எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

டோக்கியோ, மார்ச் 12 - ஜப்பானில் கடந்த 16 ஆண்டுகளுக்கு பிறகு மிகப்பெரிய பூகம்பம் நேற்று ஏற்பட்டது. இந்த பூகம்பத்தைத் தொடர்ந்து சுனாமிப் பேரலைகளும் எழுந்தன. பூகம்பம் மற்றும் சுனாமியால் ஜப்பானில் பல ஆயிரம் கோடி ரூபாய்க்கு சேதங்கள் ஏற்பட்டுள்ளன. பூகம்ப இடிபாடுகளிலும், சுனாமி பேரலைகளிலும் சிக்கி ஏராளமானோர் பலியாகி உள்ளனர். இதையடுத்து ஜப்பான் அமைச்சரவை பிரதமர் தலைமையில் அவரச ஆலோசனை நடத்தி வருகிறது.
பூகோள ரீதியாக தீவு நாடான ஜப்பான் பூகம்ப மண்டலத்திற்குள் இருக்கிறது. இங்கு அடிக்கடி நில நடுக்கங்களும், அதனைத் தொடர்ந்து சுனாமி பேரலைகளும் ஏற்படுவது சகஜமாகிவிட்டது. கடந்த 1995 ஆம் ஆண்டு ஏற்பட்ட மிகப்பெரிய பூகம்பத்திலும், அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட சுனாமியிலும் பல்லாயிரம்பேர் பலியானார்கள். இப்போது 16 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஒரு மிகப்பெரிய நிலநடுக்கம் ஜப்பானை தாக்கியது. இதனை அடுத்து சுனாமி எச்சரிக்கையும் விடப்பட்டது. எச்சரிக்கை விடுக்கப்பட்ட அடுத்த சில மணித்துளிகளில் சுனாமி பேரலைகள் ஆறு மீட்டர் உயரத்திற்கு சீறிவந்து நிலப்பகுதிக்குள் நுழைந்தது.
ஜப்பானில் ஏற்பட்ட இந்த மிகப்பெரிய நிலநடுக்கத்தினால் பசிபிக் மகாசமுத்திரத்தை ஒட்டியுள்ள ரஷ்யா, தைவான், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, மெக்ஸிகோ, பெரு, ஹவாய் உள்ளிட்ட பல நாடுகளிலும் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
ஜப்பானின் வடகிழக்கு பகுதியில் உள்ள இவாகி, புகுஷிமா போன்ற முக்கிய நகரங்களை சுனாமி தாக்கியது. இந்த சுனாமி பேரலைகள் இரண்டு கிலோமீட்டர் நீளத்திற்கு நிலப்பகுதிக்குள் நுழைந்தது. அப்போது வழியில் இருந்த கட்டிடங்கள், வாகனங்கள் அனைத்தும் ஏதோ தூசுகள் போல வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்டன. பூமிக்கு கீழை 60 கிலோமீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்த நிலநடுக்கம், தலைநகர் டோக்கியோ வரை அதிர்வுகளை ஏற்படுத்தியது. இதனால் மக்கள் அலறி அடித்துக்கொண்டு சாலைகளிலும், உயரமான இடங்களிலும் தஞ்சமடைந்தனர். ஜப்பானில் கிழக்கு பகுதியில் உள்ள நகரங்களில் உள்ள கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமாயின. சில இடங்களில் கட்டிடங்கள் தீ பிடித்து எரியத்தொடங்கின. இந்த பூகம்பம் ரிக்டர் அளவையில் 8.9 ஆக பதிவாகி உள்ளது என்று ஜப்பான் புவியியல் ஆய்வு மையம் அறிவித்துள்ளது. 1995 ம் ஆண்டுக்குப் பிறகு ஏற்பட்ட மிகப்பெரிய நிலநடுக்கம் இது என்றும் அந்த மையம் கூறியுள்ளது. இந்த நில நடுக்கம் மற்றும் சுனாமி பேரலை தாக்குதல் காரணமாக டோக்கியோ உள்பட பல்வேறு நகரங்களில் உள்ள விமான நிலையங்கள், துறைமுகங்கள் ஆகியவை மூடப்பட்டன. மெட்ரோ ரயில் போக்குவரத்து முற்றிலுமாக நிறுத்தப்பட்டது. அதேபோல சாலை போக்குவரத்தும் பூகம்பம் மற்றும் சுனாமி தாக்கிய பகுதிகளில் நிறுத்தப்பட்டது. மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதால் டோக்கியோ நகர் உட்பட பெரும்பாலான நகரங்கள் இருளில் மூழ்கின. தொலைத் தொடர்பும் துண்டிக்கப்பட்டுள்ளதால் உயிர்ச்சேதம் பற்றிய தகவல்கள் உடனடியாக கிடைக்கவில்லை.
