முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஹசாரேயின் சிறை நிரப்பும் போராட்டம் இதுவரை 50 ,000 மேற்பட்டோர் பதிவு

திங்கட்கிழமை, 26 டிசம்பர் 2011      ஊழல்
Image Unavailable

 

புதுடெல்லி,டிச.- 25 - அண்ணா ஹசாரே ஊழலை எதிர்த்து நடத்தவிருக்கும் சிறை நிரப்பும் போராட்டத்தில் கலந்துகொள்ள இதுவரை 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் தங்களுடைய பெயர்களை பதிவு செய்துள்ளனர். ஊழலை ஒழிக்க பலமான லோக்பால் மசோதாவை கொண்டுவர மத்திய அரசை வலியுறுத்தி வருகின்ற 27-ம் தேதி மும்பையில் அண்ணா ஹசாரே உண்ணாவிரதம் இருக்கிறார். இதனையடுத்து வருகின்ற 30-ம் தேதி முதல் சிறை நிரப்பும் போராட்டத்தையும் அறிவித்துள்ளார். இந்த போராட்டத்தில் நாடு முழுவதும் கலந்துகொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. போராட்டத்தில் கலந்துகொள்பவர்கள் இண்டர்நெட் முகவரியிலும் பதிவு செய்யலாம் என்று போராட்ட ஆதரவு இயக்கமான ஊழல் எதிர்ப்பு இந்தியா என்ற அமைப்பு சார்பாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி நேற்று மதியம் வரை சிறை நிரப்பும் போராட்டத்தில் கலந்துகொள்வதாக 51 ஆயிரம் பேர் பதிவு செய்துள்ளனர் என்று ஊழல் எதிர்ப்பு இந்தியா என்ற அமைப்பு அறிவித்துள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago