஒரு பகுதியை சேமிக்க வேண்டும்: உலக சிக்கன நாளை முன்னிட்டு முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தல்
29 Oct 2025சென்னை : உலக சிக்கன நாளை முன்னிட்டு ஒவ்வொருவரும் தம்முடைய வருவாயின் ஒரு பகுதியை சேமிக்க வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
வடசென்னை பகுதிகளில் மின்வாரிய பணிகளை ஆய்வு செய்தார் அமைச்சர்
29 Oct 2025சென்னை : வடசென்னை பகுதிகளில் நடைபெறும் மின்வாரிய பணிகளை அமைச்சர் சிவசங்கர் நேரில் ஆய்வு செய்தார்.
-
தமிழ்நாட்டில் 2026 தேர்தலுக்கு பின் பா.ஜ.க. காணாமல் போகும் : அமைச்சர் ரகுபதி விமர்சனம்
29 Oct 2025புதுக்கோட்டை : தமிழ்நாட்டில் 2026 தேர்தலுக்கு பிறகு பா.ஜ.க.
-
இந்திய பெண் பாலியல் வன்கொடுமை: இங்கிலாந்தை சேர்ந்தவர் கைது
29 Oct 2025லண்டன் : இந்திய பெண் பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் இங்கிலாந்தை சேர்ந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
-
வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம்: வரும் 2-ம் தேதி அனைத்து கட்சிக்கூட்டம்
29 Oct 2025சென்னை : வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் தொடர்பான வரும் 2-ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் நடைபெறவுள்ளது.
-
மோந்தா புயல் காரணமாக ஆந்திராவில் விடிய, விடிய கொட்டி தீர்த்த கனமழை
29 Oct 2025சென்னை : மோந்தா புயல் காரணமாக ஆந்திராவில் விடிய, விடிய கனமழை கொட்டி தீர்த்தது.