பூகம்ப தாக்குதல் காரணமாக ஜப்பானில் உள்ள முக்கியமான அணு மின்சார நிலையங்கள் அனைத்தும் மூடப்பட்டன. இந்த அணு மின்சார நிலையங்களுக்கு எந்தவிதமான பாதிப்பும் ஏற்படவில்லை என்று அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. நீண்ட காலத்திற்கு பிறகு இப்படி ஒரு நிலநடுக்கமும், சுனாமியும் ஏற்பட்டுள்ளதால் அடுத்து செய்யவேண்டிய நடவடிக்கைகள் குறித்து பிரதமர் தலைமையில் ஜப்பான் அமைச்சரவை அவசர ஆலோசனை நடத்தியது.
டோக்கியோ, ஒசாகி ஆகிய நகரங்களில் 30 பேர் பலியானதாக ஆரம்ப கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜப்பானில் மக்கள் தொகை மிகுந்த ஹோன்சு தீவுதான் இந்த பூகம்பம் மற்றும் சுனாமியில் பெரிதும் பாதிக்கப்பட்டது. இதுபோன்ற ஒரு பூகம்பத்தை தான் தனது வாழ்நாளிலேயே பார்த்ததில்லை என்று ஜப்பான் வாசி ஒருவர் தெரிவித்தார். மீட்பு பணிகளை விரைந்து மேற்கொள்வதற்காக 900 மீட்புக் குழுவினர் போர்க்கால அடிப்படையில் செயல்பட்டு வருவதாக கூறப்படுகிறது. நகர் முழுவதும் தண்ணீர் சூழ்ந்திருக்க, நகரின் மையப் பகுதியோ எரிந்துகொண்டிருக்கிறது. தீயணைப்பு வீரர்களும், மீட்பு குழுக்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். சென்டாய் விமான நிலையம் முழுவதுமாக சுனாமி பேரலைகளால் மூழ்கடிக்கப்பட்டது. சுனாமிக்கு பயந்து விமான நிலையத்தில் இருந்த அனைவரும் விமான நிலையத்தின் உயர்ந்த கட்டிடத்தின் மீது ஏறி உயிர்தப்பினர். விமான நிலையத்தின் ஓடுதளங்கள் நீருக்குள் இருக்கின்றன. எண்ணை கிணறுகள் தீப்பற்றி அதிலிருந்து கறும்புகை வெளியேறிக்கொண்டிருக்கிறது.
சுனாமி ஏற்பட்டபோது கடலில் இருந்த மீன்பிடி படகுகள், சிறிய கப்பல்கள் ஆகியவை பேரலைகளால் நகருக்குள் கொண்டுவரப்பட்டன. ஜப்பானில் இரு தீவுகளை இணைக்கும் ஒரு முக்கிய பாலம் ஆழிப் பேரலைகளால் தாக்கப்பட்டு துண்டிக்கப்பட்டது. அப்போது அந்த பாலத்தின் மீது சென்றுகொண்டிருந்த வாகனங்கள் அனைத்தும் கடல் நீரில் இழுத்துச் செல்லப்பட்டன.
பூகம்பம், சுனாமி இரண்டும் ஒரே நேரத்தில் ஜப்பானை தாக்கியதால் பல ஆயிரம் கோடிக்கு சேதம் ஏற்பட்டிருக்கலாம் என்றும் ஏராளமானோர் பலியாகி இருக்கலாம் என்றும் அஞ்சப்படுகிறது. மீட்பு மற்றும் நிவாரண பணிகளுக்காக சர்வதேச நாடுகளின் ஒத்துழைப்பை ஜப்பான் அரசு கேட்டுக்கொண்டுள்ளது. மேலும் இந்த மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் பொதுமக்களும் அதிக அளவில் ஒத்துழைக்க வேண்டும் என்று ஜப்பான் பிரதமர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
1995 ஆம் ஆண்டு ஏற்பட்ட பூகம்பத்தின்போது 10 ஆயிரம் கோடி டாலருக்கு ஜப்பானில் சேதங்கள் ஏற்பட்டன. பூகம்ப வரலாற்றிலேயே இந்த அளவுக்கு சேதத்தை ஏற்படுத்திய 1995 ல் ஏற்பட்ட பூகம்பம்தான்.
