எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
டோக்கியோ, மார்ச் 12 - ஜப்பானில் கடந்த 16 ஆண்டுகளுக்கு பிறகு மிகப்பெரிய பூகம்பம் நேற்று ஏற்பட்டது. இந்த பூகம்பத்தைத் தொடர்ந்து சுனாமிப் பேரலைகளும் எழுந்தன. பூகம்பம் மற்றும் சுனாமியால் ஜப்பானில் பல ஆயிரம் கோடி ரூபாய்க்கு சேதங்கள் ஏற்பட்டுள்ளன. பூகம்ப இடிபாடுகளிலும், சுனாமி பேரலைகளிலும் சிக்கி ஏராளமானோர் பலியாகி உள்ளனர். இதையடுத்து ஜப்பான் அமைச்சரவை பிரதமர் தலைமையில் அவரச ஆலோசனை நடத்தி வருகிறது.
பூகோள ரீதியாக தீவு நாடான ஜப்பான் பூகம்ப மண்டலத்திற்குள் இருக்கிறது. இங்கு அடிக்கடி நில நடுக்கங்களும், அதனைத் தொடர்ந்து சுனாமி பேரலைகளும் ஏற்படுவது சகஜமாகிவிட்டது. கடந்த 1995 ஆம் ஆண்டு ஏற்பட்ட மிகப்பெரிய பூகம்பத்திலும், அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட சுனாமியிலும் பல்லாயிரம்பேர் பலியானார்கள். இப்போது 16 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஒரு மிகப்பெரிய நிலநடுக்கம் ஜப்பானை தாக்கியது. இதனை அடுத்து சுனாமி எச்சரிக்கையும் விடப்பட்டது. எச்சரிக்கை விடுக்கப்பட்ட அடுத்த சில மணித்துளிகளில் சுனாமி பேரலைகள் ஆறு மீட்டர் உயரத்திற்கு சீறிவந்து நிலப்பகுதிக்குள் நுழைந்தது.
ஜப்பானில் ஏற்பட்ட இந்த மிகப்பெரிய நிலநடுக்கத்தினால் பசிபிக் மகாசமுத்திரத்தை ஒட்டியுள்ள ரஷ்யா, தைவான், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, மெக்ஸிகோ, பெரு, ஹவாய் உள்ளிட்ட பல நாடுகளிலும் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
ஜப்பானின் வடகிழக்கு பகுதியில் உள்ள இவாகி, புகுஷிமா போன்ற முக்கிய நகரங்களை சுனாமி தாக்கியது. இந்த சுனாமி பேரலைகள் இரண்டு கிலோமீட்டர் நீளத்திற்கு நிலப்பகுதிக்குள் நுழைந்தது. அப்போது வழியில் இருந்த கட்டிடங்கள், வாகனங்கள் அனைத்தும் ஏதோ தூசுகள் போல வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்டன. பூமிக்கு கீழை 60 கிலோமீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்த நிலநடுக்கம், தலைநகர் டோக்கியோ வரை அதிர்வுகளை ஏற்படுத்தியது. இதனால் மக்கள் அலறி அடித்துக்கொண்டு சாலைகளிலும், உயரமான இடங்களிலும் தஞ்சமடைந்தனர். ஜப்பானில் கிழக்கு பகுதியில் உள்ள நகரங்களில் உள்ள கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமாயின. சில இடங்களில் கட்டிடங்கள் தீ பிடித்து எரியத்தொடங்கின. இந்த பூகம்பம் ரிக்டர் அளவையில் 8.9 ஆக பதிவாகி உள்ளது என்று ஜப்பான் புவியியல் ஆய்வு மையம் அறிவித்துள்ளது. 1995 ம் ஆண்டுக்குப் பிறகு ஏற்பட்ட மிகப்பெரிய நிலநடுக்கம் இது என்றும் அந்த மையம் கூறியுள்ளது. இந்த நில நடுக்கம் மற்றும் சுனாமி பேரலை தாக்குதல் காரணமாக டோக்கியோ உள்பட பல்வேறு நகரங்களில் உள்ள விமான நிலையங்கள், துறைமுகங்கள் ஆகியவை மூடப்பட்டன. மெட்ரோ ரயில் போக்குவரத்து முற்றிலுமாக நிறுத்தப்பட்டது. அதேபோல சாலை போக்குவரத்தும் பூகம்பம் மற்றும் சுனாமி தாக்கிய பகுதிகளில் நிறுத்தப்பட்டது. மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதால் டோக்கியோ நகர் உட்பட பெரும்பாலான நகரங்கள் இருளில் மூழ்கின. தொலைத் தொடர்பும் துண்டிக்கப்பட்டுள்ளதால் உயிர்ச்சேதம் பற்றிய தகவல்கள் உடனடியாக கிடைக்கவில்லை.
