முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பத்மநாபா கோயில் விவகாரம்: உம்மன் சாண்டிக்கு கண்டனம்

வெள்ளிக்கிழமை, 6 ஜனவரி 2012      ஆன்மிகம்
Image Unavailable

 

திருவனந்தபுரம்,ஜன.6 - பத்மநாபாகோயில் பொக்கிஷம் விவகாரம் தொடர்பாக முதல்வர் உம்மன் சாண்டி தலைமையிலான கேரள காங்கிரஸ் அரசுக்கு சுப்ரீம்கோர்ட்டு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள பத்மநாபா திருக்கோயிலில் உள்ள ரகசிய அறைகளில் ரூ. ஒரு லட்சம் கோடிக்கும் அதிகமாக மதிப்புள்ள தங்க நகைகள், வைரம், முத்துக்கள், வைடூரியம், பவளம் ஆகியவைகளான ஆபரணங்கள் மறைத்து வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டு எடுக்கப்பட்டது. மொத்தம் உள்ள 6 அறைகளை திறந்தபோது இவ்வளவு பெரிய அளவில் பொக்கிஷம் இருந்தது தெரிந்தது. 6-வது அறையை திறப்பதை நிறுத்திவைக்க சுப்ரீம்கோர்ட்டின் உத்தரவை கோயில் நிர்வாகம் பெற்றுள்ளது. திறக்உகப்பட்ட 5 ரகசிய அறைகளில் இருந்து எடுக்கப்பட்ட பொக்கிஷத்தை மதிப்பிடும் பணி நடந்து வருகிறது. ஆனால் பொக்கிஷங்களில் இருந்து ஒவ்வொன்றாக திருடு போவதாக புகார் எழுந்துள்ளது. 

இந்தநிலையில் பத்மாநாபா திருக்கோயிலில் உள்ள பொக்கிஷத்தை பாதுகாக்க போதுமான பாதுகாப்பு கொடுக்காததற்கு கேரள அரசுக்கு சுப்ரீம்கோர்ட்டு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. பொக்கிஷம் மற்றும் 6-வது அறையை சுற்றி கோட்டை சுவரை உடனடியாக கட்டவும் பொக்கிஷத்தை மதிப்பீடு செய்யும் குழுவிற்கு ரூ.25 லட்சம் கொடுக்கவும் சுப்ரீம்கோர்ட்டு உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்