ஜப்பானில் பூகம்பம் மற்றும் சுனாமி பேரிடர்கள் சகஜமான சம்பவமாகிவிட்டதால் நேற்று பூமி அதிர்ச்சி ஏற்பட்ட உடனேயே ஜப்பான் கடலோர பகுதிகள் முழுவதும் சுனாமி எச்சரிக்கை சங்குகள் ஒலித்தன. இதனால் கடலோர பகுதியில் இருந்த மக்கள் பல்வேறு உயிர்காக்கும் வாகனங்கள் மூலம் 5 கி.மீட்டருக்கு அப்பால் உள்ள நிலப்பகுதிக்கு சென்று தங்கிவிட்டனர். இதனால் பலத்த உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது. என்றாலும் பூகம்பம், சுனாமியால் காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக பல்வேறு தற்காலிக மருத்துவ சிகிச்சை முகாம்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 9 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 10 months 17 hours ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 10 months 2 weeks ago |
-
தங்கம் விலை மேலும் சரிவு
16 Jul 2025சென்னை, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.360 குறைந்து ஒரு சவரன் ரூ.72,800-க்கு விற்பனையானது.
-
விஜய் சேதுபதி - நித்யா மேனன் நடிக்கும் 'தலைவன் தலைவி'
16 Jul 2025சத்யஜோதி பிலிம்ஸ் டி ஜி தியாகராஜன் வழங்க, செந்தில் தியாகராஜன் - அர்ஜுன் தியாகராஜன் தயாரிப்பில் பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி - நித்யா மேனன் நடித்திருக்கும்
-
ஆகஸ்ட் 25-ல் மதுரையில் நடைபெறுகிறது: த.வெ.க.வின் 2-வது மாநில மாநாடு: விஜய் அறிவிப்பு
16 Jul 2025சென்னை, தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு, வருகிற ஆகஸ்ட் மாதம் 25ஆம் தேதி (25.08.2025) திங்கட்கிழமை அன்று மதுரையில் நடைபெற உள்ளது என அக்கட்சியின் தலைவர் வ
-
மயிலாடுதுறை மாவட்டத்திற்கு 8 புதிய அறிவிப்புகள் வெளியீடு
16 Jul 2025மயிலாடுதுறை, மயிலாடுதுறை மாவட்டத்திற்கு 8 புதிய அறிவிப்புகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.
-
பாட்னா ஏர்போர்ட்டில் பரபரப்பு: நொடி பொழுதில் விபத்தில் இருந்து தப்பிய விமானம்
16 Jul 2025பாட்னா : பாட்னாவில் விபத்தில் இருந்து தப்பிய இண்டிகோ விமானத்தால் பரபரப்பு ஏற்பட்டது.
-
காசா: நிவாரண பொருள் வழங்கும்போது கூட்ட நெரிசலில் சிக்கி 20 பேர் உயிரிழப்பு
16 Jul 2025டெல் அவிவ், காசாவில் நிவாரண பொருள் வழங்கும்போது கூட்ட நெரிசலில் ஏற்பட்டது. அப்போது 20 பேர் உயிரிழந்தனர்.
-
டிஜே அருணாச்சலம் நடிக்கும் உசுரே
16 Jul 2025ஸ்ரீகிருஷ்ணா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் உசுரே படத்தின் ட்ரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது.
-
ரூ.2.4 கோடிக்கு ஆன்லைன் ஷாப்பிங் செய்த மூதாட்டி..!
16 Jul 2025பீஜிங், சீனாவின் ஜியாடிங் பகுதியை சேர்ந்த 66 வயது மூதாட்டி ஒருவர் ஆன்லைனில் மூலம் ரூ.2.4 கோடிக்கு ஷாப்பிங் செய்தார்.
-
மாநிலங்களவை எம்.பியாக பதவியேற்பு: ரஜினியை சந்தித்து வாழ்த்து பெற்ற நடிகர் கமல்ஹாசன்
16 Jul 2025சென்னை, மாநிலங்களவை எம்.பியாக வரும் 25-ம் தேதி பதவியேற்கவுள்ள நிலையில், மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்ட சான்றிதழை சக நடிகரும், தனது நண்பருமான ரஜினிகாந்திடம்