பூகம்ப தாக்குதல் காரணமாக ஜப்பானில் உள்ள முக்கியமான அணு மின்சார நிலையங்கள் அனைத்தும் மூடப்பட்டன. இந்த அணு மின்சார நிலையங்களுக்கு எந்தவிதமான பாதிப்பும் ஏற்படவில்லை என்று அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. நீண்ட காலத்திற்கு பிறகு இப்படி ஒரு நிலநடுக்கமும், சுனாமியும் ஏற்பட்டுள்ளதால் அடுத்து செய்யவேண்டிய நடவடிக்கைகள் குறித்து பிரதமர் தலைமையில் ஜப்பான் அமைச்சரவை அவசர ஆலோசனை நடத்தியது.
டோக்கியோ, ஒசாகி ஆகிய நகரங்களில் 30 பேர் பலியானதாக ஆரம்ப கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜப்பானில் மக்கள் தொகை மிகுந்த ஹோன்சு தீவுதான் இந்த பூகம்பம் மற்றும் சுனாமியில் பெரிதும் பாதிக்கப்பட்டது. இதுபோன்ற ஒரு பூகம்பத்தை தான் தனது வாழ்நாளிலேயே பார்த்ததில்லை என்று ஜப்பான் வாசி ஒருவர் தெரிவித்தார். மீட்பு பணிகளை விரைந்து மேற்கொள்வதற்காக 900 மீட்புக் குழுவினர் போர்க்கால அடிப்படையில் செயல்பட்டு வருவதாக கூறப்படுகிறது. நகர் முழுவதும் தண்ணீர் சூழ்ந்திருக்க, நகரின் மையப் பகுதியோ எரிந்துகொண்டிருக்கிறது. தீயணைப்பு வீரர்களும், மீட்பு குழுக்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். சென்டாய் விமான நிலையம் முழுவதுமாக சுனாமி பேரலைகளால் மூழ்கடிக்கப்பட்டது. சுனாமிக்கு பயந்து விமான நிலையத்தில் இருந்த அனைவரும் விமான நிலையத்தின் உயர்ந்த கட்டிடத்தின் மீது ஏறி உயிர்தப்பினர். விமான நிலையத்தின் ஓடுதளங்கள் நீருக்குள் இருக்கின்றன. எண்ணை கிணறுகள் தீப்பற்றி அதிலிருந்து கறும்புகை வெளியேறிக்கொண்டிருக்கிறது.
சுனாமி ஏற்பட்டபோது கடலில் இருந்த மீன்பிடி படகுகள், சிறிய கப்பல்கள் ஆகியவை பேரலைகளால் நகருக்குள் கொண்டுவரப்பட்டன. ஜப்பானில் இரு தீவுகளை இணைக்கும் ஒரு முக்கிய பாலம் ஆழிப் பேரலைகளால் தாக்கப்பட்டு துண்டிக்கப்பட்டது. அப்போது அந்த பாலத்தின் மீது சென்றுகொண்டிருந்த வாகனங்கள் அனைத்தும் கடல் நீரில் இழுத்துச் செல்லப்பட்டன.
