எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, பிப்.17 - முதல்வர் ஜெயலலிதாவின் ஆணைக்கிணங்க ரூ.130 கோடி மதிப்பிலான வக்ஃப் வாரிய சொத்துக்கள் மீட்கப்பட்டுள்ளதாக அமைச்சர் முகமது ஜான் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் எ.முகம்மது ஜான் தலைமையில் தமிழ்நாடு வக்ஃப் வாரிய கண்காணிப்பாளர்கள் மற்றும் ஆய்வாளர்கள் ஆய்வுக்கூட்டம் நேற்று முன்தினம் அன்று வக்ஃப் வாரிய அலுவலகத்தில் நடைப்பெற்றது. இந்த ஆய்வுக்கூட்டத்தில் தமிழ்நாடு பிற்படுத்தபட்டோர்,மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை செயலர் கோ.சந்தானம் முன்னிலை வகித்தார். முன்னதாக வக்ஃப் வாரிய முதன்மை செயல் அலுவலர் ப.அப்துல் ராசிக் அனைவரையும் வரவேற்றார். ஆய்வின் போது அமைச்சர் உரையில் கடந்த ஜனவரி மாத ஆய்வுக் கூட்டத்தில் களப்பணியாளர்களுக்கு வழங்கிய அறிவுரைகளின்படி செயல்பட்டு ஜனவரி மாதம் பெறப்பட்ட வக்ஃப் வாரிய சகாயத் தொகை இதுவரை இல்லாத அளவிற்கு ரூ.40 இலட்சமாக உயர்ந்துள்ளதை அறிந்து மகிழ்ச்சி அடைகிறேன். கடந்த நிதியாண்டில் ஜனவரி 2011 வரை பெறப்பட்ட சகாயத் தொகை ரூ.2.67 கோடியாகும். நடப்பாண்டில் ஜனவரி 2012 வரை பெறப்பட்ட சகாயத் தொகை ரூ.267 கோடியாகும்.கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் ரூ.30 இலட்சம் அதிகமாக சகாயத் தொகை பெறப்பட்டுள்ளது பாராட்டத்தக்கது. இனி வரும் காலங்களிலும் இப்பணி தொய்வில்லாது தொடர்ந்து இலக்கினை அடைய வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறேன். முதல்வர் உத்தரவின்படி வக்ஃபுச் சொத்துகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டதன் காரணமாக கோவையில் யாகூப் திவான் ஹைருத் இன்ஷாவலி அவுலியா தர்கா வக்ஃபுக்குச் சொந்தமான ரூ.5 கோடி பெறுமானமுள்ள 48 சென்ட் பரப்புள்ள சொத்து ஆக்கிரப்பில் இருந்து மீட்கப்பட்டுள்ளது. சென்னையில் திருவல்லிக்கேணி நவாப் கைருன்னிசா பேகம் சாஹிபா மற்றும் பப்பு மஸ்தான் தர்கா வக்ஃபிற்குச் சொந்தமான சுமார் ரூ.105 கோடி மதிப்பிலான 35 கிரவுண்டு நிலத்தில் இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு மிட்கப்பட்டுள்ளது, மேலும் விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் வட்டம்,சிறுவாடி பள்ளிவாசல் வக்ஃபுக்குச் சொந்தமான, முறைகேடாக விற்பனை செய்யப்பட்ட ரூ.20 கோடி மதிப்புள்ள 10.85 ஏக்கர் பரப்புள்ள சொத்துகள் நீதிமன்ற நடவடிக்கைக்குப் பின் மீட்கப்பட்டுள்ளது. இவ்வாறாக சுமார் 130 கோடி ரூபாய் பெறுமான வக்ஃப் சொத்துக்கள் ஆக்கிரமி ப்பிலிருந்து மீட்கப்பட்டுள்ளது . இந்த சொத்துகள் அனைத்தும் முதலமைச்சரின் உத்தரவின் பேரிலேயே மீட்கப்பட்டுள்ளது. முதல்வர் ஜெயலலிதா சிறுபான்மையினரின் பாதுகாவலர் என்பதை மீண்டும் ஒரு முறை நிரூபித்துள்ளார் வக்ஃப் சொத்துக்களை மீட்க உறுதுணையாக இருந்த முதல்வருக்கு நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவிப்பதோடு இதற்காக நடவடிக்கை மேற்கொண்ட அலுவலர்களையும் பாரட்டுகிறேன் தொடர்ந்து இப்பணியில் தனி கவனம் செலுத்தி ஆக்கிரமிக்கப்பட்டுள்ள வக்ஃப் சொத்துகளை மீட்க உரிய நடவடிக்கை எடுக்கவும் கேட்டுகொள்கிறேன்.