தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தில் உள்ள 'ஆய்வக பராமரிப்பு உதவியாளர்' பணிக்கு காலியிடம் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

புது டெல்லி, அக் 12 - ஏர்செல், மேக்சிஸ் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள மத்திய முன்னாள் அமைச்சர் தயாநிதி மாறன், அவரது சகோதரரும், சன் நிறுவனங்கள் குழும தலைவருமான கலாநிதி மாறன், அவரது நிறுவனங்களில் நிர்வாகிகளாக இருக்கும் இருவரின் குடும்பத்தினர் ஆகியோரின் ரூ. 742 கோடி அளவுக்கான சொத்துக்களை முடக்கி வைக்க மத்திய அமலாக்க துறை தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.
வெளிநாடுவாழ் இந்திய தொழிலதிபரான சிவசங்கரன், இந்தியாவில் தனக்கு சொந்தமான ஏர்செல் தொலை தொடர்பு நிறுவன பங்குகளை 2006ல் மலேசியாவை சேர்ந்த மேக்சிஸ் நிறுவனத்துக்கு விற்க அப்போது மத்தியில் தொலை தொடர்பு துறை அமைச்சராக இருந்த தயாநிதி மாறன் நெருக்கடி கொடுத்ததாக சிபிஐயிடம் 2011ல் புகார் அளித்தார். இந்த வழக்கில் 2011, அக்டோபரில் வழக்கு பதிவு செய்யப்பட்டு கடந்த ஆகஸ்ட் 29ம் தேதி தான் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
அதில் தயாநிதி மாறன், கலாநிதி மாறன், மலேசியாவை சேர்ந்த மேக்சிஸ் நிறுவன தலைவர் அனந்த கிருஷ்ணன், அந்நிறுவனத்தின் தலைமை செயலதிகாரி ரால்ப் மார்ஷல் மற்றும் சன்டைரக்ட், மேக்சிஸ் கம்யூனிகேசன், சவுத் ஏசியா என்டர்டெயின்மென்ட்ஸ், ஹோல்டிங்ஸ் உள்ளிட்ட 4 நிறுவனங்கள் மீது சிபிஐ குற்றம் சாட்டியது.
ஏர்செல் நிறுவன பங்குகளை வாங்கியதற்கு கைமாறாக கலாநிதி மாறன் நடத்தி வரும் சன் டைரக்ட் நிறுவனத்தில் பிரிட்டன், மொரீஷியஸ் நாடுகளில் உள்ள தனது துணை நிறுவனங்கள் மூலம் சுமார் ரூ. 549 கோடி அளவுக்கு மேக்சிஸ் நிறுவனம் முதலீடு செய்தது. அதே பிரிட்டன் நிறுவனம் மொரீஷியஸ் நாட்டில் உள்ள தனது துணை நிறுவனம், ஒரு மென்பொருள் நிறுவனம் ஆகியவற்றின் மூலமும் சன் டைரக்ட் நிறுவனத்தில் கூடுதலாக சுமார் ரூ. 193 கோடியை முதலீடு செய்தது. ஆனால் இந்த முதலீடுகளுக்கு மத்திய நிதி துறையின் கீழ் உள்ள அன்னிய முதலீடுகள் மேம்பாட்டு வாரியம் விதிகளை மீறி அனுமதி அறித்ததா என்பது குறித்து விசாரித்து வருகிறோம் என்று குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த குற்றச்சாட்டுகள் மீதான விசாரணை டெல்லி சிபிஐ நீதிமன்றத்தில் வரும் திங்கட்கிழமை நடைபெறவுள்ளது. இந்நிலையில் கோடிக்கணக்கில் சட்டவிரோத பண பரிவர்த்தனை நடந்துள்ளதால் அது தொடர்பான சட்ட பிரிவின் கீழ் அமலாக்க துறை தனியாக வழக்கு பதிவு செய்ய முடிவு செய்துள்ளது. இதையடுத்து தயாநிதி மாறன், கலாநிதி மாறன், அவரது நிறுவனத்தில் நிர்வாகிகளாக உள்ள குடும்பத்தினர் ஆகியோரது சொத்துக்களில் ரூ. 742 கோடி அளவுக்கான சொத்துக்களை முடக்கி வைத்து நடவடிக்கை மேற்கொள்ள மத்திய அமலாக்க துறை திட்டமிட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக சன் டைரக்ட் நிறுவனத்தில் மொரீஷியஸ், மலேசியா ஆகிய நாடுகளில் உள்ள மேக்ஸிஸ் சார்பு நிறுவனங்களின் முதலீட்டு விவரங்களை அலுவல்பூர்வமாக அனுப்பி வைக்குமாறு அந்நாடுகளின் அரசுக்கு மத்திய அமலாக்க துறை கடிதம் அனுப்பி உள்ளது. மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் புதிய அரசு பதவிக்கு வந்த பிறகு மொரீஷியஸ், மலேசியா ஆகிய நாடுகளிடையே பரஸ்பர வர்த்தக ஒத்துழைப்பும் நல்லுறவும் மேம்பட்டுள்ளது. இத்தகைய சூழலில் இருநாடுகளுக்கும் அமலாக்க துறை கடிதம் அனுப்பி உள்ளது. அங்கிருந்து விரைவில் விவரங்கள் அனுப்பி வைக்கப்பட்டதும் குற்றம் சாட்டப்பட்டவர்கள் அவர்களின் குடும்பத்தினர் ஆகியோரின் சொத்துக்களை முடக்கி நீதிமன்றத்தில் வழக்கு தொடரும் நடைமுறைகள் மேற்கொள்ளப்படும் என்று மத்திய அமலாக்க துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
