முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சென்னையில் இன்று மழை: புயல் வெள்ளிக்கிழமை கடக்கிறது

வியாழக்கிழமை, 29 டிசம்பர் 2011      தமிழகம்
Image Unavailable

சென்னை, டிச.29 - தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை அக்டோபர் மாதம் இறுதியில் தொடங்கியது. இந்த ஆண்டு வட கிழக்கு பருவமழை சராசரி அளவை விட அதிகம் பெய்துள்ளது. இந்த வாரத்தில் மழை பருவ காலம் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் 2 நாட்களுக்கு முன்பு வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுமண்டலம், நேற்று முன்தினம் புயலாக மாறியது. இதற்கு தானே என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.   நேற்று முன்தினம் சென்னையில் இருந்து 700 கி.மீ. தூரத்தில் இருந்த புயல் சின்னம் நேற்று தென் கிழக்கே நிலை கொண்டு உள்ளது. சென்னையில் இருந்து 550 கிலோ மீட்டரை நெருங்கி உள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் ரமணன் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: வங்க கடலின் தென் கிழக்கே மையம் கொண்டிருந்த தானே புயல் மேலும் நகர்ந்து   சென்னைக்கு 550 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது. புயலானது அடுத்தக்கட்டமாக மேற்கு,வடமேற்குதிசை நோக்கில் நகர்ந்து,அடுத்த 24மணி நேரத்தில் மேலும் வலுவடைந்து வடதமிழகம்.தெற்கு ஆந்திராவில் ,கடலூருக்கும்​நெல்லூருக்கும் இடையில் சென்னைக்கு மிக அருகில் கரையைக்கடக்கும்.வருகிற 30​ந்தேதி (வெள்ளிக்கிழமை) வடதமிழகம் மற்றும் தென் ஆந்திராவுக்கு இடையே புயல் கரையை கடக்கும். அதனால் இன்று முதல் மழை தொடங்கும். ஓரிரு இடங்களில் கன மழை பெய்யும். தரைக்காற்று மணிக்கு 45 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசும். கடல் கொந்தளிப்புடன் காணப்படும். எனவே தமிழகம், புதுச்சேரி, ஆந்திர மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.இவ்வாறு அவர் கூறினார்.  சென்னை, கடலூர், நாகப்பட்டினம், புதுச்சேரி, பாம்பன், எண்ணூர், தூத்துக்குடி துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. பாதுகாப்பு நடவடிக்கைளும் எடுக்கப்பட்டு வருகிறது. கடல் சீற்றம் காரணமாக, அலைகள் பல அடி உயரத்துக்கு எழும்புகின்றன. பலத்த காற்றும் வீசுகிறது. எனவே, கடலோர பகுதிகளில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பல மீன்பிடி படகுகளுக்கு சேதம் ஏற்பட்டது. எனவே, இந்த படகுகளை மீனவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு சென்றனர். சென்னையில் தண்ணீரில் நிறுத்தப்பட்டிருந்த படகுகள் கிரேன் மூலம் கரைக்கு கொண்டு வரப்பட்டு, கடலில் இருந்து nullண்ட தூரத்தில் தரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்