பூகம்பம், சுனாமி இரண்டும் ஒரே நேரத்தில் ஜப்பானை தாக்கியதால் பல ஆயிரம் கோடிக்கு சேதம் ஏற்பட்டிருக்கலாம் என்றும் ஏராளமானோர் பலியாகி இருக்கலாம் என்றும் அஞ்சப்படுகிறது. மீட்பு மற்றும் நிவாரண பணிகளுக்காக சர்வதேச நாடுகளின் ஒத்துழைப்பை ஜப்பான் அரசு கேட்டுக்கொண்டுள்ளது. மேலும் இந்த மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் பொதுமக்களும் அதிக அளவில் ஒத்துழைக்க வேண்டும் என்று ஜப்பான் பிரதமர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
1995 ஆம் ஆண்டு ஏற்பட்ட பூகம்பத்தின்போது 10 ஆயிரம் கோடி டாலருக்கு ஜப்பானில் சேதங்கள் ஏற்பட்டன. பூகம்ப வரலாற்றிலேயே இந்த அளவுக்கு சேதத்தை ஏற்படுத்திய 1995 ல் ஏற்பட்ட பூகம்பம்தான்.
ஜப்பானில் பூகம்பம் மற்றும் சுனாமி பேரிடர்கள் சகஜமான சம்பவமாகிவிட்டதால் நேற்று பூமி அதிர்ச்சி ஏற்பட்ட உடனேயே ஜப்பான் கடலோர பகுதிகள் முழுவதும் சுனாமி எச்சரிக்கை சங்குகள் ஒலித்தன. இதனால் கடலோர பகுதியில் இருந்த மக்கள் பல்வேறு உயிர்காக்கும் வாகனங்கள் மூலம் 5 கி.மீட்டருக்கு அப்பால் உள்ள நிலப்பகுதிக்கு சென்று தங்கிவிட்டனர். இதனால் பலத்த உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது. என்றாலும் பூகம்பம், சுனாமியால் காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக பல்வேறு தற்காலிக மருத்துவ சிகிச்சை முகாம்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஸ்வீட் உருளைக்கிழங்கு கேக்1 day 39 sec ago |
பெப்பர் சிக்கன்5 days 24 min ago |
ஹனி பட்டர் சிக்கன்1 week 1 day ago |
-
மாஸ்கோ தாக்குதல் பின்னணியில் அமெரிக்கா, இங்கிலாந்து, உக்ரைன் ரஷ்ய உளவுத்துறை தலைவர் குற்றச்சாட்டு
27 Mar 2024மாஸ்கோ, மாஸ்கோவில் நடத்தப்பட்ட தாக்குதல் பின்னணியில் உக்ரைன், அமெரிக்கா, இங்கிலாந்து இருப்பதாக ரஷ்யாவின் உளவுத்துறை தலைவர் அலெக்சாண்டர் போர்ட்னிகோவ் தெரிவித்துள்ளார்
-
சக்தியின் வடிவம்: மே.வங்க பா.ஜ.க. வேட்பாளரை பாராட்டிய பிரதமர் மோடி
27 Mar 2024புது டெல்லி, மேற்கு வங்கத்தில் போட்டியிடும் பா.ஜ.க.வேட்பாளர் ரேகா பத்ராவை சக்தியின் வடிவம் என்று பிரதமர் மோடி பாராட்டியுள்ளார்.
-
தமிழகத்தில் 31-ம் தேதி வரை வறண்ட வானிலை நிலவும் : சென்னை வானிலை மையம் தகவல்
27 Mar 2024சென்னை : தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் 31-ம் தேதி வரை வறண்ட வானிலை நிலவக்கூடும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
பிரபஞ்ச அழகி போட்டியில் முதல் முறையாக சவுதி பங்கேற்பு
27 Mar 2024ரியாத், சவுதி அரேபியா முதல் முறையாக பிரபஞ்ச அழகி போட்டியில் பங்கேற்க உள்ளது.
-
மதுரையில் அ.தி.மு.க.வேட்பாளர் டாக்டர் சரவணை ஆதரித்து பழங்காநத்தத்தில் இன்று எடப்பாடி பிரச்சாரம் செய்கிறார் : முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ எம்.எல்.ஏ. அறிக்கை
27 Mar 2024மதுரை : மதுரையில் அ.தி.மு.க.வேட்பாளர் டாக்டர் சரவணை ஆதரித்து பழங்காநத்தத்தில் இன்று எடப்பாடி பிரச்சாரம் செய்கிறார் என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ எம்.எல்.ஏ.