-
அமெரிக்காவில் சிகிச்சை முடிந்து முதல்வர் பினராயி கேரளா திரும்பினார்
16 Jul 2025திருவனந்தபுரம் : அமெரிக்காவில் சிகிச்சை முடிந்து கேரளா முதல்வர்பினராய் விஜயன் திரும்பினார்.
-
மற்ற வீரர்களுடன் இணைந்து பணியாற்றியது சிறந்த அனுபவம்: சுபான்ஷு சுக்லா பதிவு
16 Jul 2025வாஷிங்டன், சர்வதேச விண்வெளி நிலையத்தில் மற்ற வீரர்களுடன் இணைந்து பணியாற்றியது சிறப்பாக இருந்ததாக தெரிவித்துள்ள இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா, என் மீதும், என் பண
-
ரஷ்யாவிடம் வர்த்தகம் செய்தால்... இந்தியா, சீனா, பிரேசிலுக்கு நேட்டோ கடும் எச்சரிக்கை
16 Jul 2025வாஷிங்டன், பிரேசில், சீனா மற்றும் இந்தியா ஆகிய நாடுகள் ரஷ்யாவுடன் தொடர்ந்து வணிகம் செய்தால் கடுமையான பொருளாதாரத் தடைகளை சந்திக்க நேரிடும் என்று நேட்டோ பொதுச் செயலாளர் ம
-
உருட்டு உருட்டு' பட இசை வெளியீட்டு விழா
16 Jul 2025ஜெய் ஸ்டுடியோ கிரியேஷன்ஸ், சாய் காவியா மற்றும் சாய் கைலாஷ் வழங்க, பத்மராஜு ஜெய்சங்கர் தயாரிப்பில் பாஸ்கர் சதாசிவம் இயக்கத்தில், உருவாகியுள்ள படம் உருட
-
டிராகன் நூறாவது நாள் வெற்றி விழா
16 Jul 2025ஏ.ஜி.எஸ். தயாரிப்பில் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில், பிரதீப் ரங்கநாதன், நடிப்பில் வெளியான படம் டிராகன் திரைப்படம் நூறாவது நாளைக் கடந்து ஓடிக்கொண்டிருக்கிறது.
-
துருவ் சர்ஜா நடிக்கும் 'கே.டி-தி டெவில்'
16 Jul 2025துருவ் சர்ஜா நடிப்பில் இயக்குநர் பிரேம் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் கே.டி.
-
வள்ளிமலை வேலன் இசை வெளியீட்டு விழா
16 Jul 2025எம் என் ஆர் பிக்சர்ஸ், எம் நாகரத்தினம் தயாரித்து நடிக்க, எஸ் மோகன் எழுதி இயக்க, கிராமத்துக் கதைக்களத்தில் கமர்ஷியல் படைப்பாக உருவாகியுள்ள படம், வள்ளிமலை வேலன்.
-
கூட்டணியைப் பொருத்தவரை நான் சொல்வதே இறுதியானது: எடப்பாடி பழனிசாமி விளக்கம்
16 Jul 2025சிதம்பரம், தமிழகத்தில் கூட்டணி ஆட்சி என்று அமித்ஷா சொல்லவில்லை. எங்கள் கூட்டணியே ஆட்சி அமைக்கும் என்றுதான் சொன்னார்.
-
AI தொழில்நுட்பத்தில் பன் பட்டர் ஜாம்
16 Jul 2025பன் பட்டர் ஜாம் படத்தின் Veo3 AI எனும் தொழில்நுட்பத்தை பயன்படுத்தியுள்ளார். Veo3 AI என்பது, இயற்கையான தோற்றம் மற்றும் சினிமா தரம் கொண்ட வீடியோக்களை உருவாக்க
-
ஜென்ம நட்சத்திரம் இசை வெளியீட்டு விழா
16 Jul 2025அமோகம் ஸ்டுடியோஸ் விஜயன் தயாரிப்பில் மணிவர்மன் இயக்கத்தில் தமன் நடிப்பில் உருவாகியுள்ள படம் ’ஜென்ம நட்சத்திரம்.
-
மாணவர்களுக்கான சிறந்த நகரங்கள் பட்டியல்- 4 இந்திய நகரங்களுக்கு இடம்
16 Jul 2025புதுடெல்லி : இந்தியாவில் மாணவர்களுக்கான சிறந்த நகரங்கள் தரவரிசையில் 4 நகரங்கள் இடம் பெற்றது.
-
ஐ.நா., பாதுகாப்பு படையினர் மீது தாக்குதல்; நடவடிக்கை எடுக்க இந்தியா வலியுறுத்தல்
16 Jul 2025நியூயார்க் : ஐ.நா., படையினர் தாக்கப்படும் சம்பவங்களில் குற்றவாளிகள் தண்டிக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என ஐ.நா.,வில் இந்தியாவுக்கான நிரந்தர பிரதிநிதி பர்வதநேனி ஹரிஷ்
-
சென்னை, தேனி உள்ளிட்ட 11 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு
16 Jul 2025சென்னை, தமிழகத்தில் சென்னை,நீலகிரி, தேனி, தென்காசி, வேலூர், திருவண்ணாமலை உள்ளிட்ட 11 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
குழந்தைகளின் ஆதாரை புதுப்பிக்க அறிவுறுத்தல்
16 Jul 2025சென்னை : குழந்தைகளின் ஆதாரை புதுப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
-
ஈரான் பயணத்தை தவிர்க்குமாறு இந்திய தூதரகம் அறிவுறுத்தல்
16 Jul 2025தெஹ்ரான் : அத்தியாவசியமற்ற ஈரான் பயணத்தை தவிர்க்குமாறு அந்நாட்டில் உள்ள இந்திய தூதரகம் இந்தியர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.
-
ஐ.சி.சி. பேட்ஸ்மேன் தரவரிசை: ஜோ ரூட் மீண்டும் முதலிடம்
16 Jul 2025லண்டன் : ஐ.சி.சி.