எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
டோக்கியோ, ஜூன் 8 - ஜி 7நாடுகளின் தலைவர்களின் எச்சரிக்கையையும் மீறி சர்ச்சைக்குரிய கிழக்கு சீன கடல் பகுதியில் 2 கப்பல்களை சீனா நிறுத்தியுள்ளது என்று ஜப்பான் குற்றம் சாட்டியுள்ளது.
இது குறித்து ஜப்பானின் கடலோர காவல்படை அதிகாரி ஒருவர் கூறுகையில், சீனாவின் 2 கப்பல்களும், முதலில் ஒட்சுரிஜிமா தீவில் இருந்து 27 கி.மீ தொலைவில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. பின்னர் அவை ஜப்பானின் சென்காகு தீவுகளுக்கு அருகில் உள்ள கடல் பகுதிக்குள் நுழைந்துள்ளன என்றார். முன்னதாக பிரசல்ஸில் நடைபெற்ற மாநாட்டில் ஜி 7 நாடுகளின் தலைவர்கள் கூறுகையில், தெற்கு மற்றும் கிழக்கு சீனா கடல் பகுதிகளில் பதட்டம் நிலவுவதை உன்னிப்பாக கவனித்து வருகிறோம். அந்த பகுதிகளை எந்தவொரு நாடும் அச்சுறுத்தியோ மிரட்டல் விடுத்தோ உரிமை கோர கூடாது என்றனர். ஜப்பானுக்கும், சீனாவுக்கும் இடையே உள்ள சென்காகு தீவுகளை இரு நடுகளும் சொந்தம் கொண்டாடி வந்த நிலையில் அந்த தீவுகள் தங்களுக்கே சொந்தம் என்று 2012ம் ஆண்டு ஜப்பான் திட்டவட்டமாக அறிவித்தது. இதையடுத்து அந்த பகுதியில் சீனா அடிக்கடி கப்பல்கள் மற்றும் விமானங்களை அனுப்பி அச்சுறுத்தி வருவதாக கூறப்படுகிறது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