-
தேர்தல் ஆணைய கருத்தை ஏற்கிறோம்: ம.தி.மு.க.வுக்கு பம்பரம் சின்னம் ஒதுக்க உத்தரவிட முடியாது : வழக்கை தள்ளுபடி செய்து ஐகோர்ட் உத்தரவு
27 Mar 2024சென்னை, ம.தி.மு.க.வுக்கு பம்பரம் சின்னம் ஒதுக்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட முடியாது என்று வழக்கை தள்ளுபடி செய்து சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
-
பாராளுமன்ற தேர்தல் பிரசாரத்தை பயன்படுத்தி தமிழ்நாட்டில் நாச வேலைக்கு பயங்கரவாதிகள் சதி திட்டம்? மத்திய உளவுத்துறை எச்சரிக்கை கடிதம்
27 Mar 2024சென்னை, பாராளுமன்ற தேர்தல் பிரசாரத்தை பயன்படுத்தி தமிழ்நாட்டில் நாச வேலைக்கு பயங்கரவாதிகள் சதி திட்டம் தீட்டியுள்ளதாக மத்திய உளவுத்துறை மாநிலங்களுக்கு எச்சரிக்கை கடிதம்
-
சிதம்பரம் தொகுதியில் போட்டியிட திருமாவளவன் வேட்புமனு தாக்கல் : தேர்தல் ஆணையம் சுதந்திரமாக இயங்குவதாக தெரியவில்லை என பேட்டி
27 Mar 2024அரியலூர் : சிதம்பரம் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரும், அரியலூர் மாவட்ட கலெக்டருமான ஆனிமேரி ஸ்வர்ணாவிடம் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் நேற்று தன
-
பாராளுமன்ற தேர்தல்: தமிழகத்தில் வேட்புமனு தாக்கல் நிறைவடைந்தது; 900-க்கும் அதிகமான வேட்பாள்கள் மனுத்தாக்கல் வேட்புமனுக்கள் மீது இன்று பரிசீலனை
27 Mar 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் வேட்புமனு தாக்கல் நேற்றோடு நிறைவடைந்தது.
-
பாராளுமன்ற தேர்தல்: எடப்பாடி பிரச்சார சுற்றுப்பயணத்தில் மாற்றம்
27 Mar 2024சென்னை : பாராளுமன்ற தேர்தலையொட்டி அ.தி.மு.க.
-
பாராளுமன்ற தேர்தல்: சிவசேனா உத்தவ் தாக்கரே அணி சார்பில் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு
27 Mar 2024மும்பை, பாராளுமன்ற மக்களவை தேர்தலுக்கான 16 பேர் கொண்ட முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை சிவசேனா உத்தவ் தாக்கரே அணி வெளியிட்டுள்ளது.
-
தமிழகத்தில் மேலும் 2 சுங்கச்சாவடிகளில் ஏப்ரல் 1-ம் தேதி முதல் கட்டணம் உயர்வு
27 Mar 2024சென்னை, சென்னை புறநகரில் உள்ள 2 முக்கிய சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்படுவதாக நெடுஞ்சாலைத்துறை ஆணையம் அறிவித்துள்ளது.
-
சத்தீஷ்கரில் படையினருடன் மோதல்: நக்சலைட்டுகள் 6 பேர் சுட்டு கொலை
27 Mar 2024பிஜாப்பூர், சத்தீஸ்கர் மாநிலத்தின் பிஜாப்பூரில் நேற்று பாதுகாப்புப் படையினருடன் நடந்த மோதலில் இரண்டு பெண்கள் உட்பட 6 நக்சல்கள் உயிழந்தனர். பலர் காயமடைந்திருக்கலா
-
மதுபான கொள்கை முறைகேடு வழக்கு: இன்று எனது கணவர் நீதிமன்றத்தில் உண்மைகளை வெளியிடுவார்: கெஜ்ரிவால் மனைவி பேட்டி
27 Mar 2024புது டெல்லி, டெல்லி மதுபான கொள்கையில் முறைகேடு நடந்ததாக சொல்லப்படும் வழக்கில் இன்று (வியாழக்கிழமை) தனது கணவர் நீதிமன்றத்தில் உண்மைகளை வெளியிடுவார் என்று அரவிந்த் கெஜ்ரி