KFC Style பிரைடு சிக்கன்![]() 3 days 9 min ago |
சிக்கன் ரிம் ஜிம் கபாப்![]() 6 days 18 hours ago |
பக்காலா மீன் வறுவல்![]() 1 week 2 days ago |
-
விரைவில் திரைக்கு வரும் பேய காணோம் படம்
04 Jul 2022குளோபல் எண்டர்டெயின்மெண்ட் தேனி பாரத் R.
-
விஜயகாந்த் உடல்நிலை குறித்து வதந்திகள் பரப்ப வேண்டாம் : தே.மு.தி.க. தலைமை அறிக்கை
04 Jul 2022சென்னை : விஜயகாந்த் குறித்து வதந்திகள் பரப்புவதை வன்மையாக கண்டிக்கிறோம் என்று தே.மு.தி.க. தலைமை தெரிவித்துள்ளது.
-
இங்கிலாந்தில் நடைபெற்ற ஒரு டெஸ்ட் தொடரில் அதிக விக்கெட்களை கைப்பற்றி ஜஸ்ப்ரிட் பும்ரா புதிய சாதனை
04 Jul 2022பர்மிங்காம் : இந்திய டெஸ்ட் அணியின் தற்போதைய கேப்டன் ஜஸ்பிரித் பும்ரா பந்து வீச்சில் புதிய சாதனையைப் படைத்துள்ளார்.
-
அமெரிக்க குடியுரிமை பெற்ற வெளிநாட்டினர் பட்டியலில் இந்தியாவுக்கு இரண்டாவது இடம்
04 Jul 2022வாஷிங்டன் : நடப்பு நிதியாண்டில் அமெரிக்காவின் குடியுரிமையை பெற்ற வெளிநாட்டினர்களின் பட்டியலில் இந்தியா இரண்டாமிடம் பெற்றுள்ளது.
-
டென்மார்க் வணிக வளாகத்தில் துப்பாக்கிச்சூடு: 3 பேர் பலி
04 Jul 2022கோபன்ஹேகன் : டென்மார்க்கில் வணிக வளாகத்தில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 3 பேர் உயிரிழந்தனர்.
-
மாய கங்கா பாடலை வெளியிட்ட ஜி.கே. ரெட்டி
04 Jul 2022என்.கே. புரொடக்ஷ்ன்ஸ் சார்பில் திலகராஜ் பல்லால் தயாரித்திருக்கும் படம் பனாரஸ். இந்த திரைப்படம் கன்னடம், தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி மொழியிலும் வெளியாகிறது.
-
இறை நம்பிக்கையில் ஒரு நாளும் தலையிட மாட்டோம்: இந்திய துணை கண்டத்தின் வரலாறு தமிழ் நிலப்பரப்பில் இருந்து எழுதப்பட வேண்டும் : பெட்னா அமைப்பின் ஆண்டு விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு
04 Jul 2022சென்னை : இறை நம்பிக்கையில் ஒரு நாளும் தலையிட மாட்டோம் என்றும், இந்திய துணை கண்டத்தின் வரலாறு தமிழ் நிலப்பரப்பில் இருந்துதான் எழுதப்பட வேண்டும் என்றும் முதல்வர் மு.க.
-
ராக்கெட்ரி விமர்சனம்
04 Jul 2022மாதவன் முதன் முறையாக இயக்கி நடித்துள்ள படம் ராக்கெட்ரி. சாம் சி.எஸ் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
-
ஆப்கனில் தலிபான்கள் சென்ற வாகனம் மீது மர்ம நபர்கள் தாக்குதல்
04 Jul 2022காபூல் : ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் சென்ற வாகனம் மீது மர்ம நபர்கள் நடத்திய தாக்குதலில் பலர் காயமடைந்துள்ளனர்.
-
இங்கிலாந்தில் 2023-க்கான உக்ரைன் மீட்பு மாநாடு நடைபெறும் என அறிவிப்பு
04 Jul 2022லண்டன் : உக்ரைன் மீட்பு மாநாடு 2023 இங்கிலாந்தில் நடத்தப்படும் என அந்நாட்டின் வெளியுறவு அலுவலகம் தெரிவித்துள்ளது.
-
உக்ரைனின் லூகன்ஸ் மாகாணத்தை கைப்பற்றியதாக ரஷ்யா அறிவிப்பு
04 Jul 2022மாஸ்கோ : உக்ரைனின் லூகன்ஸ் மாகாணம் முழுவதையும் கைப்பற்றி விட்டதாக ரஷ்யா நேற்று அறிவித்துள்ளது.
-
யானை விமர்சனம்
04 Jul 2022ஹரி இயக்கத்தில் வெடிக்காரன் பட்டி சக்திவேல் தயாரிப்பில் அருண் விஜய், பிரியா பவானி சங்கர் நடிப்பில் தற்போது வெளிவந்துள்ள படம் யானை.