மேலும் வக்ஃப் வாரியத்தில் இது நாள் வரை பதிவு செய்யப்படாத வக்ஃபுகளை பதிவு செய்ய உடன் நடவடிக்கைகள் மேற்க்கொள்ளவும் புதியதாக துவங்கப்பட்டிருக்கும் பள்ளிவாசல்களையும் வாரியத்தில் பதிவு செய்ய நடவடிக்கை எடுக்கவும், வாரியத்தால் அங்கீகரப்படாத வக்ஃபின் நிர்வாக குழுக்களின் பட்டியல் எடுத்து வாரியத்தின் பார்வைக்குச் சமர்பிக்கவும் நிர்வாகக்குழு வாரியத்தின் அங்கீகாரம் பெறும் வகையிலும் செயல்பட வேண்டும் முறைகேடாக விற்கப்பட்ட வக்ஃப் சொத்தினை மீட்க உடன் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் வக்ஃப் சொத்துக்கள் - அவை வக்ஃப் வாரியத்தில் பதிவு செய்யப்பட்டாலும் பதிவு செய்யப்படவில்லா என்றாலும் அவை வக்ஃப் சோத்துக்களே. எனவே வக்ஃப்ச் சொத்துக்கள் எந்த காலத்தில் முறைகேடாக விற்கப்பட்டிருந்தாலும் அவை மீட்கப்படும். வக்ஃப் வாரியத்தின் அனுமதியின்றி பரிவர்த்தனை செய்யப்படும் வக்ஃப் சொத்துக்களை சம்பந்தப்பட்ட சார்பதிவாளர்கள் பத்திரப்பதிவு மேற்கொள்ளக்கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது. எனவே, யாராவது வக்ஃப் சொத்துக்களை விற்கவோ, பரிபவர்த்தனை செய்ய முற்பட்டால் அந்த ஆவணங்களைச் சம்பந்தப்பட்ட சார்பதிவாளர்கள் வக்ஃப் வாரியத்தினுடைய தடையின்மைச் சான்று இல்லாமல் பதிவு செய்ய வேண்டாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இதை மீண்டும் சார்பதிவாளர்களுக்கு வலியுறுத்தி தெரிவிக்கும்படி கேட்டுக் கொள்கிறேன். தமிழக முதலமைச்சரின் உத்தரவின்படி உலமாக்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட 11,171 சைக்கிள்களில் இதுவரை 9,236 சைக்கிள்கள் வினியோகம் செய்யப்பட்டுள்ளன.மீதமுள்ள 1, 935 சைக்கிள்களை இம்மாத இறுதிக்குள் வினியோகம் செய்ய வேண்டும். மேலும், வக்ஃப் சொத்தினை அபிவிருத்தி செய்யும் திட்டங்கள் இருப்பின் அதனை பெற்று வாரியத்தில் சமர்பிக்க வேண்டும். வக்ஃப்க் சொத்துக்களுக்கு புதிய வாடகையின் நிர்ணயம் செய்து வக்ஃப்க் வருமானத்தை பெருக்க வேண்டும். வக்ஃபின் கணக்குகளை ஆய்வு செய்து, வாரியத்திற்கு முறையான கணக்குகளை சமர்பிக்க அறிவுறுத்த வேண்டும். கடலூர் மாவட்டத்தில்` தானே புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தமிழ்நாடு வக்ஃப் வாரிய ஊழியர்கள் சார்பாக ஒரு நாள் ஊதியத்தை அளித்தமைக்கு எனது நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன். முதலமைச்சரின் சீரிய தலைமையில் அமைந்துள்ள இந்த அரசு சிறுபான்மையினர்களின் நலன்களை பாதுகாப்பதற்கு, வக்ஃப் சொத்துக்களை பாதுகாப்பதற்கு முன்னுரிமை வழங்கி வருகிறது. எனவே சிறுபான்மையினரின் பாதுகாவலராக விளங்கும் இந்த அரசின் எண்ணங்களை நிறைவேற்றும் வகையில் நீங்கள் அனைவரும் சிறப்பாக பணியாற்றி வக்ஃப் வாரியத்தின் சிறப்பான செயல்பாட்டினை உறுதி செய்வதோடு இந்த அரசுக்கு நற்பெயரை ஈட்டித்தர வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அமைச்சர் முகமது ஜான் தெரிவித்துள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஸ்வீட் உருளைக்கிழங்கு கேக்1 day 39 sec ago |
பெப்பர் சிக்கன்5 days 24 min ago |
ஹனி பட்டர் சிக்கன்1 week 1 day ago |
-
தேர்தல் ஆணைய கருத்தை ஏற்கிறோம்: ம.தி.மு.க.வுக்கு பம்பரம் சின்னம் ஒதுக்க உத்தரவிட முடியாது : வழக்கை தள்ளுபடி செய்து ஐகோர்ட் உத்தரவு
27 Mar 2024சென்னை, ம.தி.மு.க.வுக்கு பம்பரம் சின்னம் ஒதுக்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட முடியாது என்று வழக்கை தள்ளுபடி செய்து சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
-
மதுரையில் அ.தி.மு.க.வேட்பாளர் டாக்டர் சரவணை ஆதரித்து பழங்காநத்தத்தில் இன்று எடப்பாடி பிரச்சாரம் செய்கிறார் : முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ எம்.எல்.ஏ. அறிக்கை
27 Mar 2024மதுரை : மதுரையில் அ.தி.மு.க.வேட்பாளர் டாக்டர் சரவணை ஆதரித்து பழங்காநத்தத்தில் இன்று எடப்பாடி பிரச்சாரம் செய்கிறார் என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ எம்.எல்.ஏ.