-
பார்லி. தேர்தல்: கோவையில் அண்ணாமலை மனுத்தாக்கல்
27 Mar 2024கோவை : பாராளுமன்ற தேர்தலையொட்டி பா.ஜ.க.
-
ராமநாதபுரத்தில் பன்னீர்செல்வம் பெயரில் மேலும் ஒருவர் போட்டி
27 Mar 2024ராமநாதபுரம், ராமநாதபுரத்தில் ஒரே பெயரில் போட்டியிடும் சுயேட்சை வேட்பாளர்களின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது.
-
கைது நடவடிக்கைக்கு எதிராக கெஜ்ரிவாலின் மனு மீது பதிலளிக்க அவகாசம் கோரிய அமலாக்கத்துறை
27 Mar 2024புதுடெல்லி : கைது நடவடிக்கைக்கு எதிராக கெஜ்ரிவால் தாக்கல் செய்த மனு தொடர்பாக பதிலளிக்க 3 வாரங்கள் அவகாசம் வழங்குமாறு அமலாக்கத்துறை கோரிக்கை விடுத்துள்ளது.
-
ரஷ்ய ராணுவத்தில் சேர்க்கப்பட்ட 2 கேரள இளைஞர்கள் நாடு திரும்ப ஏற்பாடு: மத்திய அரசு
27 Mar 2024திருவனந்தபுரம், ரஷ்ய ராணுவத்தில் சேர்க்கப்பட்ட கேரளாவைச் சேர்ந்த 4 இளைஞர்களில் 2 பேர் நாடு திரும்ப ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் வி.
-
நீலகிரி தி.மு.க. வேட்பாளர் ஆ.ராசா வேட்புமனு தாக்கல்
27 Mar 2024நீலகிரி, நீலகிரி தொகுதியில் தி.மு.க. வேட்பாளர் ஆ.ராசா நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார்.
-
வி.சி.க.வுக்கு பானை சின்னம் வழங்க தலைமை தேர்தல் ஆணையம் மறுப்பு
27 Mar 2024புதுடெல்லி : பாராளுமன்ற தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு பானை சின்னம் வழங்க இந்திய தேர்தல் ஆணையம் மறுப்பு தெரிவித்து உள்ளது.
-
சிவசேனா உத்தவ் தாக்கரே அணியின் 16 பேர் அடங்கிய முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு
27 Mar 2024மும்பை, மராட்டியத்தில் சிவசேனா உத்தவ் தாக்கரே அணி சார்பில் 16 பேர் கொண்ட முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டுள்ளது.
-
மைக்ரோசாப்ட் விண்டோஸ் தலைவரான சென்னை ஐ.ஐ.டி. முன்னாள் மாணவர்
27 Mar 2024நியூயார்க் : மைக்ரோசாப்ட் விண்டோஸ் மற்றும் சர்போஸின் புதிய தலைவராக சென்னை ஐ.ஐ.டி. முன்னாள் மாணவரான பவன் டவுலூரி என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
-
வான்வழி தாக்குதலில் 15 பேர் பலி: சிரியாவின் குற்றச்சாட்டுக்கு அமெரிக்கா திட்டவட்ட மறுப்பு
27 Mar 2024டமாஸ்கஸ், சிரியாவில் அமெரிக்கா நடத்திய வான்வழி தாக்குதலில் 15 பேர் பலியானதாக கூறப்பட்டுள்ளது.
-
சிறையிலிருந்து டெல்லி அரசு இயங்காது: துணை நிலை கவர்னர்
27 Mar 2024புது டெல்லி, சிறையிலிருந்து டெல்லி அரசு இயங்காது என்பதை டெல்லி மக்களிடம் உறுதியாக என்னால் கூற முடியும் என்று டெல்லி துணை நிலை கவர்னர் வி.கே.சக்சேனா தெரிவித்துள்ளார்.
-
சிவகாசியில் விஜயகாந்த் மகனை ஆதரித்து எடப்பாடி இன்று பிரச்சாரம்
27 Mar 2024சிவகாசி : பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றுள்ள தே.மு.தி.க.