-
5,689 மெகாவாட் உற்பத்தி: தமிழகத்தில் 2-வது முறை உச்சம் தொட்ட காற்றாலை மின் உற்பத்தி
04 Jul 2022சென்னை : தமிழகத்தில் காற்றாலை மின் உற்பத்தில் புதிய உச்சத்தை அடைந்துள்ளது. இதன்படி அதிகபட்சமாக 5689 மெகா வாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.
-
கனல் இசை வெளியீட்டு விழா
04 Jul 2022த நைட்டிங்கேல் புரொடக்சன் தயாரிப்பில் சமய முரளி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘கனல்’.
-
ஸ்மார்ட் மாநிலமாக தமிழகத்தை மாற்றுவதே இலக்கு: தொழில் திட்டங்கள் சிறந்திட உறுதுணையாக இருப்போம் : முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
04 Jul 2022சென்னை : தொழில் திட்டங்கள் சிறந்திட உறுதுணையாக இருப்போம் என்றும், ஒரு ஸ்மார்ட் மாநிலமாக தமிழகத்தை மாற்றுவதே இலக்கு என்றும் முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதல்வர் மு.க.
-
கோவில் கும்பாபிஷேக விழாவில் இந்துக்கள் அல்லாதோர் நுழைய தடை செய்ய கோரிய வழக்கு ஐகோர்ட் கிளையில் தள்ளுபடி
04 Jul 2022மதுரை : கோவில் கும்பாபிஷேக விழாவில் இந்துக்கள் அல்லாதோர் நுழைவதை தடை செய்ய கோரிய வழக்கை ஐகோர்ட் மதுரை கிளை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
-
சென்னையில் நடந்த முதலீட்டாளர்கள் மாநாடு: ரூ. 1,25,244 கோடியில் 60 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் : முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்து - 74,898 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்
04 Jul 2022சென்னை : முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னையில் நடைபெற்ற முதலீட்டாளர்களின் முதல் முகவரி, தமிழ்நாடு என்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில் 1,25,244 கோடி ரூபாய்
-
ஈரோடு மாவட்டத்தில் 2-வது நாளாக விசைதறிகள் வேலை நிறுத்தம் : ரூ.12 கோடி மதிப்பிலான துணி உற்பத்தி பாதிப்பு
04 Jul 2022ஈரோடு : ஈரோடு மாவட்டத்தில் நேற்று 2-வது நாளாக விசைத்தறியாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் ரூ.
-
பாகிஸ்தானில் பேருந்து விபத்தில் 19 போ் பலி
04 Jul 2022இஸ்லாமாபாத் : பாகிஸ்தானில் பேருந்து விபத்தில் 19 போ் உயிரிழந்தனா். 11 போ் காயமடைந்தனர்.
-
செஸ் ஒலிம்பியாட் தரவரிசை: 2,696 புள்ளிகளுடன் 3-வது இடத்தில் இந்திய அணி
04 Jul 2022சென்னை : செஸ் ஒலிம்பியாட் தரவரிசையில் அமெரிக்கா முதலிடம் பிடித்துள்ளது. இந்தியாவுக்கு 3-வது இடம் கிடைத்துள்ளது.
-
டி பிளாக் விமர்சனம்
04 Jul 2022யூடியூப் புகழ் விஜய்குமார் ராஜேந்திரன் இயக்கத்தில் அருள் நிதி நடித்திருக்கும் திரைப்படம் ‘டி பிளாக்’.
-
ஐஸ்வர்யா ராஜேஸ் வெளியிட்ட கிப்ட் பஸ்ட் லுக்
04 Jul 2022பி.பி. சினிமாஸின் முதல் தயாரிப்பான கிஃப்ட் படத்தினை இயக்குனர் பா.பாண்டியண் இயக்கி வருகிறார்.
-
நீலகிரி, கோயம்புத்தூர் உள்பட தமிழகத்தின் 5 மாவட்டங்களில் 4 நாட்கள் கனமழைக்கு வாய்ப்பு
04 Jul 2022சென்னை : தமிழகத்தின் 5 மாவட்டங்களில் 3 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
தவறி விழுந்து எலும்பு முறிவு: மருத்துவமனையில் லல்லு பிரசாத் அனுமதி
04 Jul 2022பாட்னா : ராஷ்ட்ரீய ஜனதா தளத் தலைவர் லல்லு பிரசாத் தோள்பட்டை எலும்பு முறிவு காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
-
மருத்துவ மாணவர் சேர்க்கை முறைகேடு குறித்த சி.பி.சி.ஐ.டி. விசாரணை சரியே : சென்னை, ஜகோர்ட் உத்தரவு
04 Jul 2022சென்னை : மருத்துவ மேற்படிப்பு மாணவர் சேர்க்கை முறைகேடு வழக்கை, சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு உத்தரவிட்டது செல்லும் என சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.