-
பாராளுமன்ற தேர்தல் பிரசாரத்தை பயன்படுத்தி தமிழ்நாட்டில் நாச வேலைக்கு பயங்கரவாதிகள் சதி திட்டம்? மத்திய உளவுத்துறை எச்சரிக்கை கடிதம்
27 Mar 2024சென்னை, பாராளுமன்ற தேர்தல் பிரசாரத்தை பயன்படுத்தி தமிழ்நாட்டில் நாச வேலைக்கு பயங்கரவாதிகள் சதி திட்டம் தீட்டியுள்ளதாக மத்திய உளவுத்துறை மாநிலங்களுக்கு எச்சரிக்கை கடிதம்
-
பாராளுமன்ற தேர்தல்: தமிழகத்தில் வேட்புமனு தாக்கல் நிறைவடைந்தது; 900-க்கும் அதிகமான வேட்பாள்கள் மனுத்தாக்கல் வேட்புமனுக்கள் மீது இன்று பரிசீலனை
27 Mar 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் வேட்புமனு தாக்கல் நேற்றோடு நிறைவடைந்தது.
-
பாராளுமன்ற தேர்தல்: சிவசேனா உத்தவ் தாக்கரே அணி சார்பில் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு
27 Mar 2024மும்பை, பாராளுமன்ற மக்களவை தேர்தலுக்கான 16 பேர் கொண்ட முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை சிவசேனா உத்தவ் தாக்கரே அணி வெளியிட்டுள்ளது.
-
தமிழகத்தில் மேலும் 2 சுங்கச்சாவடிகளில் ஏப்ரல் 1-ம் தேதி முதல் கட்டணம் உயர்வு
27 Mar 2024சென்னை, சென்னை புறநகரில் உள்ள 2 முக்கிய சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்படுவதாக நெடுஞ்சாலைத்துறை ஆணையம் அறிவித்துள்ளது.
-
ராமநாதபுரத்தில் பன்னீர்செல்வம் பெயரில் மேலும் ஒருவர் போட்டி
27 Mar 2024ராமநாதபுரம், ராமநாதபுரத்தில் ஒரே பெயரில் போட்டியிடும் சுயேட்சை வேட்பாளர்களின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது.
-
கைது நடவடிக்கைக்கு எதிராக கெஜ்ரிவாலின் மனு மீது பதிலளிக்க அவகாசம் கோரிய அமலாக்கத்துறை
27 Mar 2024புதுடெல்லி : கைது நடவடிக்கைக்கு எதிராக கெஜ்ரிவால் தாக்கல் செய்த மனு தொடர்பாக பதிலளிக்க 3 வாரங்கள் அவகாசம் வழங்குமாறு அமலாக்கத்துறை கோரிக்கை விடுத்துள்ளது.
-
வி.சி.க.வுக்கு பானை சின்னம் வழங்க தலைமை தேர்தல் ஆணையம் மறுப்பு
27 Mar 2024புதுடெல்லி : பாராளுமன்ற தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு பானை சின்னம் வழங்க இந்திய தேர்தல் ஆணையம் மறுப்பு தெரிவித்து உள்ளது.
-
நீலகிரி தி.மு.க. வேட்பாளர் ஆ.ராசா வேட்புமனு தாக்கல்
27 Mar 2024நீலகிரி, நீலகிரி தொகுதியில் தி.மு.க. வேட்பாளர் ஆ.ராசா நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார்.
-
நடிகை அதிதி ராவை கரம் பிடித்தார் நடிகர் சித்தார்த்
27 Mar 2024ஐதராபாத் : நடிகை அதிதி ராவை கரம் பிடித்தார் நடிகர் சித்தார்த்.
-
இலங்கை சிறையில் இருந்து 33 தமிழக மீனவர்கள் விடுதலை
27 Mar 2024சென்னை, எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட ராமேஸ்வரம், காரைக்கால் பகுதியைச் சேர்ந்த 33 மீனவர்களை விடுதலை செய்து இலங்கை நீதிமன்றம் உத்தரவ
-
எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க., இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடலாம்: இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு
27 Mar 2024சென்னை, எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க. இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட எந்தவித தடையும் இல்லை என்று இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்து உள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 28-03-2024.
28 Mar 2024 -
டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலுக்கு திடீர் உடல்நலக்குறைவு: ஆம் ஆத்மி
27 Mar 2024புதுடெல்லி, 7 நாட்களாக சிறையில் உள்ள நிலையில் கெஜ்ரிவாலின் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளதாக ஆம் ஆத்மி தகவல் தெரிவித்துள்ளது.
-
உ.பி. மீரட்டில் இருந்து பிரசாரத்தை தொடங்குகிறார் பிரதமர் மோடி
27 Mar 2024லக்னோ, உ.பி. மீரட்டில் இருந்து தேர்தல் பிரசாரத்தை பிரதமர் மோடி தொடங்குகிறார்.
-
மகாராஷ்டிரா மாநிலத்தில் இடைத்தேர்தல் நிறுத்தம்: இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு
27 Mar 2024மும்பை, மராட்டிய மாநிலம் அகோலா- மேற்கு தொகுதி இடைத்தேர்தலை, தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
-
பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க கடும் தோல்வியை சந்திக்கும் எடப்பாடி பழனிசாமி அறிக்கை
27 Mar 2024சென்னை, குறுக்கு வழிகளில் செயல்படும் தி.மு.க பாராளுமன்றத் தேர்தலில் கடும் தோல்வியை சந்திக்கும் என்ற அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
-
பா.ம.க. தேர்தல் அறிக்கை வெளியீடு
27 Mar 2024சென்னை : தமிழ்நாட்டில் தனியார் நிறுவனங்களில் 80 சதவீதம் பணியிடங்களை உள்ளூர் மக்களுக்கு ஒதுக்க சட்டம் கொண்டு வர வலியுறுத்தப்படும் என பாமக தேர்தல் அறிக்கையில் தெரிவ
-
தேனி தொகுதிக்கான நலத்திட்டங்களை பிரதமரிடம் கேட்டு பெற்றுத்தருவேன் : மனு தாக்கலுக்கு பிறகு டி.டி.வி.தினகரன் பேட்டி
27 Mar 2024தேனி : தேனி தொகுதிக்கான நலத்திட்டங்களை பிரதமரிடம் கேட்டு பெற்றுத்தருவேன் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
-
தமிழ்நாட்டின் பெயரை மாற்ற தடுக்க முயற்சித்தவர் கவர்னர் : அரக்கோணம் பிரசாரத்தில் உதயநிதி குற்றச்சாட்டு
27 Mar 2024ராணிப்பேட்டை : தமிழ்நாட்டின் பெயரை மாற்றவும், தமிழ்த்தாய் வாழ்த்து பாடலை இசைப்பதை தடுக்கவும் முயற்சித்தவர் கவர்னர் என்று அரக்கோணத்தில் நடைபெற்ற பிரசாரத்தில் உதயநிதி ஸ்ட
-
பெங்களூரு குண்டுவெடிப்பு தொடர்பாக தமிழ்நாட்டில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை
27 Mar 2024சென்னை, பெங்களூரு குண்டுவெடிப்பு தொடர்பாக சென்னை, ராமநாதபுரம் உள்பட தமிழகத்தின் 5 இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர்.
-
ஐ.பி.எல். டிக்கெட்டுகளை முறைகேடாக விற்ற 24 பேர் கைது
27 Mar 2024சென்னை : ஐ.பி.எல்.
-
சிறப்பாக செயல்பட்டோம்: கெய்க்வாட்
27 Mar 2024குஜராத்திற்கு எதிரான ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 63 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றி குறித்து சி.எஸ்.கே.
-
ஐ.பி.எல் கிரிக்கெட்: சி.எஸ்.கே. 2-வது வெற்றி
27 Mar 2024சென்னை : குஜராத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 63 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணி வெற்றிபெற்று தனது 2-வது வெற்றியை பதிவு செய்துள்ளது.